<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-5815740</id><updated>2011-11-02T13:20:13.068+08:00</updated><category term='singapore science centre'/><category term='சிங்கப்பூர் ரஜினி ரசிகன்'/><category term='tamilmurasu'/><category term='commonwealth'/><category term='enthiran'/><category term='“Tragedy of the commons”'/><category term='director shankar'/><category term='TN election 2011'/><category term='character artist'/><category term='வைகோ'/><category term='49(o)'/><category term='vimala'/><category term='thangameen'/><category term='96.8'/><category term='best selection of artist'/><title type='text'>நெஞ்சின் அலைகள்</title><subtitle type='html'>கரை கடந்த அலைகளின் தொகுப்பு.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://yemkaykumar.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://yemkaykumar.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>எம்.கே.குமார்</name><uri>http://www.blogger.com/profile/01900603075164396123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TRgMGEJFiKI/AAAAAAAAAJ4/NLOGXX9OHEA/S220/DSC03182.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>164</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-5815740.post-1921411088464937052</id><published>2011-10-14T11:28:00.003+08:00</published><updated>2011-10-14T11:32:54.010+08:00</updated><title type='text'>தங்கமீன் – இணைய இதழ் ஆண்டு விழா - ஒரு பகிர்வு</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;தங்கமீன் இணைய இதழின் முதலாம் ஆண்டு நிறைவு மற்றும் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா, சிங்கப்பூரின் உட்லாண்ட்ஸ் நூலக அரங்கில் கடந்த 9 அக்டோபர் அன்று இனிதே நடந்தேறியது. கேசரி-வடையைத் தாண்டியும் விழாவில் இனிமை சேர்த்தன பலவிஷயங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூர் தமிழ் விழாக்களில் சில ”கிளிஷேக்களை” நீங்கள் எப்போதும் காணமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;1. முதலில் ’கேசரி – வடை – காஃபி’. கேசரி எப்படியிருந்தாலும் இனிப்பிருந்தால் போதும், குறையொன்றும் சொல்லமாட்டார்கள்; வடை அப்படியில்லை. மெத்து மெத்தென்ற அத்தை மகளின் கன்னம் போல இருக்கவேண்டும், அதுதான் வடை (நான் சொல்லவில்லை; நண்பரொருவர் சொன்னது!).&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;2. ’வியாபாரத்தில் வெற்றி பெற்ற தமிழார்வம் மிக்க ஒருவர்’ அந்த விழாவுக்குத் தலைமை தாங்குவார். இதில் எனக்கு சந்தோசமே! உண்மையில் சிங்கப்பூரைப்போல இந்த அளவுக்கு நாட்டம் கொண்டு செயல்படும் தமிழார்வம் கொண்ட வியாபாரஸ்தர்கள், வேறொரு நாட்டில் இருப்பார்களா என்பது சந்தேகமே!&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;3. மூன்றாவது, அவ்வாறு தலைமை தாங்குபவர்கள் “நாம் தாங்க முடியாத” அளவுக்கு தலைமைப்பேச்சில் அல்லது சிறப்புப்பேச்சில் ’மொக்கை’ போடுவார்கள். இது ஒரு காலக்கொடுமை!&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய கிளிஷேக்களிடையேயும், இந்த விழாவில் சில நிறைவுகள் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;விழாவில் தலைமையேற்ற ’வினாயகா எக்ஸ்போர்ட்ஸ்’ இயக்குனர் திரு.ஜோதி மாணிக்கவாசகம் வெகு இயல்பான நகைச்சுவையில் கவர்ந்தார். இவரது பேச்சை இப்போதுதான் கேட்கிறேன். மொக்கை வகையில் இது சேறாது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாய், செல்வன் பார்கவ் ஸ்ரீகணேஷ். சிங்கப்பூரின் இளைய தலைமுறை, ’டமில்’ பேசக் காணக்கிடைப்பதற்கே தானதவம் செய்திருக்கவேண்டும். அதிலும் இந்த நண்பர் அருமையான தமிழில் அளவாடினார். சினிமாவையும் அரசியலையும் சிறிது சாடினார்.  இன்னும் இருபது வருடங்களில் ஒரு தமிழ் மந்திரி அல்லது சிண்டா, குண்டா என ஏதாவதொன்றிற்கு இவர் சி.இ.ஓ ஆகத் தகுதியுள்ளது விளையும் பயிராய்த் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்வீட்டு அழகி கொடுத்த எதிர்பார்பாரா முத்தம் போல எதிர்பாரா இன்ப அதிர்ச்சி ’தென்றல்’ ஆசிரியர் வித்யாசாகரிடமிருந்து எனக்கு. தென்றலைப் படித்தபோது எனக்குத் தெரியும், இவர் சினிமாவை ரசிப்பவர் என்று. அன்று மேடையில் எனது சினிமா விமர்சனத்தைப் புகழ்ந்தார். ரசித்ததைப் பகிர்ந்தார். கூட, ’சினிமா கதாநாயகன் போல இருக்கிறார் இந்த சினிமா விமர்சகர்’ என்று வேறு என்னைக் கொஞ்சம் பூரித்தார். தவிர, வழக்கம் போல நகைச்சுவையை வீசினார். கூட்டத்தைத் தன் பக்கம் அள்ளினார். கேட்கும் கூட்டம் சிரிப்பதைப் பார்த்து தன் மனம் புளகாங்கிதப்படும் பேச்சாளன், இன்னும் நகையாய்ப் பேசுவான். அந்த வகை இவர்! அருமையான மனிதர்.&lt;br /&gt;&lt;br /&gt;கமல்ஹாசனின் பாடி லாங்குவேஜ்ஜையும் குரலையும் வார்த்தைகளையும் தேர்ந்து வெளிப்படுத்திய திரு.ஆர்.இராஜாராம் (துணைத் தலைவர், வளர்தமிழ் இயக்கம்) ஒரு இனிய வித்தியாசம்.&lt;br /&gt;&lt;br /&gt;தினேஷ் – மலர்விழி நிலாப்பாடல்களை பாட முயற்சித்தார்கள். வெகுசிறப்பாய் இல்லாவிட்டாலும் கேட்பதற்கு இனிமையாய் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;மணிமாறன் குழுவினரின் நடனம் நன்றாய் இருந்தது. எடுத்துச் சேர்ப்பதற்கு உபகரணங்கள் இல்லாததால் நிறைவாகத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அடிக்கடி ’கடி’ கொடுத்த மைக்கையும் தாண்டி நிகழ்ச்சியை இனிமையாகவே நடத்தினார் வசந்தம் புகழ் ஜி டி மணி.&lt;br /&gt;&lt;br /&gt;கைக்குக் கிடைத்த விழாமலர் தரம்; புகழ் நிரந்தரம். கண்ணுக்கு கிடைத்த நட்பு வட்டாரங்கள், வாய்க்குக் கிடைத்த கேசரி, காதுக்குக் கிடைத்த தீந்தமிழ் என எல்லாம் இனிமை மயம்; இன்பமயம்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கமீன் தொடர்ந்து சிறக்க வாழ்த்துகள்.&lt;br /&gt;&lt;br /&gt;எம்.கே.குமார்&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5815740-1921411088464937052?l=yemkaykumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yemkaykumar.blogspot.com/feeds/1921411088464937052/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5815740&amp;postID=1921411088464937052' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/1921411088464937052'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/1921411088464937052'/><link rel='alternate' type='text/html' href='http://yemkaykumar.blogspot.com/2011/10/blog-post.html' title='தங்கமீன் – இணைய இதழ் ஆண்டு விழா - ஒரு பகிர்வு'/><author><name>எம்.கே.குமார்</name><uri>http://www.blogger.com/profile/01900603075164396123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TRgMGEJFiKI/AAAAAAAAAJ4/NLOGXX9OHEA/S220/DSC03182.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5815740.post-4609098080158121327</id><published>2011-09-22T17:39:00.002+08:00</published><updated>2011-09-22T17:39:25.852+08:00</updated><title type='text'>சிங்கப்பூர் அதிபர் தேர்தல் சொல்லும் சேதி</title><content type='html'>நாட்டுக்காக உழைத்த நல்லவர், வயதாகி, உயிரோடிருக்கும் காலத்தில் வழங்கப்படும் உயரிய பதவியாகத்தான் ஜனாதிபதி பதவி, இந்தியா உள்ளிட்ட  பெரும்பான்மையான நாடுகளில் இருக்கின்றது. சிங்கப்பூரிலும் அப்படித்தான்! இந்தியாவில் எம்பிக்கள் ஓட்டு போடுவர்; இங்கு எல்லா மக்களும்!12 வருடங்களாக அதிபராய் இருந்த திரு. செல்லப்பன் ராமநாதன் அவர்கள் தாம் இனி போட்டிபோடப்போவதில்லை என்று சொல்லும் முன்பே ஆங்காங்கு தான் போட்டியிடப்போவதாகக் குரல்கள் எழுந்தன. நான் வந்தால் நாய் தருவேன், ஆணையிட்டால் ஆனை தருவேன், போன் பண்ணினால் பூனை தருவேன் என்றெல்லாம் சில சவால்கள் வலம் வந்தன. சட்ட அமைச்சர் திரு கா சண்முகம் சாதரணமாய்ச் சொல்லிப்பார்த்தார். இது சாதாரண பதவி; எதையும் இதன்மூலம் உருவாக்கமுடியாது, ஆம் இல்லை என்று தான் சொல்லமுடியும் என்று ‘சொல்லாமல்’ சொன்னர். புரிந்தவர்களுக்குப் புரிந்தது. புரியாதவர்களுக்கும் புரிந்தது, ஆனால் அவர்கள் அதைக் காட்டிக்கொள்ளவில்லை.சிங்கப்பூரில் ஜனாதிபதிக்குப் போட்டியிடுவதை விட, போட்டியிட அனுமதியளிக்கும் பத்திரத்தை, அதற்கான குழுவிடம் இருந்து வாங்குவதே ’இந்தியா ஒலிம்பிக்கில் பதக்கம் பெறுவது மாதிரி’ கடினம்.  தனம், கணம், வனம், பாரிய வளம் என்று ’மில்லியனில்’ பொருத்தம் பார்க்கப்படும். காரணம், சிறை காக்கும் காப்பு எவனும்செய்யும்; இது ’தனம்’ காக்கும் காப்பு. நாட்டின் பல பில்லியன் சொத்தைக் காக்கும் பொறுப்பு.ஏழாவது அதிபராகப் பதவியேற்க நான்கு ’டான்’கள் (திருவாளர்கள் டோனி டான், டான் செங் போக், டான் கின் லியான், டான் ஜீ சே) போட்டி போட்டார்கள். ’திரு டோனி டான்’ பல காலம் நாட்டுக்காய் உழைத்தவர். துணைப்பிரதமர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர். அறிவிக்கப்படாத ஆளும் அரசாங்க வேட்பாளராய் நின்றார் அவர். ’திரு டான் செங் போக்’, ஆளும் கட்சியிலே 30ஆண்டுகள் இருந்தவர். இப்போது இல்லை. மருத்துவர். இலவச மருத்துவமனைக்குச் சொந்தக்காரராம். ’திரு டான் கின் லியான்’ அரசாங்கத்தின் நிறுவமொன்றில் பெரிய பதவியில் இருந்தவர். ’திரு. டான் ஜீ சே’ எதிர்க்கட்சி குழுமத்தைச் சேர்ந்தவர். மக்களின் நாடித்துடிப்பை பதம்பார்த்தவராய் களத்தில் குதித்திருந்தார். பிரச்சாரத்தில்  இவர் பேசியதைப்பார்க்க பல ஆயிரம் மக்கள் திரண்டதைப் பார்த்து நாளிதழ்களே மிரண்டன.கடந்த 27ஆம் தேதி நடந்து முடிந்த தேர்தலில் (நானும்) எதிர்பார்த்ததைப்போலவே திரு டோனி டான் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். நாட்டின் ஏழாவது அதிபராகப்பொறுப்பேற்றார். வேறுபாடுகளைக் கடந்து எல்லா சிங்கப்பூரர்களையும் இணைக்கப்போவதாக, அவர் சொல்வதன் அர்த்தம் புரியாமல் அவர் பேசமாட்டார். அவருக்கு வாழ்த்துகள்.இத்தகைய தேர்தல்கள் எனக்கு கொஞ்சம் பயத்தைத் தருகின்றன. இந்தியாவின் ஜனாதிபதியாய் அப்துல்கலாம் அவர்கள் ஆனதைப்போல மட்டுமே, சிங்கப்பூரில் இந்தியரோ மலாய்காரரோ அதிபராக ஆக முடியும். திரு. தேவன்நாயரும், திரு எஸ்.ஆர் நாதனும் அப்படியே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  கடுமையான தேர்தல்கள்  அதற்கான வாய்ப்பைக் குறைக்கவே செய்யும்.எம்.கே.குமார்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5815740-4609098080158121327?l=yemkaykumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yemkaykumar.blogspot.com/feeds/4609098080158121327/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5815740&amp;postID=4609098080158121327' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/4609098080158121327'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/4609098080158121327'/><link rel='alternate' type='text/html' href='http://yemkaykumar.blogspot.com/2011/09/blog-post.html' title='சிங்கப்பூர் அதிபர் தேர்தல் சொல்லும் சேதி'/><author><name>எம்.கே.குமார்</name><uri>http://www.blogger.com/profile/01900603075164396123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TRgMGEJFiKI/AAAAAAAAAJ4/NLOGXX9OHEA/S220/DSC03182.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5815740.post-8049869447418895704</id><published>2011-09-22T17:38:00.002+08:00</published><updated>2011-09-22T17:38:46.968+08:00</updated><title type='text'>கறிக்கு சண்டை போடலாம்; Curryக்கி சண்டையா?</title><content type='html'>’காதல்’ படம் பார்த்தீர்களா? 10வது படிச்சிக்கிட்டு இருக்கும் பொண்ணு பாலத்துக்குக் கீழே உக்காந்து ’காதல்’ பண்ணுமே அந்தப் படம். சரி, அது என்னமோ பண்ணிட்டுப்போவுது விடுங்க,  நம்ம கதைக்கி வாங்க. அந்தப்படத்துல, பூப்புனித நீராட்டுவிழா (அடடா! எவ்வளவு அழகா நம்மாளுங்க பேரு வெச்சிருக்காய்ங்க இந்த விழாவுக்கு!) நடக்கிற விருந்துல, பிரியாணியில ரெண்டு துண்டு கறி, கூடப்போடச்சொல்லி அருவா காட்டுவான் ஒருத்தன். அதனால பின்னாடி சண்டையும் நடக்கும். அதுதான் கறிக்கி சண்டை!இப்போ சிங்கப்பூர்ல ரொம்ப ஃபேமஸா நடந்துக்கிட்டு இருக்க போட்டி curryக்கி சண்டை! சிங்கப்பூரில், ஆங்காங்கே உயர்ந்து நிற்கும் கான்கிரீட் கூடுகளின் ஒரு மாடியில் அடுத்தடுத்த வீட்டில் ஒரு சிங்கப்பூர் இந்தியர் குடும்பமும்   சீனாவிலிருந்த வந்த ஒரு சீனக்குடும்பமும் வசித்துவந்தது. ஒட்டுமொத்த சிங்கப்பூரில், வீட்டில் சமைத்துச் சாப்பிடும் மிக மிகக் குறைந்த எண்ணிக்கை கொண்டோரில், இந்த இந்தியர் குடும்பம் வைத்த மீன் குழம்பு பக்கத்து வீட்டிற்காரருக்கு வாசனையாய்ச் சென்று எரிச்சலைக் கிளப்பிவிட்டிருக்கிறது. மிளகாய் தான் எரிச்சல் கிளப்பும், இங்கே மீன் மசாலா எரிச்சல் கிளப்பிவிட்டு விட்டது போலும். சரி, நம்ம வீட்டு ’டூரியன்’ எதிர்வீடு, எதிர் பிளாக் என ஏரியா முழுக்க, ஏகக்கலவரம் பண்ணவில்லையா என்று அவரும் இருந்திருக்கலாம். படி தாண்டி வந்து பங்காளிச்சண்டை போட்டுவிட்டார் போலிருக்கிறது.பத்திக்கொண்டது இணையதளத்தில். குழம்பு எங்களின் உரிமை, குழம்பு சமைப்பது எங்களது குலத்தொழில், குழம்பு சமைப்பது எங்களின் பாரம்பரியம், குழம்பு சாப்பிடுவது எங்களின் வீரம் என்று ஒரு பெண் வெப்கேமுக்கு முன்னால் வந்து வாயை வாயைக் காட்டிவிட்டுப்போனார். வெப்கேமிராவைக் கடிக்காத குறைதான்.’ஆன்லைனில்’ வந்த அதை ’பிரிண்ட்லைனில்’ போட்டுவிட்டது ஒரு பத்திரிகை. ஏரியா ஏடாகூடமாகிவிடுமோ என்று பயந்திருந்தவேளையில் அமைச்சர் தலையிட்டு துள்ளிக்கொண்டுருந்த மீன் கறி பிரச்சனையை துடைத்து எறிந்துவிட்டார்.மீன் கறி முடிந்தது. மீன் எலும்பு இன்னமும் இருக்கிறது. இணையத்தில் இப்போதும்  அது துடித்துக்கொண்டிருக்கிறது.எம்.கே.குமார்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5815740-8049869447418895704?l=yemkaykumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yemkaykumar.blogspot.com/feeds/8049869447418895704/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5815740&amp;postID=8049869447418895704' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/8049869447418895704'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/8049869447418895704'/><link rel='alternate' type='text/html' href='http://yemkaykumar.blogspot.com/2011/09/curry.html' title='கறிக்கு சண்டை போடலாம்; Curryக்கி சண்டையா?'/><author><name>எம்.கே.குமார்</name><uri>http://www.blogger.com/profile/01900603075164396123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TRgMGEJFiKI/AAAAAAAAAJ4/NLOGXX9OHEA/S220/DSC03182.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5815740.post-4494930617404181799</id><published>2011-08-02T18:54:00.001+08:00</published><updated>2011-08-02T18:54:24.992+08:00</updated><title type='text'>வானம்</title><content type='html'>தனது பணக்கார காதலியுடன் புத்தாண்டை ஐந்துநட்சத்திர விடுதியில் கொண்டாடுவதற்கு 40,000 ரூபாய்க்கென (S$ 1111.11) தாறுமாறாய் அலையும் (பணக்காரன்போல நடிக்கும்) ஒரு இளைஞனின் கதை, கொடுக்கவேண்டிய வட்டி மற்றும் அசல் என அதே 40,000 ரூபாய்க்கு தனது ஒரே மகனை படிப்பை நிறுத்திவிட்டு கூலித்தொழிலாளியாய் கடன்கொடுத்தவர் அமர்த்திக்கொள்ள, அந்த பணத்தை எப்படியாவது கொடுத்து தனது மகனை மீட்டு படிக்கவைக்கவேண்டும் என்று கணவனை இழந்த ஒரு கிராமத்து எழைத்தாயும் அவரது வயதான மாமனாரும் படும் போராட்டக்கதை, ஒரு இந்துமத ஊர்வலத்தில் எதேச்சையாய் மாட்டிக்கொண்டு, சந்தேகக் கண்ணுடன் அவமானப்படுத்தப்பட்டதால் திசை திரும்பிப்போன தனது தம்பியைத் தேடும் ஒரு அப்பாவி முஸ்லீமின் கதை, தனக்குப் பிடித்த இசையில் தான் கண்டிப்பாய் வெல்வேன் என தன்னம்பிக்கையுடன் இருக்கும் சகமனித உணர்வுகள் குறித்த புரிதலற்ற ஒரு நவீன கலாச்சாரத்து மேல்தர  இளைஞனின் கதை, தன்னை வைத்து சம்பாதித்தது போதும் தானே தன்னுடைய திருநங்கைத்தோழியுடன் சேர்ந்து தனியே தொழில் தொடங்கி கொஞ்சம் காசு சேர்க்கலாம் என்ற நினைப்பில் தனியே கிளம்பும் ஒரு உடல்வணிகப்பெண்ணின் கதை என ஐந்து சிறுகதைகளை ஒன்றாய் நேர்க்கோட்டில் செதுக்கியிருக்கிறது இந்த வானம்.&lt;br /&gt;&lt;br /&gt; உண்மையைச் சொல்லப்போனால் தனித்தனிப் படமாய் இயக்கும் அளவுக்கு வீறுகொண்ட கதைக்களனும் செறிவும் கொண்ட விதைகள் இக்கதைகள். சிம்புவின் பகுதியைத் தவிர மற்ற நான்கு கதைகளும் நெஞ்சை உலுக்குகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;ஐந்து கதைகளில் ஒன்றுதானே என்று எந்த கதையிலும் இயக்குனர் சமரசம் கொள்ளாமல் எல்லாக் கதைகளின் முக்கிய கதாபாத்திரங்களையும் பொருத்தமானவர்களாய்த் தேர்ந்தெடுத்து போட்டிருப்பதே கதையின் வீச்சை நமக்குள் ஊடுருவிக் கொண்டுசெல்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;சரண்யா, பிரகாஷ்ராஜ் போன்ற ’டாப் ஸ்டூடன்ஸ்’களை விட்டுவிட்டாலும் அனுஷ்கா, அவருடைய தோழியாக வரும் திருநங்கை, பரத், அவரின் காதலியாக வரும் ‘பசங்க’ படத்தில் வந்த ’சோபிக்கண்ணு’ வேதா (நம்பவே முடியவில்லை, நல்ல நடிப்பும் தேர்வும்) என அனைவரும் நடிப்பில் தேர்ந்து செய்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு காட்சியில் மட்டுமே வரும் ராதாரவி, பசங்க ஜெயபிரகாஷ், டாக்டராக வரும் இன்னொரு நடிகர், ’நல்லா வெச்சு காப்பாத்துறேன்’ புகழ் பிரமானந்தம், பிரகாஷ்ராஜின் மனைவியாக வரும் சோனியா அகர்வால், கிட்னி புரோக்கராய் வரும் இருவர்கள் என ஒரு சில காட்சிகளில் வந்தாலும் ஒவ்வொரு கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் முழுமையான ஒன்றுதலுடன் படத்தை முன்னிறுத்தியிருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;நடிகர்களில் ஒரே ஒரு திருஷ்டியாய் சிம்பு. வேறு ஏதாவது ஒரு புது இளைஞனைப் போட்டிருந்தால் கூட இவரது கதைப்பகுதி இன்னும் கச்சிதமாகவும் நேர்த்தியாகவும் இருந்திருக்குமோ என்னவோ! ”என்ன வாழ்க்கையிடா இது..”என்று அவர் நம்மைப் (கேமிராவைப்) பார்த்துச் சொல்வது ’என்னப்பா செய்யிறது, உங்கப்பா டிரவுஸர் அவுத்த நேரம் அப்படி’ என்று சொல்லத்தோன்றும் அளவுக்கு எரிச்சல் வரச்செய்கிறது.  அதுவும் இறுதி நேரத்தில் கூட அவர் அப்படி பேசுவது “ஓகே சார்.. ஷாட் ரெடி..ஆக்‌ஷன்” என்று டைரக்டர் சொல்வது போல நமது காதில் கேட்கிறது, அந்த அளவுக்குச் செயற்கைத்தனம். &lt;br /&gt;&lt;br /&gt;கூட, ’நயன் தாரா பேட்டி இருக்காம்பா டிவில, கண்டிப்பா பாக்கணும்’ என்பன போன்ற ’கொழுப்பு’களும் சிம்புவுக்குக் கூலி கொடுக்கும். (தனுஷப்பார்த்து கொஞ்சமாவது திருந்துங்க சார். அழுவுறது மட்டுமே நடிப்புன்னா, கமலுக்கு இந்நேரம் 50 தேசியவிருது கிடைச்சிருக்கணும்!!!)&lt;br /&gt;&lt;br /&gt;வட்டிக்குக்கொடுத்தவன் பள்ளிக்கூடத்தில் வந்து குழந்தையை இழுத்துச்செல்லும்போது கையாளாகாத தனத்துடன் நிற்கும் ஆசிரியரில் இருந்து, ’நாங்க அவங்க இல்லையா.. ’என்று ஒரு முஸ்லீம் அப்பாவி, போலீஸ் அதிகாரியிடம் மன்றாடுவது வரை சமுதாயத்தின் விழுதுகளைத் துளிர்க்கச்செய்கிற காட்சிகள் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;40,000 ரூபாயில் ஒரு குடும்பத்தின் தலைமுறையும் கல்வியும் எதிர்காலமும் நாட்டமுடியுமென்கிற அவல நிலையில் ஒரு குடியானவன் இருக்கின்ற வாழ்க்கைச் சூழ்நிலையையும்  அதே 40,000 ரூபாய்க்கு ஒரு இரவு  புத்தாண்டுக்கொண்டாட்டத்தை அனுபவிக்கலாம் என்கிற அளவுக்கு சமுதாயத்தின் இரு நீண்ட அகன்ற பொருளாதார விளைவுகளையும் வேறுபாடுகளையும் ஒரே கோட்டில் நிறுத்தியிருப்பதிலும், ஒரு பெண் என்ன கொடுத்து உயிருக்குப் போராடும் தன் தோழியை காப்பாற்றுவாள், நகை, பணம் என்பதையெல்லாம் தாண்டி “விலைமாதாய்” இருந்தாலும் அவளாய் ’கொடுக்கும் அளவுக்கு” ”அவளுக்கென்று ஒரு கற்பு இருக்கிறது அவளிடம்” என்பதைக் காட்டும் இடத்திலும், தான் அவமானப்படுத்தியவனே தன்னைக் காப்பாற்றுவதை ஒரு புதிய புரிதலாக எடுத்துக்கொள்ளும் நவீன இளைஞனின் புன்னகைத்தலிலும் என, இயக்குனரைப் பாராட்ட வார்த்தைகளில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்கள் – பெண்கள் கழிப்பறையைப் பார்த்துவிட்டு எங்களுக்குன்னு ஒண்ணு இல்லை , எந்தப்பக்கம் போறது என திருநங்கை, சலனமற்று கூறும் உடல்மொழியில் சில சிரிப்புகளும் எனது பின்னிருக்கையில் கேட்கத்தான் செய்தன. காலமே மாற்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;கத்திமேல் நடக்கும் இஸ்லாம் தீவிரவாதத்திலும் ஒரு  நெகிழ்ச்சியான உணர்வை படம் தரத்தவரவில்லை, இறுதிக்காட்சிகளைத் தவிர! இறுதிக்காட்சிகள் ஆஹாஓஹோவெல்லாம் இல்லை!&lt;br /&gt;&lt;br /&gt;ரயிலில், போலீஸ் ஸ்டேஷனில் என படம் ஓரிரு இடத்தில் ஒன்றாகும்போது கமல்ஹாசன் ஞாபகம் வருகிறது. (யாரிடம் சொல்லாதீர்கள், நல்லவேளை கமல் இக்கதையைக் கேட்டிருந்தால் நானே எல்லாக் கேரக்டரிலும் நடிக்கிறேன் என்று சொல்லி  20 வேடங்களிலும் நடித்திருப்பார் என படம் பார்க்கும்போதே நினைத்தேன்... நானும் கமல்ரசிகன் தானாக்கும்!)&lt;br /&gt;&lt;br /&gt;காசு பற்றிய ஒரு பாடலும் உடல்வணிகம் பற்றிய இன்னொரு பாடலும் கதைக்கேற்று சிறப்பிக்கின்றன. ’எவண்டி உன்னைப் பெத்தான் அவன் கையில கெடைச்சான் செத்தான்’ – கலக்குங்க சிம்பு!&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய ஒரு பெரியவரிடமிருந்து காசைத் திருட மனம் வருவது அதுவும் அந்தப்பெண்ணுக்காய் என்பது கொஞ்சம் அதீத உணர்வோ என்று தோன்றியது, கஞ்சா, போதை வாலிபர்கள் தவிர! சிம்புவின் திருந்தும் இடம் தவிர (அதுவும் ஓவர் ஆக்டிங்!) அவருடைய வேறு எந்த கதைப்பகுதியும் நெஞ்சுக்கு நெருக்கத்தில் வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தானம் கலாய்க்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;என்ன..லா...படம் எடுக்குறான், கதையப் போட்டு ’ரோஜாக்’ பண்ணி வெச்சிருக்கான் என்று ஒரு நண்பர் சிலாகித்துக்கொண்டார். &lt;br /&gt;&lt;br /&gt;சொல்லாத முடிவுகளே கணமிகுந்தவை. மூட்டைப்பூச்சிகளாய், அட்டைப்பூச்சிகளாய், கண்ணுக்குத்தெரியாத சமுதாயப் புற்றுநோய்களாய் அடுத்தவர் வாழ்வை உறிஞ்சும் கிட்னி புரோக்கர்களும், ஏமாற்றுப்போலீஸ்காரர்களும், வட்டிக்காரர்களும், பெண்ணுடல் வியாபாரிகளும் புரோக்கர்களும் என்ன ஆவார்கள் என்பதை யாரும் சொல்லவில்லை. இந்த வானமும் சொல்லவில்லை; ஆனால் அந்த ’வானம்’ பார்த்துக்கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வானம் – அத்தனைக்கும் ஒரே சாட்சி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எம்.கே.குமார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5815740-4494930617404181799?l=yemkaykumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yemkaykumar.blogspot.com/feeds/4494930617404181799/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5815740&amp;postID=4494930617404181799' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/4494930617404181799'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/4494930617404181799'/><link rel='alternate' type='text/html' href='http://yemkaykumar.blogspot.com/2011/08/blog-post.html' title='வானம்'/><author><name>எம்.கே.குமார்</name><uri>http://www.blogger.com/profile/01900603075164396123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TRgMGEJFiKI/AAAAAAAAAJ4/NLOGXX9OHEA/S220/DSC03182.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5815740.post-2480187953516957392</id><published>2011-05-27T12:34:00.001+08:00</published><updated>2011-05-27T12:35:34.258+08:00</updated><title type='text'>பயணம் -  பறக்க மறந்த உச்சம்</title><content type='html'>ஒரு விஷயத்தை முதலில் சொல்லவேண்டும். அது, ’மொழி’ படம் ஏன் மகத்தான வெற்றிபெற்றது என்பது, அதை தயாரித்த பிரகாஷ்ராஜுக்கும் இயக்கிய ராதாமோகனுக்கும் தெரியவில்லை. ஆனால், அவர்கள் அதை அறிந்துகொண்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதை அறிந்துகொண்டதாக இருவரும் நினைத்துக்கொண்டிருப்பதாலோ என்னவோ ’அபியும் நானும்’ ’பயணம்’ போன்ற அரைகுறைகளை அவர்கள் முன்னெடுத்துச் செல்கிறார்கள். அரைகுறை ஆனாலும், தற்போதைய சமூக, சினிமா சார்ந்த அபத்தங்களுக்கும் ஆபாசங்களுக்குமிடையில் இவை, புறங்கையால் அப்புறப்படுத்தவேண்டியவை அல்ல என்பதை நாம் சொல்லியே ஆக வேண்டும். காரணம், ஒரு கல்யாணமண்டபம் கட்டலாம், அல்லது கட்சி ஆரம்பிக்கலாம் என்பதையெல்லாம் விடுத்து, சொந்த பணத்தில் ’நல்ல படம்’ எடுக்கவேண்டும் என்று நினைக்கும் ’பாவம்’ பிரகாஷ்ராஜுக்காக.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையிலிருந்து டெல்லி கிளம்பும் ஒரு விமானம் கடத்தப்படுவதும் அதை மீட்க, அதிரடிப்படை அதிகாரியும் தலைமைச் செயலாளரும் போராடுவதும் தான் கதை. &lt;br /&gt;&lt;br /&gt;ராதாமோகனும் பிரகாஷ்ராஜும் தமிழ்ப்பட உலகில் நகைச்சுவை நுண்ணுணர்வு கொண்டவர்களில் சிலர் என்பது தொடர்ந்து வரும் அவர்களது எல்லாப்படங்களிலும் சில காட்சிகளை உருவாக்குவதையும் அதை ஆதரிப்பதையும் அறிந்திருந்தால் நாம் உணரமுடியும். கீழே விழுந்த கைக்குட்டையை எடுத்துத் தருவதாலேயேஒரு பெண்ணுக்கு காதல் வந்துவிடும் அளவுக்கு நாமும் இந்த சமுதாயமும் உருவாகியிருப்பதை அவர்கள் கையாண்டதும் இந்த நுண்ணுணர்வின் அடிப்படையில் தான். &lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிக்கை தர்மத்தை உயிரோடு கொளுத்தி ’கருமாதி’ பண்ணி பலவருடங்கள் ஆகிவிட்ட வேளையில், பத்திரிக்கைகள் படுத்தும் பாட்டை இப்படத்தில் காட்ட முனைந்ததில் உச்சம் இல்லை. மேலோட்டமே முன்னிற்கிறது. நான் பார்க்கவில்லை, இருந்தாலும் படித்த விமர்சனங்களிலிருந்து, ”பீப்ளி லைவ்” திரைப்படம் அதை மிகச்சிறப்பாக தோலுரித்துக்காட்டியிருக்கிறது என்றறிகிறேன். வசனங்களாலும் நேர்த்தியான காட்சிகளாலும் ”உன்னைப்போல் ஒருவன்” இதை சிறப்பாகக் கையாண்டதாக நினைக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;சினிமாவில் இருந்துகொண்டே சினிமாவைக் கிண்டலடிப்பது, கலைஞரைத் திட்டிக்கொண்டே ’இலவச டிவி’க்கு நாம் வரிசையில் நிற்பதைப்போன்றது மட்டுமல்லாமல், கிண்டலடிக்கும் சினிமாவை ரசித்துவிட்டு வெளியில் வந்து “தலைவனுக்கு” பாலாபிஷேகம், பீராபிஷேகம் அல்லது கொடியாபிஷேகம் பண்ணுவதும் போலத்தான். தியேட்டரில் இது சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு மிகுந்த வரவேற்பு. தமிழர்களுக்கு தமிழில் ’பிடிக்காத’ வார்த்தை ’திருந்துவது’. நாமும் திருந்தமாட்டோம், நம்மைத் திருத்த வருவதாக நினைத்துக்கொண்டு வருபவர்களையும் திருத்த மாட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தில் வரும் ’ஷைன்ஸ்டார்’  ’காந்த்’ நடிகரும் அவரது பக்கத்து இருக்கைக்காரர் செய்யும் அபிநயங்களும் ரசிக்கத்தான் வைக்கின்றன.&lt;br /&gt;போட் கவிழ்கிறது, கேப்டன் கடலில் குதிக்கச்சொல்கிறார் எனச்சொல்லவும், உடனே ஒருவன், கேப்டன்னா விஜயகாந்தா என்று சீரியசாய் கேட்பதும் நம் நினைவில் வரும் பிரகாஷ்ராஜ்ஜின் இன்னொரு படம். (இனிமேல் அப்படிக் கேட்கமுடியாது நண்பரே, 42 சீட்டாம்; டவுன் ஏரியாவில் தோற்றதெல்லாம் போக, பாதியாவது தேறும் போல இருக்கிறது.)  ஆக, பிரகாஷ்ராஜ் ராதாமோகன் கூட்டணி இதைத் தொடர்ந்து செய்து வருகிறது என்பதே ஒரு கவன ஈர்ப்புதான்.&lt;br /&gt;&lt;br /&gt;படைப்பாளர்களைக் குழுவாக்குவதில் பல உத்திகள் காலம்காலமாய்க் கையாளப்படுகின்றன. சில ’சுய’ உதவிக்குழுக்களை அவர்களே தமக்குள் உருவாக்கிக்கொள்கிறார்கள். கழிப்பறை, நவீனகழிப்பறை, அதிநவீன கழிப்பறை போல இலக்கியவாதி, நவீன இலக்கியவாதி, பின் நவீனத்துவ இலக்கியவாதி என, நண்பர் ”மானஸாசென்”னின் ஒரு கவிதையைப்போல குழு உருவாக்கம் படைப்பாளர்களிடையே விரிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இது தவிர தற்போதைய படைப்பாளிகளில் படைப்பாளி,  சுயசாதி மறுப்பாளரோ அல்லது சுயசாதி சார்புடையவரா என்பதும் அண்மையில் நடக்கும் ஒரு நவீனத்துவம். காண்க (http://www.kalachuvadu.com/issue-134/page22.asp)  &lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் ராதாமோகன் போன்ற படைப்பாளிகளை எந்தக்கட்டுக்குள் கொண்டுவருவது எனத்தெரியவில்லை. கிறித்துவ மத கட்டமைப்பில் மன்னிப்பு வழங்குதலும் தன்னை இகழ்ந்தவனை பொறுத்து அமைதி காத்தலும் பெரும்பான்மையானவைகளாக நீண்டகாலம் முன்னிருத்தப்பட்டு வருகின்றன. இவற்றை இப்படத்திலும் பயன்படுத்தியிருப்பது மூலம் படைப்பாளி ராதாமோகன், எந்தக் குழுவுக்குள் வருகிறார் எனத்தெரியவில்லை. எந்த மதத்துக்கும் இழிவு வராது (கடத்துவது முஸ்லீம், மன்னிப்பது கிறித்துவம், நடப்பது திருப்பதியில்) என்பதாக இதை ஒரு ’பொதுப்புத்தியாக’ வடிவமைத்தாலும் விமான நிலையத்திற்கருகில் தேவாலயம் இருப்பதும் அதன் மணியொலியை ரகசிய ஒலியாக்க முனைவதும் ராதாமோகன் என்ற படைப்பாளியையும் அவரது இப்படைப்பையும் ஒரு குழுவுக்குள்ளே அடக்க ஏதுவாக அமைகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மாற்றத்துக்காக, ஒரு சாமியாரை விமானத்துக்குள்ளே வைத்து, அவசர நேரத்தில் தியானம் செய்யச்சொன்னால் என்ன என்ற குறுக்குச்சிந்தனைக்கு, சாமியார், சல்லாபம் செய்யாமல், தியானம் செய்வதாய்க் காட்டினால் நம்பிக்கைக்குறைவாக இருந்தாலும் இருக்குமோ  என சம்பந்தப்பட்டவர்கள் நினைத்திருப்பார்களோ என்னவோ.&lt;br /&gt;&lt;br /&gt;கார்ல்மார்க்சையும் காந்தியையும் படித்தவன் ’அல்பாயுசு’வில் போவான் என்பதும் காலங்காலமாக  கொள்ளப்படும்  புரட்சியாளனின் / புரட்சியின் முடிவுக்கு எடுத்துக்காட்டு என்பதாகவே அதையும் முன்மொழிந்திருக்கிறார் ராதாமோகன். &lt;br /&gt;&lt;br /&gt;விமானத்துக்குள்ளே அச்சச் சூழ்நிலை நிகழாதது பெருங்குறை, இறுதிக்காட்சிகளைத் தவிர.   &lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டுமொத்த இந்தியாவே உற்றுநோக்கும் இதுபோன்ற ஒரு அவசர நிலையை ஒரு அறைக்குள் உட்கார்ந்துகொண்டு பிரகாஷ்ராஜும் நாகார்ஜூனாவும் முடிப்பது போன்ற பிரமை, நிஜ உணர்வைக் குறைக்கிறது. பிரதமர் பேசுகிறார் என்று போனைக் கொடுக்கிறார்கள், அவ்வளவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருகாலத்தில் தான் அடித்த மனைவியிடம் இப்போது மன்னிப்புக் கேட்பது, கணவனிடம் கோபித்துக்கொண்டு சென்ற மனைவி திருந்தி திரும்பி வருவது போன்ற காட்சிகளை நினைத்தால் ’பெருமையாக’ இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;விமானத்திற்குள் வேலைக்காரப்பெண்ணை, மிகுந்த எச்சரிக்கையோடும் அக்கறையோடும் முதன்முறை அனுப்பும் நாகார்ஜூனாவிற்கு, அந்தப்பெண் திரும்பி வந்து மறுமொழி எதுவும் கொடுத்ததாக காட்சி இல்லாமல் தொங்கி நிற்கிறது. அதேபோல போதை மருந்து வாலிபன். எதற்காக வந்தான், ஏன் வந்தான், ஏன் குதித்தான் என்ற கேள்விகள் போக, இவனும் கடத்தல்வாதிகளில் ஒருவனைப் போல இருப்பதும் குழப்பக்குறி. &lt;br /&gt;&lt;br /&gt;நாகார்ஜுனா நச்சென்று பொருந்துகிறார். வேறு யாரையும் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. பாடல் இல்லாததும், வெடிச்சிரிப்புக்கு குறைவிருந்தாலும் ஆங்காங்கு அடிநாதமாய் நகரும் நகையும் புன்னகையை வரவழைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பிணைக்கைதி இறந்துபோவதும் அதற்குப்பதில் ஏற்பாடு செய்வதும் காமெடிக்கும் கதையின் போக்குக்கும் வழிவிடுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;எல்லா ”சுய” போதைகளையும் அபிலாஷைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு, கிரேசிமோகன் போன்றவர்களுடன் கூட்டணி கொண்டால், ராதாமோகன் மிகச்சிறந்த ஒரு காமெடிப்படத்தைக் கொடுக்கமுடியும் என்று தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டுக்கள் இல்லாது, ஒரே களத்தை அடிப்படையாகக் கொண்டு,  தமிழில் இதுபோன்ற படங்களை எடுக்க முடியுமா என்பதே கமல்ஹாசன் உட்பட்ட சிலருக்கு மட்டுமே  சிந்தனைக்குரியதாயும் செயலுக்குரியதாயும் சில காலங்களுக்கு முன்பிருந்த நிலையில், அத்தகைய முயற்சிகள் தமிழில் பிற தயாரிப்பாளர்களிடமிருந்தும் இயக்குனர்களிடமிருந்தும் வரத்தொடங்கியிருப்பது வரவேற்புக்குரியதுதான்.  இதையே நச்சென்று பொட்டில் அடித்தார்போல சொல்லவும் முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;கடல் பயணம், விமானப்பயணம், பேருந்துப்பயணம், ரயில்பயணம் என்பவைகளெல்லாம் போக, வாழ்க்கையே ஒரு பயணம் தானே. எல்லாப் பயணத்திலும் காலமாகவும் தூரமாகவும் உணர்வாகவும் ஏதோ ஒரு உச்சம் இருக்கிறது. அந்த உச்சத்தை இந்த ”பயணம்” எட்டாவிட்டாலும், இது எட்டிக்காய் இல்லை என்பது ஆறுதலே. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எம்.கே.குமார்&lt;br /&gt;&lt;br /&gt;தங்கமீன் இதழில் வெளிவந்தது. (வெட்டப்பட்ட பகுதிகளும் இங்கே சேர்க்கப்பட்டிருக்கின்றன)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5815740-2480187953516957392?l=yemkaykumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yemkaykumar.blogspot.com/feeds/2480187953516957392/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5815740&amp;postID=2480187953516957392' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/2480187953516957392'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/2480187953516957392'/><link rel='alternate' type='text/html' href='http://yemkaykumar.blogspot.com/2011/05/blog-post_6351.html' title='பயணம் -  பறக்க மறந்த உச்சம்'/><author><name>எம்.கே.குமார்</name><uri>http://www.blogger.com/profile/01900603075164396123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TRgMGEJFiKI/AAAAAAAAAJ4/NLOGXX9OHEA/S220/DSC03182.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5815740.post-4671206438089745318</id><published>2011-05-27T12:29:00.003+08:00</published><updated>2011-05-27T12:29:49.130+08:00</updated><title type='text'>ஆடுகளம் – சொல்ல மறந்த இன்னொரு கதை</title><content type='html'>ஆடுகளம் படத்தைப் பற்றி பலர் பேசி எழுதிய பிறகும், நான் எழுதவும் இன்னும் சில விஷயங்கள் இருப்பது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தாலும் அதுபற்றி எழுதாவிட்டால் நானும் கச்சேரிக்குச் சென்றேன் என்பதை  இந்த அகில உலகத்திற்குச் சொல்லாமல் விட்டுவிடுவது போலாகும் என்பதால் இந்த குறும்பகிர்வு. &lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் பொல்லாதவனையும் ஆடுகளத்தையும் உற்றுநோக்கினால், இயக்குநரின்  மேலாண்மையில் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. தனுஷைத் தவிர்த்து, நட்பு அல்லது அன்பு தோரணையில், நெருங்கிய ஒருவர் துரோகம் செய்வதும் அதில் ஒன்று. மேலும் பொல்லாதவனைப் போலவே இப்படமும் கிளைமேக்ஸுக்கு சிறிது முன்னால் ஆரம்பிக்கிறது. பிறகு கதைசொல்லியின் வழியாக பின்நோக்கலாக கதை நகர்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரே மாதிரி கதையைக் கொண்டுபோவது நீண்ட காலத்துக்கு சரிப்பட்டு வராது.  வெற்றிமாறன் அடுத்த படத்தில் யோசிக்கவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;சேரனை நினைக்கும்போதெல்லாம் “என் பேரு சிவக்குமாரு, அப்போ நான் பத்தாங்கிளாஸ், போரூர்ல படிச்சுக்கிட்டிருந்தேன், அப்போத்தான் அந்த பொண்ணு எங்க ஸ்கூலுக்கு வந்தான்னு” அவர் சொல்றமாதிரி ஒரு பிளாஷ்பேக் ஞாபகம் வருகிறதல்லவா? அதுமாதிரி ஆகிவிடக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;டாவடிக்கும் பெண்ணிடம் காசு வாங்கி (சத்தியமா இல்லேடா, சத்தியமா இல்லேங்க, அட சத்தியமா இல்லேங்க என்று எத்தனை சத்தியம் செய்தாலும் எங்கிருந்தாவது எடுத்துக்கொடுக்கும் காதலிகள் கிராமத்திலே மட்டும் உண்டு; டவுன் காதலிகள் எப்படி என்பதை அடுத்த பிறவியில் தான் தெரிந்துகொள்ளவேண்டும்) ஒரு ’நல்ல’ காரியத்தில் இறங்குவது என்பது எப்போதும் எல்லா மனிதர்களுக்கும் அவர்தம் உணர்வுகளுக்கும் நடைமுறைச் சபலம். எத்தனை படம் ஓட்டியிருக்கோம்!!! &lt;br /&gt;&lt;br /&gt;’யாருப்பா அது? முத்துராமன் மவனா?’&lt;br /&gt;’இல்லே, இது நமக்கு வேண்டிய பையன்; நம்ம பையன்.’&lt;br /&gt;’அப்பிடியா, நம்மாளுங்களாப்பா? ஒண்ணு மண்ணா நின்னு இந்த சேவல்பந்தயத்துல ஜெயிச்சுப்புடுங்கப்பா..’ என்று சொல்வது மிகவும் சக்திவாய்ந்த அணுகுண்டை அன்பில் தோய்த்து ஒருவனுக்குள் ஒளித்து வைப்பதற்குச் சமம் என்பதை அதுபோன்றதொரு சூழ்நிலையில் இருந்தவர்களுக்குத்தான் தெரியும். படத்தில் வரும் போலீஸ்காரரின் கிராமத்து அம்மா சொல்கிற வசனம்.