பின்வரும் கடிதம் வல்லினம் இதழுக்கு அனுப்பப்பட்டது. என்ன காரணத்தாலோ அது அவ்விதழில் இடம்பெறாததால் இங்கு பதிவு செய்கிறேன்.
****************
சென்ற மாத வல்லினத்தில் வந்த லதா அவர்களின் “மண்ணின்றி வளரும் மரங்களும் சிங்கை இலக்கியமும்” கட்டுரையில், நான் 2005ஆம் ஆண்டில் “தமிழோவியம்” இணைய இதழில் எழுதிய “மாஜுலா சிங்கப்புரா” தொடர்கட்டுரையின் ஒரு பகுதியில் “மக்கள் செயல் கட்சி 1959ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதாக எழுதியிருப்பது சுட்டிக்காட்டப்பட்டது.
தவறுக்கு வருந்துகிறேன். அதே கட்டுரையில் 12-ஆம் பத்தியில் அது சரியாக சொல்லப்பட்டிருக்கிறது. [1]
சிங்கப்பூரின் வரலாறு குறித்த தகவல் தேடலில் எனது இத்தொடர் காணக்கிடைப்பது எனக்கு மகிழ்ச்சியே; எனினும், சிங்கப்பூரில் ஆவணப்படுத்துதலின் மேலோட்டத்தன்மையை நானும் உணர்ந்திருப்பதால், (காண்க: [2] ஆவணப்படுத்தும் ஆபத்தும் அதுகுறித்த எனது ஆதங்கமும்) அத்தொடர் ஆவணமாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படும்போது தவறுகள் இருப்பின் திருத்தப்பட்டு தகுந்த தரவுகளுடன் அளிக்க முயற்சிக்கப்படும்.
நன்றி.
எம்.கே.குமார்
1.http://www.tamiloviam.com/unicode/search.asp?ss=?????%20???????????
2.http://yemkaykumar.blogspot.com/2010/06/blog-post.html
லதா அவர்களின் கட்டுரை http://www.vallinam.com.my/issue20/essay3.html
Wednesday, September 01, 2010
Friday, June 18, 2010
முனைவர் எம்.எஸ். ஸ்ரீலஷ்மியின் வல்லினம் இதழ் விமர்சனக் கட்டுரை - எனது பார்வையில்
நீண்டகாலமாய் பதிவெதுவும் போடாமல் கிடந்த எனக்கு இதைப்பற்றி எழுதவேண்டும் ஒரு உந்துதலை ஏற்படுத்தியதற்காக, வல்லினம் இதழில் "சிங்கப்பூரில் கவிதையின் போக்கு 90களுக்குப்பிறகு" என்ற கட்டுரையின் படைப்பாளர், முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலஷ்மி அவர்களுக்கு நான் முதலில் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
சிங்கப்பூரில் உள்ள (ஒரு கை விரல் மட்டுமே கொள்ளக்கூடிய) விமர்சன முனைவர்களில் எம்.எஸ்.
ஸ்ரீலஷ்மியும் ஒருவர். தொடர்ந்து அவர் புத்தகங்களை சேகரிக்கிறார் அல்லது வாசிக்கிறார் அல்லது விமர்சனமிடுகிறார் என்பதும் தொடர்ந்து அவர் இத்துறையில் இயங்குவதும் சிறப்பு! ஆனால் விமர்சனம் என்ற பெயரில் நெறியற்ற மேதைமையையும் போலி அக்கறையையும் தரமற்ற தகவல்களையும் தரும்போது கொஞ்சம் வருத்தமாய் இருக்கிறது.
எம்.எஸ்.ஸ்ரீலஷ்மி தொன்னூறுகளூக்குப்பிறகு வந்த அத்தனை கவிதைப் புத்தகங்களையும் படித்தாரா அல்லது 90களுக்குப்பிறகு எழுதிய நிரந்தரவாசிகள்/வேலை அனுமதிச்சீட்டு உடையோர் எழுதியவைகளை மட்டுமே படித்தாரா தெரியவில்லை. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் மேலே சொன்ன வகையறாவைச் சேர்ந்தவர்கள்.
