tag:blogger.com,1999:blog-5815740.post6872404552319438571..comments2023-10-14T16:45:29.672+08:00Comments on நெஞ்சின் அலைகள்: "இடபம்" – நாவல் கலந்துரையாடல்எம்.கே.குமார்http://www.blogger.com/profile/01900603075164396123noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5815740.post-35779332776815687682020-09-28T10:46:36.951+08:002020-09-28T10:46:36.951+08:00உண்மைதான் சிவா. உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.
...<br />உண்மைதான் சிவா. உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.<br /><br />”இதையெல்லாம் எழுதும்போதே இடபம் 'பெரும் விவாதத்தை உருவாக்கிய நாவல்' என்கிற பெயரைப் பெற்றுவிடக்கூடும் என்ற பயமும் சேர்ந்தே எழுகிறது. போகட்டும்.” <br /><br />ஹா ஹா, அருமை! இது நடந்துவிடக்கூடாது என்றுதான் இலங்கேஷ் பயந்தார்.எம்.கே.குமார்https://www.blogger.com/profile/01900603075164396123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5815740.post-30540049857575924062020-09-28T10:44:10.800+08:002020-09-28T10:44:10.800+08:00Sivanantham Neelakandan சிவானந்தம் நீலகண்டன்
'...Sivanantham Neelakandan சிவானந்தம் நீலகண்டன்<br /><br />'இடபம்' விவாதம் குறித்த பதிவிற்கு நன்றி எம்.கே!<br /><br />அன்றைய விவாதத்திற்குப் பின் எனக்குள் எழுந்த சில எண்ணங்களை இங்கே பதிவுசெய்கிறேன். <br /><br />லங்கேஷோ, நானோ, நீங்களோ எதையும் முன்கூட்டியே பேசிவைத்துக்கொண்டு போகவில்லை. ஆனாலும் நாவலில் வரும் 'சரச'க்காட்சிகள் குறித்த வர்ணனைகள் ஏன் அந்த அளவுக்கு நம்மைத் தாக்கின? ஏன் அதையே அந்த நாவலின் முக்கியக் குறைபாடாக நாம் குறிப்பிட்டுப் பேசினோம்? இவ்வளவுக்கும் அக்காட்சிகள் சமுதாயத்தில் நடக்காத ஒன்றைக் காட்டவில்லை. இதுவரை இலக்கியத்தில் நாம் வாசிக்காத ஒழுக்கப்பிறழ்வுகளா இந்த நாவலில் இடம்பெற்றுவிட்டது? அதுவுமில்லை. பிறகு ஏன் சில குறிப்பிட்ட இடங்கள் நம்மைச் சீண்டின? ஒரு பெண் எழுதிவிட்டார் என்பதால் நாம் பதற்றமடைந்தோமா? அப்படியான கலாச்சாரக் காவலர்களா நாம்? நிச்சயமில்லை. பிறகு ஏன்?<br /><br />என் அவதானிப்பில் இலக்கியம் என்பது முதன்மையாக அதன் 'மொழி'யை வைத்தே ஒரு வாசகருக்குள் சென்று சேர்கிறது. 'மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்' என்பதுதான் முதன்மைத் தேவை. மற்றவை கொஞ்சம் முன்பின்னாக இருந்தாலும் இடம்கொடுக்கும் வாசகமனது மொழி சற்று சுருதி பிசகினாலும் வெறிகொண்டுவிடுகிறது. பொழுதுபோக்கிற்காகப் பயன்படுத்தி எறிந்துவிடும் (சரோஜாதேவி எழுத்து என்பதை அப்படித்தான் நான் எடுத்துக்கொள்கிறேன்) ஒரு படைப்பில் அதை எதிர்பார்த்து நாம் வாசிப்பதில்லை. ஆகவே அங்கு இடறல்கள் இருந்தால் அது பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஒருவேளை அது அந்த மனநிலைக்கு மேலும்கூடச் சுவைகூட்டலாம். ஒரு மிமிக்ரி செய்பவர் செய்பவர் தன் பாடலில் சுருதி பிசகாகப் பாடினால் மேலும் சுவை கூடுவதுபோல. ஆனால் சீரியஸான படைப்பு என்று வாசிக்கும்போது இடையில் மொழி அபஸ்வரம் கொண்டால் அது உடனே நம்மைப் பதற்றமாக்குகிறது. எழுதியவர் இங்கிதமில்லாதவரா அல்லது நாம் முட்டாளா என்ற கேள்விதான் நம்மைப் பதற்றப்படுத்துகிறதே ஒழிய அந்த வாக்கியங்களில் வரும் ஒழுக்கம் தொடர்பான கருத்துகள் அல்ல.<br /><br />சரி, மேற்கண்ட இடங்களில் அந்த 'சரச'க்காட்சி மொழிகளையெல்லாம் லாசராவுக்கு அனுப்பி சுருதி, லயத்தில் அமைத்து சரிசெய்துவிடுவதாக வைத்துக்கொள்வோம். அப்போது இடபத்தை நான் கொண்டாடுவேனா என்றால் அப்போதும் இல்லை. ஏனெனில் அதையும் தாண்டி அந்த நாவலில் 'உண்மை' இல்லை என்ற உறுத்தல் ஒரு வாசகனாக எனக்கு இருக்கிறது. எழுத்தாளர் தான் எழுத நினைத்ததை எழுதாமல் ஒரு நவீன இலக்கியப்படைப்பு இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்ற ஒரு கற்பனையில் இப்படைப்பை எழுதியிருப்பதாக நான் கருதுகிறேன். அதையே உண்மை இல்லாத எழுத்து என்கிறேன். அது மொழியில் பிரதானமாகவும், கதாபாத்திரங்களின் பல வெளிப்பாடுகளில் அடிநாதமாகவும் இடபத்தில் வெளிவந்துள்ளது. அதனாலேயே இடபம் எரிச்சலை உண்டாக்குகிறது.<br /><br />இதையெல்லாம் எழுதும்போதே இடபம் 'பெரும் விவாதத்தை உருவாக்கிய நாவல்' என்கிற பெயரைப் பெற்றுவிடக்கூடும் என்ற பயமும் சேர்ந்தே எழுகிறது. போகட்டும். <br /><br />வாசகர் வட்ட விவாதம் நடப்பதற்கு முன்னரே வெளியான 'இடபம்' குறித்த என் கட்டுரை இவ்விணைப்பில்:<br />https://sivananthamneela.wordpress.com/2020/09/07/இடபம்-சந்தையில்-நுழைந்த/<br /><br />Sivanantham Neelakandan சிவானந்தம் நீலகண்டன்எம்.கே.குமார்https://www.blogger.com/profile/01900603075164396123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5815740.post-9636725362270578982020-09-28T10:09:43.233+08:002020-09-28T10:09:43.233+08:00This comment has been removed by the author.எம்.கே.குமார்https://www.blogger.com/profile/01900603075164396123noreply@blogger.com