&lt;br /&gt;&lt;br /&gt;’வாட் டு யு வாண்ட்? வாட் இஸ் யுவர் ப்ராப்ளம்? என்று நாயகி கேட்கும்போது, ’கருப்பு, கே பி கருப்பு’ என்று (இங்கிலீஷ் கெட்ட கேட்டுக்கு இனிஷியல் வேற!) தனுஷ் கூறுவது தமாஷூ.&lt;br /&gt;&lt;br /&gt;‘என்னய்யா வேணும்’ என்று வீட்டுக்குள் வந்த பந்தை நினைத்து நாயகி கேட்கும்போது, நம்ம தனுஷ், இங்கிலீசுல ’புலி’ கணக்கா, பால்ஸ், பால்ஸ் வேணும் என்று ’மெதப்பா’ கூறுவதும் (ஒரு பந்துக்கு, ரெண்டு பால்ஸ்ஸா?) அந்தப்பெண் அதைக்கேட்டு ஒரு நொடி அதிர்வதும் எப்போதும் என்னை புன்முறுவலிக்கச்செய்யும் ஒரு காட்சி.  &lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையில பாதி தூரம் வந்துபுட்டோம்டா, மீதிய எப்படிச் சேக்குறதுங்குறது நம்ம வாழ்க்கையில் வரப்போறவ கையிலதாண்டா இருக்கு என்று பேட்டைக்காரன் சொல்வது இன்னொரு மிக இயல்பான வசனம். பேட்டைக்காரனுக்கு ரெண்டு ’ப்ளக்ஸ் போர்டு கட் அவுட்’ வைங்கப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தாச்சியாய் வரும் அத்தாச்சி அசல் அத்தாச்சி. தீராத கலைவெறியால் மட்டுமே இப்படிக் காதல்கள் சாத்தியமாகும். பேட்டைக்காரனுக்கு (கிழவனாயிருந்தாலும்) பொண்டாட்டியாய் வாழ்த்தீர்மானிப்பது சொல்லமறந்த இன்னொரு கதை படத்தில். அவளுக்கு நாயகனுடன் கள்ளத்தொடர்பு (தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை இது) என்றதும், போய்யா, இதுக்கு மேல இங்க நான் இருக்கவே வேண்டாம்ன்னு போறா பாருங்க, அந்தக்கதை!!)&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு முறை பெரியகருப்புத் தேவனுக்கு நல்ல வேடமும், வசனமும். இந்தியாவிற்கு வரும்போது இவரைக் கூட்டிப்போய் ஒரு பார்ல பார்ட்டி கொடுக்கணும் போல இருக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் மீண்டும் பார்க்கிறேன். வெற்றிமாறனுக்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;எம்.கே.குமார்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கமீன் மார்ச் இதழில் வெளிவந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5815740-4671206438089745318?l=yemkaykumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yemkaykumar.blogspot.com/feeds/4671206438089745318/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5815740&amp;postID=4671206438089745318' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/4671206438089745318'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/4671206438089745318'/><link rel='alternate' type='text/html' href='http://yemkaykumar.blogspot.com/2011/05/blog-post_27.html' title='ஆடுகளம் – சொல்ல மறந்த இன்னொரு கதை'/><author><name>எம்.கே.குமார்</name><uri>http://www.blogger.com/profile/01900603075164396123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TRgMGEJFiKI/AAAAAAAAAJ4/NLOGXX9OHEA/S220/DSC03182.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5815740.post-6971594097271482656</id><published>2011-05-27T12:27:00.000+08:00</published><updated>2011-05-27T12:28:33.410+08:00</updated><title type='text'>நடுநிசி நாய்கள் – ஒரு சிறப்புப்பார்வை</title><content type='html'>தமிழ் வலைப்பூக்களை அண்மையில் அதிகமாய் மேய்ந்ததில், சூடும் காற்றும் மெல்ல சேர்ந்தேறி, நடுநிசி நாய்கள் என்ற புதிய  படத்தை எப்படியாவது பார்த்துவிடவேண்டும் என, வயிறு உப்பி, கும்பி சூடு கண்டிருந்தது. இதற்கு மேலும் காயவிட்டால் கும்பி என்னாவது என்பதால் பார்த்துவிடத் தீர்மானித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நடுநிசியில் தான் இப்படத்தைப் பார்க்கவேண்டும் என எனக்கு இருந்தது போலும். நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு சிங்கப்பூரின் ரெக்ஸ் திரையரங்க வாயிலை அடைந்து டிக்கெட் கேட்டேன். நள்ளிரவு1215க்கு காட்சி. அவர் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு,  ’இந்த நட்ட நடுராத்தியில படத்துக்கு வந்திருக்கு பாரு நாயி’ என்பதாய் கூடலின் உச்சஸ்தானத்தின் எரிச்சல் அடைந்தவரைப் போல பார்த்தார். &lt;br /&gt;&lt;br /&gt;நடுநிசி நாயின் இயக்குனர் ’கௌதம் வாசுதேவ மேனனை’ ’மின்னலே’ படம் வந்ததிலிருந்து எனக்குத்தெரியும். (அவருக்கு என்னைத் தெரியுமா எனக்கேட்பவர்களை ஆண்டவன் தண்டிக்கட்டும்.) அப்போது அவர் கௌதமாய் இருந்தார். அதற்குப்பிறகு சில போலீஸ் குட்டிக்கரணங்களையும், சித்தப்பாவை வைத்து ஒரு விரும்பத்தகாத படத்தையும், தனது அப்பாவை வைத்து ஒரு பாடல்படத்தையும் எடுத்த பின்பு, இந்த ந.நி.நா படத்துக்கு வந்திருக்கிறார். இந்த இடைப்பட்ட காலத்தில்,  இந்த “மேனனை” அவர் தன் பெயருடன் சேர்க்க பட்ட பாடு, எந்த நடுநிசி நாயும் படாத, வார்த்தையால் சொல்லமுடியாத பாடு. அதை விடுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;கௌ.வா.மே மிகவும் நல்லவர். உணர்வுகளை அழகாய்ச் சொல்பவர். பெண்களை மதிப்பவர். எனக்கு அவரைப் பிடிக்கக்காரணம் ஜோதிகாவுக்கும் திரிஷாவுக்கும் புடவை கட்டிப் பார்த்தவர் என்பதால் மட்டுமல்ல; தாமரை என்ற பெண்கவிஞரை உச்சம் கொள்ளச்செய்தவர் என்பதால் மட்டுமல்ல; நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே என்று சூடேற்றியவர் என்பதால் மட்டுமல்ல; அவர் செம்மொழிப்பாடலுக்கு இயக்குனர் என்பதால் தான். அந்த வகையில் தமிழர்களுக்கு விஜய் நம்பியார், சிவசங்கர மேனன் போல இவரும் நண்பர்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நடுநிசி நாய்கள் என்ற தலைப்பைப் பற்றி ரெண்டு வரியில் சொல்லிவிடலாம் எனத்தோன்றுகிறது. சுந்தர ராமசாமி என்று தென்தமிழ்நாட்டில், மலையாள தேசத்திற்கருகில்  ஒரு மனிதர் இருந்தார். அவருடைய ’உடம்பில்’ பிறந்தவர்களில் மிக முக்கியமான இருவர் அண்ணன் பசுவய்யாவும் தம்பி ஜேஜேயும். அண்ணன் பசுவய்யா பெரிய கவிஞன். தம்பி ஜே ஜே பெரிய சிந்தனாவாதி. அந்த அண்ணன் படைத்து, 1975ல் முதற்பதிப்பாய் வந்த 29 கவிதைகளைக் கொண்டதுதான் இந்த நடுநிசிநாய்கள் கவிதைத்தொகுப்பு. (நடுநிசி நாய்கள் என்று எங்கே தேடினாலும் வாசுதேவ மகா மேனன் தான் தற்போது கிடைக்கிறார்; பசுவய்யாவை புத்தக புழுதிகளில் தான் எங்காவது தேடவேண்டும் போலிருக்கிறது.)&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவர், இப்படத்தில் நடித்த நடிகை சமீரா ரெட்டி. அவர் ஒன்றும் அழகெல்லாம் இல்லை என்று நான் சொன்னால் நீங்கள்தான் நம்பப்போகிறீர்களா இல்லை கௌதம் வாசுதேவ மேனன் தான் ஒத்துக்கொள்ளப்போகிறாரா? அண்மையில் ஒரு தொ.கா நிகழ்ச்சியில் பேசிய கௌ.வா.மே, தனக்கு சமீராவைப் பிடிக்கும் என்றார். அதனால் எனக்கும் பிடித்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர், உடலுக்கு மூஞ்சியைப் போல படத்துக்கு முக்கியமானவர். அந்த வகையில் மனோஜ் பரமஹம்சா விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்குப்பிறகு கௌ.வா.மேயின் இப்படத்திலும் ஒளிஓவியம் செய்திருக்கிறார். (முதல் ஒளி ஓவியரே, எங்கேயிருக்கீங்க, 9ரூபாய் நோட்டு, பள்ளிக்கூடத்துக்கு அப்புறம் ஆளக்காணோம்?)&lt;br /&gt;&lt;br /&gt;படம் தகாத உறவு பற்றியும் எல்லோருக்கும் கிடைக்காத தகுந்த உறவு பற்றியும் என்று சொல்லியது போதாதென்று, கலாச்சாரக்காவலர்களை மிகவும் அதிர்ச்சியாக்கும் என்று வேறு சொல்லியிருந்தார்கள்.  இதனால் எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியானது. நான் கலாச்சாரக் ’காவலன்’ இல்லை, அது விஜய். இருந்தாலும், எனக்குக் கிடைக்காத எதுவும் அடுத்தவர்களுக்குக் கிடைத்தால் அந்த அதிர்ச்சி ஏற்படும். குறிப்பாய்....வேண்டாம் விடுங்கள். அதைப்பற்றியா பேசுகிறோம்?&lt;br /&gt;&lt;br /&gt;சரி, ரெண்டு டிக்கெட் என்றேன். அருகிலிருந்த இன்னொரு ’கவுண்டர்’ பெண் (கவுண்டரா தெரியவில்லை, வேறு ஜாதியாகவும் இருக்கலாம்) அதே தியேட்டரில் ஓடும் ஒரு மலாய் படத்துக்கு (மலாய் ந.நி.நாயாய் இருக்குமோ) வந்த கூட்டத்துக்கு டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்தார்.  &lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் ரெண்டு டிக்கெட் என்றேன். அந்த நண்பர் எழுந்து உள்ளே சென்றார். இப்போது என் பக்கம் திரும்பிய அந்தப்பெண் (மலேசியப்பெண்ணாக இருக்கவேண்டும்; அவ்வளவு அழகு!)  சாரி டிக்கெட் இல்லை என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன? ஏன் டிக்கெட் இல்லை?  நடு நிசி நாய்கள் படத்துக்கு நடுநிசியில் கூட கூட்டம் வருகிறதா, ஆச்சர்யமாய் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் அதிர்ச்சியுடன் கேட்டேன். அவர் மீண்டும் என்னைப் பார்த்துவிட்டு, குழந்தைகள் அனுமதி இல்லை என்றார். என்ன நானா குழந்தை, என் மனசைச் சொல்கிறாரோ என்று குழம்பிய வேளையில், அவன் தான் தூங்குகிறானே என்றார் என் மனைவி. &lt;br /&gt;&lt;br /&gt;அவன் திடீரென விழித்து எழுந்து விட்டால், என்ன செய்வது என்று கேட்டார் அப்பெண்.&lt;br /&gt;&lt;br /&gt;ம்ஹூம், என்ன சொல்வது, பெண்கள் தான் எவ்வளவு புத்திசாலிகளாய் இருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு ’பயணம்’ ஆனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நடுநிசி நாய்கள் படத்தை நான் மட்டுமே செல்லும் ’சிறப்புப்பார்வை’யில் தான் பார்க்கவேண்டும் போலிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எம்.கே.குமார்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கமீன் மார்ச் இதழில் வெளியானது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5815740-6971594097271482656?l=yemkaykumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yemkaykumar.blogspot.com/feeds/6971594097271482656/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5815740&amp;postID=6971594097271482656' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/6971594097271482656'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/6971594097271482656'/><link rel='alternate' type='text/html' href='http://yemkaykumar.blogspot.com/2011/05/blog-post.html' title='நடுநிசி நாய்கள் – ஒரு சிறப்புப்பார்வை'/><author><name>எம்.கே.குமார்</name><uri>http://www.blogger.com/profile/01900603075164396123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TRgMGEJFiKI/AAAAAAAAAJ4/NLOGXX9OHEA/S220/DSC03182.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5815740.post-8678686453567411981</id><published>2011-04-08T17:45:00.001+08:00</published><updated>2011-04-08T17:52:46.172+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='49(o)'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='“Tragedy of the commons”'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='TN election 2011'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வைகோ'/><title type='text'>“Tragedy of the commons” தமிழகத் தமிழனுக்கு ஒரு மடல்.</title><content type='html'>“Tragedy of the commons” &lt;br /&gt;தமிழகத் தமிழனுக்கு ஒரு மடல். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புச் சகோதரா,&lt;br /&gt;&lt;br /&gt;இம்மடலை படிக்கும் முன் ஒரு பிளேட் பிரியாணி நீ சாப்பிட்டிருக்கலாம் அல்லது உனது வீட்டு வாசலில் திடீரென்று ராவோடு ராவாக வந்திருக்கும் ஒரு வெள்ளிவிளக்கைத் தேய்த்து, பூதம் வருகிறதா என்று பார்த்துக்கொண்டிருக்கலாம். பூதத்தை நீ எதிர்பார்த்திருக்கையில் உனது வீட்டு வாசலில் கும்பிடு சகிதமாக ஒருவர் வருவதை நோக்கியிருக்கலாம். வந்தவர் படக்கென்று உன் காலிலோ உன் அம்மா காலிலோ விழுந்து வணங்கியிருக்கலாம். கூட்டத்தோடு கூட்டமாய் நின்று கண்ணகி குஷ்பு கதையையும் மாவீரன் வடிவேலு அல்லது அஞ்சா நெஞ்சன் சிங்கமுத்துவின் வரலாறையும் கேட்டுக்கொண்டிருக்கலாம். அல்லது எங்கேயிருந்தாவது ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டு பறந்து, பாக்கெட்டுக்குள் வருமா என விக்கித்து வேடிக்கை பார்த்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றையும் பார்த்து பார்த்து அலுப்பான உனக்கு,  ஐந்தாண்டு காலம் உன்னை வழிநடத்துவதற்கு, உனக்காகப் பரிந்து பேசுவதற்கு நீயே தேர்ந்தெடுக்கும் ஒரு முறைதான் இப்போது நீ செய்யப்போவது ”இந்த தேர்தலில்” என்பதை நான் உனக்கு நினைவுபடுத்த நேர்ந்தது காலத்தின் கோலம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;உனக்கும் உன் குடும்பத்திற்கும் ராஜபாட்டை விரித்திருக்கின்றன தமிழக அரசியல் கட்சிகள். உலக வரலாற்றில், கடும் போரினாலும் வறுமையினாலும் அவதிப்படுகையில் கூட இலவசமாய்க் கிடைக்காதது எல்லாம் உனக்கு இனிமேல் இலவசமாய்க் கிடைக்கப்போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, தாலிக்கு தங்கம், ஆடு, மாடு, குடிக்கத்தண்ணீர் என்றெல்லாம் கிடைக்கும் என்று நீயும் சந்தோசத்தில் மிதந்துகொண்டிருப்பாய்; கூட, வீடும், வீடு கட்ட கடனும் தருகிறார்களாம். அரிசி தருகிறார்களாம். அப்படியே ஒரு பெண்ணையும் கொடுத்தால் நீ சந்தோசமாய் படுத்துக்கொண்டிருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;சுமார் ஐம்பதாண்டுகளுக்கு முன்னால், விஞ்ஞானத்தின் விழுதுகள் நம்மைத்தீண்டாத வேளையில், கல்வி நிலையங்களையும் தொழிற்சாலைகளையும் திறந்த ’படிக்காத பெருந்தலைவர்கள்’ எங்கே, இன்று இலவசங்களை வாரி வழங்கும் முட்டாள்கள் எங்கே என்று கொஞ்சம் யோசிப்பாயா?&lt;br /&gt;&lt;br /&gt;எந்த நாட்டிலும் ’இத்தனையாயிரம் வேலைகளை’ நான் எனது ஆட்சிக்காலத்தில் உருவாக்கினேன் என்று பெருமைப்படும் தலைவர்கள் எங்கே? எனது ஆட்சிக்காலத்தில் இதெல்லாம் இலவசமாகக் கொடுத்தேன் என்கிற அறிவற்ற நம் தலைவர்கள் எங்கே? இலவசமாக கிடைக்கும் எந்தப்பொருளையும் இலவசமாய் செய்யமுடியுமா என்று யோசித்துப்பார்ப்பார்களா? மிக்ஸி இலவசமாய் செய்ய முடியுமா? மிக்ஸியில் உள்ள இரும்பு இலவசமாய் வருமா? இலவசமாய் கிடைக்கும் ஒரு பொருளை பயன்படுத்துவதற்கு மின்சாரம் இலவசமாய் கிடைக்குமா? உள்ளதுக்கே மின்சாரம் இல்லாமல், அறிவிக்கப்படாத மின்சாரவெட்டு தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு பலமணிநேரம் பாடாய் படுத்தும்போது, மிக்ஸியை வைத்து நீ என்ன செய்யப்போகிறாய்?&lt;br /&gt;&lt;br /&gt;சுகாதாரத்தையும், கல்வியையும், தொழிற்சாலைகளையும் மேம்படுத்தாத எந்தநாடும் இறுதியில் என்ன ஆகும் என்பதற்கு எத்தனை உதாரணங்கள் நம் கண்முன்னே உள்ளன!?&lt;br /&gt;&lt;br /&gt;நீ குடித்தால் நீ மட்டும் ஆட்டம் போடுவாய். நீ குடியை நிறுத்தினால் அரசாங்கமே ஆட்டம் காணும் என்பதை நீ அறிவாயா? மக்களின் உடல்நலத்தையும் குடும்ப நலத்தையும் கெடுத்து இலவசங்களை வாரியிறைப்பதால் என்ன ஆகும்?&lt;br /&gt;&lt;br /&gt;வெளிநாட்டில் பிழைப்பு நடத்தும் எல்லா மனிதனுக்குமே ஏதாவதொரு ஏக்கம் சொந்த ஊரைப்பற்றி இருக்கும். சுத்தத்தில் ஆரம்பித்து, வாழ்க்கை வசதிகள், சுற்றுலா வசதிகள், மனநிறைவான வாழ்வு என ஏதாவதொன்றை சொந்த ஊரில் காணும் கனவை இணைத்து வாழ்ந்து கொண்டேயிருப்பதுதான்  வெளிநாட்டு வாழ்க்கை. இவையெல்லாம் அற்ப மாயைகளாய் ஆடம்பர கனவாய் இனி காலாகாலத்திற்கும் அமைந்துவிடுமோ என்று ஆதங்கப்படுகின்றது மனது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது தமிழ்நாட்டில் நடப்பது என்ன தெரியுமா உனக்கு?  ”பொதுத்தனத்தின் பயங்கரம்” என்றால் என்னவென்று அறிவாயா? எல்லோருக்கும் பொதுவான ’இரண்டு ஏக்கர்’ இடத்தில் வீட்டுக்கு நாலு மாடு மட்டும் என, வாங்கி வளர்த்தால், பிரச்சனையில்லை. வேண்டும் அளவுக்கு  ஒவ்வொருவரும் மாடு வாங்கிவிடலாம் என்றால் என்ன ஆகும்? எல்லா மாடுகளும் செத்துப்போய்விடும் அல்லவா? அவன் ரெண்டு இலவசம் தருகிறான்; நான் நாலு இலவசம் தருகிறேன் என்றால்,  இந்த நாடு என்ன ஆகும்?&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு வீட்டு கழிவுமே ஒரு கூவம் நதியை உருவாக்கியதைப் போல இந்த ’இலவச பொதுப்புத்தி’ எத்தகைய பாதை விட்டுவிட்டுச்செல்லும் அறிவாயா நீ? உனது சந்ததி இனி காலாகாலத்திற்கும் இலவசத்தை எதிர்பார்த்தே பழக்கப்பட்டு கோயில் வாசலில் அமர்வதைப்போல தேர்தல் வாசலில் அமர்த்தப்படும். இலவசங்கள் தருவதே அவர்களின் கடமை; பெறுவது உனது உரிமை என்றாகும்;  இலவசமாய் கிடைக்காதபோது வெகுண்டெழுவாய்; கொள்ளைகளும் களவுகளும் நிகழும். சமுதாயம் அதை புரட்சி என்றழைக்கும், ஒரு பூகம்பமோ சுனாமியோ அனைத்தையும் வாரிக்கொண்டு போகும் வரையில்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது நான் உனக்குச் சொல்லப்போவது ஒன்றே ஒன்றுதான். உன்னைச்சுற்றி வருபவர்கள் கண்ணீர் விடுவார்கள்; கலங்குவார்கள்; காரியமாய் நடிப்பார்கள்; உனக்கு அடிமை என்பார்கள்; கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன் என்பார்கள். காந்தி நோட்டுகளை அள்ளிவீசுவார்கள். கற்பு முதல் கல்லறை வரை அனைத்தும் இலவசம் என்பார்கள். காந்தியக்கூட்டணி என்பார்கள். முற்போக்கு என்பார்கள். அவன் குடிகாரன்; நான் யோக்கிவான் என்பார்கள்; நான் தமிழன்; தமிழனைக் காக்க வந்த தமிழன் என்பார்கள்; பரம்பரை வாழ்ந்த இடம் என்பார்கள்; படுத்து உறங்கிய தெரு என்பார்கள்; தன்மானம் என்பார்கள்; தமிழ் மானம் என்பார்கள்; சிறுத்தைகளாய் சிங்கங்களாய் ஜாதிக்கொடியுடன் வருவார்கள்; கல்வித்தந்தையர்கள் என்பார்கள்; இன்னும் என்னென்னவோ பிதற்றுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;யாருக்கு நீ ஓட்டுப்போடப்போகிறாய்? யாருக்கு நீ போட்டாலும் அவன் எவனுக்கோ ஜால்றா போடப்போகிறான். தமிழ் உணர்வு காக்கப்போகிறேன் என வருபவன் பதவியோடு அமர்ந்து சுகவாசியாகப்போகிறான். கூட்டணி இல்லை என்றவன் கூட்டணி ஆட்சிக்கு கோடிகளைப் பெறப்போகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றே ஒன்று மட்டும் செய். வைகோ என்ற மானத்தமிழன் செய்ததைச் செய். நேரே ஓட்டுச்சாவடிக்கு சென்று ”49ஓ” வை அழுத்தி விட்டு வா. வருங்கால சந்ததியினரின் மாபெரும் விடுதலைக்கு நீ இடும் முதல் கைரேகை அது!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எம் கே குமார்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5815740-8678686453567411981?l=yemkaykumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yemkaykumar.blogspot.com/feeds/8678686453567411981/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5815740&amp;postID=8678686453567411981' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/8678686453567411981'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/8678686453567411981'/><link rel='alternate' type='text/html' href='http://yemkaykumar.blogspot.com/2011/04/tragedy-of-commons.html' title='“Tragedy of the commons” தமிழகத் தமிழனுக்கு ஒரு மடல்.'/><author><name>எம்.கே.குமார்</name><uri>http://www.blogger.com/profile/01900603075164396123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TRgMGEJFiKI/AAAAAAAAAJ4/NLOGXX9OHEA/S220/DSC03182.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5815740.post-4736301324216325283</id><published>2011-03-03T08:04:00.003+08:00</published><updated>2011-03-03T08:09:47.718+08:00</updated><title type='text'>இந்திரஜித் வந்திருந்தார்</title><content type='html'>அண்மையில் நான் படித்த இந்த கட்டுரை, என்னை மிகவும் கவர்ந்தது. காரணம், இந்திரஜித் ’ஒருமாதிரியான’ ஆள்தான் என்றாலும் இந்தக்கட்டுரையில் மிக உச்சத்தில் இருந்தார் என்றே நினைக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;*************************&lt;br /&gt;ந.பாலபாஸ்கரன் இலக்கியக்கூட்டம்  &lt;br /&gt;இந்திரஜித் &lt;br /&gt;&lt;br /&gt;ஆறு மணிக்குக் கூட்டம் என்பதால் ஆறு மணிக்கே போய்விட்டேன். வாசலில் இரண்டு இலக்கியக் கூட்டங்கள் பற்றிய விவரம் இருந்தது. ஒன்று இன்று. ஒன்று நாளை. இன்றைய நிகழ்ச்சி எங்கே என்று தற்செயலாகத் திரும்பியபோது வாசலுக்குப் பக்கத்திலேயே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நடராசனும் இருந்தார். நானும் அவரும் உடனே நிகழ்ச்சியைத் தொடங்கிவிட்டோம். இரண்டு விதமான வடைகளும், கேசரியும் இருந்தன. காபி, டீ இரண்டும். டீ மட்டும் எடுத்துக்கொண்டோம். பலகாரம் மூன்றும். தொடர்ந்து வரலாம் போலிருக்கிறதே என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அறுபது பேர் உட்கார இடம் இருந்தது. ஆறு மணிக்கு இருபது பேர் இருந்தனர். ‘தங்கமீன்’, ‘இணைய இதழும்’, ‘மாதவி இலக்கிய மன்ற’மும் சேர்ந்து செய்த ஏற்பாடு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெண்கள் சரிசமமாக இருந்தனர். புஷ்பலதா, சீதாலெட்சுமி, சித்ரா ரமேஷ், ஜெயந்தி சங்கர், மீனாட்சி சபாபதி என்று அறிமுகமான முகங்களும், அறிமுகம் இல்லாத வேறு பல முகங்களும். மூத்த எழுத்தாளர்கள் பி கிருஷ்ணன், ஏ. பி. ராமன், ஓய்வுபெற்ற வானொலிச் செய்திப் பிரிவின் தலைவர் கண்ணப்பன், மொழிபெயர்ப்பாளர் சுப்ரா இப்படி மூத்தோர் எண்ணிக்கை கணிசமாகவே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜே. எம். சாலி என்னைப் பார்த்ததும் ஏற்கனவே உள்ளே வைத்திருந்த விரக்திகளைக் கொட்டினார். அருண் செங்குட்டுவன், அருண் மகிழ்நன் சகோதரர்கள் வந்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;உடல்நலக் குறைவினால் மாதவி இலக்கிய மன்றத்தின் தலைவர் தமிழ்நெஞ்சர் என். ஆர். கோவிந்தன் வர முடியவில்லை என்று ‘தங்கமீன்’ ஆசிரியர் பாலு மணிமாறன் அறிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் நா. ஆண்டியப்பன், முன்னைய தலைவர் அமலதாசன், செயலாளர் சுப அருணாச்சலம் மூவரும் வந்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு வராதவர்கள் பலர் வந்திருந்தனர். வானொலியின் எஸ். பீட்டர் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு வருவதே இல்லை. ‘பாஸ்கரனுக்காக வந்தேன்’ என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;மெல்ல கூட்டம் சேர்ந்தது. ஆறரை மணி வரை கேசரி, பிறகு நிகழ்ச்சியைத் தொடங்கிவிடலாம் என்று பேசிக்கொண்டனர். மெல்ல கேசரி கரைந்து கொண்டிருந்தது. ‘சிங்கப்பூர்த் தமிழ் இதழ்கள் 1875-1941’ என்ற தலைப்பில் பாலபாஸ்கரன் பேசுவதற்காகக் கூட்டம் காத்திருந்தது. ஆறு நாற்பதுக்கு அவர் பேச ஆரம்பித்தபோது கூடுதலாக நாற்காலி கொண்டு வந்து போட நேர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாண்டுப் பிற்பகுதியில் புத்தகமாக வரவிருக்கும் அவருடைய ஆய்வில் இருந்து சில தகவல்களை பாஸ்கரன் பகிர்ந்து கொண்டார். நாடாளுமன்ற மொழிபெயர்ப்பாளர் பழனியப்பன் பதிவு செய்து கொள்ளலாமா என்று தன் கருவியைக் காட்டினார். பதிந்துகொண்டு கணினியில் இட்டு காரில் போகும்போது கேட்டுக்கொண்டு போகலாம் என்றார். ‘அப்படி கேட்க முடியாது. நான் என்ன பாட்டா பாடப் போறேன்?’ என்று பாஸ்கரன் கேட்டார். அப்படியும் அவர் பேசத் தொடங்கியதும் சில பல பதிவுகள் நடந்தன. ‘கொஞ்சம் நிமிர்ந்து அப்படியே பேசுங்க!` என்று ஒரு முதியவர் பாஸ்கரனைப் பாதிப் பேச்சில் அதிர வைத்துப் படமெடுத்தார். அந்தப் படம் வேறு யாருக்கும் கிடைக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று பேர் பேச்சு தொடங்கிய அரை மணி நேரத்தில் எழுந்து சென்றனர். நன்றாக அறிமுகமான அவர்களின் பெயர் இப்போது சட்டென்று நினைவுக்கு வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக 1875 முதல் 1941 வரை பத்திரிகைகளை நடத்தியவர்களும் அவற்றை மூடியவர்களும் பற்றி சுமார் ஒன்றரை மணி நேரம் பேசினார் பாஸ்கரன். சீனப் பத்திரிகைகளைப் பெரும் கோடீஸ்வரர்கள் நடத்தினர். தமிழ்ப் பத்திரிகைகளைப் பெரும்பாலும் வசதி இல்லாதவர்களே நடத்தினர் என்று சொன்னார். முஸ்லிம்களே அதிகம் பத்திரிகைகளை தொடங்குவதும் மூடுவதுமாக இருந்திருக்கின்றனர். சில பத்திரிகை ஆசிரியர்கள் வாங்காத ஜனங்களை ஜாதி வாரியாக, மதவாரியாகக் குறிப்பிட்டு திட்டித் திட்டித் தலையங்கம் எழுதியிருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி நேரம் வந்ததும் கேள்வி கேட்பவர்களுக்கு ஏதுவாக அங் மோ கியோ நூலகத்தின் உயர்தரமான மைக் தரப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் கேள்வியை இலியாஸ் கேட்டார். கோ. சாரங்கபாணி முஸ்லிம்களோடு இணக்கமாக இருந்ததாகச் சொன்னீர்கள். மகிழ்ச்சி. ஆனால் செட்டியார்களோடு உரசல் இருந்ததாகச் சொன்னதை ஏற்க முடியாது. அவர்களோடும் அணுக்கமாகத்தான் இருந்தார் என்று சொன்னார். பாதிக் கேள்வியில் கொஞ்ச நேரம் இலியாஸ் பேசாமல் ஸ்தம்பித்து நின்று கொண்டிருந்தார். பிறகு ‘விநோத சம்பாஷணை’ என்பது நினைவுக்கு வந்ததும் அதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்று கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;விநோத சம்பாஷணை மகுதூம் சாயபு எழுதிய தமிழின் முதல் சிறுகதை என்று ஏற்கனவே நா கோவிந்தசாமி சொல்லியிருக்கிறார். அதைப் பற்றி யாரும் குறிப்பிடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பாஸ்கரன் அதை சிறுகதையாக ஏற்கவில்லை என்பதை ஏற்கனவே எழுதியிருக்கிறார். இங்கும் அதையே சொன்னார். சம்பாஷணை பாணியில் அந்தக் கால இதழ்களில் நிறைய வந்திருக்கிறது. சம்பாஷணை சம்பாஷணைதான், சிறுகதை சிறுகதைதான் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;மூத்த பத்திரிகையாளர் மகுதூம் சாயபு படித்தவரா என்று பொன். சுந்தரராசு கேட்டார். தகுதி இல்லாதவர்களும், வசதி இல்லாதவர்களுமே பத்திரிகை நடத்தினர் என்று பாஸ்கரன் சொன்னதால் அந்தக் கேள்வி ஏற்பட்டது. சாயபு படித்தவர், நிறையப் பழமொழிகளை அவருடைய எழுத்தில் பயன்படுத்தியிருக்கிறார் என்று பாஸ்கரன் சொன்னதை இங்கே எழுதும்போது அவர் சாயபுவைக் கிண்டல் செய்தது போல் இருக்கிறது. ஆனால் அவர் படித்தவர்தான் என்று பாஸ்கரன் உறுதியாகச் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;1875 முதல் 1941 வரை சுமார் ஐம்பது தமிழ் இதழ்கள் வந்திருந்தன. ஏன் அத்தனை இதழ்கள் வந்தன? மற்ற சமூகத்தினரும் அவ்வளவு பத்திரிகைகளை நடத்தினார்களா? என்று மகிழ்நன் கேட்டார். மற்றவர்கள் பெரிய பத்திரிகைகளை நடத்தியதால் எண்ணிக்கை குறைவாக இருந்தது. தமிழில் சின்னச் சின்ன முயற்சிகள் அவ்வப்போது நின்று போனதால் நிறைய வர நேர்ந்தது என்றார் பாஸ்கரன்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;கடைசிக் கேள்வியை ஜே. எம். சாலி கேட்டார். பாஸ்கரன் சொன்ன எல்லா விவரமும் தனக்கும் தெரியும் என்றும் பாஸ்கரனோடு வேலை பார்த்ததாகவும் சாலி சொல்லும்போது அவருடைய குரல் ஓரளவு சரியத் தொடங்கியது, கோசாதான் என் தந்தை என்னை சிங்கப்பூருக்கு அழைத்தார். என்னை வளர்த்தார் என்று சொல்லும்போது தொண்டை கரகரத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டம் முடிந்து விடைபெறும் நேரத்தில் எதிர்பாராத அறிவிப்பு வந்தது. இலியாஸ் பொன்னாடை போர்த்த விரும்புவதாகத் தெரிவித்தார். பாஸ்கரன் தடுமாறினார். பொன்னாடையோடு மேடைக்குச் சென்ற இலியாஸ், செங்குட்டுவன் மூலம் பொன்னாடையைப் போர்த்த செய்தது நிகழ்ச்சிக்கு மிகவும் மெருகூட்டியது. தமிழ் இதழ்களின் வரலாற்றில் பாஸ்கரன், செங்குட்டுவன், இலியாஸ் மூவரும் இடம்பெற்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் மிகவும் அபூர்வமாகவே இதுபோன்ற நிகழ்ச்சிகள் வருகின்றன. பொன்னாடை அங்கத்தைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இது தமிழ் நிகழ்ச்சிதானா என்று ஐயமாக இருந்தது. ஏதோ பாண்டிச்சேரியைச் சேர்ந்த பிரஞ்சுக் கூட்டம் மாதிரி பேச்சாளர் மெல்லிய குரலில் விவரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். தமிழ்க் கூட்டம் என்றால் மைக்கே திகைக்கும் வகையில் பெரும் சத்தம் இருக்கும். அது இல்லாமல் இருந்தது பெருங்குறையாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்ச்சியில் சொன்ன விவரங்கள் புத்தகத்தில் வரும். நான் புத்தகம் போடுவதற்கு முன்பு நீங்கள் எங்கும் பயன்படுத்திவிடாதீர்கள் என்று பாஸ்கரன் கேட்டுக்கொண்டார். அவருக்கு முன்பே யாராவது புத்தகம் போட விரும்பினால் இந்த விவரங்களை சொந்தமாக ஆராய்ச்சி செய்தது போல் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாமா என்பது பற்றி அவர் ஒன்றும் சொல்லவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோன்ற நிகழ்ச்சியில் பதிவு செய்வதுகூட ஒரு வகையான ஆராய்ச்சிதானே என்று வாதிடக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;தொலைக்காட்சியில் இருந்து வந்த ‘தாளம்’ நிகழ்ச்சி தயாரிப்பாளர் அன்பரசன் பேட்டிகள் எடுத்துக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் இலங்கைக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய புஷ்பலதா, ‘இந்திரஜித் ஒழுங்கை என்றால் என்னவென்று தெரியுமா?’ என்று கேட்டார். அவரோடு இலங்கையைச் சேர்ந்த மற்றொரு பெண்மணியும் சேர்ந்து எனக்கு விளக்கம் தந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஷாநவாஸ் ‘உயிர்மையில்’ வெளிவந்த என்னுடைய கவிதைத் தொகுப்பில் நான்கு பிரதிகள் கொண்டு வந்ததாகவும் எல்லாவற்றையுமே கடைக்கு வந்தவர்கள் எடுத்துச் சென்றுவிட்டதாகவும் வருத்தம் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அருண்மகிழ்நன் மின்கலம் பலவீனம் அடைந்து கொண்டிருந்த அவருடைய கைத்தொலைபேசியில் அண்மையில் செல்லில் வந்த என் கதைகளைக் காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சனிக்கிழமை மாலையில் பொருளும் நேரமும் செலவு செய்து இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்திய ‘தங்கமீன்’ மாத இதழுக்கும், ‘மாதவி இலக்கிய மன்ற’த்துக்கும் நன்றி சொல்லிக்கொண்டு விடைபெறலாமா என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பாஸ்கரன் ‘இருங்கள் போகலாம்’ என்று சொன்னதையும் கேட்காமல் நண்பர் ராமநாதனுடன் வெளியே வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: உயிரோசை&lt;br /&gt;http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4006&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5815740-4736301324216325283?l=yemkaykumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yemkaykumar.blogspot.com/feeds/4736301324216325283/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5815740&amp;postID=4736301324216325283' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/4736301324216325283'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/4736301324216325283'/><link rel='alternate' type='text/html' href='http://yemkaykumar.blogspot.com/2011/03/blog-post.html' title='இந்திரஜித் வந்திருந்தார்'/><author><name>எம்.கே.குமார்</name><uri>http://www.blogger.com/profile/01900603075164396123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TRgMGEJFiKI/AAAAAAAAAJ4/NLOGXX9OHEA/S220/DSC03182.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5815740.post-5644066896063336792</id><published>2011-02-02T07:43:00.003+08:00</published><updated>2011-02-02T07:47:14.871+08:00</updated><title type='text'>கமல்ஹாசனுக்கு ஒரு கடிதம்</title><content type='html'>வண்க்கம் தலீவா,&lt;br /&gt;&lt;br /&gt;நாந்தான் கமல் குமார் பேசுறேன். சிங்கப்பூர்ல இருந்துதான். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்துல உன்னை நேர்ல பாத்தது. அப்போ, நம் சிங்கப்பூர் சித்ரா உன்னுகிட்ட கேட்ட கேள்வியில டென்ஷனாகிப்போன உன்னை பாக்கவே பயந்துட்டேன் தலீவா. அதுக்குப்பின்னாடி நாலைஞ்சி படம் நடிச்சிப்புட்டே. படத்துல பாக்குறதோட சரி. எப்புடிக்கீற தலீவா. கௌதமியக்கா நல்லா பாத்துக்குறாங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;மன்மதன் அம்புன்னு ஒரு படம், நம்ம ஊர்ல ஆடியோ ரிலீஸ்ன்னு, ’வசந்தம்’ டிவிலெ, கூவிக்கூவி வித்தானுக. தலிவனை நேர்ல பாத்து ரொம்ப நாளாச்சே, நேர்ல பாக்காலாமேன்னு டிக்கெட் கேட்டேன் தலீவா. 37வெள்ளிதான் கொறைஞ்ச டிக்கெட்டேன்னானுக. நானும் என் சம்சாரம், ஒரு கொழந்த, கட்டுபடியாகாது தலீவான்னு வசந்தம் டிவி பொட்டி முன்னாடி உக்காந்துட்டேன் தலீவா. &lt;br /&gt;&lt;br /&gt;சரி, பாட்டு கச்சேரிக்குத்தான் போகலை. சாரி....பாட்டு வெளியீட்டுக்குத்தான் போகலை, படம் வந்தா ஒடனே பாத்துடணும்ன்னு ஒரு ஆசை தலீவா. உட்லாண்ட்ஸ்லெ ”கதே” கொட்டகையில முன்னாடியே புக் பண்ணிட்டேன். 2 பேருக்கு 24வெள்ளி, புக்கிங் பணம் 1வெள்ளின்னு 25வெள்ளி மொத்தம். இன்னொரு சேதி என்னன்னா, என் சம்சாரத்துக்கும் காமெடிக்கும் காத தூரம். அவங்களோடு போறோமேன்னு வேற மனசுக்குள்ளே ஒரு ‘கிலி’ இருந்தாலும்,  தலீவனாச்சேன்னு போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மிலிட்டரில ஓய்வுவாங்கிக்கினு வந்து பிரைவேட்டா டிடெக்டிவ் நடத்திக்கினு வாற உன்னை (மேஜர் ராஜ’மன்’னார்), சினிமா நாயகி ’அம்பு’ஷாக்ஸி (எ) நிஷாவை (த்ரிஷாவை) காதலிக்கும் கோடீஸ்வர ’மதன்’கோபால் (ஆர்.மாதவன்), அவள் மேல சந்தேகப்பட்டுக்கினு, அவளை ஃபாலோ பண்ணச்சொல்லி, பிரான்ஸில இருக்கும்  தன்னோட தோழி தீபா வீட்டுக்கு அவ ரெஸ்ட்டுக்குனு போகச்சொல்ல, அவளுக்கே தெரியாமெ அனுப்புறான். அங்கே நீ எதுக்குப் போனே, என்னெ பண்ணுனே, இந்த கல்யாணம் நடந்தா இதுதான் கதை; கரெக்டா தலீவா? &lt;br /&gt;&lt;br /&gt;முதல்லெ ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கிறேன் தலீவா. எல்லாப்படத்திலேயும் ஏதாவது ஒரு சாகசம் செய்யணும்; இல்லாட்டி உன் உச்சி மண்டையில சுர்ருங்கும்ங்கிறது எனக்குத் தெரியும் தலீவா. &lt;br /&gt;&lt;br /&gt;அதுல ஒண்ணா, இந்தப்படத்துல உன்னோட காதலு மற்றும் கல்யாணத்து ஃப்ளாஷ்பேக்கை ’ரிவர்ஸில்’ காட்டி மஜா பண்ணியிருக்க தலீவா. உண்மையிலே புதுசு தலீவா; அதுக்காக ஒன்னைப் பாராட்டிக்கிறேன். ஆரம்பிக்கச்சொல்ல கொஞ்சம் குழப்பமோட இருந்தாலும் முடியச்சொல்ல மனசைக் கரைக்கிது தலீவா அந்தக் காட்சி. உன் குரல்லெ பின் பாட்டு வேற! சொல்லவா வேணும். சூப்பர் தலீவா. பாட்டு வரிதான் ஞாபகம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;திரிஷாவோட சொந்தக்குரல்ன்னு சொன்னாய்ங்கெ. மாருல குத்தியிருக்கும் பச்சையைப் போல பளிச்சினு இருக்கு. இதுகூட உன்னோட புதுமைதான் தலீவா. &lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவிலும் வசனப்பதிவிலும் என்னமோ புதுமை தெரியுது தலீவா. ஆனா, டைரக்டா ஒலிப்பதிவு செஞ்சதாலே, அங்கங்கே ’எக்கோ’ அடிச்சு, கொஞ்சம் சுரத்து கம்மியாயிருச்சு தலீவா. &lt;br /&gt;&lt;br /&gt;உன் வசனத்த (கொஞ்சம்) எப்பவும் பிடிக்கும் தலீவா. அதுவும் பார்லெ தண்ணி அடிச்சிக்கிட்டு, மதனகோபால் அண்ட் பிரண்ட்ஸ் பேசுற வசனம் சிறப்பு வசனம் தலீவா. சிரிப்பு வசனம் தலீவா. மூதலிக்கிறதுன்னா 'ப்ரூஃவ்' பண்றதுங்குற வார்த்தைய வெச்சி பண்ணின காமெடி கலக்கல் தலீவா.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கப்பலெ காட்டியிருக்கெ. அதுவும் சொகுசுக் கப்பலெ.. ஊர் நாட்டுலெ உள்ளவனுங்க வாயத்தொறந்து பாக்குறங்குறதுக்காக. உன் புதுமையில இதுவும் ஒண்ணு தலீவா.&lt;br /&gt;&lt;br /&gt;ஓரளவுக்கு சிரிப்பு வருது, மத்தபடி, படத்தப் பத்தி என்னத்த தலீவா சொல்றது? &lt;br /&gt;&lt;br /&gt;ஒத்த வாக்கியத்துல சொல்லணும்னா, சிங்கத்துக்கு ஏன் இந்த ’சேவிங் செய்யிற வேலை’யின்னு தோணுது தலீவா.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் எலக்கியமா சொல்லணும்ன்னா, நம்ம ’கவிக்கோ’ சொன்னதுமாதிரி, ’அம்மிக்கொத்துறதுக்கு எதுக்கு சிற்பி’ன்னு சொல்லணும் தலீவா.&lt;br /&gt;&lt;br /&gt;கதை, திரைக்கதை, வசனம், கவிதை மற்றும் பாடல்கள்ன்னு எல்லாத்தையும் நீயேதான் பாத்துக்கிட்ட போலயிருக்கு தலீவா, பெருமையா இருக்கு; ஆனா பெருமைப்படும்படியா இல்லியே தலீவா. இயக்கம் கே.எஸ். ரவிக்குமார் ன்னு போட்டான்ய்ங்களே உண்மையா தலீவா. இல்லெ முதல் சீன்லே, கே.எஸ். ரவிக்குமாரு மாதவன்ட்டெ ஏதோ பேச, அவரு அதைக் கண்டுக்காம போக, ரவிக்குமாரும் அடப்போங்கடான்னு, அப்படியே நழுவிடுறாரே...அதுதான் உண்மையிலே நடந்ததா தலீவா?&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டு எழுதியிருக்கே...ஏன் தலீவா இப்படி சோதிக்கிறே?  &lt;br /&gt;&lt;br /&gt;கவிதை எழுதியிருக்கே, கல்லு மாதிரி மாரு வேணும், பளிங்கு மாதிரி நாத்தம் இல்லாத பல்லோட பொண்ணு வேணும் முத்தம் குடுக்க, படுத்து எந்திரிச்ச உடனே கழுவ கூட வரணும், எப்பவும் படுத்துக்கினே இருக்கானே அரங்கநாதன் சாமி, அவென் உன் ஆசையைத் தீத்து வைச்சானா லெட்சுமி சாமி, கல்லுல பதிச்ச காமத்த உங்கிட்ட செஞ்சு காட்டுனானான்னு கவிதை எழுதிப் படிக்கிறே, திரிஷாப் பொண்ணையும் படிக்க வைக்கிறியே தலீவா... என்னத்தை தலீவா சொல்ல.. சிங்கப்பூர்ல இருக்க 'கவிமாலைக் கவிஞர்கள்'ட்டே இதே தலைப்பைக் குடுத்தாக்கூட கலக்கிப்புடுவாங்கெ. நீ என்னடான்னா? இதெ கேட்டு வேற அந்தப்பொண்ணு உன்னை லவ் பண்ணுதுன்னு காட்டுறாய்ங்களே... என்னத்தெ தலீவா சொல்ல?