Friday, October 03, 2014

அதிகம் அறியப்படாத அரசியல் கொலை - லால்பகதூர் சாஸ்திரி

லால் பகதூர் சாஸ்திரி, பாகிஸ்தான், ரஷ்யா அதிகாரிகளுடன்,  இறப்பதற்கு சில மணித்துளிகள்முன்.

***
அக்டோபர் 2 ல் பிறந்த முக்கிய ஆளுமைகளுல் இன்னொருவர் லால்பகதூர் சாஸ்திரி. காந்தியின் சத்திய சீடர்களுல் ஒருவர். இந்தியாவின் இரண்டாம் பிரதமர்.

1965ல் இந்தியா-பாகிஸ்தான் போரில் இந்தியா முன்னேறியதற்கு காரணம் சாஸ்திரிதான். அப்போரை ஒரு நிறுத்தம் நோக்கி கொண்டுவர இந்தியாவையும் பாகிஸ்தானையும் ரஷ்யா அழைத்திருந்தது.

ரஷ்யாவிற்குச் சென்ற சாஸ்திரி பிணமாக வந்தார். ஹார்ட் அட்டாக் என்று இன்றுவரை கூவிக்கொண்டிருக்கின்றன அனைத்து அரசாங்கங்களும். ஆனால் நடந்தென்ன?

  1. ரஷ்யாவிற்குச் செல்லும் முன் சாஸ்திரிக்கு உடல்நலத்தில் எந்தப்பிரச்சனையுமில்லை.
  2. இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் கையெழுத்துவிட்டு இரவு ஓய்வுக்குச் செல்கிறார். இரவு 10 மணிக்கு அறைக்கு வருகிறார்.
  3. இந்தியத்தூதர் டி.என்.கவுல் வீட்டிலிருந்து அவரது சமையற்காரர் ஜான் முகமது சமைத்த உணவு வருகிறது. கொஞ்சம் போல சாப்பிடுகிறார்.
  4. படுக்கையிலிருந்து மகளுக்கு போன் செய்து ’பாலருந்திவிட்டு தூங்கப்போகிறேன் அம்மா’, என்கிறார்.
  5. 1.20 மணிக்கு நெஞ்சு வலிப்பதாக தனது உதவியாளர் ஜகன்நாத் இருக்கும் அறைக்கதவைத்தட்டி தண்ணீர் கேட்கிறார். தண்ணீர் குடித்துவிட்டு படுக்கையில் அமரும்போதே மூர்ச்சையற்று விடுகிறார். சிறிது நேரத்தில் மரணம். அருகில் தெர்மோபிளாஸ்க் உருண்டு கிடைக்கிறது.
  6. அடுத்த பதினைந்து நிமிடங்களில் அவர் இறந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
  7. அவரது உடல் போஸ்ட்-மார்ட்டம் செய்யப்படவேயில்லை. இந்தியா-ரஷ்யா என இரு அரசாங்கங்களும் இதற்கு ஆர்வம் காட்டவில்லை
  8. உடல் நீல நிறத்திலும் ஆங்காங்கு காயங்கள் இருந்ததாகவும் அவரது மனைவி சொல்லியிருக்கிறார்.
  9. 1970, அக்டோபர் 2, தனது கணவர் மரணம் தொடர்பாக நீதி விசாரணை கேட்கிறார் திருமதி சாஸ்திரி.
  10. இவரது மரணம் பற்றி இந்திய அரசு அதற்கு மேல் எந்த அக்கறையையும் காட்டவில்லை, பெயருக்கென்று ஒரு விசாரணைக் கமிஷனை அமைத்தது. ராஜ் நரைன் விசாரணைக்குழு.
  11. ராஜ் நரைன் விசாரணைக்குழுவின் ஒரு விசாரணை சம்பந்தப்பட்ட ஒரு தகவல் கூட இந்திய பாராளுமன்ற நூலகத்தில் இல்லை
  12. 2009ல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாக இது பற்றிக்கேட்டபோது, ஒரே ஒரு அறிக்கை மட்டுமே  உள்ளது. ஆனால் அது, நாட்டு இறையாண்மை சம்பந்தப்பட்டதால் வெளியிட முடியாது என்று பதில் அளித்துவிட்டது பிரதமர் அலுவலகம்.
  13. 1977ல், சாஸ்திரியின் மரணம் குறித்து அறிந்த இரண்டு பேரை விசாரணைக்கு அழைத்தது பராளுமன்ற கூட்டு சபை. ஒருவர் ஆர்.என்.சுஹா, சாஸ்திரியின் மருத்துவர். ரஷ்யாவில் அவருடன் இருந்தவர். விசாரணைக்கு டெல்லி நோக்கி வந்துகொண்டிருந்தபோது ட்ர்க் லோரியால் மோதப்பட்டு சாலையில் மரணம் அடைந்தார். இது தற்செயலா?
  14. இன்னொருவர், ராம்நாத். சாஸ்திரியின் வேலைக்காரர். ரஷ்யாவில் உடன் இருந்தவர். “இதுவரை மனதை வதைத்துக் கொண்டிருந்ததையெல்லாம் இன்று சொல்லிவிடுகிறேன் அம்மா”, என்று சாஸ்திரியின் மனைவியிடம் சொல்லிவிட்டு, பார்லிமெண்டுக்கு நடந்து வந்தவரை இன்னொரு லோரி அடித்து கால்களை இழந்து நினைவையும் இழந்ததார். இதுவும் தற்செயலானதாய் இருக்கமுடியுமா?

எம்.கே.குமார்

1 comment:

எம்.கே.குமார் said...

அன்பு நண்பருக்கு,

இனிய வணக்கம்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் மறைவு போலவே, லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் மறைவு மர்மங்கள் நிறைந்தது.

தங்களுடைய கட்டுரை நன்றாக இருக்கிறது.

நன்றி. வணக்கம்.

அன்புடன்,

சிவா,
தெற்கு சூடான்,
ஆஃப்ரிக்கா.

Search This Blog