இன்னொரு ஐயமும் எனக்கு உண்டு. நான்கு கட்டுரைகளை எழுதி அதை அப்படியே இடியாப்பம் பிய்ப்பது போல் பிய்த்துப்போட்டு ஒன்றாக்கிவிட்டாரா என்றும். காரணம், நிரந்தரவாசிகள்/வேலை அனுமதிச்சீட்டு கவிஞர்கள், நிரந்தரவாசிகள்/வேலை அனுமதிச்சீட்டு கவிஞர்களின் வாழ்வு வந்ததும் - சென்றதும், கவிமாலை / கவிச்சோலை தோற்றமும் வளர்ச்சியும், நிரந்தரவாசிகள்/வேலை அனுமதிச்சீட்டு கவிஞர்களால் ஏற்பட்ட வயித்தெரிச்சல் என நான்கு கட்டுரைகளை எழுதி அதைப் பொதுத்தலைப்பாக்கி விட்டது போல இருக்கிறது.
கட்டுரையில் தொடர்ந்து பரவிக்கிடக்கும் குடியுரிமைச்சிக்கலும் எடுத்துக்காட்டப்பட்டிருக்கும் கவிதை உதாரணங்களும் ஒரு அந்நியத்தனமாய் நேர்மையின்மையாய் துருத்திக்கொண்டிருக்கின்றன.
பல இடங்களில் கட்டுரையாளர் சாடுகின்ற விஷயங்கள் உலகச் செம்மொழியாம் தமிழ் மொழியில் எக்காலத்திலும் பாடு பொருளாகவே இருந்திருக்கின்றன. புதுக்குடியேறி, உள்ளத்தை அங்கு வைத்து உடலை இங்கு வைக்கும் போக்கு, குடும்பத்தைப் பிரிந்திருக்கும் வலி, வாழூரில் ஏற்படும் உணர்வுகளை சேகரித்தல் என்பன எல்லாப்படைப்பிலும் காணப்படுபவையே.
கட்டுரையின் பல இடங்களில் சம்பந்தேமே இல்லாத தகவல்கள் நெருடுகின்றன. சொந்த விருப்பு வெறுப்பின் பேரில் எழுதப்பட்டிருக்குமோ எனவும் யோசிக்கவைக்கின்றன்.
எடுத்துக்காட்டுகள் பல,.
1. சம்பந்தமேயில்லாமல் மலேசியாவின் கே.பாலமுருகன் இக்கட்டுரையில் சாடப்பட்டிருப்பது.
2. ஜெயந்தி சங்கரைப் பற்றிய அவதானிப்புகள். (நிறைய முயற்சிகள் எடுத்து அவர் சீனக்கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்து தந்திருக்கிறார் என்பதையும் மறந்து)
3. சுப்ரமணியம் ரமேஷ் காசு சம்பாதித்துவிட்டு ஊருக்குச் சென்றுவிட்டது
4. கவிமாலை மற்றும் கவிச்சோலையைப் பற்றி கூறுகையில் காசுக்காக / பணத்துக்காக அங்கே கவிதை எழுதச்செல்வார்கள் என்ற தொணியில் சொல்லப்பட்டிருக்கும் கருத்து. (உண்மையில் ஒரு பரிசுபெறும் சந்தோசத்திற்காக, ஒரு மோட்டிவேஷனுக்காக, அவர்களுக்குள்ளே யாராவது ஒருவர் பரிசை ஸ்பான்சர் செய்வார். நாள் ஒன்றுக்கு பதினெட்டு வெள்ளி சம்பளம் வாங்கும் நண்பர் தனது இலக்கிய ஆர்வத்திற்காக ஐம்பது வெள்ளி பரிசுத்தொகையை ஸ்பான்சர் செய்வது எவ்வளவு பெருந்தன்மையான விஷயம். அதைத் தவறான தகவல்களாக கொசைப்படுத்துவதா மேடம்?)