&lt;br /&gt;&lt;br /&gt;திரைக்கதையில உம்பேரு. நடிகையை அவ காதலன் சந்தேகப்படுறான்னு எங்களுக்குச் சொல்றதுக்கே பாதிப்படமா? உனக்கே இது நியாயமா தலீவா? &lt;br /&gt; &lt;br /&gt;டிவில, விளம்பரத்துக்கு இடையில ’சீரியல்’ வாற மாதிரி, ரமேஷ் அரவிந்தும், ஊர்வசியும் அப்பப்போ வந்து அழுதுட்டும் சிரிச்சுட்டும் போறாங்கெளே..என்ன தலீவா இது. நாப்பது வருஷத்துக்கு முன்னாடி வந்த படங்கள்லெ கூட இப்படி ஒரு சீனு இருக்காது தலீவா. &lt;br /&gt;&lt;br /&gt;என்ன தலீவா ஆச்சு. சோற்றுக்கா வந்ததிங்கு பஞ்சம்ன்னு ஒரு பட்டாபட்டி மீசைக்காரன் சொன்னதுமாதிரி, நடிப்புக்கா வந்துருச்சி உனக்கு பஞ்சம்?&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டுக்கு ஆடுனா ’பஞ்ச தந்திரம்’ ஞாபகம் வருது. பொண்டாட்டிய நாயி கடுச்சுடுச்சினு நீ அழுதா..சாரி.. பொண்டாட்டி தவறிட்டான்னு நீ அழுதா, எத்தனை படம்...இருந்தாலும் ’வேட்டையாடு விளையாடு’ ஞாபகம் வருது. ஆள்மாறாட்டக் காமெடின்னு நீ அரம்பிச்சா..சொல்லணுமா தலீவா..எத்தனை படம், எத்தனை படம்? &lt;br /&gt;&lt;br /&gt;காந்தியெ ஒனக்கு புடிக்கும்ன்னு தெரியும் தலீவா, அதுக்காக ஒரு படம் கூட எடுத்தியே...ராணி மொகர்ஜியா, அபர்ணாவா அந்தப்பொண்ணை ஒரு பொட்டி மேல படுக்க வெச்சிக்கிட்டு மியூசிக் வாசிச்சியே...அந்தமாதிரி ஒரு காட்சியை எவனாவது இதுவரைக்கும் யோசிச்சுருப்பானா தலீவா. அஜந்தா, எல்லோராவிலேயே இல்லையாம்.&lt;br /&gt; &lt;br /&gt;சரி, மேட்டருக்கு வாரேன். காந்தியெ உனக்குப் பிடிக்கும்கிறதுக்காக எத்தனை தடவைதான் அஹிம்சை... அஹிம்சையே வீரத்தின் உச்சம்ன்னு டயலாக் எழுதுவே தலீவா.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, அதை விடு. மனசாட்சிதான் மண்ணாங்கட்டி..சாரி.. ’மனசாட்சிதான் சாமி’ன்னு எப்பவோ எங்களுக்குச் சொல்லிப்புட்டே... விருமாண்டில நெப்போலியன் சொல்வாறே...நா இன்னக்கி நிம்மதியாத் தூங்கிடுவேன்..பொய்ச்சாட்சி சொல்லிட்டு நீ நிம்மதியா தூங்க முடியுமான்னு... அதையே இன்னும் மறக்கமாம இருக்கோம், நீ அதையே திரும்பத் திரும்ப வசனமா சொன்னா நாங்க தூங்கமுடியுமா தலீவா?&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல்வாதிங்களுக்கு ஆப்பு வெக்கிறது, சாமிய வசனத்துல கொண்டு வாறது, இதெல்லாம் இனிமே நீ செய்யவேணான்னு தோணுது தலீவா. எந்தப்பயலுகளும், உன் பேச்சை கேட்டு ஒட்டு போடாம இருக்கமாட்டானுவ. நம்பு தலீவா. பாகிஸ்தானெ நீங்க பிரிச்சா, அந்த சகோதரன் கூட சண்டை போடணும், நீங்களே சமரசமா போனீங்கன்னா, நாமளும் சகோதரன்னுனு நிக்கணும்ன்னு நீ எழுதுன/பேசுற வசனம் நல்லாத்தான் இருக்கு. ஆனா, சொன்னா கோச்சுக்காத தலீவா, ஒரு நாவலா எழுது தலீவா, சினிமாவுல வேணாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கிளைமேக்ஸே குழப்பம். நீங்க போடுற நாடகமே எங்களுக்கு சுத்தமாப் புரியலை. வசனத்துனால காமெடி வருது. சிரிப்பு வருது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜோடிய இப்படி மாத்திப்புட்டியே தலீவா. நீயாவது ஒரு கவித படிச்ச..காதல் வந்துச்சி. மதன்கோபால் என்ன தலீவா பண்ணுனாரு? அவருக்கு எப்படி அந்த தீபா (சங்கீதா) மேல காதல் வந்துச்சி. என்ன தலீவா இது திரைக்கதை? &lt;br /&gt;&lt;br /&gt;வீட்ல காத்திருக்குற சுனந்தாவும் (ஓவியா) இந்த்ரா மாமியும் (உஷா உதுப்) சும்மா விடுவாங்களா அந்த மதனகோபால பயலை?&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் யோசிச்சி பாரு தலீவா, திரைக்கதைய கே.எஸ் ரவிக்குமார்ட்டெ குடுத்துட்டு, வசனத்தை கிரேஸி மோகனையோ அல்லது வேற யாரையாவது எழுதச்சொல்லிட்டு நீ "சப்போர்ட்" மட்டும் பண்ணியிருந்தா எப்படி இருந்துருக்கும் இந்தப் படம் தலீவா? என்னமோ போ.&lt;br /&gt;&lt;br /&gt;@@@@@&lt;br /&gt;&lt;br /&gt;உனக்கு இன்னாதான் தலீவா வேணும்? இன்னாத்துக்கு தான் இப்புடிப்போராடுறே? நீயே தான் சினிமா; சினிமாதான் நீன்னு தெரியும். அதுல இன்னாதான் உனக்கு வேணும்?&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கிறவரைக்கும் பரீட்சார்த்த முயற்சியா இல்லெ, சினிமாவில மொத்தமா மூழ்கி முத்தெடுக்குறதா, இல்லெ, ஊர் ஒலகமே மெச்சுறமாதிரி ஒரு படத்தைக் கொடுக்குறதா இல்லெ, ஒலக நாயகனா ஆகுறதா இல்லெ ஆஸ்காரு வாங்குறதா, இல்லெ பெரியாருக்கு பேரன்னு பட்டம் வாங்குறதா, இல்லெ, தேசப்பற்று தியாகின்னு பேரு எடுக்குறதா இல்லெ பாரத ரத்னாவா, இல்லெ, சொல்றேன்னு கோச்சுக்காதெ தலீவா, இன்னொரு சின்னப்பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி காதல்கீதல்ன்னு என்சாய் பண்றதா...இன்னாதான் தலீவா வேணும் உனக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;பா’ படத்தையும் ’தாரே ஜமின் பர்’படத்தையும் ரசிக்கிற நம்ம கூட்டம் ’உன்னைப்போல் ஒருவனை’ ஏன் ரசிக்கலைன்னு யோசிச்சியா தலீவா?&lt;br /&gt;&lt;br /&gt;லாஜிக்குன்னு ஒரு கருமமும் இல்லாத ’பாஸ் (எ) பாஸ்கரன்’ காமெடியில் கலக்கும்போது நம்ம ’மும்பை எக்ஸ்பிரஸ்’ ஏன் தலீவா டிரெய்லு ஆகணும்?&lt;br /&gt;&lt;br /&gt;படம் பாக்கவே லாயக்கில்லாத பயலுகன்னு நாம மண்ணுமுட்டித்தனமா திட்டுற நம்ம ஊர்க்காரப்பயலுக ’களவாணி’யையும், ’பருத்திவீரனையும்’ தூக்கிவெச்சிக் கொண்டாடுறப்போ நம்ம ’விருமாண்டி’ஏன் தலீவா மண்ணக் கவ்வணும்?&lt;br /&gt;&lt;br /&gt;பருத்திவீரன்லெ பிரியாமணி கசக்கப்படுறப்போ துடிக்கிற மனசு, விருமாண்டியில அபிராபி தூக்குல தொங்கையில, துடிக்கலயே ஏன் தலீவா?&lt;br /&gt;&lt;br /&gt;என்னமோ தெர்யலை தலீவா, கொஞ்சம் 'ரிஸர்ச்' பண்ணிப்பார்க்கச்சொல்ல, ரீசண்டா வந்த படங்கள்ல, நீ, 'நடிப்ப மட்டுமே' குடுத்து இன்னோரு டைரக்டரு கையில் உன்னைக் கொடுத்த படமெல்லாம் நல்லாப்போயிருக்கிறதா தோணுது தலீவா. உதா. இந்தியன், தெனாலி, அவ்வை ஷண்முகி, வசூல்ராஜா, வேட்டையாடு விளையாடு. ஆனா, நீ காலு வெச்சதெல்லாம், அல்லது கூப்பிட்டுக் கொடுத்ததெல்லாம் கொஞ்சம் பிகிலாயிறுச்சி, கண்டுக்கினியா தலீவா. உ.தா.. ஆளவந்தான், விருமாண்டி, மும்பை எக்ஸ்பிரஸ், அன்பே சிவம், காதலா காதலா, பம்மல் கே சம்பந்தம், தசாவதாரம.&lt;br /&gt;&lt;br /&gt;தசாவதாரம் மாதிரி பெரிய பரொட்டா ரொட்டியை மனசுல நிக்க வெக்காட்டியும் ருசிச்சு சாப்பிடக்கொடுத்த ஆளு நம்ம கே. எஸ். ரவிக்குமார். அவரு மட்டும் இல்லேனா, நெனச்சி பாக்கமுடியுமா தலீவா, அந்தப் படத்த ரெண்டரை மணி நேரத்துல முடிச்சிப் பாக்குறதே? ஆனா, மன்மதன் அம்புல, அந்த ஆளையே காணோம்?&lt;br /&gt;&lt;br /&gt;என்னத்த தலீவா சொல்ல? &lt;br /&gt;&lt;br /&gt;வேணாம் தலீவா. இப்படியேப் போனா, பாரதிராஜா, பாலச்சந்தர், பாலுமகேந்திரா போல ”அது ஒரு வசந்த காலமாய்” நிகழ்காலத்தில் போய்விடுவியோன்னு பயமாயிருக்குத் தலீவா.&lt;br /&gt;&lt;br /&gt;உனக்குத்தெரியாததுல்லெ தலீவா. ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லிக்கிறேன் தலீவா. நம்ம 'சிவாஜிராவ் கெய்க்வாட்' மாதிரி இல்லாட்டியும், டைரக்டரு ஷங்கரு மாதிரி, அவரு வழில போறதுதான் இருக்குற மிச்ச சொச்ச காலத்துக்கும் உனக்கு ஏத்ததுன்னு நெனைக்கிறேன் தலீவா.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன வழின்னு தெரியுதா தலீவா? கதையில ஆரம்பிச்சு, கொட்டகையில படம் ஓட்டுறதுவரைக்கும் சினிமாவுல, உனக்கு எல்லாமே முடியும், தெரியும் தலீவா, ஒத்துக்கினம். ஆனா, நாங்க உங்கிட்டே எதை ரசிக்கிறோமோ, அதை மட்டும் சினிமாவில செஞ்சு, வேற எதிலேயும் 'இன்வால்வ்' ஆகாமே, கொஞ்சம் 'துட்டு' பாத்துக்கினு, ரெண்டு பொடிப்பசங்கள கூப்பிட்டு, உன்பேர்ல, நாலு நல்லபடம் குடுக்கச்சொல்லு தலீவா. அப்போத்தான் நீ நிம்மதியோடும் நாட்டத்தோடும் தொடர்ந்து வேலை பாக்க முடியும் தலீவா. அதை விட்டுப்புட்டு, அது பண்றேன் இது பண்றேன்னு கழுதை கணக்கா திரிஞ்சியனா, என் வாயாலே நான் சொல்லமாட்டேன் தலீவா. மன்னிச்சுரு.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் ஞாபகம் வெச்சுக்க தலீவா. குசேலனையும் பாபாவையும் கூட கவுத்த பயலுக நம்ம பயலுக. சூப்பரு ஸ்டாருன்னுல்லாம் படத்த ஓட்டமாட்டாய்ங்க. ஆனா, புதுசா வந்த பயலுகளக் கூட (மகேஷ் -அங்காடித்தெரு, விதார்த்-மைனா) வெற்றிப்பயலுகளா ஆக்கிப்புடுறானுக தலீவா.&lt;br /&gt;&lt;br /&gt;இனிமேலும் ரசிகப்பயலுகளை, ரசிக்கத்தெரியாத மண்ணுமுட்டிகள்ன்னு மட்டம் தட்டுறதுல ஞாயம் இல்லை தலீவா.&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப காலம் உன்னோட தோஸ்த்தா, ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லிக்கிறேன் தலீவா, உனக்கு என்னதான் வேணும்ன்னு நீயே உன்னை "ரீ-டெஸ்ட்" பண்ணிக்கவேண்டிய நேரம் வந்தருச்சி தலீவா.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லாட்டி கத கந்தல் தான். &lt;br /&gt;&lt;br /&gt;சாரி தலீவா, உனக்குப் பிடிக்காதுதான், இருந்தாலும் உன்னை மறுத்துப்பேசுனதா நீ நினைச்சா என்னை மன்னிச்சுக்க தலீவா.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிக்கு&lt;br /&gt;காமெடிக்கும் கமலஹாசனுக்கும் தாசன்,&lt;br /&gt;&lt;br /&gt;கமல் குமார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தங்கமீன் ஜனவரி 2011 இதழில் எழுதியது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5815740-5644066896063336792?l=yemkaykumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yemkaykumar.blogspot.com/feeds/5644066896063336792/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5815740&amp;postID=5644066896063336792' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/5644066896063336792'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/5644066896063336792'/><link rel='alternate' type='text/html' href='http://yemkaykumar.blogspot.com/2011/02/blog-post.html' title='கமல்ஹாசனுக்கு ஒரு கடிதம்'/><author><name>எம்.கே.குமார்</name><uri>http://www.blogger.com/profile/01900603075164396123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TRgMGEJFiKI/AAAAAAAAAJ4/NLOGXX9OHEA/S220/DSC03182.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5815740.post-4944532037192710056</id><published>2011-01-25T18:10:00.002+08:00</published><updated>2011-01-27T19:41:30.338+08:00</updated><title type='text'>சென்னை டைம்ஸ் 2015 இதழில் இருந்து</title><content type='html'>பொங்கல் பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;மதுரை. ஜன. 15. (இந்தியா) தமிழ்நாட்டின் தெற்கு மாவட்டமான மதுரையின் தல்லாகுளம் பகுதியில் நேற்று பொங்கல் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் பதினான்கு மற்றும் பதினைந்து தேதிகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரை தல்லாகுளத்தில் நேற்று முன்தினம் ரேஷன் அரிசிக்கடை திடீர் என்று பூட்டப்பட்டதால் இப்பகுதிகளில் பொங்கல் பண்டிகை 'கொண்டாடப்படுமோ படாதோ' என்ற சந்தேகம் 'சமுதாய கவனிப்பாளர்களின்' பார்வையில் இருந்தது. மாவட்ட ஆட்சியாளரிடம் இதுபற்றி மக்கள் முறையிட்டுக்கொண்டிருந்த நேரம், அவர் இடமாற்றம் குறித்து செய்தி வந்த நிலையில் அவர் அப்பேச்சினை முடிக்காமல் எழுந்து சென்றுவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் நேற்றிரவு திடீரென்று வந்த மர்மக்கும்பல் ஒன்று ஒவ்வொரு தெருவுக்கும் இரண்டு மூட்டை அரிசியினை வீசிவிட்டுச்சென்றது. இதை அள்ளிக்கொண்ட மக்கள் சந்தோச பெருக்கோடு பொங்கலைக் கொண்டாட ஆரம்பித்தனர். பொங்கலில் போடுவதற்கு சர்க்கரை மூட்டைகளை வீசாத அம் மர்மக்கும்பலின் மேல் விசனப்பட்டும் அவர்களில் சிலர் திட்டித்தீர்த்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே வீடுகளுக்கு 'குடிநீர் பாக்கெட்' போடும் தண்ணீர்வண்டி நேற்று வராததைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். 'வீட்டிற்கு மூன்று பாக்கெட் இலவச தண்ணீர்' என்ற திட்டத்தைச் சொல்லி ’ஆட்சிக்கு வந்தவர்கள்’ இன்று அதைச் செயல்படுத்தவில்லை என்றும் அவர்களில் சிலர் கூறினர். மேலும் சிலர், சென்ற வாரம் கொடுத்த ’தண்ணீர் பாக்கெட்டின்’ அளவு குறைந்திருந்தது என்றும் புகார் செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2005ல் எழுதியது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5815740-4944532037192710056?l=yemkaykumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yemkaykumar.blogspot.com/feeds/4944532037192710056/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5815740&amp;postID=4944532037192710056' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/4944532037192710056'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/4944532037192710056'/><link rel='alternate' type='text/html' href='http://yemkaykumar.blogspot.com/2011/01/2015_627.html' title='சென்னை டைம்ஸ் 2015 இதழில் இருந்து'/><author><name>எம்.கே.குமார்</name><uri>http://www.blogger.com/profile/01900603075164396123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TRgMGEJFiKI/AAAAAAAAAJ4/NLOGXX9OHEA/S220/DSC03182.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5815740.post-8975421301208725569</id><published>2011-01-25T18:02:00.001+08:00</published><updated>2011-01-25T18:04:28.590+08:00</updated><title type='text'>சென்னை டைம்ஸ் 2015 இதழில் இருந்து</title><content type='html'>சென்னை. மே 10. சென்னையின் முக்கியச் சாலையில் நடைபெற்ற போராட்டம் ஒன்றில் நேற்று, 'முதலமைச்சரும் மந்திரிகளும்' கலந்துகொண்டனர். பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையை மத்திய அரசு குறைக்கவேண்டும் என்று அவர்கள் இப்போராட்டம் நடத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் பெட்ரோலியப்பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் சமீப காலமாய் எகிறி வந்துகொண்டிருந்தது நாம் அறிந்ததே! உலக கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள், கச்சா எண்ணையின் விலையை ஏற்றியதை ஒட்டி இந்தியாவிலும் பெட்ரோலியப்பொருட்களின் விலையை மறுபரிசீலனை செய்வது குறித்து இரண்டு நாட்களுக்கு முந்தைய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால், அரசாங்கம் பெட்ரோலியப்பொருட்களுக்குத் தந்த மானியத்தை முழுமையாக நிறுத்தியபிறகும், தொடரும் கச்சா எண்ணெய் விலையேற்றம் அரசுக்கு பெரும் சவாலாக இருப்பதாகவும் அதனால் பெட்ரோல் விலையை உயர்த்துவதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை எனவும் முடிவு செய்யப்பட்டதாக அறிக்கையில் சொல்லப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதன்படி பெட்ரோல் விலையில், லிட்டர் ஒன்றுக்கு 5.80 (ஐந்து ரூபாய் எண்பது காசுகள்) ஏற்றப்படுவதாகவும் இனி பெட்ரோலின் விலை 'தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது ரூபாய் எண்பது காசுக்கு (ரூபாய் 999.80)' விற்கப்படும் என்றும், டீசல் விலை பத்து ரூபாய்(ரூபாய் 10.00) ஏற்றப்பட்டு, 'எழுநூற்று எண்பது ரூபாய் முப்பதுகாசுக்கு (ரூபாய் 780.30)' விற்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;(2005ல் எழுதியது.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5815740-8975421301208725569?l=yemkaykumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yemkaykumar.blogspot.com/feeds/8975421301208725569/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5815740&amp;postID=8975421301208725569' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/8975421301208725569'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/8975421301208725569'/><link rel='alternate' type='text/html' href='http://yemkaykumar.blogspot.com/2011/01/2015_25.html' title='சென்னை டைம்ஸ் 2015 இதழில் இருந்து'/><author><name>எம்.கே.குமார்</name><uri>http://www.blogger.com/profile/01900603075164396123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TRgMGEJFiKI/AAAAAAAAAJ4/NLOGXX9OHEA/S220/DSC03182.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5815740.post-6936188596249347785</id><published>2011-01-25T17:54:00.001+08:00</published><updated>2011-01-25T17:59:47.301+08:00</updated><title type='text'>சென்னை டைம்ஸ் 2015 இதழில் இருந்து</title><content type='html'>தமிழகம் வந்தார் பிரதமர்!&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை. மே 20. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கருகில், கடலுக்கடியில் ஏற்பட்ட அதிபயங்கர நில அதிர்வினால், 'சுனாமி' எனப்படும் ஆழிப்பேரலைகள் உருவாகி, இந்தோனேசியா, இந்தியா, இலங்கை, மலேசியா மற்றும் தாய்லாந்து பகுதிகளை மிகவும் கொடூரமாகத் தாக்கியது பலருக்கும் நினைவிருக்கலாம். இந்தியாவில் இது, தமிழ்நாட்டின் கிழக்குப்பகுதியான நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோரத்தாண்டவம் ஆடியதில் ஏராளமானோர் தங்களது உயிர்களையும் உடமைகளையும் இழந்தனர். இந்திய அரசும் இந்திய மக்களும் இதன் மீட்புப்பணியில் அப்போது மிகத் தீவிரமாக ஈடுபட்டு சிறந்த செயலாற்றினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட அம்மக்களுக்கென, அதி நவீன வசதிகளைக்கொண்ட அடுக்குமாடி வீடுகளை இந்திய அரசும் தமிழக அரசும் இப்போது கட்டி முடித்திருக்கின்றன. இவைகளைத் திறந்து வைப்பதற்கும் பாதிக்கப்பட்ட மக்களூக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும் இந்தியாவின் பிரதமர் நேற்று சென்னை வந்தார். வீடுகளை மக்களுக்கு அளித்த அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், 'புயலாலும் கடலலைகளாலும் எளிதில் தாக்கமுடியாத அளவிற்கு ஜப்பானிய அரசின் திட்ட உதவியோடு இவ்வீடுகள் அமைந்திருக்கின்றன' என்று சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில், நேற்றிரவு சன் டிவி செய்திகளில், 'நாகப்பட்டினத்திற்கு அருகேயுள்ள, காணாம்பட்டினம் கிராமத்தில் 'சுனாமி' தாக்கி பத்தாண்டுகள் கடந்தும் இதுவரை எந்தவித நலத்திட்ட உதவியும் வழங்கப்படவில்லை' எனவும் 'ஆட்சியிலிருக்கும் அரசு இவற்றையெல்லாம் கண்டுகொள்ளவில்லை' எனவும் காட்டப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னதாக, விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் அவர்களுக்கு, கட்சியில் ஒரு கோஷ்டிக்கு ஆதரவாகச் செயல்படும் தமிழக கட்சித்தலைவரை பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தி கட்சியின் மற்றொரு கோஷ்டியைச் சேர்ந்தவர்கள், பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; (2005ல் எழுதியது!)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5815740-6936188596249347785?l=yemkaykumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yemkaykumar.blogspot.com/feeds/6936188596249347785/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5815740&amp;postID=6936188596249347785' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/6936188596249347785'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/6936188596249347785'/><link rel='alternate' type='text/html' href='http://yemkaykumar.blogspot.com/2011/01/2015.html' title='சென்னை டைம்ஸ் 2015 இதழில் இருந்து'/><author><name>எம்.கே.குமார்</name><uri>http://www.blogger.com/profile/01900603075164396123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TRgMGEJFiKI/AAAAAAAAAJ4/NLOGXX9OHEA/S220/DSC03182.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5815740.post-4104596073528725854</id><published>2011-01-01T08:16:00.003+08:00</published><updated>2011-01-01T08:25:03.238+08:00</updated><title type='text'>மன்மதன் அம்பு - எய்தவன் ஏமாற்றம்</title><content type='html'>அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.  இந்த 2011ம் வருடமானது தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எல்லா நலங்களையும் வளங்களையும் அளிக்க இயற்கையை வணங்குகிறேன்.                                                                                                                                                                                                                                                                       மன்மதன் அம்பு படத்துக்கான எனது எண்ணங்களை இந்தமாத "தங்க மீன்" இதழில் பதிந்துள்ளேன். ஒரே வார்த்தையில் அப்படம் பற்றிச் சொல்வதானால் கமலின் மீது ஏமாற்றமே வருகிறது.                                                                                             http://www.thangameen.com/Default.aspx&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="white-space: pre;"&gt;  &lt;/span&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;          &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5815740-4104596073528725854?l=yemkaykumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yemkaykumar.blogspot.com/feeds/4104596073528725854/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5815740&amp;postID=4104596073528725854' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/4104596073528725854'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/4104596073528725854'/><link rel='alternate' type='text/html' href='http://yemkaykumar.blogspot.com/2011/01/blog-post.html' title='மன்மதன் அம்பு - எய்தவன் ஏமாற்றம்'/><author><name>எம்.கே.குமார்</name><uri>http://www.blogger.com/profile/01900603075164396123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TRgMGEJFiKI/AAAAAAAAAJ4/NLOGXX9OHEA/S220/DSC03182.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5815740.post-2364400941106956733</id><published>2010-12-28T06:52:00.003+08:00</published><updated>2010-12-28T06:59:38.424+08:00</updated><title type='text'>பறக்கும் முன் மடிந்த, மறக்க முடியாத மைனா!</title><content type='html'>&lt;div style="width: 574px; padding-left: 15px; padding-right: 5px; font-family: 'Times New Roman'; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 12px; font-family: Arial, sans-serif; "&gt;&lt;img border="2" alt="" src="http://www.thangameen.com/Images/ContentImages/admin/mainaa49113047.jpg" width="540" height="358" /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="width: 574px; padding-left: 15px; padding-right: 15px; padding-bottom: 15px; padding-top: 5px; "&gt;&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblcontent" class="contentdetails" style="color: black; "&gt;&lt;p class="ecxMsoNormal" style="font-size: 10pt; font-family: 'Times New Roman'; "&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;குறிப்பிட்ட தமிழ்ப்படம் சிங்கப்பூரில் எந்த தியேட்டரில் ஓடுகிறதென்பதை &lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;தமிழ்முரசி&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;ல் தேடுவதுதான் என் வழக்கம். &lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;நல்ல&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;' &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;படம் எதுவும் சிங்கப்பூரில் நிறைய நாட்கள் ஓடாதே&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;; &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;மைனாவும் அந்த வரிசையில் சேர்ந்துவிட்டதோ&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;' &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;என்றவாறு தேடினால்&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;, "&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;ரசிகர்களின் விரும்பத்திற்கிணங்க&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;மீண்டும்&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;ரெக்ஸ் திரையரங்கம்-&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;1&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;ல் மாபெரும்&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-size: 9pt; "&gt;&lt;span class="ecxApple-style-span" &gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="ecxApple-style-span" style="font-family: Tahoma; font-size: 13px; "&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;திரைக்காவியம் - மைனா" என்றிருந்தது. தோமஸைப் போன்றவன் நான். ரெக்ஸ் திரையிரங்கிற்குத் தொலைபேசினேன். படம் ஓடுகிறதா&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;எத்தனை மணிக்குக் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="ecxApple-style-span" style="font-family: Tahoma; font-size: 13px; "&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;காட்சி&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;, &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="ecxApple-style-span" style="font-family: Latha, sans-serif; font-size: 11px; "&gt;கட்டணம் எவ்வளவு. சந்தேகம் தீர்ந்தது. மைனாவைப் பார்த்துவிடுவது என்று&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 11px; font-family: Latha, sans-serif; "&gt;முடிவுசெய்துவி&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 11px; font-family: Latha, sans-serif; "&gt;ட்டேன்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="ecxMsoNormal" style="font-family: Tahoma; font-size: 10pt; "&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;அண்மைக்காலமாக எந்த தமிழ்ப்படத்தைப் பார்த்தாலும் எனக்கு கமல்ஹாசன் ஞாபகம் வருவது நல்லதா கெட்டதா என்பதை செராங்கூன் ரோடு &lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;மணி&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;' &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;கிளிதான்&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;சொல்லவேண்டும். &lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;மைனா&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;வைப் பார்த்துவிட்டு அன்றிரவு நிம்மதியாகத் தூங்கினேன் என்று &lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;கமல்&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;' &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;சொல்லியிருந்தது வேறு &lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;கூடுதல்&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;' &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;ஆவலை என்னுள் புகுத்தியிருந்தது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="ecxMsoNormal" style="font-family: Tahoma; font-size: 10pt; "&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;ஓடும் ரயிலில் &lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;எழுத்தும் இயக்கமும் - பிரபு சாலமன்&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;' &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;என்ற நிலையில்&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;மைனா&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;வுக்குள் இணைந்தேன்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="ecxMsoNormal" style="font-family: Tahoma; font-size: 10pt; "&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;கதையை வானத்திலிருந்தோ அல்லது கற்பனைக்கெட்டாத ஒன்றிலிருந்தோ எடுக்கவில்லை என்பதே ஒரு மிகப்பெரிய அண்மைய ஆறுதல்களில் ஒன்று.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="ecxMsoNormal" style="font-family: Tahoma; font-size: 10pt; "&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;படிப்பு வராமல் வெட்டியாய்த் திரியும் சிறுவன் ஒருவன்&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;தெருவில் நிற்கும் ஆதரவற்ற தாயையும் மகளையும் தனது மலைக்கிராமத்தில் குடியேற்றுகிறான்.&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt; &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;அப்பெண்ணின் மேல் உயிராய் இருக்கும் அவன்&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;வருடங்கள் கடந்து&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;அவளையே மணக்க வேண்டும் எனக் காதல் பைத்தியமாய் திரியும் போது அந்தப்பெண்ணின் அம்மா&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;அவனுக்கு அவளைக் கட்டி வைக்க முடியாது என்று வெகுண்டெழுகிறாள். காதல் ஜோடி ஓடுகிறது&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;; &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;போலீஸ் துரத்துகிறது. முடிவு என்ன&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;? &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;இதுதான் கதை. இவ்வளவு சாதாரண ஒரு கதையைத் திரைக்கதையின் மூலம் பறக்க வைத்திருக்கும் இயக்குனருக்கு வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="ecxMsoNormal" style="font-size: 10pt; font-family: 'Times New Roman'; "&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;மலைப்பிரதேசத்தில் நடக்கும் கதைகளைப் பதிவு செய்வது ஒரு மாபெரும் வேலை. படம் முழுக்க வரும் பச்சையும் ஈரமும் கடைசிக்காட்சி வரை தொடர்கிறது. பிரபு&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;சாலமன் சொன்னது போல இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் கணவன் மனைவி போல இருக்க வேண்டும். அப்போதுதான் அசலான பதிவு கிடைக்கும். இயக்குநருக்கும்&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-size: 9pt; "&gt;&lt;span class="ecxApple-style-span" &gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="ecxApple-style-span" style="font-family: Latha, sans-serif; font-size: 11px; "&gt;ஒளிப்பதிவாளருக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="ecxMsoNormal" style="font-size: 10pt; font-family: 'Times New Roman'; "&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;குணா படம் நினைவுக்கு வந்தது ஏனென்று தெரியவில்லை. மலையை&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;இயற்கையைப் பின்னணியாகக் கொண்டு புகைப்படம் எடுப்பவர்கள் இப்படத்தை மீண்டும்&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-size: 9pt; "&gt;&lt;span class="ecxApple-style-span" &gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="ecxApple-style-span" style="font-family: Tahoma; font-size: 13px; "&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;மீண்டும் பார்க்கவேண்டும்&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;; &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;அவ்வளவு அழகு காட்சிக்கு காட்சி.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt; &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="ecxMsoNormal" style="font-family: Tahoma; font-size: 10pt; "&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;கதையை ஏன் தீபாவளிக்கு முன் ஆரம்பிக்கவேண்டும் என்று நினைத்தபோது வில்லனே தீபாவளிதான் என்பது அதிர்ச்சி. தலைதீபாவளி கொண்டாட முடியவில்லையே என்றெல்லாம் வன்முறையில் இறங்கும் கும்பல் தமிழ்நாட்டில் இருப்பது அதிர்ச்சியாயிருந்தாலும் கொலை மற்றும் தற்கொலைக்கான காரண காரியங்களைப் பகுத்தறிய முயன்றால்தான் அச்சம்பவமே நடக்காதே&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;?! &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;அந்த நேரத்தில்&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;அந்த மனிதன்&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;,&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;அப்படி இருந்தான்&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;; &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;அவ்வளவுதான்!&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt; &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="ecxMsoNormal" style="font-family: Tahoma; font-size: 10pt; "&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;மிகப்பெரிய ஆச்சரியம் நாயகி அமலா பால். இத்தனை குட்டியூண்டு (&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;19&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt; வயதுதானாம்)&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;,&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;புதுமுக நடிகை எல்லாம் காமிரா முன்னால் நிற்கிறோம் என்ற சொரணை &lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;'1&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt; சதவீதம்&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;கூட இல்லாமல் இப்படி (அ)சாதாரணமாக இருக்க (நடிக்கிறார்கள் எனச்சொல்ல முடியவில்லை!) முடிகிறதே&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;அது எப்படி என்பதுதான்.&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt; &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="ecxMsoNormal" style="font-family: Tahoma; font-size: 10pt; "&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;நாயகி அமலா பால் பெரிய அழகியெல்லாம் இல்லை. (அவரை விட பெரிய அழகி&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;,&lt;span&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;படம் பார்த்துவிட்டு வெளியில் வரும்போது&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;ரெக்ஸ் திரையரங்கு வாசலில்&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;,&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;எனது&lt;/span&gt;&lt;span class="ecxApple-style-span" style="font-size: 13px; "&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;முன்னால் சென்றார்&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;; &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;நாம் பார்ப்பதை யாரும் பார்க்காமல் பார்ப்பது எப்படி என்று நிறையப்பேருக்கு "கிளாஸ்" எடுக்கவேண்டும்) ஆனால் படத்தில் மைனாவாகவே வாழ்ந்திருக்கிறார். சிந்துசமவெளியில் நடித்த பாவத்திற்கு இது விமோசனம்&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;என்கிறார்கள் சிலர். அப்படத்திலும் எனக்கு அவரைப் பிடித்திருந்தது. நல்ல நடிகை என்பவள் எல்லாவிதக் கதைகளிலும்தானே நடிக்கவேண்டும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="ecxMsoNormal" style="font-family: Tahoma; font-size: 10pt; "&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;விதார்த் கதையின் நாயகன்&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;; &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;ஒரு கதையை உருவமாக்க&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;பொருத்தமான ஆள்தான் தேவை&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;; &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;நடிகருக்குக் கதை இல்லை. அந்த வகையில் விதார்த் பட்டையைக்&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;கிளப்புகிறார். கூத்துப்பட்டறை பாசறையிலிருந்து வந்தாலும் கதைக்கேற்றவர். அடுத்தடுத்துப் படங்கள் வருவது கஷ்டம் தான்&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;காரணம்&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;கதை நாயகனாகிவிட்டிருப்பது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="ecxMsoNormal" style="font-family: Tahoma; font-size: 10pt; "&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;தம்பி ராமையாவின் காமெடி மீது எனக்குப் பெரிதாய் அபிப்பிராயம் இருந்ததில்லை. காமெடிக்கு முயற்சிக்கிறார் என்றே நினைந்திருந்தேன். இப்படம் அவருக்கு&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt; &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;ஒரு மைல்கல். காமெடிக்கும் குணச்சித்திரத்திற்கும் ஏற்றவாறு ஒரு நடிகர். மணிவண்ணனின் (இல்லாத) இடத்தைப் பிடிக்கலாம்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="ecxMsoNormal" style="font-family: Tahoma; font-size: 10pt; "&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;அறிமுக நடிகர் சேது (போலீஸ்) அபாரம். ஹோட்டலில் சாப்பிடும் பொழுது இவர் கோபம் பொங்கப் பேசும் உணர்வுகள் ஒவ்வொருவருக்கும் உண்டாவது. இவரைக்&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;கதாநாயகனாக வைத்து &lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;விருமாண்டி&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;' &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;ஸ்டைலில் மற்றொரு பார்வையில் கதையைச் சொன்னால் எப்படி இருக்கும்&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;? &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;நேற்றுவரை அந்த ஞாபகம் தான். படம்&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt; &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;பார்த்தவர்களும் யோசிக்கலாம்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="ecxMsoNormal" style="font-family: Tahoma; font-size: 10pt; "&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;படத்தின் நாயகன் கொலைகாரக் கும்பலில் ஒருவனோ அல்லது ரௌடியோ இல்லை என்பது மிக மிக மிகப்பெரிய ஆறுதல். இயக்குனருக்கு நன்றி.