Sunday, January 14, 2007

சென்னைப் புத்தகக்காட்சியில் எனது புத்தகம்.

நீண்டநாள் கனவு நிஜமாயிருக்கிறது. சென்னை புத்தகக்காட்சியில் எனது முதல் சிறுகதைத்தொகுப்பு வெளிவந்திருக்கிறது. தலைப்பு மருதம். அன்னம் பதிப்பக்கத்தாரின் வெளியீடு. நான் மிகவும் ரசிக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரரான திரு.நாஞ்சில் நாடன் முன்னுரை எழுதியிருக்கிறார்.

சிங்கப்பூரிலிருந்து இன்னும் இரண்டு வெளியீடாக சுப்பிரமணியன்ரமேஷ்(மானஸஜென்) எழுதியிருக்கும் கவிதைத்தொகுப்பு ஒன்றும் திரு.இந்திரஜித் அவர்களின் சிறுகதைத்தொகுப்பு ஒன்றும் வெளிவந்திருக்கிறது.

புத்தகக் காட்சிக்குச் செல்லும் நண்பர்கள் கவிஞர் மீராவின் அன்னம் பதிப்பகத்தில் இப்புத்தகங்களைக் காணலாம்/வாங்கலாம். நன்றி.

வாழ்வின் நெகிழ்ச்சியான இத்தருணத்தில் 'கை நிறைய கோதுமை அள்ளிக்கொடுத்தவர்களுக்கு' நான் நன்றி சொல்லுவது அவசியமாகிறது. அது தனிமடலாய் வரும்.

அன்புடன்
எம்.கே.குமார்.

Search This Blog