5.புத்தக வெளியீடு கண்டு காசு பணத்தை அள்ளிக்கொள்கிறார்கள், அட ஜெயந்தா! ராமா, நிறைய எழுத்தாளர்கள் புத்தக வெளியீடு விழாவையே விட்டுவிட்டார்கள்.
இன்னும் நிறைய.....
சிங்கப்பூரிலுள்ள சில முனைவர்களில் ஒருவர் என்ற முறையில், சிங்கப்பூரிலுள்ள சில இலக்கிய விமர்சகர்களில் ஒருவர் என்ற முறையில், சிங்கப்பூரில் எந்த முனைவரோ படைப்பாளரோ எப்படி வாந்தியெடுத்தாலும் அது பிற்காலத்திற்காக ஆவணப்படுத்தப்படும் என்பதாலும் நான் தங்களை அன்புடன் வேண்டிக்கொள்வது இதுதான்.
வருங்கால சிங்கப்பூருக்கு தவறான தகவல்களைத் தராதீர்கள். அல்லது தகவல்களை சொந்த விருப்பு வெறுப்பின் பேரில் தகனம் செய்யாதீர்கள்; தாராளம் செய்யாதீர்கள். தகவல்களை தகவல்களாக தராமல் தான்தோன்றித்தனமாக உங்களது மன ஓட்டங்களை இணைக்காதீர்கள். இவையெல்லாம் தமிழுக்கும் சிங்கப்பூருக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் நீங்கள் செய்யும்
துரோகங்களே.
தங்களது மேன்மையான படைப்பையும் அக்கறையையும் எதிர்நோக்கும்,
எம்.கே.குமார்.
வல்லினம் இதழில் வெளியான முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ.லஷ்மி – யின் கட்டுரைக்கான இணைப்பு
http://www.vallinam.com.my/issue18/essay5.html
முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ.லஷ்மி-யின் கட்டுரைக்கு பிற எழுத்தாளர்கள் அவர்களின் விமர்சனத்தை பதிவு செய்துள்ளனர் அதற்கான இணைப்பினையும் இங்கு கொடுத்துள்ளேன்.
கே.பாலமுருகன் (மலேசியா)
http://bala-balamurugan.blogspot.com/2010/06/blog-post_03.html
பாலுமணிமாறன் http://baalu-manimaran.blogspot.com
அப்துல்காதர் ஷாநவாஸ் https://shaanavas.wordpress.com
சூன்யா http://soonya007.blogspot.com
இந்திரஜித் http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3016
தம்பி பாண்டித்துரையின் மடல்.
http://pandiidurai.wordpress.com/2010/06/14
சிங்கப்பூரில் உள்ள (ஒரு கை விரல் மட்டுமே கொள்ளக்கூடிய) விமர்சன முனைவர்களில் எம்.எஸ்.
ஸ்ரீலஷ்மியும் ஒருவர். தொடர்ந்து அவர் புத்தகங்களை சேகரிக்கிறார் அல்லது வாசிக்கிறார் அல்லது விமர்சனமிடுகிறார் என்பதும் தொடர்ந்து அவர் இத்துறையில் இயங்குவதும் சிறப்பு! ஆனால் விமர்சனம் என்ற பெயரில் நெறியற்ற மேதைமையையும் போலி அக்கறையையும் தரமற்ற தகவல்களையும் தரும்போது கொஞ்சம் வருத்தமாய் இருக்கிறது.
எம்.எஸ்.ஸ்ரீலஷ்மி தொன்னூறுகளூக்குப்பிறகு வந்த அத்தனை கவிதைப் புத்தகங்களையும் படித்தாரா அல்லது 90களுக்குப்பிறகு எழுதிய நிரந்தரவாசிகள்/வேலை அனுமதிச்சீட்டு உடையோர் எழுதியவைகளை மட்டுமே படித்தாரா தெரியவில்லை. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் மேலே சொன்ன வகையறாவைச் சேர்ந்தவர்கள்.