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="ecxMsoNormal" style="font-family: Tahoma; font-size: 10pt; "&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;போலீஸ்காரர்கள் அனைவரும் மனிதர்களே&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;; &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;மனிதர்கள் அனைவரும் பழிவாங்குபவர்களே என்பதைச் சொல்லும் காட்சி. (சோத்துல வெஷத்தை வெச்சி கொன்றுடுவேன்&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;என்கவுண்டரில் போட்டுருவேன்) பழிவாங்கக் காத்திருப்பவர்கள்&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;,&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;மன்னிப்பும் வழங்குவார்கள்&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;; &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;மன்னிக்க முடிந்தவர்கள் பழியும் வாங்குவார்கள்&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;பழிவாங்கியவர்கள்&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt; &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;மனிதனாகவும் ஆவார்கள் எனப் போலீஸ்காரர்களைச் சுற்றி வெறொரு உலகத்தை காண்பித்த இயக்குனருக்கு இன்னொரு நன்றி.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="ecxMsoNormal" style="font-family: Tahoma; font-size: 10pt; "&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;முரட்டு மீசை&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;பெரிய மச்சம்&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;கனத்த சரீரம்&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;பரட்டை முடி&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;விரிந்த கிருதா வரிசையில்&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;அம்மை போட்ட தழும்பு முகம்&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;' &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;என்பதும் வில்லன்களின் உருவகமாக ஆக்க&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;முற்படுவது தவிர்க்கப்படவேண்டும். அப்படி ஒரு  படிமத்தை பார்ப்பவர்கள் மனதில் உருவாக்க அவசியமில்லை என்றே நினைக்கிறேன். எனக்குத்தெரிந்த பல&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt; &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;வில்லன்கள் எப்போதும் "ஒயிட் அண்ட் ஒய்ட்" ஆடையில் அழகாகவும் சிவப்பாகவும் இருக்கிறார்கள்&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;அமைதிப்படை ராஜராஜசோழனைப்போல! இன்றுவரை மனதில்&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt; &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;நிற்கும் கொடூர வில்லன்களில் "சத்யா" கிட்டியும்&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;, "&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;மகாநதி" ஹனிஃபாவும் தான் முதலிடத்தில் இருக்கிறார்கள். கமல்ஹாசனுக்கு நன்றி.&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="ecxMsoNormal" style="font-family: Tahoma; font-size: 10pt; "&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt; &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;சினிமாவில் நல்ல இயக்குனர்கள் தென்படுவது ஒரு ஆறுதல். பிரபு சாலமன் அந்த முயற்சியில் வெற்றிபெற்றாலும்&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;அந்த வரிசையில் சேர்ந்துவிட்டார் என்று இப்போதைக்குச் சொல்லமாட்டேன். காரணம்&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;இப்படி ஒரு படத்தை மீண்டும் அவர் கொடுக்க வேண்டும். படத்தில் சில காட்சிகள் நிறைவற்று இருந்ததாக அல்லது ஏதோ ஒன்று குறைந்ததாக நினைவு. எனது அளவுகோல்&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;இயக்குனர் பாலாவினுடையதும் கமலுடையதும் ஆகும்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="ecxMsoNormal" style="font-family: Tahoma; font-size: 10pt; "&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;மிகுந்த நிறைவுணர்வை அளிப்பதில் பின்னணி இசை முன்னுக்கு நிற்கிறது. பாடல்களில் மைனா மைனா பாடல் நெஞ்சை உரசுகிறது. (மீண்டும்) நல்வரவு டி.இமான்.&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt; &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="ecxMsoNormal" style="font-family: Tahoma; font-size: 10pt; "&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;தோல்விப்பட(ல)த்திலிருந்து பிரபுசாலமன் மீண்டுவந்ததிற்கு அவரது கடின உழைப்பில் மிளிர்ந்த&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;பின்வருவனவற்றைச் சொல்லமுடியும்.&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt; &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="ecxMsoNormal" style="text-indent: -18pt; font-family: Tahoma; margin-left: 36pt; font-size: 10pt; "&gt;&lt;span lang="EN-US" style="font-family: 'Courier New'; font-size: 9pt; "&gt;&lt;span&gt;o&lt;span style="font: normal normal normal 7pt/normal 'Times New Roman'; "&gt;   &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;ஒரு சாதாரண கிராமத்துக் காதல் கதையாய் இல்லாமல் புதியதொரு மலையும் மலை சார்ந்த காதலுமாய் முன்னிருத்தியதால்&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="ecxMsoNormal" style="text-indent: -18pt; font-family: Tahoma; margin-left: 36pt; font-size: 10pt; "&gt;&lt;span lang="EN-US" style="font-family: 'Courier New'; font-size: 9pt; "&gt;&lt;span&gt;o&lt;span style="font: normal normal normal 7pt/normal 'Times New Roman'; "&gt;   &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;மிக மிக நேர்த்தியான திரைக்கதை&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="ecxMsoNormal" style="text-indent: -18pt; font-family: Tahoma; margin-left: 36pt; font-size: 10pt; "&gt;&lt;span lang="EN-US" style="font-family: 'Courier New'; font-size: 9pt; "&gt;&lt;span&gt;o&lt;span style="font: normal normal normal 7pt/normal 'Times New Roman'; "&gt;   &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;உணர்வுகளோடு ஒத்துப்போகும் ஒளிப்பதிவும் இசையும்&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="ecxMsoNormal" style="text-indent: -18pt; font-family: Tahoma; margin-left: 36pt; font-size: 10pt; "&gt;&lt;span lang="EN-US" style="font-family: 'Courier New'; font-size: 9pt; "&gt;&lt;span&gt;o&lt;span style="font: normal normal normal 7pt/normal 'Times New Roman'; "&gt;   &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;கதைக்கேற்ற பொருத்தமாய் நட்சத்திரங்கள்&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="ecxMsoNormal" style="text-indent: -18pt; font-family: Tahoma; margin-left: 36pt; font-size: 10pt; "&gt;&lt;span lang="EN-US" style="font-family: 'Courier New'; font-size: 9pt; "&gt;&lt;span&gt;o&lt;span style="font: normal normal normal 7pt/normal 'Times New Roman'; "&gt;   &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;ரசனையாயும் புதுமையாயும் படத்தில் வரும் சிறு சிறு காட்சிகள் (உதாரணம்&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;,&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;மனித உரிமை ஆர்வலர்&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;பல் டாக்டர்&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;…&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;)&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="ecxMsoNormal" style="text-indent: -18pt; font-family: Tahoma; margin-left: 36pt; font-size: 10pt; "&gt;&lt;span lang="EN-US" style="font-family: 'Courier New'; font-size: 9pt; "&gt;&lt;span&gt;o&lt;span style="font: normal normal normal 7pt/normal 'Times New Roman'; "&gt;   &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;எதிர்பாராத இடத்திலிருந்து வரும் முடிவுகள்&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="ecxMsoNormal" style="text-indent: -18pt; font-family: Tahoma; margin-left: 36pt; font-size: 10pt; "&gt;&lt;span lang="EN-US" style="font-family: 'Courier New'; font-size: 9pt; "&gt;&lt;span&gt;o&lt;span style="font: normal normal normal 7pt/normal 'Times New Roman'; "&gt;   &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;நாயகன் - நாயகியின் மிக மிக இயல்பான நடிப்பும் கதைகேற்ற பொருத்தமும்&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;(நாயகியின் பருவமும் ஹி..ஹி..ஹி..)&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="ecxMsoNormal" style="font-family: Tahoma; font-size: 10pt; "&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;தமிழ் சினிமா நண்பர்களுக்கு எனது நாலணா அறிவுரைகள்...&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="ecxMsoNormal" style="text-indent: -18pt; font-family: Tahoma; margin-left: 36pt; font-size: 10pt; "&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;&lt;span&gt;1.&lt;span style="font: normal normal normal 7pt/normal 'Times New Roman'; "&gt;      &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;இன்னும் ஒரு நான்கு வருடங்களுக்காவது சிறு பருவத்து நட்பு&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;காதல்&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;அன்பு&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;,&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;வண்டி ஓட்டுதல்&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;கூட்டாஞ்சோறு ஆக்குதல் என்பதாய் எடுத்துத் தொலைக்காதீர்கள். அப்படியே எடுத்தாலும் கிராமத்தை விட்டு விட்டு நகரத்துக்கு வாருங்கள். (ஆமாம்&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;நகரத்தில் வளர்ந்த பசங்களெல்லாம் ஏழு எட்டு வயதில் என்னதான் செய்வார்கள்&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;? &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;அப்பா அம்மா விளையாட்டு&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;ஓணானை விரட்டுதல்&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;பக்கத்து வீட்டு அண்ணனுக்கு காதல் தூது செல்லுதல்..இப்படி ஏதும்...உண்டா&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;? &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;எனக்குத் தெரியவில்லை.)&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="ecxMsoNormal" style="text-indent: -18pt; font-family: Tahoma; margin-left: 36pt; font-size: 10pt; "&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;&lt;span&gt;2.&lt;span style="font: normal normal normal 7pt/normal 'Times New Roman'; "&gt;      &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;சாதாரண காதல் கதையை எடுத்து&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;கிளைமேக்ஸில் உணர்ச்சியை ஊற்றி&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;,&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;வெற்றியைப் பிழிந்து விடலாம் என கனவு கண்டு அப்படிப் படம் எடுக்காதீர்கள். படம் கண்டிப்பாய் ஃபிளாப் ஆகும்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="ecxMsoNormal" style="text-indent: -18pt; font-family: Tahoma; margin-left: 36pt; font-size: 10pt; "&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;&lt;span&gt;3.&lt;span style="font: normal normal normal 7pt/normal 'Times New Roman'; "&gt;      &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;மைனாவைக் காப்பி அடிக்காதீர்கள்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="ecxMsoNormal" style="font-family: Tahoma; font-size: 10pt; "&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;*******&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="ecxMsoNormal" style="font-size: 10pt; "&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;இது&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;இப்படி நடந்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே என்று&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;, '&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;மைனா&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;' &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;பார்த்துவிட்டு வருபவர்கள் அனைவருமே நினைப்பார்கள். அதுதான் வாழ்க்கை என்பது நம்&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-size: 9pt; "&gt;&lt;span class="Apple-style-span" &gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;வாழ்க்கையிலிருந்து கூட நாம் அறிய இயலும்&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 9pt; "&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; "&gt;ஆனால் அறியாத ஒன்று. அதுதான் வெற்றிக்கான பாதை என்பது தமிழ் சினிமாவில் தெரியத்தொடங்கியிருப்பது "சேது" &lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha, sans-serif; font-size: 12px; "&gt;கொடுத்த தைரியம். தைரியம் தரும் பாதை சிறக்கட்டும்.                                                                                                        எம்.கே.குமார்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="ecxMsoNormal"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 12px;"&gt;நன்றி: தங்கமீன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5815740-2364400941106956733?l=yemkaykumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yemkaykumar.blogspot.com/feeds/2364400941106956733/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5815740&amp;postID=2364400941106956733' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/2364400941106956733'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/2364400941106956733'/><link rel='alternate' type='text/html' href='http://yemkaykumar.blogspot.com/2010/12/blog-post_6677.html' title='பறக்கும் முன் மடிந்த, மறக்க முடியாத மைனா!'/><author><name>எம்.கே.குமார்</name><uri>http://www.blogger.com/profile/01900603075164396123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TRgMGEJFiKI/AAAAAAAAAJ4/NLOGXX9OHEA/S220/DSC03182.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5815740.post-2071779225274710334</id><published>2010-12-28T06:43:00.001+08:00</published><updated>2010-12-28T06:47:38.595+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='character artist'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='best selection of artist'/><title type='text'>மிகச்சிறந்த கதாபாத்திரங்கள் - ஒரு பகிர்வு</title><content type='html'>துணை நடிகர்களைத் தேடுவதில் ஒரு இயக்குநரின் பங்கு என்ன என்பது எனக்குச் சரிவர தெரியவில்லை. அவர்களே தேடுவார்களா, இல்லை துணை நடிகர் ஏஜெண்ட்டிடம் சொல்லி, இந்த மாதிரி ஆள் வேண்டும் எனப் பிடித்துதரச்சொல்வார்களா என்பதும் தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் சத்தியமாய்த் தெரிகிறது. சிலர் இதில் கடுமையாய் உழைக்கிறார்கள். இது இவர்தான் என்று முழுமையாய் தான் நம்பும் அளவுக்கு அக்கதாபாத்திரத்தை அவர்கள் தேடுகிறார்கள் அல்லது உருவாக்குகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தகைய தூண்டுதலில், சில பேரை சில வேடங்களில் அவர் "நடிக்கவில்லை; அவரேதான் அது" என்று மனம் ஒருங்கிணைத்துக்கொள்ளும். அவரைப் பின்னாளில் வேறொரு படங்களில் பார்த்தால் கூட அவ்வளவாக மனம் ஒப்புக்கொள்ளாது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வரிசையில் எனக்கு பல பொருத்தங்கள் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;'பருத்திவீரனில்' வரும் பொணந்தின்னி (மைனாவில் நாயகனின் அப்பா), &lt;/li&gt;&lt;li&gt;'நான் கடவுளில்' வரும் அம்பானி பற்றி கமெண்ட் அடிக்கும் மாற்றுதிறன் சிறுவன் (பின்னாளில் ஒரு படத்தில் கல்லூரி மாணவனாக நடித்திருப்பார்)&lt;/li&gt;&lt;li&gt;'விருமாண்டி'யில் கொலையைப் பார்த்துவிட்டு, பார்க்கவில்லை என்று பொய்ச்சாட்சி சொல்ல வரும் ஒரு புதுமுகம் (பின்னாளில் இவர் 'திருட்டுப்பயலே' படத்தில் நாயகனின் நண்பராக ஆஸ்திரேலியாவில் இடுப்பு டான்ஸ் தேடுவார்)&lt;/li&gt;&lt;li&gt;'விருமாண்டி'யில் வரும் சண்முகராஜன் நல்லகாமன் போலீஸ்.. அதற்குப்பிறகு பல படங்களில் இவரை வில்லனாகப் பார்த்தாலும் அந்த வேடமும் அவருடைய ஒரு நக்கலான சிரிப்பும் கண்ணை விட்டு மறையவில்லை.&lt;/li&gt;&lt;li&gt;'அயன்' படத்தில் சேட்டு வீட்டு கணக்குப்பிள்ளை (இவர், 'பிதா மகன்' படத்தில், சூர்யா ரயிலில் விற்பனை செய்யும்பொழுது அருகில் அமர்ந்திருப்பார். இவரை எப்படி கரெக்டாக அயன் படத்தில் பிடித்துப்போட்டார் இயக்குனர் என்பது எனக்கு ஒரு ஆச்சரியம்)&lt;/li&gt;&lt;li&gt;'அங்காடித்தெரு' நாயகன் மகேஷ் (அங்காடித்தெருவில், வெங்கடேஷ், பழ. கருப்பையா இவர்களையெல்லாம் அந்தந்த கேரக்டராகவே மனசு ஒப்புக்கொள்கிறது)&lt;/li&gt;&lt;li&gt;'மைனா'வின் நாயகன் விதார்த் &lt;/li&gt;&lt;li&gt;'பருத்திவீரன்' ப்ரியாமணி அம்மா (கமல்தான் இவரை விருமாண்டியில் அறிமுகப்படுத்தினார்)&lt;/li&gt;&lt;li&gt;'எம்டன் மகன்' சரண்யா (அ) 'களவாணி' சரண்யா&lt;/li&gt;&lt;li&gt;'பூ' படத்தின் நாயகி&lt;/li&gt;&lt;li&gt;'பிதா மகன்' விக்ரம் (இந்த வேடம் அவர்தான், இதற்குப்பிறகு எத்தனையில் அவர் நடித்தாலும் இதுவே அவர் உச்சமாக இருக்கும்!)&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;- இன்னும் நிறையப்பேர் இவ்வரிசையில் உண்டு. ஒரு அனுபவத்தின் முழுமையில் இதை உள்வாங்கும்போது இவர்கள் அந்த வேடத்தின் ஆளுமையாய் ஆகிவிட்டது உண்மையாய் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மிகச்சிறிய கதாபாத்திரமேனும் அதற்குத்தகுந்த ஆட்களைத் தேர்வு செய்வதில் எனது சினிமா ரசிப்புத்தன்மையின் அனுபவத்தில், கமல் முதலில் நிற்கிறார். அதற்கடுத்த நிலையில் பாலா. அமீர், செல்வராகவன், வசந்தபாலன் ஆகியோரும் இந்த லிஸ்டில் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;கமலின் அற்புதமான திறமைகளில் இதுவும் ஒன்று என்பதை அவருடைய படங்களை உன்னிப்பாய்க் கவனிப்பதன் மூலம் நாம் உணரமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அயன் படத்தில் பல கதாபாத்திரங்கள் 100 சதவீத வெற்றித்தேர்வாய் இருந்தது என்பதை நான் இங்கே பதிவு செய்கிறேன். சூர்யாவின் அம்மா முதல், சேட்டு மகன் அவருடைய குரல் வரை, அனைத்தும் கச்சிதப்பொருத்தம்!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கதாபாத்திர - தேர்வில், மிகவும் கடைசியில் இருப்பது கே.எஸ். ரவிகுமார் என்பதாக நான் நினைக்கிறேன். காரணம், எந்த கழுதையாய் இருந்தாலும் அதை நடிக்கவைத்து எடிட்டிங்கில் ஏற்றிவிட்டு விடலாம் என்பது அவர் எண்ணமாய் இருக்கலாம், இதற்கெல்லாம் அவர் அவ்வளவு முக்கியத்துவம் தருவதில்லை என்பது பல படங்களில் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கதாபாத்திர முழுமையில் இயக்குனரின் ஈடுபாட்டுக்கும் அற்புத தேர்வுக்காகவும் ஒரு விருது வழங்கப்படலாம்.&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எம்.கே.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5815740-2071779225274710334?l=yemkaykumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yemkaykumar.blogspot.com/feeds/2071779225274710334/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5815740&amp;postID=2071779225274710334' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/2071779225274710334'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/2071779225274710334'/><link rel='alternate' type='text/html' href='http://yemkaykumar.blogspot.com/2010/12/blog-post_28.html' title='மிகச்சிறந்த கதாபாத்திரங்கள் - ஒரு பகிர்வு'/><author><name>எம்.கே.குமார்</name><uri>http://www.blogger.com/profile/01900603075164396123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TRgMGEJFiKI/AAAAAAAAAJ4/NLOGXX9OHEA/S220/DSC03182.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5815740.post-5145995419846079921</id><published>2010-12-18T09:09:00.005+08:00</published><updated>2010-12-18T09:20:08.689+08:00</updated><title type='text'>சிங்கப்பூரில் சாரு நிவேதிதா கலந்துகொண்ட பூப்பெய்தல் விழா - ஒரு மீள்பார்வை</title><content type='html'>சிங்கப்பூரில் இருந்த போது நான் ஒரு எழுத்தாளரைக் கூட சந்திக்கவில்லை.  நான் வந்திருப்பது அவர்களுக்குத் தெரிந்திருக்காது.  இருந்தும் ஒருநாள் சிங்கப்பூர் நூலகத்தில் ஒரு கலந்துரையாடல் நடந்தது.  நமக்குத் தெரிந்த நண்பர் ஒருவரின் மகள் &lt;span style="font-weight:bold;"&gt;பூப்பெய்திய சடங்கு&lt;/span&gt; நிகழ்ச்சிக்குச் சென்று வந்தது போல் இருந்தது." என்று அண்மையில் "தங்கமீன்" மின்னிதழில் எழுதியிருந்தார் சாரு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிரந்தர நண்பர்களும் நிரந்தர எதிரிகளும் இல்லாத அன்பர் சாரு கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியில் சாருவுடன் நான் எடுத்துக்கொண்ட நெருங்கிய போட்டோ...&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_VapWInghYcQ/TQwLrzkRGOI/AAAAAAAAAJg/VVV_Wr2-h5s/s1600/charu4.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_VapWInghYcQ/TQwLrzkRGOI/AAAAAAAAAJg/VVV_Wr2-h5s/s320/charu4.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5551825287845583074" /&gt;&lt;/a&gt;                                                                                                          &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TQwL5reHoDI/AAAAAAAAAJo/96iagf9BUmg/s1600/charu6.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TQwL5reHoDI/AAAAAAAAAJo/96iagf9BUmg/s320/charu6.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5551825526190481458" /&gt;&lt;/a&gt;                       சிங்கப்பூர் நூலக அதிகாரி புஷ்பலதா அவர்களுக்கு இந்நேரத்தில் நன்றி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5815740-5145995419846079921?l=yemkaykumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://yemkaykumar.blogspot.com/2005/02/blog-post_110821670715794045.html' title='சிங்கப்பூரில் சாரு நிவேதிதா கலந்துகொண்ட பூப்பெய்தல் விழா - ஒரு மீள்பார்வை'/><link rel='replies' type='application/atom+xml' href='http://yemkaykumar.blogspot.com/feeds/5145995419846079921/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5815740&amp;postID=5145995419846079921' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/5145995419846079921'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/5145995419846079921'/><link rel='alternate' type='text/html' href='http://yemkaykumar.blogspot.com/2010/12/blog-post_18.html' title='சிங்கப்பூரில் சாரு நிவேதிதா கலந்துகொண்ட பூப்பெய்தல் விழா - ஒரு மீள்பார்வை'/><author><name>எம்.கே.குமார்</name><uri>http://www.blogger.com/profile/01900603075164396123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TRgMGEJFiKI/AAAAAAAAAJ4/NLOGXX9OHEA/S220/DSC03182.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_VapWInghYcQ/TQwLrzkRGOI/AAAAAAAAAJg/VVV_Wr2-h5s/s72-c/charu4.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5815740.post-915868949092023439</id><published>2010-12-14T12:48:00.001+08:00</published><updated>2010-12-14T12:51:26.437+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிங்கப்பூர் ரஜினி ரசிகன்'/><title type='text'>'எந்திரன்' தலைவனுக்கு ரஜினி ராக்கப்பன் எழுதும் கடிதம்</title><content type='html'>ஷ்ஹோஒ........ஷ்ஹோஓஓ....ஷ்ஹோஓஓஒ...............&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கம் தலைவா. நான் தான் ரஜினி ராக்கப்பன், சிங்கப்பூர்ல இருந்து எழுதுறேன். மொத வரி ஏதோ புரியாத மாதிரி இருக்கேன்னு கொழம்பாதே தலைவா. தலைவருக்கு மொதமொறையா ஒரு கடுதாசி எழுதுறோமேன்னு ஒரு 'சீட்டி' அடிச்சுட்டு எழுத ஆரம்பிச்சேன், அதுதான் அது. விசில் சத்தம். &lt;br /&gt;&lt;br /&gt;வந்து பாரு தலைவா, நாடு விட்டு நாடு வந்தாலும் தலைவரு பாசம் போகுமா தலைவா. பிச்சுப்புட்டோம். தலைவர் படம்ன்னா தலைவர் படந்தான் சொல்லவைக்கிற அளவுக்கு நடத்திக்காட்டிப்புட்டோம் தலைவா.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவாரத்துக்கு முன்னாடியே, வுட்லாண்ட்ஸ் காஸ்வேபாயிண்டு தியேட்டர்ல போயி டிக்கட்டு புக் பண்ணச்சொல்லி நம்ம பாண்டிப்பயல அனுப்பி வெச்சிட்டோம். ரெண்டு நாளு பொயிட்டு, சும்மாவே திரும்பி வந்தான், என்னடான்னு கேட்டதுக்கு இன்னும் புக்கிங் ஆரம்பிக்கலையாம்ன்னு சொன்னான். இவன் ஒரு வெளங்காத பய தலைவா. பாபாவுக்கு அவனைத்தாம் அனுப்பிவெச்சோம். பாபா கதைதான் தெரியும்ல. அதனால திரும்பி மூணாவது நாளு நம்ம சேகரு பயல போகச்சொன்னோம். &lt;br /&gt;&lt;br /&gt;சேகரு நாட்டரசன் கோட்டை தலைவா. ஊர்ல 'பாட்ஷா ரஜினி ரசிகர் மன்றத்துல' உபதலைவர். நீலாம்பரிங்கிற மாமா பொண்ண விட, வீட்டுவேலைக்கார பொண்ணுதான் நல்லபொண்ணுன்னு நீ ‘படையப்பா’ல கல்யாணம் கட்டுனதுமாதிரி, மாமா பொண்ணை விட்டுட்டு, வீட்டுக்கு வேலைக்கி வந்த பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, இப்போ சிங்கப்பூர்ல கொத்துவேலை பாக்குறான். ஊருலேயிருந்து வந்த மொத நாளு கேட்டான், 'பாஸ், கன்ஷ்ட்ரக்ஷன் வேலை, கன்ஷ்ட்ரகக்ஷன்ல வேலையின்னு சொல்றாய்ங்களெ, அப்படின்னா என்ன வேலை பாஸ்ன்னு. அட கருமாந்திரம் புடிச்சவனே, ஊர்ல கொத்துவேலை இருக்குல, அந்தவேலைதானு சொன்னேன். ரஜினி ரசிகனாச்சே தலைவா. அன்னிக்கி களத்துல குதிச்சவன் தான். கம்பி கட்டுறதுல அவன அடிக்க ஆளு இல்லெ இன்னக்கி; நாட்டாங்கெல்லாம் அவனுக்குட்ட வேலை கத்துக்கணும். வேலை தலைவா வேலை; கடமை தலைவா கடமை; உழைப்பு தலைவா உழைப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, பதினாறு அடி உயரத்திலேயிருந்து ஒரு நாளு விழுந்ததுல கொஞ்சம் இடுப்பெலும்புல காயம். மத்தபடி இன்னக்கிம் மலை. அண்ணாமலை! படையப்பன்; ஆறு படையப்பன்! உன் கட் அவுட்டுக்கு பாலு ஊத்தும்போது இப்படி விழுந்திருந்தாகூட சந்தோசப்பட்டிருப்பனேன்னு அவன் ஒரு மாசம் பினாத்திக்கிட்டிருந்தான். நாட்டரசன் கோட்டை போனா மறக்காமெ பாரு தலைவா, பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்துல பதினாறு அடில ஃபிளக்ஸ் போர்டு உனக்கு, அவந்தான் வெச்சிருக்கான். அவன் பொண்டாட்டிய நாய் கடிச்சி நாட்டரசன் கோட்டை ஆசுபத்திரில வெச்சிருக்கானுவ நாலுமாசமா. போன மாசம் பாக்கப்போயிருந்தான். அப்போ வெச்ச போர்டு தலைவா அது.&lt;br /&gt;&lt;br /&gt;உன் போஸ்டரைக்கூட கையெடுத்து கும்பிடுற பயகள்ல அவனும் ஒருத்தன் தலைவா. வந்தா டிக்கட்டோட வா இல்லாட்டி வராதேன்னு போகச்சொன்னோம். அன்னக்கி அவனுக்கு 4 மணி டு 8 மணி வரைக்கும் ஓவர்டைம்; பாத்திருந்தா 12 வெள்ளி சம்பளம் கூட கெடச்சிருக்கும். என்னடா, இன்னக்கி ஓவர்டைம் பாத்துட்டு நாளைக்கிப் போயி வாங்கிக்கலாமான்னு கேட்டேன். 'படுத்திருந்த நாயி வால்ல வெடியக்கொழுத்தி வெச்சதுமாதிரி' பயலுக்கு வந்திருச்சி கோபம். என்னைப் பாத்து, என்னப்பாத்து எப்படிடா இப்படிக் கேக்கலாம்ன்னு சொல்லிட்டு வேலைக்கி அரை நாள் லீவு போட்டுட்டு வுட்லாண்ட்ஸ் தியேட்டருக்கு கெளம்பிட்டான். தலைவருன்னா சும்மாவா. பாசக்கார பய தலைவா. &lt;br /&gt;&lt;br /&gt;படத்துக்கு மொத்தமா கெளம்பிட்டு இருக்கும் போது இந்த ‘விக்ரம்’ பய ஒரு கமெண்டு விட்டான் பாரு. எல்லோரும் அவனை சாத்தலாமான்னு பாத்தோம், அப்படியான கமெண்டு தலைவா அது, என்னன்னு கேக்குறியா? “என்னடா பன்னிங்க எல்லாம் கூட்டம் கூட்டமா கெளம்பிண்டிங்க போலயிருக்கு”ன்னு தான். &lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூர்ல 10 தியேட்டர்ல போட்டுருந்தாங்க தலைவா. என்னுடைய சிங்கப்பூரு 10 வருஷ வாழ்க்கையில இதுதான் தலைவா பத்து தியேட்டர்ல போட்ட மொத படம். அப்படியே மெரள வெச்சிட்டே தலைவா. டிக்கட்டுதான் 15வெள்ளி வாங்கிப்புட்டானுக. முக்கால் நாள் சம்பளம். போகட்டும் தலைவா, இதையெல்லாம் கணக்கு பண்ணலாமா? &lt;br /&gt;&lt;br /&gt;படத்தைப்பத்தி என்ன சொல்ல தலைவா. வாற சீன்லையெல்லாம் உன்னையே பாத்துக்குட்டு இருந்ததால, படத்துல என்ன நடந்ததுன்னு ஒண்ணூமே ஞாபகம் இல்லை தலைவா. ஆனாலும் 'புதுக்கோட்டை பிரஹதம்மாள்' தியேட்டர்ல 'பாட்ஷா' படத்துக்கு அடிச்ச விசிலை விட அஞ்சு விசிலு அதிகமாத்தான் அடிச்சிருப்பேன்னு தோணுது. நல்லவேளை, தியேட்டர்ல இருந்தவங்க யாரும், இந்த "ஊர்ப்பயலுக" தொல்லை தாங்கமுடியலைன்னு பொலம்பா, சந்தோசமா குதூகலமா இருந்ததா ஒரு மனநிறைவு தலைவா. உன்னால, ரஜினியால தான் இந்த நிறைவு, ஒற்றுமை எல்லாம் சாத்தியம், நடக்கும் தலைவா. &lt;br /&gt;&lt;br /&gt;படத்துல சிட்டிங்கிற எந்திரன் தன்னைத்தானே வெட்டிக்கிட்டு சாவுற காட்சியில பொலபொலன்னு அழுதுட்டேன் தலைவா. மனசைக் கரைக்கிற சீனு தலைவா அது. அது மாதிரி மனுசனை வெட்டுறதைக் கூட தாங்கிக்கிடுவோம் தலைவா; ஆனா மிஷினா இருந்தாலும் அது ரஜினி மெஷினா இருந்தா தாங்க முடியல தலைவா. இந்தமாதிரி சீனு இனிமே வெக்காத தலைவா. கடைசி இருபது நிமிஷம் 'டாம் அண்ட் ஜெர்ரி' மாதிரி சூப்பரு தலைவா.&lt;br /&gt;&lt;br /&gt;கலாநிதிமாறன்கிட்டெ சம்பளம் கூட வாங்காம நடிச்சிருக்கேன்னு கேள்விப்பட்டேன் தலைவா. புல்லரிக்குது தலைவா. பணமா முக்கியம் தலைவா. பாசம் தலைவா; பாசம்!!. இதுதான் தலைவர்ங்கிறது. இந்த குணம் இல்லாமெ, பூஜை போடும்போதே, எந்த ஏரியான்னு வாங்கிக்கிட்டு, அட்வான்ஸையும் அள்ளிக்கிறதுனாலதான், சூப்பரு ஆக்டருன்னு சொல்லிக்கிட்டு திறியிறவங்க படமெல்லாம் பாக்ஸ் ஆஃபீலே படுத்துக்குது. மனசு வேணும், தலைவா, பணமா முக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு இன்னும் ஒரு சந்தேகம் இருந்துகிட்டே இருக்கு தலைவா. தலைவனுக்காக படமா, இல்ல சன் டிவிக்கான்னு. சன் டிவி உன்னைக் கூவி கூவி வித்துட்டாய்ன்ங்களோன்னு வேற யோசிக்கத்தோணுது. என்னவா இருந்தா என்ன தலைவா? வீட்டுக்காரன், வீட்டுக்கு உள்ளே வெச்சி சோறு போட்டா என்ன, இல்லெ, வெளியே வெச்சி சோறு போட்டா என்ன.? அந்த சோறு எங்களுக்கு கெடைக்கிறது பெரிய விஷயம் தானே. சந்தோசம் தானே.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில பாலச்சந்தர் சார் உன்னைப் பேட்டி கண்டதா படிச்சேன், தலைவா.&lt;br /&gt;&lt;br /&gt;நீ நடிச்ச படத்துல காலம் கடந்து நிக்கிற படம் எதுவா இருக்குமுன்னு கேட்டதுக்கு ராகவேந்திரா, பாட்ஷா, எந்திரன்னு சொல்லியிருக்கியே தலைவா? நல்ல படத்தையெல்லாம் சொல்லாம எப்படித் தலைவா, இப்படி படமா சொல்றே? இன்னக்கிம் என் பொண்டாட்டியக் கேட்டா ஆறிலிருந்து அறுபது வரைக்கும், முள்ளும் மலரும், ஜானின்னு  சொல்லிக்கிட்டு திரிவா. அவ என்னைவிட அதிகமா உன் விசிறி தலைவா.&lt;br /&gt;&lt;br /&gt;பொண்டாட்டிக்கிட்ட தோத்துட்டா வாழ்க்கையில ஜெயிச்சுடலாம்; பொண்டாட்டிக்கிட்டெ ஜெயிச்சுட்டா வாழ்கைக்கையில தோத்துடுவோம்னு மேடையில சொல்ல, நீ கையை மேலே தூக்கி தட்டுனதா கேள்விப்பட்டேன். லதா அண்ணி கையை இறக்கச்சொன்னதாவும் படிச்சேன். பொண்டாட்டி சொன்னதைக் கேட்டிருந்தா சிங்கப்பூருக்கே வராம ஊர்ல கடையாவது வெச்சிப் பொழச்சிருப்பேன் தலைவா. பொண்டாட்டி சொன்னதையெல்லாம் கேக்காம, ரசிகர் மன்றம், ரசிகர் மன்றம்ன்னு அலைஞ்சி கைக்காசெல்லாம் செலவு பண்ணி கடன்காரன்னா அல்லாடிக்கிட்டிருந்தேன். ஆனாலும் நீ சொன்னது சரிதான் தலைவா. கடைசியா, பொண்டாட்டிதான் புடிச்சி சிங்கப்பூருக்கு அனுப்பிவெச்சுட்டா.&lt;br /&gt;&lt;br /&gt;ரத்தினம் ன்னு ஒரு பய தலைவா. இங்கதான் 'காடி' கழுவிக்கிட்டு இருந்தான். ரெண்டு வருஷ பெர்மிட் முடிஞ்சதும் அவன் மொதலாளி சீனன் அவனுக்கு பெர்மிட்டை நீட்டிக்கலை, அந்த அளவுக்கு ரத்தினம் வேலைக்காரன்னா பாத்துக்கோயேன். இந்த தடவை ஊருக்கு போனப்போ பாத்தா, டொயோட்டா குவாலிஸ் கார்லெ, 'கருப்பு மஞ்சள் சிவப்பு ' கொடி கட்டிக்கிட்டு போய்க்கிட்டு இருக்கான். என்னடா கேட்டதுக்கு விஜயகாந்த் கட்சியிலே மாவட்டச்செயலாளராம். இந்த தடவை தேர்தல்லெ கூட நிக்கப்போறானாம். எப்படிடான்னு கேக்கமுடியுமா? எப்படிங்கன்னு கேட்டேன். ரியல் எஸ்டேட் பிஸினசாம். அவனுக்கு முன்னாடி, ரசிகர் மன்றம் ஆரம்பிச்சது நான் தலைவா எங்க ஊர்ல. இங்க, இந்த வார கார்டுக்கு 300வெள்ளியாவது எடுக்க முடியுமான்னு அல்லாடுறேன். பணமா தலைவா முக்கியம், சொல்லு தலைவா.