Thursday, May 10, 2007

புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ்!

இனிய நண்பர்களுக்கு,

சுப்பிரமணியன் ரமேஷின் "சித்திரம் கரையும் வெளி" கவிதைத்தொகுப்பும்
எனது "மருதம்" சிறுகதைத்தொகுப்பும் வருகிற 19, சனிக்கிழமையன்று மாலை ஐந்து மணியளவில் பீஷான் சமூக நூலகத்தில் வெளியீடு காண்கின்றன.

சிங்கப்பூரின் மூத்த படைப்பாளரும் சிறந்த இலக்கிய விமர்சகருமான திரு. இராம கண்ணபிரான் அவர்களும், பல்வேறு திறனாய்வுகள் படைத்த முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலஷ்மி அவர்களும், கவிஞர் திரு. ரெ.செல்வம் அவர்களும் எழுத்தாளர்/கட்டுரையாளர்/வழக்கறிஞர் திருமதி. ரம்யா நாகேஸ்வரன் அவர்களும் இப்புத்தகங்களை அறிமுகப்படுத்தி தங்களது வாசகப்பார்வையை பகிர்ந்துகொள்ள விழைந்துள்ளனர்.

நண்பர்களைனைவரும் தங்களது குடும்பத்துடன் இந்நிகழ்வில் பங்குகொள்ள வேண்டுகிறோம்.

நன்றி.

அன்புடன்
எம்.கே.

No comments:

Search This Blog