இன்னொரு ஐயமும் எனக்கு உண்டு. நான்கு கட்டுரைகளை எழுதி அதை அப்படியே இடியாப்பம் பிய்ப்பது போல் பிய்த்துப்போட்டு ஒன்றாக்கிவிட்டாரா என்றும். காரணம், நிரந்தரவாசிகள்/வேலை அனுமதிச்சீட்டு கவிஞர்கள், நிரந்தரவாசிகள்/வேலை அனுமதிச்சீட்டு கவிஞர்களின் வாழ்வு வந்ததும் - சென்றதும், கவிமாலை / கவிச்சோலை தோற்றமும் வளர்ச்சியும், நிரந்தரவாசிகள்/வேலை அனுமதிச்சீட்டு கவிஞர்களால் ஏற்பட்ட வயித்தெரிச்சல் என நான்கு கட்டுரைகளை எழுதி அதைப் பொதுத்தலைப்பாக்கி விட்டது போல இருக்கிறது.
கட்டுரையில் தொடர்ந்து பரவிக்கிடக்கும் குடியுரிமைச்சிக்கலும் எடுத்துக்காட்டப்பட்டிருக்கும் கவிதை உதாரணங்களும் ஒரு அந்நியத்தனமாய் நேர்மையின்மையாய் துருத்திக்கொண்டிருக்கின்றன.
பல இடங்களில் கட்டுரையாளர் சாடுகின்ற விஷயங்கள் உலகச் செம்மொழியாம் தமிழ் மொழியில் எக்காலத்திலும் பாடு பொருளாகவே இருந்திருக்கின்றன. புதுக்குடியேறி, உள்ளத்தை அங்கு வைத்து உடலை இங்கு வைக்கும் போக்கு, குடும்பத்தைப் பிரிந்திருக்கும் வலி, வாழூரில் ஏற்படும் உணர்வுகளை சேகரித்தல் என்பன எல்லாப்படைப்பிலும் காணப்படுபவையே.
கட்டுரையின் பல இடங்களில் சம்பந்தேமே இல்லாத தகவல்கள் நெருடுகின்றன. சொந்த விருப்பு வெறுப்பின் பேரில் எழுதப்பட்டிருக்குமோ எனவும் யோசிக்கவைக்கின்றன்.
எடுத்துக்காட்டுகள் பல,.
1. சம்பந்தமேயில்லாமல் மலேசியாவின் கே.பாலமுருகன் இக்கட்டுரையில் சாடப்பட்டிருப்பது.
2. ஜெயந்தி சங்கரைப் பற்றிய அவதானிப்புகள். (நிறைய முயற்சிகள் எடுத்து அவர் சீனக்கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்து தந்திருக்கிறார் என்பதையும் மறந்து)
3. சுப்ரமணியம் ரமேஷ் காசு சம்பாதித்துவிட்டு ஊருக்குச் சென்றுவிட்டது
4. கவிமாலை மற்றும் கவிச்சோலையைப் பற்றி கூறுகையில் காசுக்காக / பணத்துக்காக அங்கே கவிதை எழுதச்செல்வார்கள் என்ற தொணியில் சொல்லப்பட்டிருக்கும் கருத்து. (உண்மையில் ஒரு பரிசுபெறும் சந்தோசத்திற்காக, ஒரு மோட்டிவேஷனுக்காக, அவர்களுக்குள்ளே யாராவது ஒருவர் பரிசை ஸ்பான்சர் செய்வார். நாள் ஒன்றுக்கு பதினெட்டு வெள்ளி சம்பளம் வாங்கும் நண்பர் தனது இலக்கிய ஆர்வத்திற்காக ஐம்பது வெள்ளி பரிசுத்தொகையை ஸ்பான்சர் செய்வது எவ்வளவு பெருந்தன்மையான விஷயம். அதைத் தவறான தகவல்களாக கொசைப்படுத்துவதா மேடம்?)
5.புத்தக வெளியீடு கண்டு காசு பணத்தை அள்ளிக்கொள்கிறார்கள், அட ஜெயந்தா! ராமா, நிறைய எழுத்தாளர்கள் புத்தக வெளியீடு விழாவையே விட்டுவிட்டார்கள்.
இன்னும் நிறைய.....