&lt;br /&gt;&lt;br /&gt;சிவகுமார் பையன் சூர்யான்னு ஒரு பய தலைவா. நடிப்புல இப்பவே பயங்கரமா பாயுறான். இருபத்தஞ்சி படம் தான் நடிச்சிருக்கான். என்னடான்னு பாத்தா, எங்க ஏரியாவுல கஷ்டப்படுற குடும்பத்து பிள்ளைங்க, நல்ல மார்க் வாங்கி படிக்க வைக்க முடியலைன்னா, அவனே படிக்க வெக்கிறான்னாம். தலைவா, நாம 154 படம் நடிச்சுட்டோமே, ஏதாவது இப்படி பண்ணியிருந்தா ஒரு சந்தோசம் வருமுன்னு தோணுது தலைவா. லதா அண்ணியும் ஸ்கூல் நடத்துறதா கேள்விப்பட்டேன். என்ன ஸ்கூல்ல்ன்னு தெரியலை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தா, இந்தக் கடுதாசி எழுதும்போது பக்கத்துல படுத்து 'ஹான்ஸ்' போட்டுக்கிட்டு இருக்கானே, நம்ம ரவி, இப்பவே ஊர்ல கொடிகம்பம் நட்டு, ரெடியா நிக்கிகிறான். அண்ணன், கட்சி ஆரம்பிச்ச உடனே, நான்தான் மாவட்டச்செயலாளர் (அ) வட்டச்செயலாளர்ன்னு சொல்லிக்கிட்டு இருக்கான், பேரு கூட 'விஜய்' ரவி ன்னு மாத்திக்கிட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;சாரி தலைவா, நீ பாட்டுக்கு இமயமலைக்கி கெளம்பிக்கிட்டு இருப்பே, இந்த நேரம் போயி உன்னை, என் கடுதாசிக் குடுத்து படிக்கச்சொல்லிட்டனேன்னு வருத்தமா இருக்கு. இமயமலையில எல்லாரையும் கேட்டதாச் சொல்லு தலைவா. &lt;br /&gt;&lt;br /&gt;தொழில், குடும்பம், குழந்தை, கல்யாணம், பேரன் பேத்திகள், ஆன்மீக பயணங்கள், அரசியல் அன்புன்னு நீ, நிறைஞ்ச குடும்பஸ்தனா இருக்குறது மன நிறைவா இருக்கு தலைவா. அதுதான் எங்க சந்தோசம்மும். சரி தலைவா, அடுத்த படத்துலே பாப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;காலேஜ் படிக்கிற எம்பையனுக்கு பணம் கட்டணும்ன்னு நாலு தடவை பொண்டாட்டி போன் போட்டுட்டா. என்ன பண்றதுன்னு தெரியலை. 'விஜய்'ரவி கிட்டே கேக்கலாமான்னு பாத்தா நாலு காசு வட்டி கேக்குறாங்கண்ணோவ். &lt;br /&gt;&lt;br /&gt;பாப்போம், சரியா வரலையின்னா, படிப்ப நிறுத்திப்புட்டு, நம்ம பயலை இந்தப்பக்கம் இழுத்துட்டு வந்துருவோம். நமக்கும் வயசாயிருச்சில. &lt;br /&gt;&lt;br /&gt;இப்படிக்கு&lt;br /&gt;தலைவா உன் ரசிகன்,&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினி ராக்கப்பன்&lt;br /&gt;சிங்கப்பூர்&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி:தங்கமீன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5815740-915868949092023439?l=yemkaykumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yemkaykumar.blogspot.com/feeds/915868949092023439/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5815740&amp;postID=915868949092023439' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/915868949092023439'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/915868949092023439'/><link rel='alternate' type='text/html' href='http://yemkaykumar.blogspot.com/2010/12/blog-post.html' title='&apos;எந்திரன்&apos; தலைவனுக்கு ரஜினி ராக்கப்பன் எழுதும் கடிதம்'/><author><name>எம்.கே.குமார்</name><uri>http://www.blogger.com/profile/01900603075164396123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TRgMGEJFiKI/AAAAAAAAAJ4/NLOGXX9OHEA/S220/DSC03182.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5815740.post-543159966038573905</id><published>2010-11-19T18:18:00.000+08:00</published><updated>2010-11-19T18:19:32.675+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='enthiran'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='director shankar'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='singapore science centre'/><title type='text'>டைரக்டர் ஷங்கர் பதில் சொல்வாரா?</title><content type='html'>'எந்திரன்' பார்த்ததிலிருந்து ரஜினியை எங்கு, எந்த படத்தில் பார்த்தாலும் 'ரோபோ' என்று அழுத்தமாக பதிந்துவைந்திருக்கும் ஆதித்யா, கடந்த புதன் அன்று சிங்கப்பூரின் அறிவியல் நிலையத்திற்குச்சென்ற போது, அங்கிருந்த 'ரோபோ' ஒன்றின் கையைப் பார்த்து பிரமித்து, அதிர்ச்சியுற்று கேட்ட கேள்விக்கு, நான் எப்படிப் பதில் சொல்வதென்று தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;டைரக்டர் ஷங்கர் தான் பதில் சொல்லணும். &lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி என்ன என்பதை படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_VapWInghYcQ/TOZNtt4TYMI/AAAAAAAAAJI/JD8G-Vt_nD8/s1600/17112010152.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_VapWInghYcQ/TOZNtt4TYMI/AAAAAAAAAJI/JD8G-Vt_nD8/s320/17112010152.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5541201839331172546" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5815740-543159966038573905?l=yemkaykumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yemkaykumar.blogspot.com/feeds/543159966038573905/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5815740&amp;postID=543159966038573905' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/543159966038573905'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/543159966038573905'/><link rel='alternate' type='text/html' href='http://yemkaykumar.blogspot.com/2010/11/blog-post_19.html' title='டைரக்டர் ஷங்கர் பதில் சொல்வாரா?'/><author><name>எம்.கே.குமார்</name><uri>http://www.blogger.com/profile/01900603075164396123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TRgMGEJFiKI/AAAAAAAAAJ4/NLOGXX9OHEA/S220/DSC03182.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_VapWInghYcQ/TOZNtt4TYMI/AAAAAAAAAJI/JD8G-Vt_nD8/s72-c/17112010152.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5815740.post-5907100861071562949</id><published>2010-10-29T16:16:00.003+08:00</published><updated>2010-10-29T16:22:42.441+08:00</updated><title type='text'>உலகம் சுற்றும் 'களவாணிகள்'</title><content type='html'>&lt;em&gt;(நாலு காசு OT பாத்தாதான் கடனைக்கிடனை அடைச்சு, கரைசேர முடியும் என்று நிலையில் இருக்கும் மாப்பிள்ளையும், மாமனும், ஒரு ஞாயிற்றுக்கிழமைத் தேக்காவில், லேட்டா சந்திச்சு, லேட்டாஸ்டா 'களவாணி' படத்தைப் பற்றி பகிர்ந்து கொண்ட விஷயங்கள். இது விமர்சனமல்ல - அவர்களது வாழ்க்கை!)&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன மாப்ளே, 'களவாணி'ல உன் கதையைப் படமா எடுத்திருக்காங்கெ போல, டைரக்டர் சற்குணம் உங்களுக்குச் சொந்தக்காரரா? &lt;br /&gt; &lt;br /&gt;ஏ மாமா, இப்புடி நீ வேற நான் வேறன்னு பிரிச்சிப்பேசுற, நம்ம கதைய எடுத்திருக்காங்கென்னு சொல்லு. &lt;br /&gt;&lt;br /&gt;அடங்கொங்காமக்கா, என்னைய ஏன் மாப்ளே இதுல இழுக்குற? படிச்சுட்டு இருந்த புள்ளைய பல்லக்காட்டி பல்லக்காட்டி கெடுத்து ராத்திரி கடைசி பஸ்ஸுல போயி கூட்டியாந்து குடும்பம் நடுத்துறது யாரு, நானா மாப்ளே? &lt;br /&gt; &lt;br /&gt;அட, அது என்னவோ நாந்தான் மாமா; ஆனா, பஞ்சாயத்து பஞ்சாயத்துன்னு சொல்லிக்கிட்டு ஊர்ல வெள்ளையுஞ்சொள்ளையுமா திரிஞ்சிபுட்டு இப்போ சிங்கப்பூர்ல கப்பலுக்குக் கீழே படுத்து காஞ்ச நத்தையை தேய்க்கிறது யாரு மாமா, நீருதானே! அதைத்தான் சொன்னேன்.&lt;br /&gt;  &lt;br /&gt;காய்ஞ்ச நத்தையோ, கரி மண்ணை கூட்டி அள்ளுறதோ, கப்பல்கட்டுற தொறக்கி வேலைக்கின்னு வந்துட்டா இதெல்லாம் செஞ்சுதானெ மாப்ளே ஆகணும். &lt;br /&gt;&lt;br /&gt;அதுசரி மாமா. படத்துல கஞ்சா கருப்பு காமெடி, உங்க காமெடி போல கல்லா கட்டுது. &lt;br /&gt;&lt;br /&gt;பிச்சுப் புட்டாய்ங்க மாப்ளே. கஞ்சா கருப்பு செத்துப்போனதா வெளம்பரம் பண்ணிக்கிட்டு போறதும் கதாநாயகி மருந்தக்குடிச்சுட்டுதா கெடக்கும்போது அவ குடிக்கலடா, நடிப்புன்னு உண்மையைச் சொல்ல, ஒருபயலும் கண்டுக்காம இருக்குறதப் பாத்துட்டு, அதுதான் நா அப்போவே சொன்னேன்லடா என்கிறதும் கலக்கல் மாப்ளே. &lt;br /&gt;&lt;br /&gt;இது போதாதுன்னு சரண்யா, அதான் கதாநாயகன் அம்மா, புள்ளய காப்பாத்த தற்கொலைன்னு ஒரு நாடகத்தப் போடுறதும் நல்லாத்தான் மாமா இருக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் நம்ம ஊர்க்காட்டுல நடக்குறதானே மாப்ளே. உலகம் பூரா இதுதானே நடக்குது. வீட்டுக்கு வீடு வாசப்படி. சிங்கப்பூர்லயும் ஒரு காரியம் ஆகணும்ன்னா, பன்னெண்டாவது மாடியிலெர்ந்து குதிச்சிருவேன்னு சொல்லுற ஆளுங்களும் இருக்கத்தானே செய்யுறாக.&lt;br /&gt; &lt;br /&gt;அதேதான், அதேதான். படம் முழுக்க காமெடி ரவுண்டி கட்டி கலக்குறது மாதிரி இந்த தற்கொலை, வெத்து மிரட்டல் செஞ்சி காரியம் சாதிக்கிறதுங்குறதும் பொளந்துகட்டிதான் வருது. &lt;br /&gt;&lt;br /&gt;கரெக்டாச் சொன்னே மாப்ளே. வீட்டுல உள்ள சாமான ஒடச்சி ஒடச்சி அல்லது ஒடைக்கிற மாதிரி மிரட்டியே பொழப்ப ஓட்டுற கதாநாயகன் விமலும் அப்படித்தான். &lt;br /&gt;&lt;br /&gt;மெரட்டி மெரட்டி காரியம் சாதிக்கிறது புதுசா மாமா, உங்க சூப்பர்வைசரு என்ன சொல்லுவான்? நாம என்ன கேட்டாலும், ஒழுங்கா இரு, இல்லாட்டி பெர்மிட்டை வெட்டி ஊருக்கு அனுப்பிருவென்னு சொல்லிச்சொல்லியே ஓட்டலையா..அந்த மாதிரிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;செரி செரி மாப்ளே.. உன்போனைக்குடு, ஒரு போன் போட்டுட்டுத்தாரேன் ஊருக்கு.. &lt;br /&gt; &lt;br /&gt;பெர்மிட்டை வெட்டுறதுன்னும் உமக்கு ஊரு ஞாபகம் வந்திருச்சாக்கும். காசு கொஞ்சந்தான் மாமா இருக்கு. இன்னும் டோப்-அப் பண்ணல. அதுசரி, ஊர் ஞாபகமா இல்லை பொஞ்சாதி ஞாபகமா மாமா?&lt;br /&gt; &lt;br /&gt;யாம் மாப்ளே இப்புடிக்கேக்குறெ, படத்துல வாறது மாதிரி, துபாய், சிங்கப்பூர், மலேசியா-ன்னு கெடக்குற பயலுக நாம. நாலைஞ்சி வருஷம் அப்புடி இப்புடி கெடந்து போராடி கொஞ்சம் காசுபணம் சேத்துப்புட்டு ஊருபக்கம் போறதுதானே மாப்ளே நம்ம பொழைப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;அதைத்தான் படத்துலே ஒரு கேரக்டராவே செஞ்சு காட்டிப்புட்டாங்களெ மாமா. அப்பன் போயிக்கெடக்குறான் துபாயில. அவன் காலத்துக்கப்புறம் மவன் போறான். இப்படியே இவங்க பொழப்பு போகுதுன்னு. &lt;br /&gt;&lt;br /&gt;சரியாச் சொன்னே மாப்ளே, இதுக்குப்பின்னாடி உள்ள சோகத்தையும் சொமையையும் சொல்லாம சொல்லிப்புட்டாய்ங்க மாப்ளே.&lt;br /&gt; &lt;br /&gt;சோகம் இருக்கட்டும் மாமா, படத்துல வாற கதாநாயகி ஓவியா பத்தி சொல்லுங்க.. &lt;br /&gt;&lt;br /&gt;ஏலேய் மாப்ளே, என்ன சொல்லச் சொல்லுறெ, எம்ப்பொண்ணு வயசுடெ அந்தப்பொணுக்கு.. &lt;br /&gt;&lt;br /&gt;அடடா, கலைக்கண்ணோட பாத்து ஏதாச்சும் சொல்லுங்க மாமா.,&lt;br /&gt;&lt;br /&gt;ஓவியாவும் கிராமத்துக்கு ஏத்த முகம், நடிப்புன்னு நல்லாத்தான் இருக்கு மாப்ளே.. அதுமட்டுமில்லாம 'வெதை நெல்லு விக்கிற அவுங்க அப்பா', 'தனியா வளர்ந்து நிக்கிற கதாநாயகி வெச்ச நெல்லுப்பயிறு', அதை தனியா அக்கறையோட வளக்குற கதாநாயகன்'ன்னு 'பாரதிராஜா'வோட ஐட்டமும் நெறையத்தான் இருக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு 'பாரதிராஜா' ஞாபகம் வெந்துச்சாகும். எனக்கு 'ஆண்பாவம்' படம் தான் ஞாபகத்துக்கு வந்தது. அந்த மாதிரி படம்ன்னு தோணுச்சி மாமா. &lt;br /&gt;அதுமாதிரி, கலகலன்னு போற படம் தான். வெட்டருவா, வீச்சுக்கம்பு இல்லாம நல்லாத்தான் போகுது. &lt;br /&gt;&lt;br /&gt;அதுமட்டுமில்லாம, எததுக்கெல்லாம் மாலைய கழட்டி வெச்சிட்டு நம்ம பயலுக களத்துல எறங்குறானுவ, எததுக்கெல்லாம் நம்ம பயலுவ சண்டைக்கி நிக்கிறானுவ, எப்போல்லாம் சிங்கப்பூர் மாப்புளக்கி பொண்ணு தாறான்னுவன்னு கரெக்டா காட்டிப்புட்டாய்ங்க மாமா.&lt;br /&gt;&lt;br /&gt;வெளிநாட்டுல வேலை பார்த்துட்டுப் போறவங்களுக்கெல்லாம் இந்தமாதிரி காதல்ல மாட்டுனது கசங்குனதத்தான் கட்டிவெக்கிறங்கெ போலெ; அப்புடித்தானெ மாப்ளே சொல்றே. &lt;br /&gt;&lt;br /&gt;மாமோய்.. 'பதினாறு வயதினிலே' படம் வந்தபோது நீ ஆரம்பிச்ச தொழிலு, இன்னும் 'பத்தவெக்கிறதே' நீரும் விடவேயில்லையா?&lt;br /&gt; &lt;br /&gt;எங்குட்டு மாப்ளே விடுறது. விட்டுட்டா பொழைப்பு ஓடாதே, சரி, படத்துல பாட்டு ஒண்ணும் மனசுல நிக்கலயே மாப்ளே..&lt;br /&gt; &lt;br /&gt;ஆமாம் மாமா, பாட்டு மட்டும் இன்னும் கொஞ்சம் நல்லாயிருந்தா படம் 'எவர்கிரீன் மெஹா ஹிட்' ஆயிருக்கும் தோணுது. ஒரே ஒரு பாட்டு மட்டும் மனசுல நிக்கிது மாமா...அதான்... நம்ம ஏரியாவுல நடக்குற வள்ளி திருமணம், அரிச்சந்திரா மயான காண்டம் நாடங்கங்கல்ல வாற "ஊரடங்கும் சாமத்துல ஒருத்தி மட்டும் விளிச்சிருந்தா ஒருத்தி மட்டும் விளிச்சிருந்தா ஒறங்காம தவிச்சிருந்தா" பாட்ட எடுத்து படத்துல போட்டுட்டாய்ங்க. அந்தப் பாட்டுதான் இன்னும் மனசுல நிக்கிது. &lt;br /&gt;&lt;br /&gt;சரி மாப்ளே...போனு கேட்டேனே... குடு மாப்ளே, ஒரு கால் போட்டுட்டுத்தாரேன். &lt;br /&gt;&lt;br /&gt;அட, இருங்க மாமா, ஊரை விட்டு வந்து ஒரு நாலைஞ்சி வருஷமாச்சிம் இருக்கும்ல நீங்க.  &lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம் மாப்ளே, நாலு வருஷம் ஆச்சு. நாலு வருஷம் என்ன மாப்ளே, ஒரு வீட்டைக் கட்டிப்புட்டு, நம்ம பயல ஒரு நல்ல படிப்பு படிக்கவெச்சுப்புட்டா ஊரு பக்கம் போயிரலாம்ன்னு பாக்குறேன். &lt;br /&gt; &lt;br /&gt;(மனசுக்குள்) ம்ம்..வரும்போது எல்லாரும் இதச்சொல்லிக்கிட்டே வாங்கடே...வந்து பதினாலு வருஷம் ஆனாலும் திரும்பிப்போகாதீங்க.)&lt;br /&gt;&lt;br /&gt;என்ன மாப்ளே யோச்சிக்கிறெ....?&lt;br /&gt; &lt;br /&gt;இல்ல மாமா.. உங்க பையன் என்ன படிக்கிறான்னு சொன்னீரு? &lt;br /&gt; &lt;br /&gt;கும்பகோணத்து காலேஜ்ஜுல ஏதோ கம்புயூட்டர்  படிக்கிறான்னு சொன்னா எம்பொஞ்சாதி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பொஞ்சாதிய நம்பாதீரும்.. இந்தப் படத்துல வாறது மாதிரி பயலுகள கண்டிக்காம கோயில்காளை மாதிரி விட்டுப்புட்டு நம்மகிட்ட நல்லாப் படிக்கிறாய்ங்கன்னு சொல்லியே ஏமாத்திருவாங்க மாமா. எப்போதும் புள்ளங்க மேல ஒரு கண்ணு வெச்சுக்கணும் போல மாமா.&lt;br /&gt; &lt;br /&gt;சரிதான் மாப்ளெ.. இருந்தாலும் அந்த வயசுல இதெல்லாம் சகஜம்ன்னுதான் தோணுது மாப்ளே. கொஞ்சம் காலநேரம் ஒத்துவந்தா சரியாயிருவாய்ங்க. &lt;br /&gt;&lt;br /&gt;சரி நமக்கும் அந்த ஞாபகம் வெந்துருச்சி மாமா... படத்துல வாற 'ஆடல் பாடல்' பாத்தியளா?&lt;br /&gt; &lt;br /&gt;ஆடல் பாடலுக்கு பாய் விரிச்சிப்போடுறதும் அதிலே உக்காந்து ரவுசு விடுறதும் பாத்தேன் மாப்ளே. என்னதான் ஆடல் பாடல்ன்னாலும் நம்ம 'மதுர அகல்யா குரூப்' மாதிரி வருமா மாப்ளே?&lt;br /&gt; &lt;br /&gt;அப்படிச்சொல்லும் மாமோய்.. வெட வெடன்னு ஒரு குட்டி, கூந்தலை எடுத்து முன்னாடி போட்டுக்குட்டு, கழுத்தச் சாச்சி, ஒரு வெட்டு வெட்டுவாளெ ஞாபகம் இருக்கா?&lt;br /&gt; &lt;br /&gt;ம்ம் ஞாபகம் இருக்கு மாப்ளே.. என்ன, ரொம்ப ஏக்கமா பேசுறது மாதிரி இருக்கு.  &lt;br /&gt;அட என்ன மாமா? எங்க இருந்தாலும் நம்ம ஊரு ஞாபகம் போகுமா? &lt;br /&gt; &lt;br /&gt;களவாணிப்பயலுக மாப்ளே... நீங்கள்ளாம். &lt;br /&gt;&lt;br /&gt;என்ன மாமா…. நாமெல்லாம்ன்னு சொல்லும் மாமா.. &lt;br /&gt;&lt;br /&gt;ஏண்டா மாப்ளே என்னைச் சேக்குறே..? நானு நெனைக்கிறேன்... நீரு பேசலை மாப்ளே; படத்துல சரண்யா சொல்லுற மாதிரி, வாற ஆனி போயி ஆடி முடிஞ்சி ரெண்டு வருஷம் போனா எல்லாம் உமக்கு செரியாயிரும். &lt;br /&gt;&lt;br /&gt;அடடா, ஆனி முடிஞ்சி ஆடி போனா இல்ல மாமா... வாற மே, ஜூன் முடிஞ்சு 'ரெண்டு வருஷ பெர்மிட் முடிஞ்சா' எல்லாம் சரியாயிப்போயிரும்.. &lt;br /&gt;&lt;br /&gt;அது....! &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: தங்கமீன் மின்னிதழ் &lt;br /&gt;http://www.thangameen.com&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தங்கமீன் &lt;/strong&gt;மின்னிதழில் (அக்டோபர்) வெளியானது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5815740-5907100861071562949?l=yemkaykumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yemkaykumar.blogspot.com/feeds/5907100861071562949/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5815740&amp;postID=5907100861071562949' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/5907100861071562949'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/5907100861071562949'/><link rel='alternate' type='text/html' href='http://yemkaykumar.blogspot.com/2010/10/blog-post_29.html' title='உலகம் சுற்றும் &apos;களவாணிகள்&apos;'/><author><name>எம்.கே.குமார்</name><uri>http://www.blogger.com/profile/01900603075164396123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TRgMGEJFiKI/AAAAAAAAAJ4/NLOGXX9OHEA/S220/DSC03182.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5815740.post-3589898823972607973</id><published>2010-10-25T09:43:00.002+08:00</published><updated>2010-10-25T09:50:24.546+08:00</updated><title type='text'>டயலாக் 25/10</title><content type='html'>நியாயம் மனுஷனுக்கு மனுஷன் மாறலாம்ன்னு நான் நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா, ஊருக்கு ஊரு அது மாறும்னு இப்போ நம்புறேன்டா பாபு.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படிடா, இப்போ மட்டும் நம்பிக்கை வந்ததுட்டதா சொல்றெ கோபு?&lt;br /&gt;&lt;br /&gt;அட, தர்மபுரி பேருந்தில் 3 உயிர்களை தீவைத்துக்கொளுத்திய மூவருக்கும் மணதண்டனையாம். மதுரை தினகரன் அலுவலகத்தில் 3 உயிர்களைத் தீவைத்துக் கொளுத்தியவர்களுக்கு பதவியும் பரிசுமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ புரியுதா ஊருக்கு ஊரு நியாயம்? அது தர்மபுரி; இது மதுரை!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5815740-3589898823972607973?l=yemkaykumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yemkaykumar.blogspot.com/feeds/3589898823972607973/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5815740&amp;postID=3589898823972607973' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/3589898823972607973'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/3589898823972607973'/><link rel='alternate' type='text/html' href='http://yemkaykumar.blogspot.com/2010/10/2510.html' title='டயலாக் 25/10'/><author><name>எம்.கே.குமார்</name><uri>http://www.blogger.com/profile/01900603075164396123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TRgMGEJFiKI/AAAAAAAAAJ4/NLOGXX9OHEA/S220/DSC03182.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5815740.post-3053584770709099327</id><published>2010-10-25T09:14:00.001+08:00</published><updated>2010-10-25T09:15:56.144+08:00</updated><title type='text'>தங்கமீன் முதல் இதழ்- ஒரு பார்வை.</title><content type='html'>சிங்கப்பூரிலிருந்து வரும் ஒரு இதழில் சிங்கப்பூரைப் பற்றிய செய்திகளும் சிங்கப்பூர் படைப்பாளிகளின் பங்களிப்பும் இருக்கவேண்டும் என நான் ஆசைப்பட்டவாறே வந்திருக்கிறது தங்கமீன் முதல் இதழ்.&lt;br /&gt;&lt;br /&gt;கவிதை முதல் கட்டுரை, கதை, சமூகம், பொது, இளைஞர் பக்கம் என அனைத்திலும் சிங்கப்பூர் செய்திகளும் தளமுமாய் இருப்பது நிறைவு. சிங்கப்பூரில் இத்தனை படைப்பாளிகளா என ஆச்சரியமும் வந்தது. இந்த ஆச்சரியத்தை பாலுமணிமாறன் இன்னும் தொடர்வார் என நம்புகிறேன்; வாழ்த்துகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சில கட்டுரைகள் ரொம்பவும் நிறைவு. &lt;br /&gt;&lt;br /&gt;வள்ளல் கோவிந்தசாமி பற்றிய செய்திகள் எனக்குப்புதிது.&lt;br /&gt;&lt;br /&gt;மரத்தைப் பற்றி எழுதியவர் முதலில் புளிய மரத்தை எடுத்தது எனக்கு ஆச்சரியம். ஏனெனில் சிங்கப்பூரில் புளியமரம் காணக்கிடைப்பது மிகவும் அரிது என நினைத்திருந்தேன். ஆனால் அதில் சொல்லியிருக்கின்றபடி இப்போது கூர்ந்து கவனித்தால் நிறைய புளிமரங்கள் காணக்கிடைக்கின்றன. நேற்று மாலை நடந்துவரும்போது கவனித்த விஷயம், முஸ்தபாவிற்கு எதிரில் இருக்கும் மசூதி அருகே ஒரு 'வெடல' புளியமரம் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"மினி என்விரான்மெண்ட் செர்வீஸஸ்" உரிமையாளர் திரு அப்துல் ஜலீல் அவர்களின் பேட்டி சிறப்பாயிருந்தது. நோன்பு விருந்துக்கென ஆஸ்திரேலியாவிலிருந்து கப்பலில் வரும் ஆடுகளை கொட்டும் மழையில், கப்பலின் மேல் நின்றுகொண்டு இறக்கிக்கொண்டிருந்தவாறு, ஒரு புகைப்படம் கடந்த வருடம் ஒன்றில், ஆங்கிலநாளிதழில் பார்த்தேன். கோடீஸ்வரரான பிறகும் இப்படி "தரையில் இறங்கி" வேலை பார்ப்பவர்கள் அடிமட்டத்திலிருந்து முன்னுக்கு வந்தவர்களாக இருக்கக்கூடும். கோடீஸ்வரராயிருந்தாலும் இன்னும் 10 வெள்ளியே செலவு செய்யும் அசாத்தியம் அறிந்துகொள்ளவேண்டியதே.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்திலுருந்து தேர்தல் வருகிறது மாலனின் கட்டுரையும் சாருவின் சமகாலத்து இலக்கியவாதிகளின் தொடர்பு குறித்தான பங்களிப்பும் சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திரஜித்தின் கட்டுரை எனக்குப்பிடித்திருந்தது. 'அறச்சீற்றமாக' இருந்தபோது எழுதியது என நினைக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;இளவழகன் முருகன் எழுதிய எந்திரன் விமர்சனம் நிறைய கவனிப்புகளுடன் நிறைவாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சுப்ரமணியன் ரமேஷின் குட்டி தேவதை திரும்பவும் தீண்டிய தென்றல்.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் சபா நடராஜன், ஷானவாஸ் கட்டுரைகளும் யதார்த்தம் கலந்த இனிமை.&lt;br /&gt;&lt;br /&gt;புதுமைத்தேனியாரின் சினிமா அனுபவங்கள் படிப்போரை மகிழ்விக்கும் என நம்பலாம். கிசுகிசு அல்லது சொல்லாத சேதிகள் இருந்தால் அள்ளிவிடுங்கள் என 'தெரிந்த நண்பர் ஒருவர்' சொல்லச்சொன்னதை அவரிடம் சொல்லலாமா எனத்தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி பதில், சினிமா செய்திகள், நிகழ்வுகள், இளைஞர் பக்கம், வசந்தம், ஒலி &amp; ஓளி என அனைத்தையும் இணைத்திருக்கும் போக்கு பாராட்டக்கூடியது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுகதைகளை இனிமேல் தான் படிக்கவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;தங்கமீன் இணைய இதழ் வெளியீட்டில் தமது பத்தாண்டு கனவு என்று திரு ஆண்டியப்பன் அவர்களும், சிங்கப்பூர் மார்க்கண்டேயர் (எப்படி சார் எப்பவும் இளமையோட இருக்கீங்க என நான் பார்க்கும்போதெல்லாம் கேட்கும்) திரு. அருண்மகிழ்நன் அவர்களும் சொன்னதாகப் படித்தேன். உண்மையாகத்தான் இருக்கவேண்டும். அக்கனவு இன்று நிஜமாயிருப்பதில் மகிழ்வு. &lt;br /&gt;&lt;br /&gt;முதல் பக்கம் பளிச்சென்று இருந்தால் நன்றாயிருக்கும் என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கமீன் மென்மேலும் பலவெற்றிகளைப்பெற வாழ்த்துகள்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்பன்&lt;br /&gt;எம்.கே.குமார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5815740-3053584770709099327?l=yemkaykumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://www.thangameen.com/' title='தங்கமீன் முதல் இதழ்- ஒரு பார்வை.'/><link rel='replies' type='application/atom+xml' href='http://yemkaykumar.blogspot.com/feeds/3053584770709099327/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5815740&amp;postID=3053584770709099327' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/3053584770709099327'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/3053584770709099327'/><link rel='alternate' type='text/html' href='http://yemkaykumar.blogspot.com/2010/10/blog-post_25.html' title='தங்கமீன் முதல் இதழ்- ஒரு பார்வை.'/><author><name>எம்.கே.குமார்</name><uri>http://www.blogger.com/profile/01900603075164396123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TRgMGEJFiKI/AAAAAAAAAJ4/NLOGXX9OHEA/S220/DSC03182.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5815740.post-1906395401411547058</id><published>2010-10-14T10:08:00.000+08:00</published><updated>2010-10-14T10:11:11.320+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='commonwealth'/><title type='text'>மண்ணாய்ப்போவார்கள் இவர்கள்.</title><content type='html'>ராஜபக்ஷே காமன்வெல்த் நிறைவு விழாவிற்கு வருகிறார் என்று கேள்விப்பட்டதிலிருந்து தூக்கம் இல்லை. மனம் எரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவின் செயல்பாடு மற்றும் ஒருங்கிணைப்புகளின் குளறுபடி அலங்கோலங்களை உலகமே கைகொட்டிச்சிரிக்கும் காட்சிகள் மனவேதனை அளிக்கும்&lt;br /&gt;வேளையில், இந்த செய்தி என் நெஞ்சை உலுக்குகிறது. சீனாவின் பிடியிலிருக்கும் இலங்கையை கைக்குள் அடக்குகிறேன் பேர்வழி என்று இந்தியா ராணுவத்தடவாளங்களையும்&lt;br /&gt;ரேடார்களையும் பல மில்லியன் பணத்தையும் அளித்து பல உயிர்கள் அழிப்புக்கும் துணைநின்றது போதாதென்று இப்போது காமன்வெல்த் நிறைவுவிழாவுக்கு கொலைமன்னன்&lt;br /&gt;ராஜபக்ஷேவை அழைத்திருக்கிறதாம். சுயபுத்தியுள்ள எந்த நாடாள்பவனும் இதைப்போன்ற முட்டாள்தனங்களைச் செய்யமாட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு செயல்படுவது மூலம் என்ன செய்யப்பார்க்கிறது இந்தியா? சீனாவை கோபப்படுத்த அல்லது அட, உன் கைப்பாவை என்கைப்பாவைக்குள் என்று காட்ட, அல்லது, பார் &lt;br /&gt;அண்டை நாட்டுடன் நான் எவ்வளவு அன்னியமாய் இருக்கிறேன் என்று காட்ட, அல்லது ஒரு வெற்றிவீரனை விளையாட்டுவீரனை கௌரவப்படுத்த அல்லது ஒரு மகாத்மாவை &lt;br /&gt;கௌரவிக்க... இப்படி எது செய்யநினைத்தாலும் அது ராஜபக்ஷேவை அழைத்துவருவதன் மூலம் நடக்காது என்பது என்னைப்போன்ற அரசியல் தந்திர ஞானசூன்யங்களுக்கே புரியும்போது மன்மோகன் ஐயாவுக்கு புரியாமல் போனதென்ன? பக்கத்து வீட்டுக்காரன் கொழுந்தியாளைக் கொஞ்சுகிறான் என்று இவன் நல்லபாம்பை எடுத்து கொஞ்சினானாம். அந்தக் கதைதான். &lt;br /&gt;&lt;br /&gt;சீனாவைக் கோபப்படுத்தவேண்டுமா? தற்போது நோபல் பரிசு வாங்கியிருக்கும் அந்த சீன அமைதிபோராட்ட வீரரை அழைத்துவா, நிறைவு விழாவுக்கு. பாகிஸ்தானின் அதிபரை &lt;br /&gt;அழைத்து வந்து 'பார் நான் சமாதானப்புலி' என்று காண்பி. மாமனிதரைக் கௌரவிக்க வேண்டுமா? மியான்மரின் மேடம் ஆங் சு கியை அழைத்துவா, திபெத்தின் திரு. தலாய்லாமை அழைத்துவா. சிங்கப்பூரின் திரு. லீகுவான்யூவைக் கூப்பிடு. இதையெதையும் செய்யாமல் ஒட்டுமொத்த உலகமே அறியும் அதிலும் ஐ.நா சபையே அங்கீகாரம் அளிக்க மறுக்கும் ஒருவனுக்கு இந்தக் கௌரவத்தை அளிப்பது இந்தியா செய்ய நினைக்கும் எதிலும் அடங்காது ஒட்டுமொத்த தமிழினத்தின் மனத்தையும் ரணமாக்கவே செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;திருமாவளவன் போராட்டமாம். ராஜபக்சேயை நேருக்கு நேர் சந்தித்து கைகுலுக்கிவிட்டு இப்போது போராட்டமாம். கொழும்பில் குலுக்கிய கையை டெல்லியிலும் போய் குலுக்கிவிட்டுவா. என்ன இருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞர் ஐயா, தமிழ்நாட்டில் கூட்டணி பற்றி காங்கிரஸ் "ஒருமாதிரி" பேசிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் உங்களுக்கு வந்திருக்க வேண்டாமோ தமிழ்ப்பற்று? என் நெஞ்சம் எரிகிறதே, &lt;br /&gt;ஒரு கொலைஞனை எப்படியய்யா கலைஞன் என காமவெல்த்திற்கு தலைமை தாங்கச்செய்யலாம், என் நெஞ்சு பதறுகிறதே என டெல்லிக்கு அனுப்பியிருக்கவேண்டாமோ உங்களது மந்திரிகளையும் எம்.பி.களையும்?&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று மட்டும் புரிகிறது. இந்தியாவிற்கு எதிரி பாகிஸ்தான் என நினைத்துக்கொண்டிருந்தேன். அது இல்லை! இந்தியாவிற்கு எதிரி தமிழினம் தான் என்று இப்போதுதான் புரிகிறது. என்ன &lt;br /&gt;செய்ய? எமது தலையெழுத்து அப்படி, தமிழ் தலையெழுத்தல்லவா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5815740-1906395401411547058?l=yemkaykumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yemkaykumar.blogspot.com/feeds/1906395401411547058/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5815740&amp;postID=1906395401411547058' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/1906395401411547058'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/1906395401411547058'/><link rel='alternate' type='text/html' href='http://yemkaykumar.blogspot.com/2010/10/blog-post_14.html' title='மண்ணாய்ப்போவார்கள் இவர்கள்.'/><author><name>எம்.கே.குமார்</name><uri>http://www.blogger.com/profile/01900603075164396123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TRgMGEJFiKI/AAAAAAAAAJ4/NLOGXX9OHEA/S220/DSC03182.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5815740.post-527164751461001799</id><published>2010-10-05T06:00:00.001+08:00</published><updated>2010-10-05T06:16:49.283+08:00</updated><title type='text'>எந்திரன் - 25 (விமர்சனமல்ல)</title><content type='html'>எந்திரன் - 25&lt;br /&gt;&lt;br /&gt;1. ரஜினி நாமம் வாழ்க! ஷங்கர் நாமம் வாழ்க! மாறன் குடும்பம் வாழ்க!!&lt;br /&gt;&lt;br /&gt;2. ரஜினி படத்தை இப்படி முதல் இரண்டு நாட்களில் தியேட்டர்க்குச் சென்று பார்ப்பது எனக்கு இது முதல் முறை. எப்போதும் ஆகாத ஒன்று என்று நினைத்திருந்தாலும் எந்திரனுக்குச் செல்ல நேர்ந்தது குடும்பத்தினருக்காக. &lt;br /&gt;&lt;br /&gt;3. செல்லக்குட்டி ஆதித்யா(3) இது திரையில் பார்க்கும் முதல்படம். சேட்டை பண்ணுவான் என நினைத்து பயந்திருந்த வேளையில் படம் முழுவதும் கண்களை திரையில் விட்டு அகலாமல் பார்த்தது எங்களுக்கே ஆச்சரியம். ரஜினியா கொக்கா அல்லது கார்ட்டூனா கொக்கா? &lt;br /&gt;&lt;br /&gt;4. சிங்கப்பூரிலும் ரஜினி ரசிகர்கள் குடும்பத்தோடு வந்து குதூகலிக்கிறார்கள் தியேட்டரில். வழக்கம்போல விசில் சத்தம் காதைப் பிளந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;5. ரஜினியின் அறிமுகம் படத்தில் மிக இயல்பாக இருந்தது. வண்டுசிண்டு பண்ணுவது போல பறந்து வராமல், தாவிக்குதிக்காமல், விரலை ஒடித்து வித்தை காட்டாமல் சாதாரண அறிமுகம் சிறப்பாய் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;6. ஐஸ்வர்யா ராய் மிக அழகாக இருந்தார். மனம் லயித்து அவர் ஒவ்வொரு காட்சியிலும் இணைந்திருந்தார் என்று தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;7. சுஜாதா என்ற மேதைக்கு எப்போதும் ஒரு குறும்புத்தனம் உண்டு. சீரியஸான நேரத்தில் சிறுபிள்ளைத்தனமோ என்று சந்தேகிக்கும் அளவு அவர் அதை வெளிக்காட்டுவார். அதை அவரிடமிருந்து கற்ற ஷங்கர், அமரராகிவிட்ட அவருக்கு ஒரு நன்றியைச் சொல்லியிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;8. என்னதான் 'ரஜினி ரோபோ'வாக இருந்தாலும் இப்படியெல்லாம் உடலை வளைத்து பிரபுதேவா மாதிரியெல்லாம் ஒரு ரோபோ செய்யுமா என்ன? (சோனி நிறுவனத்தார் கவனித்திற்கு)&lt;br /&gt;&lt;br /&gt;9. சுல்தான் த வாரியர் படத்திலிருந்து பல காட்சிகளைச் சுட்டு விட்டார்களோ எனத் தோன்றுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;10. ரஜினியின் குரல் கதாநாயகனுக்குப் பொருத்தமாக இல்லாமல் வில்லனுக்குப் பளிச்சென பொருந்துகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;11. ரஜினி மிகச்சிறந்த வில்லன் நடிகர் என்பதை நான் இன்னொருமுறை இங்கே பதிவு செய்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;12. பிண்ணனி இசை, ஒளிப்பதிவு, டெக்னிக் சமாச்சாரங்கள் தமிழ் சினிமாவுக்குப் புதியதும் உலகத்தரத்துக்கு இணையானதும் ஆகும். ஆனால் ஆங்கிலப்படங்களை ஒப்பிடக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;13. ரோபோவின் செயல்பாடுகளைத் திரையில் ஆங்கில எழுத்தாகக் காட்டுவதால் (உதா. மேக்னெட் மோட் ஆக்டிவேடெட்) சி சென்டரில் புரிவதில் சிக்கல் ஆகலாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;14. கொசு தேசியபறவையாக ஆசைப்படுவது (சுஜாதாவின் குறும்புத்தனம் என நினைக்கிறேன்) என்ன, கொடுத்தே விடலாம். நாடு அப்படித்தான் இருக்கிறது. டெங்குலட்சுமி பாத்தும்மா.&lt;br /&gt;&lt;br /&gt;15. ஒண்ணுமேயில்லாததை இப்படிச்செய்ய முடியுமாதலால், "தசாவதாரத்தை" ஷங்கர் இயக்கியிருந்தால் இன்னும் பெரிதாய் இருந்திருக்குமோ என்ற எண்ணம் வந்தது ஆச்சர்யம் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;16. செல்வராகவனின் "ஆயிரத்தில் ஒருவன்" படத்துக்கு இப்படி யாரும் பணம் செலவு பண்ண முன்வந்திருந்தால் அது உலகத்தரத்துக்கு எட்டியிருக்கும் என்பதும் எனக்கு வந்த இன்னொரு எண்ணம்.&lt;br /&gt;&lt;br /&gt;17. வசனம் சுஜாதா, ஷங்கர் மற்றும் கார்க்கி. ஜெயமோகனையும் சேர்த்திருக்கலாம், 90சதவீத வசனங்களில் நகைச்சுவையே மிஞ்சியிருக்கும் இந்தப் படத்துக்கு அவர் பொருந்தியிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;18. கலாபவன் மணி, கொச்சின் ஹனிஃபா, சந்தானம், கருணாஸ் ஆகியோரும் உண்டு. கொடுத்ததை நிறைவாக செய்திருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் கொடுத்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;19. உணர்வுகளைப் பரிணமிக்கும் சினிமா என்கிற கலையில் காசு பண்ணிக்கொடுப்பது என்பதைத் தொடர்ந்து காட்டிக்கொடுத்து ஆதரவளித்துவரும் ரஜினி, இனி உண்மையிலேயே நல்ல கதையை தேடி நடிப்பது காலம் கடக்கும் அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;20. இயந்திரத்தையும் மனிதன் தனது காமகுரோத பேராசை எண்ணங்களினால் கெடுத்துவிடுகிறான் என்பதே ஷங்கர் சொல்லவரும் கடைசிச்செய்தி.&lt;br /&gt;&lt;br /&gt;21. கமல் நாயகனாகவும் ரஜினி வில்லனாகவும் ஓர் படம் வந்தால் (என்னிடமும் ஒரு கதை இருக்கு) அது தமிழ்சினிமாவின் மகா வெற்றியாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;22. எந்திரன் - காஸ்ட்லி கார்ட்டூன்.&lt;br /&gt;&lt;br /&gt;23. லாஜிக் பார்க்காவிட்டால் மேஜிக்.&lt;br /&gt;&lt;br /&gt;24. சிவாஜி மறந்துபோனது போல எந்திரனும் மறந்து போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;25. ரஜினி நாமம் வாழ்க! ஷங்கர் நாமம் வாழ்க! மாறன் குடும்பம் வாழ்க!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5815740-527164751461001799?l=yemkaykumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yemkaykumar.blogspot.com/feeds/527164751461001799/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5815740&amp;postID=527164751461001799' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/527164751461001799'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/527164751461001799'/><link rel='alternate' type='text/html' href='http://yemkaykumar.blogspot.com/2010/10/25.html' title='எந்திரன் - 25 (விமர்சனமல்ல)'/><author><name>எம்.கே.குமார்</name><uri>http://www.blogger.com/profile/01900603075164396123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TRgMGEJFiKI/AAAAAAAAAJ4/NLOGXX9OHEA/S220/DSC03182.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5815740.post-9089981002025565430</id><published>2010-10-02T09:55:00.002+08:00</published><updated>2010-10-02T10:30:01.317+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='vimala'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='thangameen'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='96.8'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tamilmurasu'/><title type='text'>சிங்கப்பூரிலிருந்து புதிய மின்னிதழ் - எனது எண்ணங்கள்</title><content type='html'>சிங்கப்பூரில் தமிழ் பற்றிய கட்டுரைகளையும் நிகழ்வுகளையும் கூர்ந்து கவனிக்கும் யாருக்கும் ஒன்று மட்டும் புலப்படும். அது, சிங்கப்பூரில் தமிழைச் செம்மைப்படுத்தும் முயற்சிகளை முன்னெடுத்துச்செல்வதில், தமிழ் பயன்படுத்துதலை மேம்படுத்துதலில், ஒருங்கிணைப்பை அதிகரித்தலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வெற்றிவணிகர்களும் தமிழ்த்தொண்டர்களும் தொடருவதைத் தவிர மிகப்பெரிய வெற்றிடம் ஒன்று ஆழ்ந்துகிடக்கிறது  என்பதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்முரசு அவ்வெற்றிடத்தை நிரப்பலாம் என்பதுதான் எனக்கிருந்த காலகால நப்பாசை. காரணம் அமரர்கள் கோ.சாவும், வி.டி.அரசு போன்றவர்களும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில், “பத்திரிகை மற்றும் இதழ்கள் மூலம் சிங்கப்பூரில் படைப்பிலக்கத்தை வளர்க்கமுடியாது” என்பதாக தமிழ்முரசு நாளிதழில் பணிபுரியும் கவிஞர் லதா ‘வல்லினம்’ இதழில் எழுதியபோது அசாதரண வியப்பும் அதிர்ச்சியுமாயிருந்தது எனக்கு. சிங்கப்பூரின் கவனித்தக்க கவிஞர்களில் அவர் ஒருவர். தமிழ்முரசுவில் வேறு பணிபுரிகிறார். தமிழ் முரசால் அவர் இப்படிச்சொல்கிறாரா இல்லை அதில் பணிபுரிவதால் இப்படிச்சொல்கிறாரா எனத்தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், என்னைப்பொறுத்தவரை சிங்கப்பூர் தமிழர்களின் வாழ்வுக்கும் இருப்புக்கும் தமிழ்முரசு ஆணிவேரைப்போன்றது.  