Wednesday, May 11, 2005

சொல்லாடல்!

காலங்காலமா
கையிடுக்குத் துண்டு
செட்டியாரு
கலியாணத்து
ரெண்டாம் பந்தில
உக்காந்தவனை
சொக்கா பிடிச்சி எழுப்பிவிட்டது.
வெசனத்துல
போதையில
வண்ணான் முதல்
வாத்தியார் வரை
ஊர்லெ எல்லார்ட்டேயும்
படுத்து வருவாளுக
அவனைச் சுமந்தவளும்
அவனதைச் சுமந்தவளும்.
சாராயத்து மானியத்துல
அவென்
பொண்டாட்டி புட்டக்கதை
பொண்ணோட மாருக்கதை
எல்லாஞ் சொல்ல
ரசிச்சிப் போகும்
என்னோட சேந்த செட்டு.
முன்னடியாஞ் சாமிக்கு
மொதப்பூசாரி அவந்தான்
சாமி வர சொணக்கமானா
சாராய மீதி
சம்சார மீதி
சகவாச மீதின்னு
கேலிக்கி ஆளாவான்
சாமிக்கி முன்னாடி.
அத்தனையும் மனசுல வெச்சி
எதிர்ல நாம வரும்போது
எப்படியிருக்கீங்கய்யான்னு கேப்பான்
அனுசரனையா வெட்டியான்,
எப்படா அங்கெ வருவேன்னு
வாய்க்குள்ளே மட்டும் கேட்டு!

வெண்ணிலாப்ரியன்.

நன்றி: அமுதசுரபி மே 2005

1 comment:

எம்.கே.குமார் said...

ரொம்ப தாங்க்ஸ் மூர்த்தி.

எம்.கே.

Search This Blog