Thursday, May 10, 2012

வழக்கு எண் 18/9(ம் எனது வக்காலத்து எண் 15/9ம்) – ஒரு பகிர்வு

படத்தின் குறிப்பிடத்தகுந்தவை :-
  1. தேர்ந்த செதுக்கியெடுத்த கதாபாத்திரத்தேர்வு, கதையில் வரும் அத்தனை பேரும் இப்படியாகவே வாழ்கிறார்கள் என்னும் நம்பகத்தன்மை தரும் தேர்ச்சி.
  2. வெகு வெகு இயல்பான நேர்த்தியான திரைக்கதை
  3. காட்சிகள் ஒவ்வொன்றிலும் வைக்கவேண்டிய விசயங்களுக்கு மெனக்கெட்டு உழைத்திருப்பது (பிளாஸ்டிக் கப், திருக்குறள், பாலன், தூரத்தில் தெறியும் பள்ளி, பட போஸ்டர் என)
  4. அகிரா குரோசோவா (அ) விருமாண்டி வகை கதைசொல் பாணி
  5. சலிப்பு ஏற்படாத வகையில் விளிம்புநிலை மனிதர்களை கதையில் இணைத்த போக்கு
  6. சின்னச்சாமி – தொலையும் கலைகளின் சாட்சியாய்.
  7. ’ஒரே கதையை இருவர் சொல்லும் முறையில்’ வேறொரு முழு கதையை முன்வைத்தல்
  8. கந்துவட்டி, விவசாயி கிட்னியை விற்று குடும்பம் காக்கவேண்டிய நிர்ப்பந்தம், விவசாய நிலங்கள் அழிப்பு என இந்தியாவின் இருதயமான கிராமக்கதைகளை இயம்புதல்
  9. முறுக்குகடை ஓனராக வரும் ஐயா (மனைவியை இழந்து, குழந்தைகள் இன்றி வாடும், பாலாஜி சக்திவேல் அவர்களின் நண்பர் அவர். அண்மையில் “நீயா நானா”வில் மனம் குமுறிக் குமுறி அழுதவர்; மனதைத் தாக்கியவர்) எவ்வளவு கொடூரமானவராக நடிக்கிறார்?!
  10. சினிமாவில் முதன் முதலாக ‘முகம் மறைக்கப்பட்ட மந்திரி’ – நிஜ உணர்வைத் தருகிறது.
  11. இரண்டுஅருமையான பாடல்கள்! இளையராஜா பாடும் உணர்வைத்தரும் ஒரு பாட்டு.
  12. தமிழ்சினிமாவில் இதுவரை வராத எதிர்பார்க்காத கோணங்களில் வைக்கப்பட்ட கேமிரா. (சிறியதால் இருந்ததால் இது சாத்தியம்.)
  13. தற்கால இளையர்களின் வாழ்வியல் தாக்கங்கள், பெற்றோர்கள் கையாளும் முறையில் அறிவிக்கப்படாத சில பதிவுகள்.
  14. சினிமா மீது விருப்பம் கொண்ட அனைவரும் குறைந்தது மூன்று தடவையாவது மீண்டும் மீண்டும் இப்படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ள விஷயங்கள் இருக்கின்றன.
  15. சினிமாவின் மீது ஆசையும் சமூகத்தின் மீது அக்கறையும் கொண்ட ஒரு படைப்பாளியாய் எழுந்து நிற்கும் இயக்குனர் திரு. பாலாஜிசக்திவேல்.


படத்தில் மேம்படுத்தியிருக்கவேண்டியவை:-
  1. நகைச்சுவையை ஏன் இவர் வெறுக்கிறாரோ தெரியவில்லை. (’காதலி’ல் கரட்டாண்டி, இதில் சின்னச்சாமி - இவர்களைவைத்து இன்னும் என்னென்னவோ செய்திருக்கலாம்! இரண்டிலுமே மிஸ்ஸிங்.) சில காட்சிகளுக்கு முனைந்திருப்பதைதவிர.
  2. சில குறும்படங்களை இணைத்த உணர்வாய் மட்டுமே முடியும் நெகிழ்ச்சி (முழுப்படமாய் மனதில் பின்தங்குகிறது)
  3. ஒரே கதையை இருவர் சொல்லும் முறையில், இரு வேறு கதையாய் ஆகிவிட்டமை.
  4. வேலுவின் முன்கதைச்சுருக்கம் ’அங்காடித்தெரு’ படத்தை நினைவுபடுத்துதல்.
  5. வேலுவின் முன்கதைச்சுருக்கம் ஒரு துன்பியலை மட்டுமே முன்னிறுத்துவதற்காய் வந்துபோகிறது! அப்பாவுக்காக அவன் எதையும் செய்வான் என்பதை ஒரு சில காட்சிகளில் ஆழப்படுத்தியிருக்கலாம்.
  6. காசுவோடு போய்விட்ட பாலியல் தொழிலாளி அக்கா. மீண்டும் கதையில் எங்காவது நுழைத்திருக்கலாம்.
  7. இரண்டு வரியாய் முதலில் வந்துவிடுவதால் பாடல்கள் முழுமையாய் வரும்போது ஒரு தாக்கம் இல்லை.
  8. பின்னணி இசை
  9. காட்சி எடிட்டிங்கில் ஏதோ குறைவு. கதாபாத்திரத்தின் பின்னணியைச் சுழற்றும் காட்சிகளில் சில கார்ட்டூனைப்போல! 
எம். கே.குமார்

No comments:

Search This Blog