சிங்கப்பூரிலுள்ள சில முனைவர்களில் ஒருவர் என்ற முறையில், சிங்கப்பூரிலுள்ள சில இலக்கிய விமர்சகர்களில் ஒருவர் என்ற முறையில், சிங்கப்பூரில் எந்த முனைவரோ படைப்பாளரோ எப்படி வாந்தியெடுத்தாலும் அது பிற்காலத்திற்காக ஆவணப்படுத்தப்படும் என்பதாலும் நான் தங்களை அன்புடன் வேண்டிக்கொள்வது இதுதான்.
வருங்கால சிங்கப்பூருக்கு தவறான தகவல்களைத் தராதீர்கள். அல்லது தகவல்களை சொந்த விருப்பு வெறுப்பின் பேரில் தகனம் செய்யாதீர்கள்; தாராளம் செய்யாதீர்கள். தகவல்களை தகவல்களாக தராமல் தான்தோன்றித்தனமாக உங்களது மன ஓட்டங்களை இணைக்காதீர்கள். இவையெல்லாம் தமிழுக்கும் சிங்கப்பூருக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் நீங்கள் செய்யும்
துரோகங்களே.
தங்களது மேன்மையான படைப்பையும் அக்கறையையும் எதிர்நோக்கும்,
எம்.கே.குமார்.
வல்லினம் இதழில் வெளியான முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ.லஷ்மி – யின் கட்டுரைக்கான இணைப்பு
http://www.vallinam.com.my/issue18/essay5.html
முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ.லஷ்மி-யின் கட்டுரைக்கு பிற எழுத்தாளர்கள் அவர்களின் விமர்சனத்தை பதிவு செய்துள்ளனர் அதற்கான இணைப்பினையும் இங்கு கொடுத்துள்ளேன்.
கே.பாலமுருகன் (மலேசியா)
http://bala-balamurugan.blogspot.com/2010/06/blog-post_03.html
பாலுமணிமாறன் http://baalu-manimaran.blogspot.com
அப்துல்காதர் ஷாநவாஸ் https://shaanavas.wordpress.com
சூன்யா http://soonya007.blogspot.com
இந்திரஜித் http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3016
தம்பி பாண்டித்துரையின் மடல்.
http://pandiidurai.wordpress.com/2010/06/14
Tuesday, February 16, 2010
அஞ்சலி: VMC ஹனீபா
மகாநதியில் முதன்முதலாய் கொச்சின் ஹனிஃபாவைப் பார்த்தேன். கமல்ஹாசனுக்கே உரிய கதாபாத்திர தேர்வுகளின் முழுமையாய் ஹனிஃபா இருந்தார். படம் நினைவிருக்கும்வரை ஹனீஃபாவைத் திட்டிக்கொண்டேயிருப்பேன். அந்த அளவுக்கு அவரின் பாத்திரம். நிறைவாய்ச் செய்திருப்பார்.
கமல்ஹாசன் அவரைப் பல படங்களில் நன்கு பயன்படுத்தியிருப்பார்.
அதற்குப்பிறகு பல படங்கள். படக்கென்று நினைவுக்கு வருவது பட்டியல் படத்தில் வரும் வேடமும், முதல்வனில் வரும் முதல்வரின் தொண்டரும்.
கள்ளத்தனமும் வெகுளித்தனமும் நிறைந்த முகபாவத்தையும் புன்னகையையும் ஒருங்கே கொண்டவர். அப்பாவிக்கும் அடப்பாவிக்கும் பொருத்தமானவர்.
அமரர் ஹனீஃபாவின் மறைவு நல்ல திரைப்படங்களுக்கும் பொருத்தமான கதாபாத்திரங்களும் ஒரு பேரிழப்பு. நமக்கும்தான்.
அவரது குடும்பத்தாரின் வருத்தத்தில் இணைகிறேன். அவரது ஆத்மா சாந்தியடைக.
அன்பன்
எம்.கே.
Wednesday, July 22, 2009
அப்படி என்ன சார் பிஸி?