தமிழ் மொழியின் வளர்ச்சியும் இலக்கிய இருப்பும் சிங்கப்பூரில், தமிழ்முரசை அச்சாணியாகக் கொண்டே தொடங்கியது. தொடரவேண்டும். தொடரும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் முரசுவின் புதுவடிவம், மாறுபட்ட தோற்றம் குறித்தான எனது பார்வையை நான் முன்வைக்கவிரும்பவில்லை. 2005ல் திண்ணையில் எழுதிய கட்டுரை முதல், கலைஞருக்கு ஆகாத காலச்சுவடு போல ஆகிவிட்டது எனது நிலைமை. ஆனால் தலையங்கம், வாசகர் கடிதம் என தொடரும் அதன் மாற்றங்களை நான் கவனித்துவருவது எனக்குப்போதுமானதாக இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;‘ஒலி 96.8 விமலா’வின் வலைப்பக்கத்துக்கு வருபவர்களில் 10% பேர் கூட சிங்கப்பூரின் தமிழ்முரசுவின் வலைப்பக்கத்துக்கு வரமாட்டார்கள். இணையமும் கணினியுமே யுகமாகிவிட்ட இக்காலத்தில் தமிழை முன்னெடுத்துச்செல்லும் பொறுப்புகொண்ட தமிழ்முரசு போன்றவை அதன் இணையப் பங்களிப்பை அதிகப்படுத்தவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூரில் தொடரும் இலக்கியவறுமையை தனிமனிதர்களால் அல்லது குழுவால் தொடங்கப்பட்ட சில அச்சுபத்திரிகைகள் (உதா. நாம், செராங்கூன் டைம்ஸ்) களைய முயற்சித்தாலும் அது தொடருவது பல ஆண்டு நடத்துதலில் இருக்கும் சிரமத்தைப் பொறுத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் நண்பர் பாலுமணிமாறன் நாளை (அக்டோபர் 3 முதல்) தொடங்கும் புதிய மின்னிதழ் “தங்கமீன்” வெற்றிபெற பல சாத்தியங்கள் இருப்பது என் கண்கூடு.&lt;br /&gt;&lt;br /&gt;காரணம், தமிழ் இணையவெளியில் “அ” போட்ட நா.கோவிந்தசாமி நாட்டில் இப்போதைய தமிழ் வளர்ச்சி இணையத்தில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அதன் முதல் குறையை இது களையும்.&lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தில் சிங்கப்பூர் தமிழ் இளையர்கள் கோலோச்சுகிறார்கள். அவர்களின் விருப்பத்திற்கிணங்க நடந்துகொண்டால் தமிழையும் வளர்க்கமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அச்சு இதழ்களில் இருக்கும் பல சிக்கல்கள் இதில் இல்லை. அதனால் தொடருவதில் சிரமம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக, பாலுமணிமாறன் திட்டமிட்டு தெளிவாகச் செயல்படுத்தும் ஒரு சிறந்த காரியக்காரர். பாரதிராஜாவின் வருகை முதல் மனுஷ்யபுத்திரன், புத்தக பதிப்பு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என தொடர்புகளைத் தன்னகத்தே கொண்டு துல்லியமாய் செயல்படுபவர். அவரின் முயற்சி ஜெயிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்பன்&lt;br /&gt;எம்.கே.குமார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5815740-9089981002025565430?l=yemkaykumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yemkaykumar.blogspot.com/feeds/9089981002025565430/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5815740&amp;postID=9089981002025565430' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/9089981002025565430'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/9089981002025565430'/><link rel='alternate' type='text/html' href='http://yemkaykumar.blogspot.com/2010/10/blog-post.html' title='சிங்கப்பூரிலிருந்து புதிய மின்னிதழ் - எனது எண்ணங்கள்'/><author><name>எம்.கே.குமார்</name><uri>http://www.blogger.com/profile/01900603075164396123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TRgMGEJFiKI/AAAAAAAAAJ4/NLOGXX9OHEA/S220/DSC03182.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5815740.post-2901736686046202719</id><published>2010-09-01T07:33:00.002+08:00</published><updated>2010-09-01T07:40:01.139+08:00</updated><title type='text'>வல்லினம் இதழுக்கு அனுப்பிய கடிதம்</title><content type='html'>பின்வரும் கடிதம் வல்லினம் இதழுக்கு அனுப்பப்பட்டது. என்ன காரணத்தாலோ அது அவ்விதழில் இடம்பெறாததால் இங்கு பதிவு செய்கிறேன்.&lt;br /&gt;****************&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற மாத வல்லினத்தில் வந்த லதா அவர்களின் “ம‌ண்ணின்றி வ‌ள‌ரும் ம‌ர‌ங்க‌ளும் சிங்கை இல‌க்கிய‌மும்” கட்டுரையில், நான் 2005ஆம் ஆண்டில் “தமிழோவியம்” இணைய இதழில் எழுதிய “மாஜுலா சிங்கப்புரா” தொடர்கட்டுரையின் ஒரு பகுதியில் “மக்கள் செயல் கட்சி 1959ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதாக எழுதியிருப்பது சுட்டிக்காட்டப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தவறுக்கு வருந்துகிறேன். அதே கட்டுரையில் 12-ஆம் பத்தியில் அது சரியாக சொல்லப்பட்டிருக்கிறது. &lt;strong&gt;[1]&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூரின் வரலாறு குறித்த தகவல் தேடலில் எனது இத்தொடர் காணக்கிடைப்பது எனக்கு மகிழ்ச்சியே; எனினும், சிங்கப்பூரில் ஆவணப்படுத்துதலின் மேலோட்டத்தன்மையை நானும் உணர்ந்திருப்பதால், (காண்க: &lt;strong&gt;[2]&lt;/strong&gt; ஆவணப்படுத்தும் ஆபத்தும் அதுகுறித்த எனது ஆதங்கமும்) அத்தொடர் ஆவணமாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படும்போது தவறுகள் இருப்பின் திருத்தப்பட்டு தகுந்த தரவுகளுடன் அளிக்க முயற்சிக்கப்படும். &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;எம்.கே.குமார்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;1.http://www.tamiloviam.com/unicode/search.asp?ss=?????%20???????????&lt;br /&gt;2.http://yemkaykumar.blogspot.com/2010/06/blog-post.html&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லதா அவர்களின் கட்டுரை http://www.vallinam.com.my/issue20/essay3.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5815740-2901736686046202719?l=yemkaykumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yemkaykumar.blogspot.com/feeds/2901736686046202719/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5815740&amp;postID=2901736686046202719' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/2901736686046202719'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/2901736686046202719'/><link rel='alternate' type='text/html' href='http://yemkaykumar.blogspot.com/2010/09/blog-post.html' title='வல்லினம் இதழுக்கு அனுப்பிய கடிதம்'/><author><name>எம்.கே.குமார்</name><uri>http://www.blogger.com/profile/01900603075164396123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TRgMGEJFiKI/AAAAAAAAAJ4/NLOGXX9OHEA/S220/DSC03182.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5815740.post-3446441185064187464</id><published>2010-06-18T07:19:00.009+08:00</published><updated>2010-08-18T23:06:52.092+08:00</updated><title type='text'>முனைவர் எம்.எஸ். ஸ்ரீலஷ்மியின் வல்லினம் இதழ் விமர்சனக் கட்டுரை - எனது பார்வையில்</title><content type='html'>நீண்டகாலமாய் பதிவெதுவும் போடாமல் கிடந்த எனக்கு இதைப்பற்றி எழுதவேண்டும் ஒரு உந்துதலை ஏற்படுத்தியதற்காக, வல்லினம் இதழில் "சிங்கப்பூரில் கவிதையின் போக்கு 90களுக்குப்பிறகு" என்ற கட்டுரையின் படைப்பாளர், முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலஷ்மி அவர்களுக்கு நான் முதலில் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூரில் உள்ள (ஒரு கை விரல் மட்டுமே கொள்ளக்கூடிய) விமர்சன முனைவர்களில் எம்.எஸ்.&lt;br /&gt;ஸ்ரீலஷ்மியும் ஒருவர். தொடர்ந்து அவர் புத்தகங்களை சேகரிக்கிறார் அல்லது வாசிக்கிறார் அல்லது விமர்சனமிடுகிறார் என்பதும் தொடர்ந்து அவர் இத்துறையில் இயங்குவதும் சிறப்பு! ஆனால் விமர்சனம் என்ற பெயரில் நெறியற்ற மேதைமையையும் போலி அக்கறையையும் தரமற்ற தகவல்களையும் தரும்போது கொஞ்சம் வருத்தமாய் இருக்கிறது.   &lt;br /&gt;&lt;br /&gt;எம்.எஸ்.ஸ்ரீலஷ்மி தொன்னூறுகளூக்குப்பிறகு வந்த அத்தனை கவிதைப் புத்தகங்களையும் படித்தாரா அல்லது 90களுக்குப்பிறகு எழுதிய நிரந்தரவாசிகள்/வேலை அனுமதிச்சீட்டு உடையோர் எழுதியவைகளை மட்டுமே படித்தாரா தெரியவில்லை. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் மேலே சொன்ன வகையறாவைச் சேர்ந்தவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு ஐயமும் எனக்கு உண்டு. நான்கு கட்டுரைகளை எழுதி அதை அப்படியே இடியாப்பம் பிய்ப்பது போல் பிய்த்துப்போட்டு ஒன்றாக்கிவிட்டாரா என்றும். காரணம்,  நிரந்தரவாசிகள்/வேலை அனுமதிச்சீட்டு கவிஞர்கள், நிரந்தரவாசிகள்/வேலை அனுமதிச்சீட்டு கவிஞர்களின் வாழ்வு வந்ததும் - சென்றதும், கவிமாலை / கவிச்சோலை தோற்றமும் வளர்ச்சியும்,  நிரந்தரவாசிகள்/வேலை அனுமதிச்சீட்டு கவிஞர்களால் ஏற்பட்ட வயித்தெரிச்சல் என நான்கு கட்டுரைகளை எழுதி அதைப் பொதுத்தலைப்பாக்கி விட்டது போல இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுரையில் தொடர்ந்து பரவிக்கிடக்கும் குடியுரிமைச்சிக்கலும் எடுத்துக்காட்டப்பட்டிருக்கும் கவிதை உதாரணங்களும் ஒரு அந்நியத்தனமாய் நேர்மையின்மையாய் துருத்திக்கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பல இடங்களில் கட்டுரையாளர் சாடுகின்ற விஷயங்கள் உலகச் செம்மொழியாம் தமிழ் மொழியில் எக்காலத்திலும் பாடு பொருளாகவே இருந்திருக்கின்றன. புதுக்குடியேறி, உள்ளத்தை அங்கு வைத்து உடலை இங்கு வைக்கும் போக்கு, குடும்பத்தைப் பிரிந்திருக்கும் வலி, வாழூரில் ஏற்படும் உணர்வுகளை சேகரித்தல் என்பன எல்லாப்படைப்பிலும் காணப்படுபவையே.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுரையின் பல இடங்களில் சம்பந்தேமே இல்லாத தகவல்கள் நெருடுகின்றன. சொந்த விருப்பு வெறுப்பின் பேரில் எழுதப்பட்டிருக்குமோ எனவும் யோசிக்கவைக்கின்றன்.&lt;br /&gt;&lt;br /&gt;எடுத்துக்காட்டுகள் பல,.&lt;br /&gt;&lt;br /&gt;1. சம்பந்தமேயில்லாமல் மலேசியாவின் கே.பாலமுருகன் இக்கட்டுரையில் சாடப்பட்டிருப்பது.&lt;br /&gt;2. ஜெயந்தி சங்கரைப் பற்றிய அவதானிப்புகள். (நிறைய முயற்சிகள் எடுத்து அவர் சீனக்கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்து தந்திருக்கிறார் என்பதையும் மறந்து)&lt;br /&gt;3. சுப்ரமணியம் ரமேஷ் காசு சம்பாதித்துவிட்டு ஊருக்குச் சென்றுவிட்டது &lt;br /&gt;4. கவிமாலை மற்றும் கவிச்சோலையைப் பற்றி கூறுகையில் காசுக்காக / பணத்துக்காக அங்கே கவிதை எழுதச்செல்வார்கள் என்ற தொணியில் சொல்லப்பட்டிருக்கும் கருத்து. (உண்மையில் ஒரு பரிசுபெறும் சந்தோசத்திற்காக, ஒரு மோட்டிவேஷனுக்காக, அவர்களுக்குள்ளே யாராவது ஒருவர் பரிசை ஸ்பான்சர் செய்வார். நாள் ஒன்றுக்கு பதினெட்டு வெள்ளி சம்பளம் வாங்கும் நண்பர் தனது இலக்கிய ஆர்வத்திற்காக ஐம்பது வெள்ளி பரிசுத்தொகையை ஸ்பான்சர் செய்வது எவ்வளவு பெருந்தன்மையான விஷயம். அதைத் தவறான தகவல்களாக கொசைப்படுத்துவதா மேடம்?)&lt;br /&gt;5.புத்தக வெளியீடு கண்டு காசு பணத்தை அள்ளிக்கொள்கிறார்கள், அட ஜெயந்தா! ராமா, நிறைய எழுத்தாளர்கள் புத்தக வெளியீடு விழாவையே விட்டுவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் நிறைய.....&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூரிலுள்ள சில முனைவர்களில் ஒருவர் என்ற முறையில், சிங்கப்பூரிலுள்ள சில இலக்கிய விமர்சகர்களில் ஒருவர் என்ற முறையில், &lt;strong&gt;சிங்கப்பூரில் எந்த முனைவரோ படைப்பாளரோ எப்படி வாந்தியெடுத்தாலும் அது பிற்காலத்திற்காக ஆவணப்படுத்தப்படும் &lt;/strong&gt;என்பதாலும் நான் தங்களை அன்புடன் வேண்டிக்கொள்வது இதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;வருங்கால சிங்கப்பூருக்கு தவறான தகவல்களைத் தராதீர்கள். அல்லது தகவல்களை சொந்த விருப்பு வெறுப்பின் பேரில் தகனம் செய்யாதீர்கள்; தாராளம் செய்யாதீர்கள். தகவல்களை தகவல்களாக தராமல் தான்தோன்றித்தனமாக உங்களது மன ஓட்டங்களை இணைக்காதீர்கள். இவையெல்லாம் தமிழுக்கும் சிங்கப்பூருக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் நீங்கள் செய்யும்&lt;br /&gt;துரோகங்களே. &lt;br /&gt;&lt;br /&gt;தங்களது மேன்மையான படைப்பையும் அக்கறையையும் எதிர்நோக்கும்,&lt;br /&gt;&lt;br /&gt;எம்.கே.குமார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வல்லினம் இதழில் வெளியான முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ.லஷ்மி – யின் கட்டுரைக்கான இணைப்பு&lt;br /&gt;http://www.vallinam.com.my/issue18/essay5.html&lt;br /&gt;&lt;br /&gt;முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ.லஷ்மி-யின் கட்டுரைக்கு பிற எழுத்தாளர்கள் அவர்களின் விமர்சனத்தை பதிவு செய்துள்ளனர் அதற்கான இணைப்பினையும் இங்கு கொடுத்துள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கே.பாலமுருகன் (மலேசியா)&lt;br /&gt;http://bala-balamurugan.blogspot.com/2010/06/blog-post_03.html&lt;br /&gt;&lt;br /&gt;பாலுமணிமாறன் http://baalu-manimaran.blogspot.com&lt;br /&gt;&lt;br /&gt;அப்துல்காதர் ஷாநவாஸ் https://shaanavas.wordpress.com&lt;br /&gt;&lt;br /&gt;சூன்யா http://soonya007.blogspot.com&lt;br /&gt;&lt;br /&gt;இந்திரஜித் http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3016&lt;br /&gt;&lt;br /&gt;தம்பி பாண்டித்துரையின் மடல்.&lt;br /&gt;http://pandiidurai.wordpress.com/2010/06/14&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5815740-3446441185064187464?l=yemkaykumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yemkaykumar.blogspot.com/feeds/3446441185064187464/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5815740&amp;postID=3446441185064187464' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/3446441185064187464'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/3446441185064187464'/><link rel='alternate' type='text/html' href='http://yemkaykumar.blogspot.com/2010/06/blog-post.html' title='முனைவர் எம்.எஸ். ஸ்ரீலஷ்மியின் வல்லினம் இதழ் விமர்சனக் கட்டுரை - எனது பார்வையில்'/><author><name>எம்.கே.குமார்</name><uri>http://www.blogger.com/profile/01900603075164396123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TRgMGEJFiKI/AAAAAAAAAJ4/NLOGXX9OHEA/S220/DSC03182.JPG'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5815740.post-7780416417125087949</id><published>2010-02-16T06:26:00.006+08:00</published><updated>2010-02-20T08:07:21.324+08:00</updated><title type='text'>அஞ்சலி: VMC ஹனீபா</title><content type='html'>&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_VapWInghYcQ/S3nSSm8MgLI/AAAAAAAAAHY/rK0JuUEJOvU/s1600-h/haneefa030210_1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5438609242159087794" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 128px" alt="" src="http://2.bp.blogspot.com/_VapWInghYcQ/S3nSSm8MgLI/AAAAAAAAAHY/rK0JuUEJOvU/s320/haneefa030210_1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மகாநதியில் முதன்முதலாய் கொச்சின் ஹனிஃபாவைப் பார்த்தேன். கமல்ஹாசனுக்கே உரிய கதாபாத்திர தேர்வுகளின் முழுமையாய் ஹனிஃபா இருந்தார். படம் நினைவிருக்கும்வரை ஹனீஃபாவைத் திட்டிக்கொண்டேயிருப்பேன். அந்த அளவுக்கு அவரின் பாத்திரம். நிறைவாய்ச் செய்திருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;கமல்ஹாசன் அவரைப் பல படங்களில் நன்கு பயன்படுத்தியிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குப்பிறகு பல படங்கள். படக்கென்று நினைவுக்கு வருவது பட்டியல் படத்தில் வரும் வேடமும், முதல்வனில் வரும் முதல்வரின் தொண்டரும்.&lt;br /&gt;&lt;br /&gt;கள்ளத்தனமும் வெகுளித்தனமும் நிறைந்த முகபாவத்தையும் புன்னகையையும் ஒருங்கே கொண்டவர். அப்பாவிக்கும் அடப்பாவிக்கும் பொருத்தமானவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அமரர் ஹனீஃபாவின் மறைவு நல்ல திரைப்படங்களுக்கும் பொருத்தமான கதாபாத்திரங்களும் ஒரு பேரிழப்பு. நமக்கும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது குடும்பத்தாரின் வருத்தத்தில் இணைகிறேன். அவரது ஆத்மா சாந்தியடைக.&lt;br /&gt;&lt;br /&gt;அன்பன்&lt;br /&gt;எம்.கே.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5815740-7780416417125087949?l=yemkaykumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yemkaykumar.blogspot.com/feeds/7780416417125087949/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5815740&amp;postID=7780416417125087949' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/7780416417125087949'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/7780416417125087949'/><link rel='alternate' type='text/html' href='http://yemkaykumar.blogspot.com/2010/02/vmc.html' title='அஞ்சலி: VMC ஹனீபா'/><author><name>எம்.கே.குமார்</name><uri>http://www.blogger.com/profile/01900603075164396123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TRgMGEJFiKI/AAAAAAAAAJ4/NLOGXX9OHEA/S220/DSC03182.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_VapWInghYcQ/S3nSSm8MgLI/AAAAAAAAAHY/rK0JuUEJOvU/s72-c/haneefa030210_1.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5815740.post-1080046363040126717</id><published>2009-07-22T23:37:00.005+08:00</published><updated>2009-07-23T00:15:44.924+08:00</updated><title type='text'>அப்படி என்ன சார் பிஸி?</title><content type='html'>அண்மைக்காலங்களில் நான் அதிகமாகவே எழுதாமல் இருந்துவிட்டேன் என்றாலும் அதனாலோ என்னவோ நிறையவற்றைப் பற்றி எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டேயிருந்தேன்.&lt;br /&gt;உதாரணமாய் பல விஷயங்களைச் சொல்லலாம் எனினும் பின்வருவன இன்றுவரை விரட்டிக்கொண்டேயிருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூருக்கு வந்திருந்த ஞானியைப் பார்க்காதது, பேசாதது பெருங்குறையாய் மனதில் தொங்கிக்கொண்டேயிருக்கிறது. சிங்கப்பூரில் 'பஜாஜ் பல்சர்' பைக் வாங்கியவர்களில் 99% பேர் ஒருதடவையாவது சாலையில் சரிந்து விழுந்திருப்பது பற்றி, எனது 'மருதம்' சிறுகதைத்தொகுப்பில் அதிகமாய் நிரம்பியிருக்கும் குழந்தைக்காலங்களை அப்படியே அள்ளித்தந்த 'பசங்க' திரைப்படத்தை நிறைய நிறைய எழுதவேண்டும் என்பது பற்றி, மஹிந்த ராஜ பக்ஷேயின் கொலைவெ(ற்)றி பற்றி, அப்பாவித்தமிழர்களின் அவலம் பற்றி, குடிநீர்க்குழாயில் சாராயம் வந்தது பற்றி, அண்மையில் சந்தித்த சென்னை நண்பரின் இந்திய சுற்றுலாத்துறை குறித்தான ஆத்திரங்கள் பற்றி, சாரு நிவேதிதா எழுதியிருந்த இயற்கையை மனிதன் எதிர்கொள்ளும் மனப்பாங்கு குறித்தான ஒரு சிறந்த 'ஒப்புமை பற்றி, 'சொல்வனம்' வார இதழில் வெளிவரும் 'குளோபல் வார்மிங்' கட்டுரை பற்றி, ஏனென்று தெரியாமல் 'அயன்' படத்தை ஐந்து முறை மீண்டும் மீண்டும் பார்த்தது பற்றி, அதில் வரும் (கிளிஷேக்கலுடன் ஒப்பிடக்கூடாத) சூர்யாவின் மிகச்சிறந்த ஒரு காட்சி பற்றி, 'நாடோடிகள்' படத்தைப் பற்றி, அண்மையில் வெளிவந்த 'நாம்' இதழின் தரம் பற்றி, சிங்கப்பூரில் நடைபெற்ற எந்த இலக்கிய, புத்தக சம்பந்தப்பட்ட கடந்த நான்குமாத நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளாதது பற்றி, எதையும் சாராதிருந்தும் எல்லாமுமாய் இருக்கும் ஒரு இம்சை பற்றி, கவிஞரும் விமரிசகருமான ராஜமார்த்தாண்டன் மறைவு பற்றி, காலச்சுவடு இதழில் பணியாற்றி வரும் சிங்கப்பூரில் பணிபுரியும் ஓவியர் உமாபதி வீட்டிற்கு வந்தது பற்றி, அவர் தந்த ராஜ மார்த்தாண்டன் ஓவியம் பற்றி, எல்லாவற்றிற்கும் மேலாக ஆதித்யா பற்றி அவனுடனான நெகிழ்வான தருணங்கள் பற்றி......&lt;br /&gt;&lt;br /&gt;பற்றுக பற்றினை பற்றற்று பற்றுக&lt;br /&gt;பற்றி பற்றால் வரும். (இது திருக்குறள் அல்ல)&lt;br /&gt;&lt;br /&gt;இதன் குத்துமதிப்பான விளக்கம்: பற்று இருந்தால் பற்றியவற்றைப் பற்றி பற்றிய நேரத்தில் பற்றில்லாமல் எழுதலாம் என்பதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;எம்.கே.குமார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5815740-1080046363040126717?l=yemkaykumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yemkaykumar.blogspot.com/feeds/1080046363040126717/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5815740&amp;postID=1080046363040126717' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/1080046363040126717'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/1080046363040126717'/><link rel='alternate' type='text/html' href='http://yemkaykumar.blogspot.com/2009/07/blog-post_22.html' title='அப்படி என்ன சார் பிஸி?'/><author><name>எம்.கே.குமார்</name><uri>http://www.blogger.com/profile/01900603075164396123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TRgMGEJFiKI/AAAAAAAAAJ4/NLOGXX9OHEA/S220/DSC03182.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5815740.post-6373300679142362553</id><published>2009-07-22T23:32:00.002+08:00</published><updated>2009-07-22T23:36:24.709+08:00</updated><title type='text'>காணாமல் போனவர்களைப் பற்றிய அறிவிப்பு</title><content type='html'>பெயர்: எம்.கே.குமார் என்று அழைப்படும் குமாரராஜா&lt;br /&gt; &lt;br /&gt;வயது: எல்லாம் சின்ன வயசு&lt;br /&gt; &lt;br /&gt;அடையாளம்: நல்ல கருத்த நிறம், சுருட்டை முடி, கண்கள் பெண்களைப் பார்த்தால் பளீரிடும்.&lt;br /&gt; &lt;br /&gt;தேடுபவர்கள்: ஒருவர் ஊரை விட்டே போய்விட்டார்.(இவரை தேடி அலுத்து என்று நினைக்க வேண்டாம்)மற்றுமொருவர் தேடிக்.......கொண்டேயிருக்கிறார். ஒரு சிலரைத் தவிர மற்றவர்களின் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்தி கிடைத்துள்ளது. &lt;br /&gt; &lt;br /&gt;பின் குறிப்பு: ஒரு புத்தகங்க்கள் காத்திருக்கின்றன.&lt;br /&gt; &lt;br /&gt;முக்கியக் குறிப்பு: பத்து வெள்ளி தராமல் டபாய்ப்பது என்றெல்லாம் யோசிக்காமல் விரைவில் தொடர்பு கொள்ளவும்&lt;br /&gt; &lt;br /&gt;தொடர்புக்கு: தொலைபேசி எண்: 999 &lt;br /&gt;          விலாசம்: 007, துப்பாக்கி நகர், கொலைகாரன் பேட்டை, திருட்டூர், சதக் சதக் மாவட்டம்,&lt;br /&gt;&lt;br /&gt;(அட, தொலைஞ்சி போனவனே, இதையாவது சொந்தமானதா சொந்தவலைப்பூவுல எழுதக்கூடாதா? அப்படியே எடுத்துப்போடணுமா?)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5815740-6373300679142362553?l=yemkaykumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yemkaykumar.blogspot.com/feeds/6373300679142362553/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5815740&amp;postID=6373300679142362553' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/6373300679142362553'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/6373300679142362553'/><link rel='alternate' type='text/html' href='http://yemkaykumar.blogspot.com/2009/07/blog-post.html' title='காணாமல் போனவர்களைப் பற்றிய அறிவிப்பு'/><author><name>எம்.கே.குமார்</name><uri>http://www.blogger.com/profile/01900603075164396123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TRgMGEJFiKI/AAAAAAAAAJ4/NLOGXX9OHEA/S220/DSC03182.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5815740.post-2387067266667383185</id><published>2009-02-24T22:38:00.001+08:00</published><updated>2009-02-24T22:39:54.662+08:00</updated><title type='text'>தாய்பக்தி, தமிழ் பக்தி, தேசபக்தி, தெய்வபக்தி - ஏ ஆர் ரஹ்மான் வாழ்க!!</title><content type='html'>&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5815740-2387067266667383185?l=yemkaykumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yemkaykumar.blogspot.com/feeds/2387067266667383185/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5815740&amp;postID=2387067266667383185' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/2387067266667383185'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/2387067266667383185'/><link rel='alternate' type='text/html' href='http://yemkaykumar.blogspot.com/2009/02/blog-post_24.html' title='தாய்பக்தி, தமிழ் பக்தி, தேசபக்தி, தெய்வபக்தி - ஏ ஆர் ரஹ்மான் வாழ்க!!'/><author><name>எம்.கே.குமார்</name><uri>http://www.blogger.com/profile/01900603075164396123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TRgMGEJFiKI/AAAAAAAAAJ4/NLOGXX9OHEA/S220/DSC03182.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5815740.post-5778286973198387766</id><published>2009-02-24T22:24:00.003+08:00</published><updated>2009-02-24T22:37:39.988+08:00</updated><title type='text'>பசுபதியைப் பற்றிய சிறுகுறிப்புகள் - 5</title><content type='html'>ஆண்டாளுடன் பேசி இருவாரங்களாகிவிட்டதாய் பசுபதி புலம்பத்தொடங்கியதை நான் கேட்காதது போலிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;புலம்பலின் முடிவாய் அவன் சொன்னதை மட்டும் இதைப் படித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு சொல்ல விழைகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நீண்டதொரு பெருமூச்சுடன் அவன் சொன்னதாவது: "ஆண்டாளை நான் நிஜமாய் நேசித்தேன்"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எம்.கே.குமார்.&lt;br /&gt;24/02/09&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5815740-5778286973198387766?l=yemkaykumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yemkaykumar.blogspot.com/feeds/5778286973198387766/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5815740&amp;postID=5778286973198387766' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/5778286973198387766'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/5778286973198387766'/><link rel='alternate' type='text/html' href='http://yemkaykumar.blogspot.com/2009/02/5.html' title='பசுபதியைப் பற்றிய சிறுகுறிப்புகள் - 5'/><author><name>எம்.கே.குமார்</name><uri>http://www.blogger.com/profile/01900603075164396123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TRgMGEJFiKI/AAAAAAAAAJ4/NLOGXX9OHEA/S220/DSC03182.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5815740.post-5308262591053696589</id><published>2009-02-04T22:57:00.003+08:00</published><updated>2009-02-04T23:15:02.628+08:00</updated><title type='text'>சிங்கப்பூரில் சகோதரன் முத்துக்குமாருக்கு அஞ்சலி!</title><content type='html'>நின்னை எரித்து நீ எழுதிய கடிதம் கண்டேன் - என்ன சொல்வது என் சகோதரா,&lt;br /&gt;என்னை எரிக்கிறது அக்கடிதம் - இதயத்தை ரணமாக்கி!&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சிங்கப்பூரில் அமைதி உண்ணாவிரதம் அல்லது மவுன அஞ்சலிக்கு ஏற்பாடு செய்வது குறித்தான சட்டப்பூர்வ அனுமதி நடவடிக்கைகள் பெறுவது குறித்து விவரங்களைச் சேகரித்துக்கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில், உயிராயிதம் ஏந்திய சகோதரன் முத்துக்குமாருக்கு நினைவஞ்சலிக்கூட்டம், சிங்கப்பூரின் "பேசுவதற்கான இடத்தில்" (Speaker's Corner) இன்று மாலை ஏழு மணிக்கு நடைபெறுகிறது என தாமதமாகவே அறியவந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசிடம் அனுமதி வாங்கி அஞ்சலிக்கூட்டம் நடத்திய நண்பர்களுக்கு எனது நன்றிகள். தகவலறிந்த நண்பர்கள் தயவுசெய்து உடன் பகிர்ந்துகொள்ள வேண்டிக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எம்.கே.குமார்&lt;br /&gt;04/03/09&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5815740-5308262591053696589?l=yemkaykumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yemkaykumar.blogspot.com/feeds/5308262591053696589/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5815740&amp;postID=5308262591053696589' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/5308262591053696589'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/5308262591053696589'/><link rel='alternate' type='text/html' href='http://yemkaykumar.blogspot.com/2009/02/blog-post.html' title='சிங்கப்பூரில் சகோதரன் முத்துக்குமாருக்கு அஞ்சலி!'/><author><name>எம்.கே.குமார்</name><uri>http://www.blogger.com/profile/01900603075164396123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TRgMGEJFiKI/AAAAAAAAAJ4/NLOGXX9OHEA/S220/DSC03182.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5815740.post-8888442096951834726</id><published>2009-01-29T22:52:00.002+08:00</published><updated>2009-01-29T23:07:55.436+08:00</updated><title type='text'>கவிஞர் லதா (சிங்கப்பூர்)அவர்களுக்கு வாழ்த்துகள்!</title><content type='html'>"நான் கொலை செய்யும் பெண்கள்" நூலுக்காக, லதா எனப்படும் கவிஞர் கனகலதா அவர்களுக்கு சிங்கப்பூர் இலக்கிய விருது வழங்கப்பட்டமையில் பெரிதும் மகிழ்கிறேன்; வாழ்த்துகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;எம்.கே.குமார்.&lt;br /&gt;29/01/09&lt;br /&gt;&lt;br /&gt;K. Kanagalatha &lt;br /&gt;&lt;br /&gt;Kanagalatha (Latha) is a News Editor with the Tamil Murasu, the national Tamil daily of Singapore. She has been with the daily from 1990. She has been a prolific contributor of poems, short stories, and literary and arts reviews.&lt;br /&gt;&lt;br /&gt;Her poems have been anthologized in Journeys: Words, Home and Nation, a multilingual anthology published by The Centre for the Arts, National University of Singapore (1995), Rhythms-A Singaporean Millennial Anthology of Poetry, published by the National Arts Council (2000), and Kanavum Vidiyum - Anthology of Contemporary Tamil Poetry by Women Poets by the Sahitya Academy of India (2003). Her bilingual poem Still Human was also featured in the MRT: Poems on the Move series on the MRT trains by the National Arts Council.&lt;br /&gt;&lt;br /&gt;A short story, Identity, was published in English and Tamil in SINGA (Jan 1999), the Journal of the arts and literature in Singapore. Her poems and short stories have also appeared in prominent overseas Tamil literary journals like Kanayaazhi (India), Kaalachuvadu (India), Uyirnizhal (France) and Sarinigar (Sri Lanka).&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி:http://www.bookcouncil.sg/swc/writersa-k.htm&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5815740-8888442096951834726?l=yemkaykumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yemkaykumar.blogspot.com/feeds/8888442096951834726/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5815740&amp;postID=8888442096951834726' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/8888442096951834726'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/8888442096951834726'/><link rel='alternate' type='text/html' href='http://yemkaykumar.blogspot.com/2009/01/blog-post_29.html' title='கவிஞர் லதா (சிங்கப்பூர்)அவர்களுக்கு வாழ்த்துகள்!'/><author><name>எம்.கே.குமார்</name><uri>http://www.blogger.com/profile/01900603075164396123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TRgMGEJFiKI/AAAAAAAAAJ4/NLOGXX9OHEA/S220/DSC03182.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5815740.post-4089431700904072555</id><published>2009-01-28T20:07:00.002+08:00</published><updated>2009-01-28T20:16:22.207+08:00</updated><title type='text'>பசுபதியைப் பற்றிய சிறுகுறிப்புகள் - 4</title><content type='html'>திடுமென சிங்கப்பூரை நேசிப்பதாய் பசுபதி சொன்னதன் அதிசயம் எனக்குப்புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;காதைத்தீட்டிக்கொண்டேன். ஆண்டு இறுதி விடுமுறைக்காக சென்னை சென்று திரும்பி வந்திருந்த அவனுடைய தோழி மீனாட்சி அவர்களைப் பார்த்தானாம் பசுபதி. மீனாட்சி அவர்களின் ஆதங்கமாய் பசுபதி சொன்னதன் சுருக்கமான விவரணங்கள் இவை.&lt;br /&gt;&lt;br /&gt;கூவம் ஆற்றில் ஒரு பதின்ம வயதுப்பெண் மழைவெள்ளத்தில் அடித்துச்செல்லப்படுகிறாள், ஆயிரம்பேர் கரையில் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கின்றனர். ஒருவர் கூட காப்பாற்ற முயற்சிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வங்கிக்கிளைக்கு அக்கவுண்ட் அப்டேட் செய்யச்சென்றால் இரண்டு நாட்கள் கழித்து வரும்படி தலையை நிமிர்த்தி பார்க்காமலேயே சொல்கிறார் வங்கி அதிகாரி.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டிலிருந்த தமிழ்ப்புத்தகங்களை கோணியில் அடைத்து கிணற்றுக்கருகில் போட்டு விட்டார்கள் வீட்டிலுள்ளவர்கள். மனது கேட்காமல் ராமகிருஷ்ணா மிஷனுக்கு அள்ளிச்சென்று கொடுத்துவிட்டு வந்தாராம் தனது நண்பரொருவர். மணிமேகலையை கொடுக்கும்போது மட்டும் கண்களில் ஜலம். காரணம் அவருடைய இளங்கலை மற்றும் முதுகலையில் மணிமேகலை அவருக்கு மிகவும் பிடித்த பாடம். 94 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹார்ட் பாதிக்கப்பட்டிருந்த உறவினர் ஒருவருக்கு ஹார்ட் தேடி அலைந்து 24 மணி நேரத்துக்குள் ஒருவர் ஹார்ட் கொடுக்க முன்வந்துவிட்டார். ஹார்ட்டைக் கொடுக்க முன்வருபவர்கள் இந்தியாவில் இவ்வளவு எளிதாக கிடைக்கிறார்கள் என்றால் எங்கோ ஏதோ தவறு நேருகிறது என மீனாட்சி நினைப்பதாக அவன் சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உறவினர் ஒருவருக்கு உயிர் போய் இரண்டு நாட்களாகியும் வெண்டிலேஷன் செட்டப்போடு ஆஸ்பத்திரியிலே வைத்துக்கொண்டு போராடுவதாய் நாடகம் நடத்தியிருக்கிறார் ஒரு தனியார் மருத்துவமனை டாக்டர். ரமணா தோற்றது போங்கள்!!!&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் இறந்துபோன புகழ்பெற்ற எழுத்தாளர் ஒருவரின் மனைவியைச் சந்தித்தாராம் மீனாட்சி. வீட்டில் அப்பா சேர்த்துவைத்திருக்கும் குப்பையையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு வா; உனக்கு நானிருக்கும் இடத்தில் வீடு வாங்கித்தருகிறேன் என்கிறாராம் அவரது பையன்.&lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் புகழ்பெற்ற இருமனைவி கொண்ட எழுத்தாளர் ஒருவர் ஹாஸ்பிட்டல் செலவுக்கே கலைஞரிடம் கையேந்திக்கிடக்கிறாம். பெற்ற பையன்களும் மனைவிகளும் கண்டுக்காமல் விட்டுவிட்டார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேர அமைதிக்குப்பிறகு பசுபதி சொன்னான், பணம் மட்டும் சார்ந்து அமைவதா வாழ்க்கை?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5815740-4089431700904072555?l=yemkaykumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yemkaykumar.blogspot.com/feeds/4089431700904072555/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5815740&amp;postID=4089431700904072555' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/4089431700904072555'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/4089431700904072555'/><link rel='alternate' type='text/html' href='http://yemkaykumar.blogspot.com/2009/01/4.html' title='பசுபதியைப் பற்றிய சிறுகுறிப்புகள் - 4'/><author><name>எம்.கே.குமார்</name><uri>http://www.blogger.com/profile/01900603075164396123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TRgMGEJFiKI/AAAAAAAAAJ4/NLOGXX9OHEA/S220/DSC03182.