கரை கடந்த அலைகளின் தொகுப்பு.

Monday, October 27, 2008

தினக்குரல் கருத்தோவியர் மூர்த்திக்கு தங்கப்பதக்கம்

ஸ்ரீலங்கா வெகுஜன ஊடக(Sri Lanka Massmedia Foundation) ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஊடகத்துறையினருக்கான தெரிவில் தினக்குரலின் கேலிச்சித்திரக்காரர் ஏ.யோகமூர்த்தி 2008 ஆம் ஆண்டின் சிறந்த ஆக்கபூர்வமான கருத்தோவிய கலைஞராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நாளை 28 ஆம் திகதி மாலை 6 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் மேற்படி ஊடக அமைப்பு நடத்தும் பரிசளிப்பு விழாவில் கலைஞர் மூர்த்திக்கு சான்றிதழ் மற்றும் தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.

எனக்குப்பிடித்த கேலிச்சித்திரக்காரர்களில் ஒருவர். வாழ்த்துகள்!!

அன்பன்,
எம்.கே.

நன்றி: தினக்குரல்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.