அண்மைக்காலங்களில் நான் அதிகமாகவே எழுதாமல் இருந்துவிட்டேன் என்றாலும் அதனாலோ என்னவோ நிறையவற்றைப் பற்றி எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டேயிருந்தேன்.
உதாரணமாய் பல விஷயங்களைச் சொல்லலாம் எனினும் பின்வருவன இன்றுவரை விரட்டிக்கொண்டேயிருக்கின்றன.
சிங்கப்பூருக்கு வந்திருந்த ஞானியைப் பார்க்காதது, பேசாதது பெருங்குறையாய் மனதில் தொங்கிக்கொண்டேயிருக்கிறது. சிங்கப்பூரில் 'பஜாஜ் பல்சர்' பைக் வாங்கியவர்களில் 99% பேர் ஒருதடவையாவது சாலையில் சரிந்து விழுந்திருப்பது பற்றி, எனது 'மருதம்' சிறுகதைத்தொகுப்பில் அதிகமாய் நிரம்பியிருக்கும் குழந்தைக்காலங்களை அப்படியே அள்ளித்தந்த 'பசங்க' திரைப்படத்தை நிறைய நிறைய எழுதவேண்டும் என்பது பற்றி, மஹிந்த ராஜ பக்ஷேயின் கொலைவெ(ற்)றி பற்றி, அப்பாவித்தமிழர்களின் அவலம் பற்றி, குடிநீர்க்குழாயில் சாராயம் வந்தது பற்றி, அண்மையில் சந்தித்த சென்னை நண்பரின் இந்திய சுற்றுலாத்துறை குறித்தான ஆத்திரங்கள் பற்றி, சாரு நிவேதிதா எழுதியிருந்த இயற்கையை மனிதன் எதிர்கொள்ளும் மனப்பாங்கு குறித்தான ஒரு சிறந்த 'ஒப்புமை பற்றி, 'சொல்வனம்' வார இதழில் வெளிவரும் 'குளோபல் வார்மிங்' கட்டுரை பற்றி, ஏனென்று தெரியாமல் 'அயன்' படத்தை ஐந்து முறை மீண்டும் மீண்டும் பார்த்தது பற்றி, அதில் வரும் (கிளிஷேக்கலுடன் ஒப்பிடக்கூடாத) சூர்யாவின் மிகச்சிறந்த ஒரு காட்சி பற்றி, 'நாடோடிகள்' படத்தைப் பற்றி, அண்மையில் வெளிவந்த 'நாம்' இதழின் தரம் பற்றி, சிங்கப்பூரில் நடைபெற்ற எந்த இலக்கிய, புத்தக சம்பந்தப்பட்ட கடந்த நான்குமாத நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளாதது பற்றி, எதையும் சாராதிருந்தும் எல்லாமுமாய் இருக்கும் ஒரு இம்சை பற்றி, கவிஞரும் விமரிசகருமான ராஜமார்த்தாண்டன் மறைவு பற்றி, காலச்சுவடு இதழில் பணியாற்றி வரும் சிங்கப்பூரில் பணிபுரியும் ஓவியர் உமாபதி வீட்டிற்கு வந்தது பற்றி, அவர் தந்த ராஜ மார்த்தாண்டன் ஓவியம் பற்றி, எல்லாவற்றிற்கும் மேலாக ஆதித்யா பற்றி அவனுடனான நெகிழ்வான தருணங்கள் பற்றி......
பற்றுக பற்றினை பற்றற்று பற்றுக
பற்றி பற்றால் வரும். (இது திருக்குறள் அல்ல)
இதன் குத்துமதிப்பான விளக்கம்: பற்று இருந்தால் பற்றியவற்றைப் பற்றி பற்றிய நேரத்தில் பற்றில்லாமல் எழுதலாம் என்பதாகும்.
எம்.கே.குமார்.
உதாரணமாய் பல விஷயங்களைச் சொல்லலாம் எனினும் பின்வருவன இன்றுவரை விரட்டிக்கொண்டேயிருக்கின்றன.