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5815740.post-5084475681572333667</id><published>2009-01-06T22:49:00.001+08:00</published><updated>2009-01-06T23:02:27.590+08:00</updated><title type='text'>பசுபதியைப் பற்றிய சிறுகுறிப்புகள் - 3</title><content type='html'>பசுபதியிடம் அபிராமியைப் பற்றிக் கேட்க வேண்டும் என்று எனக்குத்தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;அபிராமி சிங்கப்பூரின் பத்திரிகைத்துறையில் உயர்ந்த பதவியிலிருக்கும் ஒரு பெண். குருவிக்கூட்டைப் பிரித்தெடுத்தது போல நெளிநெளியான நீண்ட கூந்தலுடன் பார்த்ததும் மோகிக்க வைக்கும் இயல்பான அழகு. இன்னாருடன்தான் வாழ்கிறார் என்று உறுதிபடாத பலருடன் உறுதிபடாத தகவல்கள் நிறைய உலவி வந்தாலும் பசுபதி அவரிடம் நெருங்கியிருக்கிறான் என்பதை எப்போதோ ஒரு தருணத்தில் அவனே என்னிடம் சொல்லியதுண்டு. நெளிநெளியாய் அசைந்தன நினைவலைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://smg.photobucket.com/albums/v713/mkkumar/?action=view&amp;current=modern.jpg" target="_blank"&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v713/mkkumar/modern.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அபிராமி நலமாய் இருக்கிறார்; பத்திரிகைத்துறையில் இருந்து இப்போது தொலை ஊடகத்துறைக்கு மாறிவிட்டார். நிகழ்ச்சிகளுக்கு தானே முதன்மை நிர்வாகியாகவும் தயாரிப்பாளராகவும் பணிபுரிவதாகவும் சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ நான் ஏமாற்றமடைந்ததைக் கண்டவனாய், "என்ன சொல்லச்சொல்கிறாய்?&lt;br /&gt;அநாகரிகமான விஷயங்களை என்னிடம் கேட்காதே; மூக்குவரை போகலாம்; மூக்கைத்தொட உரிமையில்லை" என்றான் அமைதியான குரலில்.&lt;br /&gt;&lt;br /&gt;எம்.கே.குமார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5815740-5084475681572333667?l=yemkaykumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yemkaykumar.blogspot.com/feeds/5084475681572333667/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5815740&amp;postID=5084475681572333667' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/5084475681572333667'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/5084475681572333667'/><link rel='alternate' type='text/html' href='http://yemkaykumar.blogspot.com/2009/01/3_06.html' title='பசுபதியைப் பற்றிய சிறுகுறிப்புகள் - 3'/><author><name>எம்.கே.குமார்</name><uri>http://www.blogger.com/profile/01900603075164396123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TRgMGEJFiKI/AAAAAAAAAJ4/NLOGXX9OHEA/S220/DSC03182.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5815740.post-3408213656600151691</id><published>2009-01-03T00:10:00.004+08:00</published><updated>2009-01-04T22:49:15.873+08:00</updated><title type='text'>பசுபதியைப் பற்றிய சிறுகுறிப்புகள்-2</title><content type='html'>ஜோஹூரில் நடக்கும் ஒரு பீச் பார்ட்டிக்கு தான் பணம் கட்டியிருப்பதாகவும் நானும் அதில் கலந்துகொள்ளவேண்டுமாய் என்னிடம் கேட்டுக்கொண்டிருந்தான் பசுபதி.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன பார்ட்டி என்று கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நீரும் நியூடும் என்றான் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படின்னா??&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்கள் எவ்வாடையும் அணிய அனுமதியில்லை; பெண்கள் ஜி ஸ்டிரிங்க்ஸ் மட்டும் மட்டும் மட்டும்; அதுவும் 12 மணிக்குப்பிறகு களையப்படவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவு கட்டணம் என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;250 ரிங்கிட்; 100 சிங்கப்பூர் வெள்ளி!&lt;br /&gt;&lt;br /&gt;போகலாம் என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;போய் வந்தபிறகு அதுபற்றி எதுவும் எழுதக்கூடாது, சரியா? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எம்.கே.குமார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5815740-3408213656600151691?l=yemkaykumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yemkaykumar.blogspot.com/feeds/3408213656600151691/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5815740&amp;postID=3408213656600151691' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/3408213656600151691'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/3408213656600151691'/><link rel='alternate' type='text/html' href='http://yemkaykumar.blogspot.com/2009/01/2.html' title='பசுபதியைப் பற்றிய சிறுகுறிப்புகள்-2'/><author><name>எம்.கே.குமார்</name><uri>http://www.blogger.com/profile/01900603075164396123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TRgMGEJFiKI/AAAAAAAAAJ4/NLOGXX9OHEA/S220/DSC03182.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5815740.post-3663203547299958915</id><published>2009-01-02T23:52:00.004+08:00</published><updated>2009-01-03T00:08:40.588+08:00</updated><title type='text'>பசுபதியைப் பற்றிய சிறுகுறிப்புகள்</title><content type='html'>பசுபதியைப் பற்றி உங்களிடம் நான் சொல்லவில்லை என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பசுபதி என் பழைய சிநேகிதன். சிங்கப்பூரில் அவனை இந்நிலையில் சந்திப்பேன் என்று நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை. அவனது கதையைப் பின்னொரு நாளில் ஆற அமர உங்களிடம் தொடர்கிறேன். இப்போது அவனைச் சந்தித்த கதை!&lt;br /&gt;&lt;br /&gt;ஃபேரர் பார்க் ரோட்டிலிருந்து சந்தர் ரோடு பிரியும் இடத்தில் இருக்கும் ஒரு விடுதி வாசலை நான் கடக்கும்பொழுது ஒரு கணவனும் மனைவியும் அவ்விடுதியை விட்டு வெளியே வந்தார்கள். பரிச்சயமான முகங்களாய்த் தென்பட, மீண்டும் நோக்கியதில் பசுபதி கொஞ்சம் முன்வழுக்கையோடு எனக்குக் கிடைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் செழித்த நடையுடன் முன் நோக்கி விரைந்து நகர்ந்த பெண்ணைப்பற்றி கேட்டபோது, "பார்த்தும் உன் ஞாபகத்துக்கு வரவில்லையா? சரத்குமாருக்குக் கூட ஜோடியாய் நடித்திருக்கிறார் அப்பெண். நடிகை ..... என்றான். அவர் சென்ற திசையை நோக்கினேன். &lt;br /&gt;&lt;br /&gt;எம்.கே.குமார்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5815740-3663203547299958915?l=yemkaykumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yemkaykumar.blogspot.com/feeds/3663203547299958915/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5815740&amp;postID=3663203547299958915' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/3663203547299958915'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/3663203547299958915'/><link rel='alternate' type='text/html' href='http://yemkaykumar.blogspot.com/2009/01/blog-post.html' title='பசுபதியைப் பற்றிய சிறுகுறிப்புகள்'/><author><name>எம்.கே.குமார்</name><uri>http://www.blogger.com/profile/01900603075164396123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TRgMGEJFiKI/AAAAAAAAAJ4/NLOGXX9OHEA/S220/DSC03182.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5815740.post-3446286398843823038</id><published>2009-01-01T23:37:00.002+08:00</published><updated>2009-01-01T23:39:35.400+08:00</updated><title type='text'>HAPPY NEW YEAR 2009</title><content type='html'>அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துகள்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5815740-3446286398843823038?l=yemkaykumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yemkaykumar.blogspot.com/feeds/3446286398843823038/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5815740&amp;postID=3446286398843823038' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/3446286398843823038'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/3446286398843823038'/><link rel='alternate' type='text/html' href='http://yemkaykumar.blogspot.com/2009/01/happy-new-year-2009.html' title='HAPPY NEW YEAR 2009'/><author><name>எம்.கே.குமார்</name><uri>http://www.blogger.com/profile/01900603075164396123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TRgMGEJFiKI/AAAAAAAAAJ4/NLOGXX9OHEA/S220/DSC03182.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5815740.post-7501377506437340862</id><published>2008-10-27T22:49:00.001+08:00</published><updated>2008-10-27T22:51:32.985+08:00</updated><title type='text'>தினக்குரல் கருத்தோவியர் மூர்த்திக்கு தங்கப்பதக்கம்</title><content type='html'>ஸ்ரீலங்கா வெகுஜன ஊடக(Sri Lanka Massmedia Foundation) ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஊடகத்துறையினருக்கான தெரிவில் தினக்குரலின் கேலிச்சித்திரக்காரர் ஏ.யோகமூர்த்தி 2008 ஆம் ஆண்டின் சிறந்த ஆக்கபூர்வமான கருத்தோவிய கலைஞராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். &lt;br /&gt;நாளை 28 ஆம் திகதி மாலை 6 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் மேற்படி ஊடக அமைப்பு நடத்தும் பரிசளிப்பு விழாவில் கலைஞர் மூர்த்திக்கு சான்றிதழ் மற்றும் தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;எனக்குப்பிடித்த கேலிச்சித்திரக்காரர்களில் ஒருவர். வாழ்த்துகள்!!&lt;br /&gt;&lt;br /&gt;அன்பன்,&lt;br /&gt;எம்.கே.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: தினக்குரல்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5815740-7501377506437340862?l=yemkaykumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yemkaykumar.blogspot.com/feeds/7501377506437340862/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5815740&amp;postID=7501377506437340862' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/7501377506437340862'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/7501377506437340862'/><link rel='alternate' type='text/html' href='http://yemkaykumar.blogspot.com/2008/10/blog-post.html' title='தினக்குரல் கருத்தோவியர் மூர்த்திக்கு தங்கப்பதக்கம்'/><author><name>எம்.கே.குமார்</name><uri>http://www.blogger.com/profile/01900603075164396123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TRgMGEJFiKI/AAAAAAAAAJ4/NLOGXX9OHEA/S220/DSC03182.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5815740.post-96263724310815516</id><published>2008-06-01T20:35:00.002+08:00</published><updated>2008-06-01T20:40:05.498+08:00</updated><title type='text'>"நாம்" - நற்புடை நாற்றங்கால்!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_VapWInghYcQ/SEKYNUDNOOI/AAAAAAAAAEw/0JjRPI8RzdA/s1600-h/Naam.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_VapWInghYcQ/SEKYNUDNOOI/AAAAAAAAAEw/0JjRPI8RzdA/s320/Naam.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5206891473681594594" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/SEKYNkDNOPI/AAAAAAAAAE4/rs6mVyo5WG8/s1600-h/Naam1.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/SEKYNkDNOPI/AAAAAAAAAE4/rs6mVyo5WG8/s320/Naam1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5206891477976561906" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தமிழ் இலக்கிய உலகிற்கு இது புதுவரவுகளை ஆரத்தழுவும் காலம். தமிழ்நாட்டிலிருந்து தமிழினி வெளியிடும் "தமிழினி" மாத இதழ், எனி இந்தியன் வெளியிடும் "வார்த்தை" மாத இதழ், மலேசியாவிலிருந்து சிலமாதங்கள் வெளிவந்த 'காதல்' மாத இதழின் டீம் மறுபடியும் களம் இறங்கியிருக்கும் "வல்லினம்-காலாண்டிதழ்", மற்றுமொரு மலேசிய சிற்றிதழ் "அநங்கம்" ஆகியவை திறல் காட்ட தீரத்தோடு உலகத் தமிழ் இலக்கியக்களத்தில் குதித்திருக்க சிங்கப்பூரிலிருந்தும் அத்தகைய முனைப்போடு களம் கண்டிருக்கிறது "நாம்" - என்றொரு காலாண்டிதழ். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வந்திருக்கும் இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து இந்த புதிய காலாண்டிதழை வெளிக்கொணர்ந்திருக்கிறார்கள். இதழ் ஒன்றைத் தொடங்குதல் என்பது இலக்கிய ஆர்வம் கொண்ட பல இளைஞர்கள் / அறிஞர்களின் தனிப்பட்ட / இணைந்த கனவாகவே இருந்து வந்திருக்கிறது. அதற்கேற்றவாறே சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதும் நாட்பொழுதில் அவை மறைந்துபோன தடத்தையும் தமிழிலக்கிய வரலாற்றில் நிறைய காணலாம். உருப்பெற ஏற்பட்ட காரணங்களில் நூற்றில் ஒரு பங்குகூட அதன் வீழ்ச்சிக்கு வழிவிடமுடியும் என்பதால் தோன்றுவதும் தொடர்வதும் சார்ந்தவர்களின் மன உறுதியில் அமைந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பன்னெடுங்காலமாய் பொருளாதாரத்திற்கென புலம்பெயர்ந்த தமிழர்கள், போகுமிடங்களிலெல்லாம் இரு விஷயங்களைச் செய்தார்கள். ஒன்று கோவில் கட்டுவது, இரண்டாவது வட்டிக்கடை வைப்பது. மூன்றாவதாய் ஒன்றைச் செய்வதற்கும் இளைஞர்குழாம் சார்ந்த மனமொத்த இயக்கம் சிலதும் எப்போதும் முன்னெடுத்தே நின்றிருக்கிறது. சிங்கப்பூரிலும் ஆதிகாலம் தொட்டு அதற்கான சான்றுகள் நிறைய இருக்கின்றன. 29 வயதிலேயே பத்திரிகை ஆசிரியரான தமிழவேள் கோ. சாரங்கபாணி முதல், பட்டுக்கோட்டையையடுத்த பிச்சினிக்காட்டிலிருந்து வந்த திரு. இளங்கோ வரை பலர் இவ்வனுபவத்தில் வாழ்ந்திருக்கின்றனர். (இதுதொடர்பான தமது அனுபவத்தை திரு. பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள் நிகழ்ச்சியிலும் பகிர்ந்துகொண்டார்.)&lt;br /&gt;&lt;br /&gt;"நாம்" இதழை எதனடிப்படையில் வரையறுப்பது என்பதில் சில சிக்கல்கள் நீடிக்கின்றன. வடிவமைப்பில் உயிர்மையைக்கொண்டும் கூறுபொருளில் சிற்றிதழா அல்லது வெகுஜன இதழா என்பது சார்ந்தும், சிங்கப்பூர் வாழ் நண்பர்கள் வெளியீடு எனினும் வெளியீட்டு முகவரி இந்தியாவிலிருந்தும்/ தனிச்சுற்றுக்கு மட்டும் என முழுமையை அடைவதில் சில குறைபாடுகள் உள்ளன. இணைய நண்பர்களின் ஆக்கங்களையே பொதுவாகக் காணமுடிகிறது எனினும் இணைய எழுத்துகளின் மேம்பட்ட உள்ளீடுகளைக்கொண்டு அதுவே அதன் சிறப்பம்சமாக மாற நேரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் இதழின் அச்சகம், முதன்முதலில் புத்தகம் தயாரித்திருக்கிறது என நினைக்கிறேன். ஆங்காங்கு பக்கங்கள் "மை"யிட்டுக்கொண்டிருப்பதும், புகைப்படங்கள் தெளிவற்றிருப்பதும் முதல் இதழின் திருஷ்டிக்காக என்று எடுத்துக்கொள்வோம். அடுத்தடுத்த இதழ்கள் முக்கிய அச்சகங்கள் வழியாக முழுமைபெற்று வரும் என்று உறுதி தெரிவித்தார்கள் "நாம்" குழுவினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதழ் வெளியீட்டு நிகழ்வில் சிங்கப்பூரிலிருக்கும் அனைத்து தமிழ் அமைப்புகளும் அல்லது அதன் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர் என்பதிலும் வெளியிடப்பட்ட இடத்திற்காகவும் வெளியீட்டு நிகழ்வில் நான் கலந்துகொண்டமையில் களிப்படைகிறேன். முதல் இதழில் எனது ஒரு கதையும் வந்திருக்கிறது. கற்பனையாய் எழுதிய கதை, வெளியான தருணத்தில் உண்மையாய் ஆனதை செய்தியாய்க் கண்டு திரு. பாண்டித்துரை அழைத்து ஆச்சரியப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூரை உருவாக்கிய சர். ஸ்டாம்ஃபோர்டு ராஃபிள்ஸ், 1822ல் உருவாக்கியதும் அவரது மறைவுக்குப்பின் 1859ல் மீண்டும் உருப்பெற்றதுமான 149 ஆண்டுகால வரலாற்றுச்சிறப்புடைய சிங்கப்பூர் பொட்டானிக் கார்டனில் வைத்து "நாம்" இதழ் வெளியிடப்பட்டது.  &lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்ச்சி முடிந்து, சிங்கப்பூரின் மூத்த தமிழார்வலர்கள் திரு. கண்ணபிரான் மற்றும் திரு. செ.ப.பன்னீர் செல்வம் ஆகியோருடன் பேசிக்கொண்டிருக்கையில், தமிழகத்திலிருந்து எடுத்துவரப்பட்ட ரப்பர் மரக்கன்றுகள் மலேயா முழுக்க நடுவதற்கு முன்பாக, இந்த பொட்டானிக் கார்டனில்தான் முதன்முதலாக சோதனையின் பொருட்டு நடப்பட்டது என்றார்கள். அத்தகு பெருமைமிக்க இத்தோட்டத்தில் இன்னொருமுறை ஒரு இலக்கியச்செடியை நட்டுவைத்திருக்கிறார்கள். நிகழ்ச்சியை குனிந்து உற்றுநோக்கிக்கொண்டிருந்த அந்த நீண்ட நெடிய மரத்தைப்போல இவ்விதழும் எல்லாவித சிறப்புகளும் பெற்று வளரவேண்டும்; வாழவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்தவொரு இதழ் ஆரம்பிக்கப்பட்டாலும் அதனை மையமாக வைத்து குறைந்தது பத்து எழுத்தாளர்களாவது உருவாவார்கள் என்று தனது அனுபவத்தை வைத்துச்சொல்வாராம் திரு. மனுஷ்யபுத்திரன். அந்த வகையில் இந்த இதழ் பத்து எழுத்தாளர்களால் அல்லது எழுத்தார்வம் மிக்கவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது; இன்னும் பல பத்துப்பேர்களைக் கொண்டு சேர்க்கும் என நம்புவோம். &lt;br /&gt;&lt;br /&gt;(பத்து, பத்து என்றதும், சம்பந்தமில்லையெனினும் இது ஞாபகத்திற்கு வருகிறது. புரசைவாக்கம் குமுதம் அலுவலகத்திற்கு வெளியே "பத்து ரூபாய் நோட்டே, நீ போய் ஆயிரம் பேருக்கு உதவி செய்துவிட்டு பத்தாயிரம் ரூபாயாகத் திரும்பிவா" என்று எழுதப்பட்டிருக்கும். யாராவது இதை கவனித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.)&lt;br /&gt;&lt;br /&gt;அன்பன்&lt;br /&gt;எம்.கே.குமார்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5815740-96263724310815516?l=yemkaykumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yemkaykumar.blogspot.com/feeds/96263724310815516/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5815740&amp;postID=96263724310815516' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/96263724310815516'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/96263724310815516'/><link rel='alternate' type='text/html' href='http://yemkaykumar.blogspot.com/2008/06/blog-post.html' title='&quot;நாம்&quot; - நற்புடை நாற்றங்கால்!'/><author><name>எம்.கே.குமார்</name><uri>http://www.blogger.com/profile/01900603075164396123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TRgMGEJFiKI/AAAAAAAAAJ4/NLOGXX9OHEA/S220/DSC03182.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_VapWInghYcQ/SEKYNUDNOOI/AAAAAAAAAEw/0JjRPI8RzdA/s72-c/Naam.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5815740.post-4554112209436760740</id><published>2008-05-03T13:47:00.002+08:00</published><updated>2008-05-03T13:55:20.110+08:00</updated><title type='text'>இருட்டை வெறும் இருட்டு என்றுதான் நினைத்திருந்தேன் -   வண்ணதாசனுக்கு நன்றி!</title><content type='html'>திருச்சியின் மையப்பகுதியில் செருப்பு தைப்பவரைத்தேடி அலைந்து ஏழு எட்டு மணி அளவில் பிரதான சாலை ஒன்றில் ஒருவரைத் தரிசித்தேன். நீர்த்தேங்கியிருந்த பள்ளமான சாலைப்பகுதியைத் தாண்டி அவர் அமர்ந்திருந்தார். நான் சென்ற நேரம் அன்றைய அவரது பொழுதின் முடிவுக்காலமாதலால் எல்லா உபகரணங்களையும் மூட்டை கட்டிவிட்டி வெளியிலிருந்து பார்க்க நன்கு இறுக்கி நையப்பட்ட ஒரு குப்பைத்தொட்டியைப்போன்ற தோரணையுள்ள ஒரு இடமாக்கிவிட்டு எழுந்து நகரவிருந்தார். நான் வந்து அவரிடம் சேர்ந்தபொழுது அவர் என்னை வெகு எளிதாய் உதாசீனப்படுத்தியிருக்கக்கூடும். ஏனெனில் நான் வேண்டியது அத்தனை மூட்டையையும் பிரித்து எடுத்து செய்யத்தகுந்த வருமானம் தரக்கூடிய வேலையில்லை. ஆனாலும் சாலைத்தூசிகள் சூழ்ந்த உலகில் வண்டிச்சத்தங்களும் இரைச்சலும் முண்டியடிக்கும் வெளிச்சத்துக்கு ஏமாந்த அவ்வேளையில் ஒட்டுமொத்த மூட்டைகளையும் பிரித்து குத்தூசியையும் நூலையில் எடுத்து அவர் அவ்வேலையைச்செய்தார். இரண்டு விஷயங்கள் என்னை வசீகரித்தன. அவ்வேலையைச் செய்ய அவர் காட்டிய முனைப்பும் அக்கறையும் ஒன்று. மற்றொன்று எங்களிடையே சிறு மின்னலைப்போல தோன்றி மறைந்த நாங்கள் இருவரும் திருப்தியடைந்த ஒரு தருணம்! பெரும் மின்னல் ஒன்று வெட்டிச்சென்றபின் அதைச் சார்ந்து ஒரு வெளிச்சம் பரவிக்கிடந்து மறையுமே அதைப்போல அது இன்றுவரை மறைந்தும் மறையாததாய் இருக்கிறது. பல்வேறு பிரிவுத்துவம் வாய்ந்த இவ்வாழ்வில் எதையும் சாராது வரும் பூரணத்துவம் மிகுந்த அந்தத் திருப்தியானது எத்தகைய புனைவும் எளிதில் தராத ஒன்று. வண்ணதாசன் கதைகளில் அம்மின்னலும் அதன் தாக்கமும் எனக்கு நிறைந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வண்ணதாசனின் சிறுகதைத்தொகுப்புகளில் 'நடுகை' (பாதிமட்டுமே) மற்றும் 'கிருஷ்ணன் வைத்த வீடு' ஆகிய இரண்டை மட்டும் வாசிக்கும் பாக்கியம் இக்காலத்தில் எனக்கு கிட்டியிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;தனது திருமணத்திற்கு மேளம் வாசித்தவரைப் பற்றிய ஒரு கதை, அமரர் ஊர்தியைப் பின்தொடருபவனைப் பற்றிய இன்னொரு கதை, தனது மாமரத்திலிருந்து சிறுகுச்சி ஒன்று ஒடிக்கப்படுவதை உணர்ந்து வீட்டிலிருந்து எழுந்து வரும் கிழவியின் கதை, வெறும் மின்மினிப்பூச்சிகளின் வெளிச்சத்தில் அலசப்படும் "தாழம்பூ" தாத்தாவின் கதை, நகர வாழ்க்கையில் நிலை தடுமாறி ஊர் திரும்ப ஏங்கும் 'நெல்லை சிவாஜி' குத்தாலிங்கம் அண்ணாச்சியின் கதை என கதை என்ற பெயரில் நிகழ்வுகள் பதியப்படுவதை நெகிழ்ச்சியுடன் ஆமோதிக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;நினைவில் ஒரே மாதிரியாகத்தான் நகர்ந்து போகிறார்கள் - மேளம் வாசிப்பவர்கள் அனைவரும் எனக்கு; தரையில் சிந்தும் பூக்களைத் தவிர்த்துக்கொண்டே அமரர் ஊர்தியைப் பின் தொடர்ந்து சென்றவர்களில் நானும் ஒருவன்; கிழவியினுடைய மாமர குச்சியின் வாசனையை குழந்தையின் காதுக்கடியில் கிடைக்கும் பால்வாசனையாய் உணர நேர்ந்தமையில் ததும்பிய மகிழ்வு; நீளமான கூந்தலைக்கொண்ட தலையில் தவழும் தாழம்பூவின் நறுமணத்தில் தாத்தாவை விட நான் திளைத்திருந்தமையில் கிடைத்த மோகம்; சில பேருடைய குடிவாசனை மட்டும் எப்போதுமே எனக்கு பிடித்திருந்தாய் இருக்கும் நிலைமை என மனம் இளகும் உயிர் நெகிழும் ஐம்புலன்களும் ஏங்கும் இலக்கிய சுகத்தை சில கதைகள் ஏற்படுத்திச்சென்றிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அடுக்கி வைக்கும் செங்கல்களைப்போல நிகழ்வுகளால் கதையைக் கட்டமைக்கும் கலையைக் காண நேருவதுண்டு. ஒரே ஒரு செங்கல்லைக்கொண்டு தாஜ்மஹாலையே கட்ட முயலும் சம்பவத்திற்கிணையான இலக்கியங்களுமுண்டு. செங்கல்லையே காட்டாது அதைப்பற்றிய உலகை அலசும் கதைகளுமுண்டு. ஒரே ஒரு செங்கல்லைத் திரும்ப திரும்பப் பார்த்து அதன் செம்மைத்தனத்தை பதிய முற்படுவதும் உண்டு. வண்ணதாசனின் கதைகள் இதை அடிப்படையாகக்கொண்டது என நினைக்கிறேன். பலமுறை பார்ப்பதால் உண்டாகும் இயற்கையான சலிப்பையும் மீறி ஏதோ ஒன்று தர முயலுவது இவரது படைப்புகளின் வெற்றிக்கதையாகும். &lt;br /&gt;&lt;br /&gt;'யாருக்கும் தெரியாது என்று நினைத்திருந்த', நடந்து பார்க்காத சசிப்பெண்ணின் பாதத்தை துணியால் வேலைக்காரன் மூடுவதை மறக்க நினைத்தும் முடியாத 'கிருஷ்ணன் வைத்த வீடு' மறக்க முடியாத ஒரு கதை மட்டுமல்ல; செவ்வியல் சிறுகதையின் கட்டுமான வடிவத்திற்கு மிகச்சிறந்த ஒரு உதாரணமும் என்பேன். சிறந்த வாசகனை இக்கதை தத்தெடுத்துக்கொள்ளும் என்பதை உணர நேருகையில் மகிழ்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது எனக்கு பத்து வயதிருக்கும். மாமா வீட்டிற்கு எதற்காகவோ சென்றிருந்தேன். அங்கு என்ன நடந்தது என்பதும் ஞாபகமில்லை. ஆனால் நான் திரும்ப வேண்டும். இரவு எட்டு-ஒன்பது மணிக்கு காட்டின் வழியே எனது வீட்டுக்கு நான் திரும்பவரவேண்டிய சூழ்நிலை. யாரும் துணைக்கு இல்லை. எதற்கு துணை என்று இப்போது நினைத்தாலும் அன்று அந்த இருளைக் கடந்து வீட்டுக்கு வந்துசேர்ந்த சம்பவத்தையே நான் அடைந்த மிகப்பெரிய வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாக இன்றுவரை நினைத்துக்கொண்டிருக்கிறேன். வெற்றி என்றால் யாரை எதிர்த்து? இருட்டையா? இருட்டு எனக்கு என்ன செய்தது? இருட்டு எப்படி எனக்கு எதிரியானது? இருட்டை ஜெயித்தேன் என்றால் இருட்டுக்கா நான் பயந்தேன்? இல்லை இருட்டின் அடையாளங்களுக்கா? இருட்டின் அடையாளங்கள்தான் என்ன? பூச்சி, பாம்பு, பேய், பூதம், திருடர்கள்? அதுசரி, இருட்டின் அடையாளங்கள் இவைகள் மட்டும் தானா?&lt;br /&gt;&lt;br /&gt;இருட்டை தேர்ந்த புகைப்படக்கலைஞனைப்போல, ஓவியனைப்போல அடிக்கடி அலசுகிறார் வண்ணதாசன். சாலாச்சி அக்காவும், திலகா அக்காவும், சந்திமுனைப் பிள்ளையாரும் இருளும் வெளிச்சமும் போல எங்கும் நிறைந்திருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இவ்விரு தொகுப்புகளிலும் கதைகளை எங்கும் நான் காணவில்லை. வெறும் புனைவு மட்டுமே கதை என்று கொண்டோமானால் அவைகள் எவற்றையும் இத்தொகுப்புகளில் நான் காணவில்லை. புனைவுகளின் தட்டையான தடங்களை எங்கும் நான் தரிசிக்கவில்லை. வாழ்க்கை, வாழ்க்கை, வாழ்க்கை மட்டுமே கதைக்களங்களில் விரவிக்கிடக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் மானசாஜென்னிடம் பேசிக்கொண்டிருந்தபொழுது 'நிலை' என்று வண்ணதாசனின் ஒரு கதை இருப்பதாய்ச் சொன்னார். நான் இப்போது அதைப்படிக்கவில்லை. ஆனால் 'நிலை' என்ற பெயரில் ஏறக்குறைய ஏழுவருடங்களுக்கு முன் ஒரு கதை படித்தேன். சிறந்த சிறுகதைகளாய் யாரோ ஒருவர் தொகுத்த அத்தொகுப்பில் அதுவும் ஒன்று. நள்ளிரவு வரை வேலை செய்துவிட்டு தீபாவளிக்கு முந்தைய இரவில் வீடு திரும்பும் ஒருவனின் கதை அது. அந்தக் கதையும் அதில் வரும் லாரியில் அடிபட்டுச் செத்துக்கிடக்கும் ஒரு எலியும் இன்றுவரை நினைவிலாடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு விஷயங்களுக்காய் திரு. வண்ணதாசனுக்கு நான் நன்றி சொல்ல விழைவது எதார்த்தமானது என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று, நேற்றுவரை இருட்டு, வெறும் இருட்டாகவே எனக்கு இருந்திருக்கிறது - இப்போது அது, நெருங்கிய ஒரு உறவாகி விட்டிருக்கிறது -&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது, எப்போதும் பார்வையிலிருந்து எளிதாய் நகர்ந்துவிடும் எந்த ஒன்றையும், இப்போது மீண்டும் ஒருமுறையாவது பார்க்க ஆரம்பித்திருக்கிறேன் - வண்ணதாசனால்!&lt;br /&gt;&lt;br /&gt;அன்பன், &lt;br /&gt;எம்.கே.குமார். &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: வாசகர் வட்டம், சிங்கப்பூர்.http://vasagarvattam.blogspot.com/&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5815740-4554112209436760740?l=yemkaykumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yemkaykumar.blogspot.com/feeds/4554112209436760740/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5815740&amp;postID=4554112209436760740' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/4554112209436760740'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/4554112209436760740'/><link rel='alternate' type='text/html' href='http://yemkaykumar.blogspot.com/2008/05/blog-post.html' title='இருட்டை வெறும் இருட்டு என்றுதான் நினைத்திருந்தேன் -   வண்ணதாசனுக்கு நன்றி!'/><author><name>எம்.கே.குமார்</name><uri>http://www.blogger.com/profile/01900603075164396123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TRgMGEJFiKI/AAAAAAAAAJ4/NLOGXX9OHEA/S220/DSC03182.JPG'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5815740.post-629818127039588959</id><published>2008-04-24T09:03:00.002+08:00</published><updated>2008-04-24T09:15:31.534+08:00</updated><title type='text'>நெடு நாட்களுக்குப்பிறகு எனக்குப்பிடித்த கலைஞர்!</title><content type='html'>இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண&lt;br /&gt;மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்&lt;br /&gt;கருணாநிதி கொண்டு வந்த தீர்மானம் சட்டசபையில் நிறைவேறியது &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டசபையில் முதல் - அமைச்சர் கருணாநிதி தீர்மானம் கொண்டு வந்தார். அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை, ஏப்.24-&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக சட்டசபையில் நேற்று இலங்கை பிரச்சினை பற்றி பேசுவதற்காக பா.ம.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது நடந்த விவாதத்தில் ஜி.கே.மணி (பா.ம.க.) கண்ணப்பன் (ம.தி.மு.க.) சுதர்சனம் (காங்கிரஸ்) ஆகியோர் காரசாரமாக பேசினார்கள். அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் கருணாநிதி பதில் அளித்து பேசியதாவது:-&lt;br /&gt;&lt;br /&gt;வருந்துகிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைப் பிரச்சினைக்காக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை பரிவு உணர்வோடும், இரக்க சிந்தனையோடும், தமிழர்களுக்கு உதவிட வேண்டும் என்கின்ற பாச மனப்பான்மையோடும் கொண்டு வந்து, அதே அடிப்படையிலே விவாதம் நடைபெற்றிருந்தால் நான் மிகுந்த ஆறுதல் அடைவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், எந்த நோக்கத்திற்காக ஜி.கே.மணி இந்தத் தீர்மானத்தை கொண்டு வருவதாகச் சொல்லி முன்மொழிந்தாரோ அந்த நோக்கம் சிதைகின்ற வகையில் சில வார்த்தைப் பிரயோகங்கள் அமைந்ததற்காக நான் வருத்தப்படுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆணிவேரை அசைக்கக் கூடாது&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அவையை இந்திய அரசின் ஆதிக்கத்திலே உள்ள ஒரு நிர்வாகத்தின் அடிப்படையில் நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இங்கு நாம் எழுப்புகின்ற கருத்துக்கள், நிறைவேற்றுகின்ற தீர்மானங்கள், அந்த ஆணிவேரை அசைத்துவிடக் கூடாது. &lt;br /&gt;&lt;br /&gt;இங்கே கண்ணப்பன், சுதர்சனத்தின் கருத்துக்கு மாறுபட்ட கருத்து சொல்ல எழுந்து உணர்ச்சி வேகத்தில், இலங்கையிலே உள்ள தமிழர்களைக் கொல்வதற்கு இந்திய அரசு சாதகமாக இருக்கிறது அல்லது தூண்டுகோலாக இருக்கிறது என்பது போன்ற கருத்து அமைந்த வாசகத்தை அவர் சொன்னதை நான் அவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் துடிப்பாகப் பேசக் கூடியவர். தீவிரமாகச் சிந்திக்கக் கூடியவர். நான் மறுக்கவில்லை. ஆனால், இப்படி கடுப்பாகப் பேசக் கூடியவர் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. அந்த வகையிலே அவர் சொன்ன அந்த வார்த்தைகளை அவைக் குறிப்பிலே இருந்து நீக்குவதற்கு நான் பரிந்துரை செய்கிறேன். (கண்ணப்பன் சொன்ன சில வாசகங்களை அவைக் குறிப்பிலிருந்து சபாநாயகர் ஆவுடையப்பன் நீக்கினார்).&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே குழுவாக இருந்தால்&lt;br /&gt;&lt;br /&gt;இதிலே ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதிலே எந்தவிதமான கருத்து மாறுபாடும் இந்த அரசுக்கு இல்லை. ஆளுங்கட்சிக்கும் எனக்கும் இல்லை. ஏனென்றால், இலங்கைப் பிரச்சினை ஆரம்பமான அந்தக் காலத்திலே இருந்து, தந்தை செல்வா அவர்களுடைய காலத்திலேயிருந்து நடைபெறுகின்ற போராட்டம், இந்த உரிமைப் போராட்டம். செல்வா மறைந்த பிறகு அவருடைய வழித் தோன்றல்களாக பல பேர் இந்தப் போராட்டத்திலே ஈடுபட்டு அறவழியிலே அவர்கள் நடத்திய கிளர்ச்சிகளெல்லாம் பயனற்றுப் போய்விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு, விடுதலை பெற்றே தீரவேண்டும் என்று கிளம்பி அவர்கள் போராளிகளாக மாறினார்கள். போராளிகளாக மாறியவர்கள் ஒரு குழுவாக இருந்து அந்தப் போராட்டத்தை நடத்தியிருந்தால் இந்நேரம் அவர்கள் நேபாளத்தைப் போல வெற்றியினை ஈட்டியிருக்க முடியும். வேறு பல நாடுகளிலே நடந்த விடுதலைக் கிளர்ச்சிக்கு கிடைத்த வெற்றியைப் போல வெற்றி பெற்றிருக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;குழுவுக்குள் ஏற்பட்ட மோதல்&lt;br /&gt;&lt;br /&gt;போராளிகளுடைய முக்கிய குறிக்கோளே, போராளிகளுக்குள் போராடுவது என்ற இந்த போராளிகளுக்குள்ளே நடந்த போராட்டம் தான் இன்றைக்கு நாம் இந்த அவையிலே அவர்களுக்காக பரிந்துரை செய்து பேச வேண்டிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால்தான், இடைக்காலத்திலே நாம் விடுதலைப் போராளிகளுக்குச் சொன்ன அறிவுரை, `சகோதர யுத்தத்தை நிறுத்துங்கள்' என்பதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் போராளிக் குழு, ஒரே போராளிக் குழுவாக இருந்து ஒரே ஒற்றுமையோடு இலங்கையிலே நடைபெறுகின்ற அக்கிரமங்களைக் கண்டிக்க வேண்டும்; தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற வேண்டும் என்ற எண்ணத்திலே செயல்பட்டதா என்றால் எதுவும் இல்லை. ஒரு குழுவை இன்னொரு குழு வீழ்த்த வேண்டும்; ஒரு குழுவை இன்னொரு குழு மாய்க்க வேண்டும்; ஒரு குழுவுக்கு செல்வாக்கு இல்லாமல் செய்ய வேண்டும் என்ற முறையிலே தான் ஒவ்வொரு குழுவின் தலைவர்களும் அங்கே கொல்லப்பட்டார்கள், வெட்டப்பட்டார்கள், சுடப்பட்டார்கள் என்பதையெல்லாம் மறந்து விடக் கூடாது. அமிர்தலிங்கம் கொல்லப்பட வேண்டியவரா? ம.பொ.சிவஞானம் போல விளங்கியவர். அவர் ஏன் கொல்லப்பட்டார்?&lt;br /&gt;&lt;br /&gt;பலவீனப்படுத்திய ஒற்றுமையின்மை&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பல போராளிகள் அவர்களுக்குள்ளே அடித்துக் கொண்டு, சுட்டுக் கொண்டு செத்திருக்கிறார்கள். இவைகளெல்லாம்தான் இந்தப் போராட்டத்தை பலகீனப்படுத்தியது. இத்தகைய விடுதலைப் போராட்டம் உலகத்திலே எல்லா இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கும்போது இந்த சின்னஞ்சிறு நாடு இலங்கையிலே வலுவிழந்ததற்குக் காரணம் நமக்குள்ளே ஒற்றுமை இல்லாதது தான். நாம் வலுவிழந்து போய் பகைவர்களுக்கு இடம் கொடுத்து விட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள ராணுவம் இன்றைக்கு நம்மை ஏறி மேய்கிறது என்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இருந்தாலும் அதற்காக, நம்முடைய வீட்டுப் பிள்ளை கிணற்றோரத்திற்கு சென்று அதிலே விழுந்து விடுகின்ற நிலை வரும் போது அதைத் தாங்கிப் பிடிக்கின்ற அந்தத் தாய் உள்ளமாக, தமிழர்களுடைய உள்ளமாக, தமிழ்நாட்டிலே வாழ்கின்றவர்களின் உள்ளமாக இருக்கின்ற காரணத்தினால்தான், தொப்புள்கொடி உறவு உள்ளவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இங்கே ஒரு தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டுமென்று ஜி.கே.மணி எண்ணினார். நானும் அதை ஆதரிக்கிறேன். அதே நிலையிலே கண்ணப்பன் ஆதரித்தால் நானும் அவ்வாறே ஆதரிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய அரசை குறை கூறாதீர்&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இதிலே இந்திய அரசை குறை கூறிப் பயனில்லை. அவர்கள் ஏற்கனவே பெரும் இழப்புக்கு ஆளானவர்கள். அவர்களுடைய பெருந்தலைவர் ராஜீவ்காந்தியை இந்தக் காரணத்திற்காக இழந்தவர்கள். அவர்களை நாம் பழி சொல்லியோ குறை கூறியோ பயனில்லை. இருந்தாலும், அந்தக் குடும்பத்திலே இன்னமும் அந்த மனித நேயம் உண்டு என்பதை சமீப காலத்து செய்திகளெல்லாம் நமக்கு விளக்குகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அது வேலூர் சிறைச்சாலை செய்தியாக இருந்தாலும் சரி. அல்லது அன்றைக்கு சோனியாகாந்தி மன்னிப்பு கொடுத்த செய்தியாக இருந்தாலும் சரி. அந்த அம்மையார் தூக்கிலிடப்பட்டால் அவரின் குழந்தை என்ன கதி ஆவது என்று சிந்தித்தார் என்ற செய்திகளை எல்லாம் பார்க்கும் போது அவர்களிடத்திலே மனித நேயம் குடி கொண்டிருப்பதைக் காண்கிறோம். அந்த மனித நேயத்தின் அடிப்படையில், நாம் நிறைவேற்றுகின்ற தீர்மானத்தை எண்ணிப் பார்ப்பார்கள். அங்கே வாழ்கின்ற தமிழர்களுடைய உயிர்களுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையோடு இந்தத் தீர்மானத்தை முன்மொழிகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தீர்மானம்&lt;br /&gt;&lt;br /&gt;``இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அங்கே மோதலில் ஈடுபட்டு வரும் இரு பிரிவினர் இடையேயும் பேச்சுவார்த்தைகளுக்கு இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இலங்கையில் அமைதியை ஏற்படுத்த, முறையானதொரு அரசியல் தீர்வு எட்டப்படுவதற்காக பயனுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்'' என வலியுறுத்துகின்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன். நீங்கள் அதை ஆதரித்துத் தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு அவர் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏகமனதாக நிறைவேற்றம்&lt;br /&gt;&lt;br /&gt;அதைத் தொடர்ந்து சுதர்சனம், ஜி.கே.மணி, கண்ணப்பன் ஆகியோர் இந்த தீர்மானத்தை முழுமனதோடு ஆதரிப்பதாக தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் கருணாநிதி கொண்டு வந்த அந்த தீர்மானம் ஏகமனதாக சட்டசபையில் நிறைவேறியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: தினத்தந்தி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5815740-629818127039588959?l=yemkaykumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yemkaykumar.blogspot.com/feeds/629818127039588959/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5815740&amp;postID=629818127039588959' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/629818127039588959'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/629818127039588959'/><link rel='alternate' type='text/html' href='http://yemkaykumar.blogspot.com/2008/04/blog-post.html' title='நெடு நாட்களுக்குப்பிறகு எனக்குப்பிடித்த கலைஞர்!'/><author><name>எம்.கே.குமார்</name><uri>http://www.blogger.com/profile/01900603075164396123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TRgMGEJFiKI/AAAAAAAAAJ4/NLOGXX9OHEA/S220/DSC03182.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5815740.post-3401183214232088404</id><published>2007-12-21T19:32:00.000+08:00</published><updated>2007-12-21T19:43:05.490+08:00</updated><title type='text'>சிங்கப்பூரில் தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் விழா - பதில்!</title><content type='html'>பதில் வந்துவிட்டது! தன்னார்வத்தொண்டு நிறுவனம்(மாய் இருந்தால்) அதன் உள்நாட்டு  பதிவு குறித்தும்  சேகரிக்கப்படும்  நிதி  குறித்தும்  அனுமதிச்சீட்டு பெறாமல், நிதி சேகரிப்பு எதிலும் ஈடுபட்டால் புகார் செய்யலாமாம். பார்க்க பதில்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://smg.photobucket.com/albums/v713/mkkumar/?action=view&amp;amp;current=newsreply.jpg" target="_blank"&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v713/mkkumar/newsreply.jpg" border="0" alt="Photobucket" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நன்றி "டுடே" (Today)&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை நடந்த எல்லா விழாவும் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் கலைவிழா என்ற பெயரிலேதான் நடந்தன. கட்டிடம்  கட்டுவதற்கு என்று சரத்குமார் அவ்வப்போது சொன்னதைத் தவிர வேறு எங்கும் அவ்வாறு எழுத்துப்பூர்வமாய் குறிப்பிடப்படவில்லை.  அதனால் இவ்விழா நடக்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5815740-3401183214232088404?l=yemkaykumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yemkaykumar.blogspot.com/feeds/3401183214232088404/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5815740&amp;postID=3401183214232088404' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/3401183214232088404'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/3401183214232088404'/><link rel='alternate' type='text/html' href='http://yemkaykumar.blogspot.com/2007/12/blog-post_21.html' title='சிங்கப்பூரில் தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் விழா - பதில்!'/><author><name>எம்.கே.குமார்</name><uri>http://www.blogger.com/profile/01900603075164396123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TRgMGEJFiKI/AAAAAAAAAJ4/NLOGXX9OHEA/S220/DSC03182.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5815740.post-2724742239049599843</id><published>2007-12-18T19:36:00.000+08:00</published><updated>2007-12-18T19:49:26.124+08:00</updated><title type='text'>தென்னிந்திய நடிகர் சங்கம் சிங்கப்பூரில் நடத்தும் நிகழ்ச்சி - நடக்குமா?</title><content type='html'>"டுடே" நாளிதழில் வரும் வாசகக்கடிதங்கள்/சந்தேகங்கள் யாவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து / துறையிடமிருந்து உடனுக்குடன் பதில் பெறும். அவ்வகையில் இன்றைய "டுடே" யில் ஒரு வாசகர், வெளிநாட்டு கட்டிட நிதிக்காக சிங்கப்பூரில் நிகழ்ச்சிகள் நடத்தலாமா? என்பது பற்றி ஒரு மடலை எழுதியிருக்கிறார். பார்க்க மடல்:&lt;br /&gt;&lt;a href="http://photobucket.com/" target="_blank"&gt;&lt;img alt="Photo Sharing and Video Hosting at Photobucket" src="http://img.photobucket.com/albums/v713/mkkumar/news.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நன்றி: "டுடே"&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குத் தெரிந்தவரை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் திரட்டும் நிதியைத்தவிர மற்ற நிதிக்காக நிகழ்ச்சி ஏதும் நடத்தக்கூடாது. காவல்துறை என்ன சொல்கிறது, பார்ப்போம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5815740-2724742239049599843?l=yemkaykumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yemkaykumar.blogspot.com/feeds/2724742239049599843/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5815740&amp;postID=2724742239049599843' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/2724742239049599843'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/2724742239049599843'/><link rel='alternate' type='text/html' href='http://yemkaykumar.blogspot.com/2007/12/blog-post_18.html' title='தென்னிந்திய நடிகர் சங்கம் சிங்கப்பூரில் நடத்தும் நிகழ்ச்சி - நடக்குமா?'/><author><name>எம்.கே.குமார்</name><uri>http://www.blogger.com/profile/01900603075164396123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TRgMGEJFiKI/AAAAAAAAAJ4/NLOGXX9OHEA/S220/DSC03182.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5815740.post-5125385812140366605</id><published>2007-12-16T17:28:00.000+08:00</published><updated>2007-12-16T17:30:52.734+08:00</updated><title type='text'>காகிதமலர்கள் நாவல் - மூன்றாவது கோணம்</title><content type='html'>இந்நாவலைப் படித்து முடித்த பின் எனக்குத்தெரிந்த சிலபேர் சொன்னது:&lt;br /&gt;&lt;br /&gt;பாக்கியம் மாமி:&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் இந்த மிஸஸ் பசுபதிக்கு இவ்வளவு ஆகாதாக்கும். பத்மினி இந்தக்காலத்தவ, அவ ஆடுறான்னு இவாளும் ஆடலாமா? பத்மினிக்கு போட்டியா வாறா, மனசாலே நாமளும் அழகிதான்னும் நமக்கும் நாலாம்பளையை பாக்கவைக்கிற, கவனிக்கவைக்கிற சொரூபங்கள் இருக்குறதா மனசாலே நெனச்சுண்டு இப்படிக் காலம் போகுற போக்குல சுத்துனா கலிகாலம் ஆகாம என்னதான் ஆகும்? பத்துப்பேரு வந்தாலும் ஹிஹின்னு பேசிச் சமாளிச்சுண்டு போற இக்காலத்து பொண்ணுக்குப் போட்டியாய் பத்து ஆம்பளைங்களை இவளும் சமாளிக்க இறங்குனா, முடியுமா? அந்தளவுக்கு அவாளுக்கு மனதைர்யம் இருக்கா சொல்லுங்கோ? ஒரு ஆம்பிளை ரெண்டு ஆம்பிளை சரி; இத்தனை ஆம்பிளையைப் பாத்தபின்னும் இத்தனை வயசு ஆனபின்னும் மனசுல ஒரு பக்குவம் வராம இருபத்தஞ்சாட்டம் மந்திரியைப்பாத்ததும் மோகவெறி வருமோ சொல்லுங்கோ?&lt;br /&gt;&lt;br /&gt;பாருங்கன்னா, பதினாறு வயசுப்பொண்ணாட்டம், இன்ஃபேச்சுவேஷன்ல மாட்டிண்டவாளாட்டம், மந்திரி ஏமாத்திட்டாருன்னு மண்டையப் போட்டுக் குழப்பிண்டு படக்குன்னு போயி மோதிண்டா! பாவம், இந்த ஆதவன்அம்பியும் என்னதான் பண்ணுவான்? இப்படிக்குழப்பிண்ட, வாழ்க்கையைப் பொசுக்கிண்ட பொண் ஜென்மத்தையெல்லாம் படக்குன்னு கொன்னுடவேண்டும் இல்லாட்டி மனநலகாப்பகத்தை முன்புறம் காட்டி கதையை முடிச்சுக்கவேண்டும். வேறு என்னதான் எங்க பொறப்புக்கெல்லாம்? அந்த சண்டாளன் பசுபதி ஆரம்பிச்சு வைச்சான். இந்த ஆதவன் அம்பி முடிச்சுவைச்சான். ம்க்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;பத்மினியப் பாத்து பொறாமப்பட்டு பழமைக்குள்ளேயும் புதுமைக்குள்ளேயும் மாட்டிண்டு அவ படுறத விடுங்கன்னா, அவாளும் பொம்பளதானே, தாய்தானேன்னா, விசுவம் தன்மேல பாசம் வைக்கலேன்னு பொலம்பித்திரியுறா, செல்லப்பா மேல இருக்கும் பாசத்தை வெளிப்படுத்த வழியில்லாமயும் விட்டேற்றியா வளந்துட்ட பத்ரி மேல பாசத்தை எப்படிக் காட்டுறதுன்னா தெரியாமயும் தடுமாறுறா, தேவையின்னா வாறவன்னா இருக்கான் புருஷன் (யாருடைய தேவைக்கும்!), நாடகத்துல நடிக்கிறதுல ஒரு நிம்மதி, அங்கேயும் ஆம்பிளைங்க தானெ, அவாளும் எல்லாரும் மாதிரிதானே! அட, புருஷன் மட்டுமே பாக்கணுன்னாதான் எந்தப்பொண்ணும் வீட்டுக்குள்ளே அழகா மேக்கப் போட்டுட்டு உக்காந்துடலாமேன்னா, வெளியில வாறபோது எதுக்காக அழகா வாறோம்? நாலு பேரோட வெளிப்படையான மதிப்பீட்டுக்கு அர்த்தம் சொல்லத்தானேன்னா. அந்த நாலு பேரோட மதிப்பீடும் புதுமையோடு நம்மைப் பொருத்திப்பாத்தா எப்படித்தான் நம்ம தரத்தை ஏத்திக்கிறது சொல்லுங்கன்னா. மிஸஸ் பசுபதி, இந்த மதிப்பீட்டை வேற மாதிரி நெனச்சிண்டு செயலாக்கிண்டா, பாவம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விசுவத்தின் அப்பா:&lt;br /&gt;&lt;br /&gt;ஆக்சுவல்லி.... உங்களையும் என்னையும் போல பசுபதியும் நல்லவர்தான் சார். என்ன, சான்ஸ் கெடைக்காதவரைக்கும் நாம நல்லவனா இருக்கோம். சான்ஸ் கெடச்சிதுன்னா நாமளும் சறுக்கிடுறோம். எங்காவது இருக்குற ஒண்ணுரெண்டைப் பாக்காதீங்க. நம்ம ஐயரை எடுத்துக்குங்க, மனுஷனுடைய போக்கு சுத்தமா பசுபதிக்குப் பிடிக்காது, தன்னளவில அவர் ரொம்ப நல்லவர்ன்னு நெனச்சிண்டு வாழ்றார், ஆனா எதுவரைக்கும் வாழ்றார்? சான்ஸ் கெடைக்கிறவரைக்கும்.! சத்தியமாச் சொல்லுறேன் சார், பசுபதிகூடவே அவரும் ஸ்டெனோவா சேர்ந்திருந்தா, அய்யரு பசுபதியை விட மோசமா இருந்திருப்பாருன்னு நான் நெனைக்கிறேன். இந்நேரம் மந்திரி லிஸ்ட்ல கூட அவரு பேரு இருந்திருக்குமோ என்னவோ!&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையோட கடைசிவரைக்கும் எதுதான் சார் நம்மள ஓட்டிட்டுப்போவுது? புரோகிரஸ், வளர்ச்சி, இன்பமயமான வாழ்க்கை, உயர்ந்த பதவி, நல்ல குடும்பம் இப்படி எதுன்னு எடுத்துண்டாலும் பணம் முக்கியம் சார். நம்மள மாதிரி ஒரு பிற்போக்கான சமூகத்துல இருந்துகிட்டு முற்போக்கான வாழ்க்கைக்கு வரணுமுன்னா நம்ம மனைவிங்களையும் அதுக்கு கொண்டுவரணுமுன்னு அவர் மனைவி மனைவி பாக்கியத்தைக் கொண்டுவந்தார், பாருங்க, சீறுகெட்ட சமுதாயத்துல ஒரு எஸ்.கே, ஒரு மந்திரின்னு எல்லாரும் ஒரு அங்கம் சார். ஸ்டெனோவா அவர் வேலையை அவங்க பாத்துருக்கலாம்; பாராட்டியிருக்கலாம், கூட்டத்துக்கு வந்த அவரு பொண்டாட்டிய பாத்து அவரைப் பாராட்டினா பசுபதி என்ன சார் செய்யமுடியும்? பாக்கியமும் பளார்ன்னு ரெண்டு அறை அறைஞ்சி வாழ்க்கையோட ஸ்ருதி எதுன்னு பசுபதிக்குக் காட்டியிருக்கலாம். அவ என்ன பண்ணினா, வாழ்க்கையோட அடிப்படை மூலக்கூறுகள் பெண்ணழகோட இணைஞ்சதுன்னு முடிவு பண்ணிட்டா, எப்படி பணம் பதவியோட அது இணைஞ்சதுன்னு பசுபதி முடிவு பண்ணினமாதிரி!&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க சொல்லுங்க சார், இங்க உங்க முன்னாடி உக்காந்திருக்க எத்தனை பேரை உங்களுக்குப்பிடிக்கிது? அதோ அவரைப் பிடிக்குமா உங்களுக்கு? எது சார் அதைத் தீர்மானிக்கிது? அந்தாளு கருப்புச்சட்டை போட்டுவந்ததாலே பிடிக்காதுப் போயிருக்கலாம், அட ஒண்ணும் வேண்டாம். நீங்க பாக்கும்போது ஒரு இஞ்ச் விரியிற சிரிப்புக்குப்பதிலா அரை இஞ்ச் விரிஞ்சதாலே 'மூடி'ன்னு அவரை உங்களுக்குப் பிடிக்காம போகலாம். ஆனா ஒண்ணு சார், ஆதவன் சொன்னதுமாதிரி, ஒரு மாநிலத்தோட, மக்களோட பிரச்சனைக்குத்தீர்வு ஒரு ஸ்டேனோவால மாறுது பாருங்க. இதுதான் சார் வாழ்க்கை! அந்த ஸ்டேனோக்கள் நல்லவரா இருந்தா போதும், இந்தியா மட்டுமில்லை எந்த நாடும் முன்னுக்கு வந்துடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விசுவத்தின் மனைவி:&lt;br /&gt;&lt;br /&gt;யு பெலீவ் ஆர் வோண்ட் பெலீவ் ஐ டோண்ட் நோ, ஆல் மென் ஆர் ஸ்டுபிட்; அசடுங்க! நிஜமாச் சொல்லுறேன். அதிலேயும் பத்மினியின் கணவர்...விசுவம்! அய்யோ..! அவர்கூடல்லாம் வாழவேண்டியிருக்கேனு ரொம்ப நாள் அவ நொந்திருப்பாள்ன்னு நெனைக்கிறேன்! ஆனா சில நேரங்கள்லெ பாருங்க, இந்தமாதிரி அசடுங்களாலெ சில நன்மைகள் இருக்கும். நமக்கு வேண்டியதை நாம ஈஸியா அடஞ்சிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;யு மைட் ஹேவ் நோட்டீஸ்டு, பத்மினியும் விசுவமும் காரசாரமா விவாதம் பண்னிண்டு இருப்பா ஒரு கட்டத்துல, எந்த ஹஸ்பெண்ட் - ஒய்ப்ப்புக்கும் இந்த ஆர்க்யூமெண்ட் வந்தப்பறம் சேர்ந்து படுக்குறது பேசுறது ஏன் வாழறது கூட கஷ்டமாகலாம், ஆனா அவங்க சேர்ந்துக்குறாங்க, ஏன்? ரெண்டு பேருக்கும் தெரியுது, இந்த அசடைவிட்டா எந்த அசடை நாம புடிக்கிறதுன்னு அவ யோசிக்கிறா! இப்போது இருக்குற அரைகுறை நிம்மதியும் போகனுமான்னு அவன் நெனைக்கிறான். அப்புறம் எப்படி பிரிவாங்க. என்ன, அவங்களுக்குள்லே இருக்குற அந்நியோன்யமும் அப்பப்போ மாறி மாறி வந்துபோகும்; அவ்வள்வுதான்! அதானே மிஸ்டர் இந்த இடியட் குடும்ப வாழ்க்கைக்கி ஆதாரம்?! அதை வெச்சித்தானே ஏகப்பட்ட திருமண வாழ்க்கைங்க ஓடிட்டு இருக்கு? கரெக்ட் ஒர் னோட்?&lt;br /&gt;&lt;br /&gt;விசுவத்தோட அக்கப்போர் தாங்க முடியலேன்னு பாத்தா, அவங்க அம்மா பாக்கியம்மாமி அய்யோ..! ஏந்தான் இந்த கிழவிக்கு இப்படிப்புத்தி போகுதோ தெரியலை! ஒரு ஆம்பளையோட பார்வையை தன்னை நோக்கி அடைய வைக்கிறதுதுதான் பொண்ணோட அழகுக்கும் / அலங்காரத்திற்கும் வெற்றின்னு நெனச்சிக்கலாம். பத்மினிகூட பலசமயங்கள்லெ பலபார்ட்டிகள்லெ அந்தமாதிரி நடந்திருப்பா, அந்த மெடிக்கல் ரெப்புகூட பேசினது மாதிரி! ஆனா இந்தமாமியார் இருக்காங்களெ அவங்க, பத்மினிகூட போட்டிபோடுறதா நெனச்சிண்டு அந்த ஆம்பளையை தன்னை அடைய வைக்கிறதுதான் தன்னோட வெற்றின்னு நெனச்சிட்டாளே பாவம்! எல்லா ஆம்பளைங்களும் கோகுலகண்ணனா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;பாக்கவைக்கிறது ரிசல்டா இருக்கிறதை மாத்தி படுக்கைக்கு வாற வைக்கிறதை அவங்க வெற்றியின்னு நெனச்சி ஏமாந்திட்டாங்க, அதுக்கு அனுசரனையா எரியுற தீபத்துக்கு எண்ணெய் ஊத்திட்டார் நம்ம பசுபதி அங்கிள்! நல்லவேளை, பத்மினியும் அவர்கூட ஏதாவது மந்திரி மீட்டிங்குப்போகலை, போயிருந்தால் அவ பேசுற தத்துவமெல்லாம் இப்போ எடுபட்டிருக்குமோ என்னவோ?!&lt;br /&gt;&lt;br /&gt;சமத்துன்னா, காகிதமலர்கள்லெ எனக்குத்தெரிஞ்சு யாரும் இல்லே. படிக்கிறவங்கள்ளெ(?!) வேணுன்னா யாராச்சும் இருக்கலாம். பத்ரி ஒரு யூஸ்லெஸ். லைஃப் ஜாலியா போய்க்கிட்டு இருக்கும்போது மாணவர் அணி, கட்சி, போராட்டம்! கடைசில எல்லாரையும் விட பெரிய போக்கிரியா அரசியல்ல வந்து நிக்கலாம் அவன். அல்லது வெட்டிக்கொல்லப்படலாம்! யார் கண்டது?&lt;br /&gt;&lt;br /&gt;செல்லப்பா...chikky fellow. ஒரு தைர்யம் ம்ஹூம், மண்ணு! வெறுங்கையாலே உலகத்தைப்பிடிக்க முடியுமா? யாராவது ஒரு பொண்ணு வந்து மாரு காட்டி மயக்கி கல்யாணம் பண்ணவெச்சி முதுகுல ரெண்டு போட்ட புத்தி வரும்..இவன மாதிரி கேசுங்கள்லாம் இப்படித்தான் மாறும். இல்லாட்டி வானத்தைப் பிடிக்கிறேன், பூனையைப்பிடிக்கிறேன்னுட்டு அலையும். இவனோட அம்மாவா நான் இருந்தா இந்நேரம் படக்குன்னு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வெச்சி சுகமான சுமையை போட்டு மடக்கி வெச்சிருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மெடிக்கல் ரெப் - நான் சென்ஸ். ரெண்டு மூணு காஸ்ட்லி ஹோட்டலுக்குக் கூட்டிட்டுப்போயி பில்ல பல ஆயிரத்துக்கு எகிறவிட்டா அடுத்த தடவை அப்பீட்டாயிடுவான். கொஞ்சம் வெவரம்ன்னா, கணேசன். யா.... ஐ திங் பத்மினி வில் லைக் தேட் ஃபெல்லோ.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செல்லப்பாவின் அண்ணன்:&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விசுவத்தைப்பத்தி கொஞ்சம் பேசலாம் இப்போ. இவனைபாக்கும்போது சார், ரெண்டு விஷயம் தான் ஞாபகத்து வருது, ஒண்ணு 'ஜானி' படத்து ரஜினி வசனம், வாழ்க்கையில ஒன்னைவிட ஒன்னு எப்பவும் பெட்டராத்தான் தெரியும். ரெண்டு, கமல் பாடும் பாட்டு வாழ்வே மாயம்..இந்த வாழ்வே மாயம்!&lt;br /&gt;&lt;br /&gt;பத்மினிய முதன்முதலா பாத்தபோது வந்த அந்த ஒரு நிமிடநெகிழ்ச்சி அவன் நண்பன் உண்ணி 'ஒய்ஃபைப்' பாக்கும்போது வாறதாம். ஹம்பக். அந்த நிமிடம் ஏன் தப்பானது? இந்த நிமிடம் எப்படி சரியாகும், சொல்லத்தெரியுமா இவனுக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;புவியின் அறிவியலை முழுக்க முழுக்க புரிந்துகொண்ட இவன் பெண்களையும் அப்படிப்புரிந்துகொள்ள முயல்கிறானா? பெண்ணையும் பூமியையும் ஒப்பிடுவது சரி. பருவகால மாற்றத்தை புரிந்துகொள்ளும் வரையறுக்க முயலும் இவனுக்கு பத்மினியின் மனதில் என்ன இருக்கிறது என்பதைச் சொல்ல முடியுமா? பத்மினி மட்டுமல்ல; எந்தப்பெண்ணையும் அப்படிச் சொல்லமுடியுமா? பத்மினி, மெடிக்கல் ரெப்பிடம் அந்நியோன்யமாய் பேசினபிறகே ஏதோ கொஞ்சம் வாழ்க்கைப்பக்கம் வருகிறான். பத்மினிக்கு இவனைப்பற்றித் தெளிவாகத் தெரிந்திருக்கிறது, இந்தமாதிரி அசடுகளை இப்படித்தான் வழிக்கு வரவைக்கவேண்டும் என்று. அதான் தனிவீடு! ம்..தூக்கு தண்ணீரை! கழுவு பாத்திரத்தை!&lt;br /&gt;&lt;br /&gt;கிரீன்ஹவுஸ் எஃபெக்டால், மரம் வெட்டுதலால், குளங்களைப் பாழ்படுத்துவதால், பிளாஸ்டிக்குகளை அதிகமாய்ப் பயன்படுத்தவதால், ஆழமாய்த்தோண்டி எண்ணெயையும் தண்ணீரையும் நிலக்கரியையும் எடுப்பதால் புவிக்கு வரப்போகும் ஆபத்தை பத்மினி போன்ற பெண்ணுடன் அல்லது ஒரு பெண்ணுடன்(?!) வாழ முனைந்தவன் ஆராய முயலலாமா? இல்லை கீழ்த்தர சுயலாபங்கள் நிறைந்த அரசியல் விளையாடும் இந்தியப்பதவி ஒன்றில் நேர்மையை எதிர்பார்க்கலாமா? இவனது தாத்தா திரும்பி எழுந்து வந்தால் ஏதாவது நடக்கும். ம்க்கூம்!&lt;br /&gt; &lt;br /&gt;பத்ரியின் நடு அண்ணன்:&lt;br /&gt;&lt;br /&gt;இந்த செல்லப்பா இருக்கானே சார், கொஞ்சம் நல்லவன்சார். என்ன..எந்த நேரம் பாத்தாலும் ஒரே ஃபீலீங்க்ஸ். செக்ஸூவல் ஃபீலிங்க்ஸ்!  இருக்கட்டுமே சார், ஃபீலீங்க்ஸ் இல்லாம யாருதான் இருக்கா? இவனையெல்லாம் கவிதை எழுத விடணும் சார். என்ன சொல்றீங்க. இந்த மாதிரி அணிலோடவும் புல்லோடவும் மரத்தோடவும் ரசனையா கெடக்குற ஒருத்தன் என்னடா பொண்னோட ஒடம்பு மேல படுற அந்த சொகத்துக்கே ஏகப்பட்ட பஸ் ஏறி அலையுறான்னு நாம நெனைக்கக்கூடாது சார். அது ஒரு ரசனை! அளவுக்கு மீறிய ரசனை! அந்த ரசனையின் வேகம்; இன்னும் அதிகமானா வெறி!&lt;br /&gt;&lt;br /&gt;படிப்பை விட்டுடா என் செல்லம்ன்னு சொல்லி (மனுஷன் எவ்வளவு சந்தோசப்படுவான்!), நல்ல ஒரு அழகியாப் பாத்து இவனுக்கு கல்யாணம் பண்ணிவெச்சிட்டீங்கன்னு வெச்சீங்க, நாலு வருஷத்து ரெண்டு கவிதைப்புத்தகம் அல்லது மூணு புள்ளையப்பெத்துடுவான். கூட, வாற பொண்ணும் நம்ம தாரா மாதிரி வெவெரமா இருந்ததுன்னு வெச்சுக்குங்க, ஏதாவது வேலயைப்புடிச்சு முன்னேறிடுவான் சார். செக்ஸூவல் ஃபீலிங்க்ஸ் அதிகமானா தப்பா நெனக்கக்கூடாது சார். அததுக்கு நாட்ல மனுஷன் மாத்திரயெல்லாம் வாங்கிச்சாப்பாடுறான் நாம என்னடான்னா? சார், செல்லப்பாவோட தாத்தா இருந்தாருன்னா கண்டிப்பா இவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணிவெச்சிருப்பாரு. சீக்கிரமா கல்யாணம் பண்ணுறதும் நல்லதுதானே சார். புத்தகத்தைப் படிச்சு வாழ்க்கையைப் புரிஞ்சுக்குறது ஒரு வகை! பொண்ணைப்படிச்சு வாழ்வைப் புரிஞ்சுக்கிறது (புரிஞ்சும் என்ன புண்ணியம்!) இன்னொரு வகை! செல்லப்பாவுக்கு ரெண்டாவது நல்லா ஒர்க்அவுட் ஆகும் சார்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா இடத்திலேயும் ஏதாவது அன்பையோ அரவணைப்பையோ எதிர்பாக்குறோம், அது இல்லாட்டி ஏமாத்தமா வாறது, எல்லாரும் ஏமாத்த வந்தவங்கன்னு தோணுறது. கொஞ்சம் பக்குவப்பட்டா போதும். அனுசரனையா பேசுறார்ன்னு உக்காந்து பேசுனா காலுக்கெடையில் கையை விட்டுத் தடவுறாரு அந்த குண்டு மனுஷன். இந்த ஸ்ரீதர் இன்னொரு செல்லப்பா. என்னன்னா கொஞ்சம் வெவரமான செல்லப்பா! எல்லோருக்கும் ஏதாவது தேவை. அதை நம்ம தேவையோட ஒத்தி தேடிக்கிறாங்க! நாம அதை அடையமுடியாம ஏமாந்து நிக்கிறோம், அவங்களெல்லாம் அதை எடுத்துட்டுபோனப் பின்னால!&lt;br /&gt;&lt;br /&gt;செல்லப்பாவின் தம்பி:&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ பத்ரியைப் பத்தி பேசுவோம் மிஸ்டர். 'அம்மா ஒரு இடியட் - அப்பா ஒரு ஜெண்டில்மேன். அண்ணன் ஒருத்தன் படிச்ச கிறுக்கு இன்னொருத்தன் படிக்காத கிறுக்கு. யாருக்காவது வாழ்க்கையோட நிஜம் புரியுதா? அம்மா - நாடகம், பார்ட்டி! விசுவம் - புவியியல், பொண்டாட்டி பத்மினி, செல்லப்பா-செக்ஸ் படத்து தியேட்டர் இல்லை எக்ஸாம், அப்பா-பதவி அன் வேலை (அட்லீஸ்ட் ஹி இஸ் ஓகே!).&lt;br /&gt;ஒரு காலேஜ் இருக்கு, அங்க பிராப்ளம்ஸ் இருக்கு, ஒரு கட்சி தலையிடுது, மாணவர்களோட எதிர்காலம் தடுமாறுது! என்ன செய்யலாம் என்ன இதில சாதிக்கலாம்? யாருக்காவது அக்கறை! கணேசன் நல்லா பேசுறான். இவனையே பேச வெச்சுக்கலாம். கணேசன் சொன்னதுமாதிரி நாமளே தலைவராயிடவேண்டியதுதான். அப்பா இருப்பார் ஃபுல் சப்போர்ட்டுக்கு. ஆளுங்கட்சி மந்திரி வேற அப்பாவுக்கு குளோஸ்.'&lt;br /&gt;&lt;br /&gt;பாத்தீங்களா மிஸ்டர், பத்ரியும் மிஸ்டர் பசுபதி மாதிரி ஒருகட்டத்துல ஆயிடுவான்னு தோன்றது. அவன் அப்பாவெ ரொம்ப சார்ந்திருக்கான்; அப்பா அரசியலையும் அதன் சூழ்ச்சிச்சுழற்சியையும் சார்ந்திருக்கார்; அதே சூழ்ச்சிதான் பத்ரியையும் சூழ்ந்திருக்கு; இப்போ என்ன ஆகும்? இன்னொரு மிஸ்டர் பசுபதி இல்லாட்டி மரத்தில் மோதும் மிஸஸ் பசுபதி.&lt;br /&gt;&lt;br /&gt;காகிதமலர்கள் டைட்டில் பேசுகிறது:&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணே, எனக்கெதுக்குன்னே காகிதமலர்கள்ன்னு பேரு வெச்சிருக்காங்கெ? வாசம் இல்லாத மலர்கள்ன்னா? நாமளும் சிறந்து விளங்குற உயர்ந்த மனிதர்கள்ன்னு சில பேரு நெனைச்சிக்கிற மாதிரி இக்கதையில் வாற மலர்களும் நெனைக்கிதுனா? என்னவோ இருந்துட்டுப் போகட்டும்ண்ணே, மனிதர்கள்ன்னே தலைப்பு வெச்சிருக்கலாம். இந்தியாவில மட்டுமான்னே இப்படி, 12,756.3 கி.மீட்டரை விட்டமாகக்கொண்ட இந்தப் பூமியில எங்கேயும் இப்படித்தானேன்னெ மனுசங்கெ இருக்காய்ங்கெ.&lt;br /&gt;&lt;br /&gt;ஆளுக்கொரு தேவை, அதற்கொரு முகம், அது அசிங்கமானதுன்னா அதுக்கொரு முகமூடி! கண்டதுக்கெல்லாம் அலையிறாங்கண்ணே. காசுபணம், காமம், அங்கீகாரம், பீடம், அலங்காரம், பாசம், பந்தம் எல்லாத்துக்கும் பலமுகமா அலையிறாய்ங்கண்ணே! ஒருமுகத்தை மறைக்க இன்னொரு முகம்! அந்த முகத்தை மறைக்க அடுத்த இடத்தில் இன்னொரு முகம், அதுவும் சரிவரவில்லையென்றால் ஓரு அழகான முகமூடி. முகமூடின்னு பேரு வெச்சிருக்கலாமோ நாவலுக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;சிறந்த முகமூடிக்காரர்ன்னு யாருக்குண்ணே பட்டம் கொடுக்கலாம்? மிஸ்டர் பசுபதி? பாவம்ணே அவரு! பல இடங்கள்லே அவரு முகமூடி கிழிஞ்சி தொங்கி அசிங்கப்படுறார்ணே. மிஸஸ் பசுபதி? கொடுக்கலாம்ணே, ஆனாலும் அந்தம்மாவுக்கே தெரிஞ்சும் தெரியாம இருக்குண்ணே அது முகமூடின்னு. அநியாயமா செத்துப்போயிட்டதாலே 'போஸ்துமஸ் அவார்ட்' வேண்டாம் ண்ணே. பத்மினிக்கு..அருமையான சாய்ஸ்ண்ணே. ஆனா பத்மினிக்கி கொடுத்தா நாட்டுல இருக்க எல்லா பொண்ணுங்களுக்கும் கொடுக்கணுமுண்ணே, கட்டுபடியாகாது. விசுவம்...இல்லேண்ணெ, இந்தாளுக்கு முகமூடி போட்டாலும் வேலைக்கு ஆவாது. செல்லப்பா..சிறந்த ஏமாளின்னு வேணா பட்டம் கொடுக்கலாம்ணே! பத்ரி...சிறந்த அப்பாவின்னு பட்டம் கொடுக்கலாம்ணே!&lt;br /&gt;&lt;br /&gt;டென்ஷன் ஆகாதீங்கண்ணே, இன்னும் எத்தனை பேர் இருக்காங்க? செல்லப்பாவின் சைட்டு, ஸ்ரீதர், குண்டு ஆள், ஐயர், ஐயரோட எடுபிடி சிங், கிருஷ்ணன், எஸ்.கே, மந்திரி, சமையல்காரர் நரசிம்மையர், பத்திரிகையாசிரியர், தாத்தாவின் வேலையாள், ஜோசியர், பத்ரியின் சைட்டு, ஆங்..முக்கியமான ஆள் கணேசன்...அவனோட அம்மா, தங்கச்சி, அப்பா அந்த குடும்பம்....&lt;br /&gt;&lt;br /&gt;ம்ம். இந்தாங்கண்ணே...மூன்றாம் பரிசு.. ஸ்ரீதருக்கு கொடுக்கலாம்ண்ணே... படவா. பெரிய ஆளுண்ணே அவன். செல்லப்பாவிற்கு நல்ல முகமூடி போடும் அவன், செல்லப்பா அம்மாவுக்கொரு முகமூடி போடுறான் பாருங்க. அது அசத்தல்ண்ணே. அப்படியே அவன் மன்னிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் பரிசு..சில காட்சிகள்லெ வந்து போனாலும் பத்ரியோட கேர்ள்ஃபிரெண்டுக்குண்ணே! நடு ரோட்ல இறங்கி மவனேன்னு அவனை அல்லாட விட்டு படக்குன்னு அவனைப்பாத்து சிரிச்சி மயக்குறா பாருங்க...இது சூப்பருண்ணே!&lt;br /&gt;&lt;br /&gt;முதல்பரிசு ஐயருக்கு கொடுக்கலாம்ன்னா, அவருக்கு வயசாயிருச்சுண்ணே! அதனாலே வேற யாருக்குன்னு எப்பவோ முடிவு பண்ணியாச்சுண்ணே...வீட்டுக்குள்ளேயும் காலேஜ்லேயும் நண்பர்கள்ட்டேயும் என எல்லா இடத்திலும் முகமூடியோடு அலையும் திரு. கணேசன்! பெரிய ஆளுண்ணே அவரு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்பன்&lt;br /&gt;யெம்.கே.குமார்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: வாசகர் வட்டம், சிங்கப்பூர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5815740-5125385812140366605?l=yemkaykumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yemkaykumar.blogspot.com/feeds/5125385812140366605/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5815740&amp;postID=5125385812140366605' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/5125385812140366605'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5815740/posts/default/5125385812140366605'/><link rel='alternate' type='text/html' href='http://yemkaykumar.blogspot.com/2007/12/blog-post.html' title='காகிதமலர்கள் நாவல் - மூன்றாவது கோணம்'/><author><name>எம்.கே.குமார்</name><uri>http://www.blogger.com/profile/01900603075164396123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_VapWInghYcQ/TRgMGEJFiKI/AAAAAAAAAJ4/NLOGXX9OHEA/S220/DSC03182.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5815740.post-1180998129806411910</id><published>2007-11-16T21:45:00.000+08:00</published><updated>2007-11-16T21:48:55.906+08:00</updated><title type='text'>சிங்கப்பூரில் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் தொடக்க நிகழ்வுகள் பற்றிய கலந்துரையாடல்!</title><content type='html'>&lt;p&gt;சிங்கப்பூர், நவம்பர் 11,  சிங்கப்பூரின் சையத் ஆல்வி ரோட்டில் இருக்கும் ஆனந்தபவன் ரெஸ்டாரண்டின் மாடியில் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின்  தொடக்கநிகழ்வுகள் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. கூட்டத்தில் சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். கூட்டத்தை சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் செயலாளர் சுப.அருணாச்சலம் நெறிப்படுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேடையில் அமர்ந்திருந்த மூவர் - புகழ்பெற்ற வழக்கறிஞர் திரு.கலாமோகன், முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் நிறுவனர் திரு.முஸ்தபா மற்றும் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் திரு.ஆண்டியப்பன்.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் நிறுவனரை வரவேற்புரை வழங்க அழைத்தார் திரு. அருணாச்சலம். தனது நீண்ட நாள் கனவை மிகுந்த அக்கறையோடு சட்டரீதியாக வடிவமைத்துத் தந்த கலாமோகன் அவர்களுக்கும் பல்வேறு உதவிகளை வழங்கிய திரு.ஆண்டியப்பன் அவர்களுக்கும் நன்றி சொன்ன திரு.முஸ்தபா அவர்கள், இவைகளைப்பற்றி பேசுமாறு அவர்களை வேண்டிவிட்டு, இந்த அறக்கட்டளை சிறப்பாகச் செயல்பட அனைவரது ஆதரவையும் வேண்டி அமர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்குரைஞர் திரு. கலாமோகன், சிங்கப்பூரில் அரசு சாராது அறக்கட்டளைகள் இயங்குவதன் சிரமத்தைச் சொல்லி, அதுவும் தமிழிலேயே அதன் கொள்கைகளை வரையறுத்திருப்பதையும் சொன்னார். அடுத்துப் பேசிய திரு.ஆண்டியப்பன், முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் நோக்கங்களை விரிவாக எடுத்துரைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தஞ்சைப் பல்கலைக்கழக நூலகத்தில் சிங்கப்பூர்-மலேசிய நூல்களுக்காகவே அமையும் தனிப்பிரிவிற்கு நூல்களைப் பெற்றுக்கொள்ளும் பணி அடுத்து தொடங்கியது. முதல் நூலை கவிஞரேறு அமலதாசன் அவர்கள் வழங்க திரு.முஸ்தபா பெற்றுக்கொண்டார். அந்நூல் தமிழவேள் திரு.கோ.சாரங்கபாணி பற்றியதாக இருக்க திரு.முஸ்தபா அவர்களின் முகத்தில் திருப்தியான புன்னகை ஒன்று வெளிப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கலந்துரையாடலுக்கு முப்பது நிமிடம் என்றார்கள். திரு. முஸ்தபா அவர்களை அனைவரும் புகழ்ந்தனர். சிங்கப்பூர இளையர்களை தமிழ்பக்கம் இழுக்க ஏதாவது செய்யவேண்டும் என்றார் ஒருவர். இதுபற்றி விரிவான தளத்திற்கு திட்டங்கள் செயலாக்கம் நடந்துகொண்டிருப்பதகச் சொன்னார் திரு. முஸ்தபா. இதன் பொறுப்புகளை திரு.சிவசாமி அவர்கள் செய்வதாய் சொன்னார். நாளிதழ் வெளியிடும் யோசனையைச் சொன்னாரொருவர். காலாண்டிதழ் வெளியிடும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாய்ச் சொன்னார் திரு. முஸ்தபா.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;மனமும் பணமும் ஒருங்கே இருப்பதால் தமிழுக்கு மணம் கிடைப்பது உறுதி என்றார் ஒருவர். மறைந்த எழுத்தாளர் உதுமான் கனியின் கவிதை நூல்களை வெளியிட உதவி கேட்டார் அவர். உடனுக்குடன் அவைகளை ஆமோதித்து ஆவன செய்தார் திரு.முஸ்தபா. ஏதோ "ஒருநாள் முதல்வன்" படம் பார்ப்பது போலிருந்தது. உண்மையில் பெரிய மனதுதான் அவருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூர் "சிம்" பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பிரிவுக்கும் ஏதாவது செய்யவேண்டும் என்றார் ஒருவர். கலைஞரைச் சந்தித்து தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களின் தபால்தலையை வெளியிட ஆவன செய்யவேண்டும் என்றார் ஒருவர். சிங்கப்பூரில் உள்ள அனைத்து எழுத்தாளர்களின் நூல்களையும் தாம் பெற்றுத்தருவதாக ஒருவர் பொறுப்பேற்றுக்கொண்டார். மலேசியாவின் நூல்களைப் பெற்றுத்தர தாம் முயற்சி செய்வதாக இன்னொருவர் சொன்னார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் முருகன் என்பவர் முனைவருக்காய சிங்கப்பூர இலக்கியம் பற்றிச் செய்யும் ஆய்வுக்கு உதவும்படி கேட்டர் ஒருவர். &lt;br /&gt;&lt;br /&gt;திரு. முஸ்தபா அவர்களின் பல ஆண்டு கனவு இது என்றார் ஒருவர். தமிழ் வளர தமிழில் பேசுவோம் என்று கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்னே திரு.முஸ்தபா அவர்களின் நிறுவன ரசீதுகளில் அச்சடித்திருப்பதைச் சொன்னார். சென்னையில் இருக்கும் அவரது கண்ணாடி நிறுவனத்தில் &lt;strong&gt;"தாய்மொழி கண் போன்றது; பிறமொழி கண்ணாடி போன்றது"&lt;/strong&gt; என்ற புகழ்பெற்ற வாசகத்தை வடிவமைத்ததிலிருந்து அவரது ஆர்வத்தை எடுத்துச்சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறுவனரான திரு.முஸ்தபா தலைவராய் இருந்து பல்வேறு குழுக்களை ஏற்படுத்தி மேலும் இவற்றை மேம்படுத்தவேண்டும் என்று சொன்னார் ஒருவர். இதற்கு பதில் சொன்ன திரு.கலாமோகன், ஏறக்குறைய எல்லா தமிழ் பற்றாளர்களும் ஏதாவது ஒரு முழுவில் அல்லது பல குழுவில் இருக்கின்றனர். "இருக்கின்றனர் என்றால் வெறுமனே இருக்கின்றனர்"- அப்படிப்பட்டவர்கள் தயவுசெய்து இங்கேயும் இணையவேண்டாம் என்றார். உண்மையிலே ஆக்கப்பூர்வமாய் இயங்க முனைந்தால் இணையலாம் என்றார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாம் எங்கள் வழி; தமிழ் எங்கள் மொழி என்பதாய்ச் சொன்னார் ஒருவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியில் பொதுமக்களிடமிருந்து அல்லது நன்கொடையாளர்களிடமிருந்து அன்பளிப்பு வந்தால் ஏற்றுக்கொள்ளலாமே; சிறப்பாய் இயங்க அது உதவுமே என்றார் ஒருவர். பட்டென்று பதில் சொன்ன திரு. முஸ்தபா, எல்லாம் வல்ல இறைவன் எனக்கு நீண்ட ஆயுளையும் நிறைய செல்வத்தையும் அளிக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள்; எல்லாவற்றையும் நான் செய்கிறேன் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;யோசனை என்றால் கேட்கவே வேண்டாம் என்ற அளவுக்கு தமிழ் மக்கள் அள்ளித்தருவார்கள் போலும். கலந்துரையாடலில் சில காமெடி டயலாக்குகளும் வெளிப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றையும் விடுங்கள். இந்த அறக்கட்டளையின் துவக்கம் பற்றியும் சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் பற்றியும் பேசலாம் கொஞ்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூரில் அரசாங்கம் சாராது இயங்கும் அறக்கட்டளைகள் மிகவும் அரிது; சிரமமிக்கது. அதிலும் தமிழுக்காய் இயங்கும் அறக்கட்டளை இல்லவே இல்லை. இந்நிலையில் தமிழுக்காய் தனியொரு மனிதரால் புத்தம் புதியதாய் உருவெடுத்திருக்கிறது இந்த முஸ்தபா தமிழ் அறக்கட்டளை. நிறுவனரான திரு. முஸ்தபா அவர்களை நெஞ்சார பாராட்டலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்தபா தமிழ் அறக்கட்டளையானது தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் கடந்த செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்படி,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;1. சிங்கப்பூர், மலேசியத்தமிழர்களின் வாழ்க்கை பற்றியும் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் பற்றியும் தமிழ்நாட்டில் ஆய்வு செய்யும் நிரைஞர், முனைவர் ஆகியோருக்கு உதவித்தொகை வழங்குதல்&lt;br /&gt;&lt;br /&gt;2. தெற்காசிய, குறிப்பாக சிங்கப்பூர் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் சிறந்த நூலுக்கு ஆண்டுக்கொருமுறை பரிசு வழங்குதல்&lt;br /&gt;&lt;br /&gt;3. சிங்கப்பூர், மலேசியத் தமிழ் இலக்கியம் தொடர்பான கருத்தரங்கம் ஒன்றை தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;4. சிங்கப்பூர், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களைத் தனிப்பிரிவாக தஞ்சை பல்கலைக்கழக நூலகத்தில் உருவாக்குதல்.&lt;br /&gt; &lt;/span&gt;&lt;br /&gt;இவைகளையே தற்போது ஆய்விருக்கையின் குறிக்கோள்களாகக் கொண்டு இவ்வொப்பந்தம் செயல்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ப்பற்றாளர்களை விட தமிழ்ச்சங்கங்கள் அதிகமாய் இருக்கும் சிங்கப்பூரில் தமிழுக்காய் தனியொரு மனிதராய் தனது சொந்த பணத்திலிருந்து இதுபோன்ற அறக்கட்டளைகளை அமைப்பது மிகுந்த சிறப்புடையது. குறிப்பாய் எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கை இத்திசையில் ஆட்சி மொழியாக்கிப் பார்த்த திரு.கோ.சாரங்கபாணி அவர்களைப்போல எந்தவித பாசாங்கும் இன்றி, தனிப்பட்ட புகழுக்காய் அன்றி மிகுந்த மன ஒன்றுதலோடு மன விருப்பத்தோடு இக்காரியத்தில் திரு. முஸ்தபா அவர்கள் இறங்கியிருப்பதாய்த் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்சொன்ன ஒப்பந்தம் மற்றும் இந்த முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் தோற்றம் மூலம் என்னென்ன பயன்கள் நேரலாம் என்பதைப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;v      தமிழக இலக்கிய உலகிற்கும் சிங்கப்பூர் இலக்கிய உலகிற்கும் பூதாகர இடைவெளி உள்ளது. அதை இவ்வொப்பந்தம் குறைக்கும். அல்லது அதற்கான தளத்தை கொஞ்சமாது நிறுவ முயலும்.&lt;br /&gt;&lt;br /&gt;v      தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் தனிப்பிரிவாக்குவதன் மூலம் சிங்கப்பூர மலேசிய இலக்கிய நிலைகளை யாவரும் எளிதில் உணரும் வாய்ப்பமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;v      சிங்கப்பூர மலேசிய இலக்கிய நிலைகளை ஆய்வு செய்யும் மாணவர்கள் தரும் முடிவுகள் அதன் தற்போதையை நிலையை எடுத்துச்சொல்லும்; விளைவு தரம் மேம்படலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;v      தமிழவேள் கோ சாரங்கபாணி பெயரில் அமையும் விருது அவரது சிறப்பை இன்னும் எடுத்துக்கூறும். தமிழுக்கென வாழ நினைக்கும் மற்றவர்களுக்கு வழிகாட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;v      சிறந்த நூலுக்குப் பரிசு தருவதன் மூலம் மேலும் எழுத்தாளர்கள் உருவாவார்கள். (பரிசு கொடுக்கப்படும் நூலின் தரம் கணக்கெலெடுக்கப்பட்டால்!)&lt;br /&gt;&lt;br /&gt;v      சங்கம் அமைத்து நடிகைகளை அழைத்து டிக்கெட் அட