சிங்கப்பூருக்கு வந்திருந்த ஞானியைப் பார்க்காதது, பேசாதது பெருங்குறையாய் மனதில் தொங்கிக்கொண்டேயிருக்கிறது. சிங்கப்பூரில் 'பஜாஜ் பல்சர்' பைக் வாங்கியவர்களில் 99% பேர் ஒருதடவையாவது சாலையில் சரிந்து விழுந்திருப்பது பற்றி, எனது 'மருதம்' சிறுகதைத்தொகுப்பில் அதிகமாய் நிரம்பியிருக்கும் குழந்தைக்காலங்களை அப்படியே அள்ளித்தந்த 'பசங்க' திரைப்படத்தை நிறைய நிறைய எழுதவேண்டும் என்பது பற்றி, மஹிந்த ராஜ பக்ஷேயின் கொலைவெ(ற்)றி பற்றி, அப்பாவித்தமிழர்களின் அவலம் பற்றி, குடிநீர்க்குழாயில் சாராயம் வந்தது பற்றி, அண்மையில் சந்தித்த சென்னை நண்பரின் இந்திய சுற்றுலாத்துறை குறித்தான ஆத்திரங்கள் பற்றி, சாரு நிவேதிதா எழுதியிருந்த இயற்கையை மனிதன் எதிர்கொள்ளும் மனப்பாங்கு குறித்தான ஒரு சிறந்த 'ஒப்புமை பற்றி, 'சொல்வனம்' வார இதழில் வெளிவரும் 'குளோபல் வார்மிங்' கட்டுரை பற்றி, ஏனென்று தெரியாமல் 'அயன்' படத்தை ஐந்து முறை மீண்டும் மீண்டும் பார்த்தது பற்றி, அதில் வரும் (கிளிஷேக்கலுடன் ஒப்பிடக்கூடாத) சூர்யாவின் மிகச்சிறந்த ஒரு காட்சி பற்றி, 'நாடோடிகள்' படத்தைப் பற்றி, அண்மையில் வெளிவந்த 'நாம்' இதழின் தரம் பற்றி, சிங்கப்பூரில் நடைபெற்ற எந்த இலக்கிய, புத்தக சம்பந்தப்பட்ட கடந்த நான்குமாத நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளாதது பற்றி, எதையும் சாராதிருந்தும் எல்லாமுமாய் இருக்கும் ஒரு இம்சை பற்றி, கவிஞரும் விமரிசகருமான ராஜமார்த்தாண்டன் மறைவு பற்றி, காலச்சுவடு இதழில் பணியாற்றி வரும் சிங்கப்பூரில் பணிபுரியும் ஓவியர் உமாபதி வீட்டிற்கு வந்தது பற்றி, அவர் தந்த ராஜ மார்த்தாண்டன் ஓவியம் பற்றி, எல்லாவற்றிற்கும் மேலாக ஆதித்யா பற்றி அவனுடனான நெகிழ்வான தருணங்கள் பற்றி......
பற்றுக பற்றினை பற்றற்று பற்றுக
பற்றி பற்றால் வரும். (இது திருக்குறள் அல்ல)
இதன் குத்துமதிப்பான விளக்கம்: பற்று இருந்தால் பற்றியவற்றைப் பற்றி பற்றிய நேரத்தில் பற்றில்லாமல் எழுதலாம் என்பதாகும்.
எம்.கே.குமார்.
காணாமல் போனவர்களைப் பற்றிய அறிவிப்பு
பெயர்: எம்.கே.குமார் என்று அழைப்படும் குமாரராஜா
வயது: எல்லாம் சின்ன வயசு
அடையாளம்: நல்ல கருத்த நிறம், சுருட்டை முடி, கண்கள் பெண்களைப் பார்த்தால் பளீரிடும்.
தேடுபவர்கள்: ஒருவர் ஊரை விட்டே போய்விட்டார்.(இவரை தேடி அலுத்து என்று நினைக்க வேண்டாம்)மற்றுமொருவர் தேடிக்.......கொண்டேயிருக்கிறார். ஒரு சிலரைத் தவிர மற்றவர்களின் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்தி கிடைத்துள்ளது.
பின் குறிப்பு: ஒரு புத்தகங்க்கள் காத்திருக்கின்றன.
முக்கியக் குறிப்பு: பத்து வெள்ளி தராமல் டபாய்ப்பது என்றெல்லாம் யோசிக்காமல் விரைவில் தொடர்பு கொள்ளவும்
தொடர்புக்கு: தொலைபேசி எண்: 999
விலாசம்: 007, துப்பாக்கி நகர், கொலைகாரன் பேட்டை, திருட்டூர், சதக் சதக் மாவட்டம்,
(அட, தொலைஞ்சி போனவனே, இதையாவது சொந்தமானதா சொந்தவலைப்பூவுல எழுதக்கூடாதா? அப்படியே எடுத்துப்போடணுமா?)
வயது: எல்லாம் சின்ன வயசு
அடையாளம்: நல்ல கருத்த நிறம், சுருட்டை முடி, கண்கள் பெண்களைப் பார்த்தால் பளீரிடும்.
தேடுபவர்கள்: ஒருவர் ஊரை விட்டே போய்விட்டார்.(இவரை தேடி அலுத்து என்று நினைக்க வேண்டாம்)மற்றுமொருவர் தேடிக்.......கொண்டேயிருக்கிறார். ஒரு சிலரைத் தவிர மற்றவர்களின் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்தி கிடைத்துள்ளது.
பின் குறிப்பு: ஒரு புத்தகங்க்கள் காத்திருக்கின்றன.
முக்கியக் குறிப்பு: பத்து வெள்ளி தராமல் டபாய்ப்பது என்றெல்லாம் யோசிக்காமல் விரைவில் தொடர்பு கொள்ளவும்
தொடர்புக்கு: தொலைபேசி எண்: 999
விலாசம்: 007, துப்பாக்கி நகர், கொலைகாரன் பேட்டை, திருட்டூர், சதக் சதக் மாவட்டம்,
(அட, தொலைஞ்சி போனவனே, இதையாவது சொந்தமானதா சொந்தவலைப்பூவுல எழுதக்கூடாதா? அப்படியே எடுத்துப்போடணுமா?)
Tuesday, February 24, 2009
பசுபதியைப் பற்றிய சிறுகுறிப்புகள் - 5
ஆண்டாளுடன் பேசி இருவாரங்களாகிவிட்டதாய் பசுபதி புலம்பத்தொடங்கியதை நான் கேட்காதது போலிருந்தேன்.
புலம்பலின் முடிவாய் அவன் சொன்னதை மட்டும் இதைப் படித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு சொல்ல விழைகிறேன்.
நீண்டதொரு பெருமூச்சுடன் அவன் சொன்னதாவது: "ஆண்டாளை நான் நிஜமாய் நேசித்தேன்"
எம்.கே.குமார்.
24/02/09
புலம்பலின் முடிவாய் அவன் சொன்னதை மட்டும் இதைப் படித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு சொல்ல விழைகிறேன்.
நீண்டதொரு பெருமூச்சுடன் அவன் சொன்னதாவது: "ஆண்டாளை நான் நிஜமாய் நேசித்தேன்"
எம்.கே.குமார்.
24/02/09
Wednesday, February 04, 2009
சிங்கப்பூரில் சகோதரன் முத்துக்குமாருக்கு அஞ்சலி!
நின்னை எரித்து நீ எழுதிய கடிதம் கண்டேன் - என்ன சொல்வது என் சகோதரா,
என்னை எரிக்கிறது அக்கடிதம் - இதயத்தை ரணமாக்கி!
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சிங்கப்பூரில் அமைதி உண்ணாவிரதம் அல்லது மவுன அஞ்சலிக்கு ஏற்பாடு செய்வது குறித்தான சட்டப்பூர்வ அனுமதி நடவடிக்கைகள் பெறுவது குறித்து விவரங்களைச் சேகரித்துக்கொண்டிருந்தேன்.
இந்நிலையில், உயிராயிதம் ஏந்திய சகோதரன் முத்துக்குமாருக்கு நினைவஞ்சலிக்கூட்டம், சிங்கப்பூரின் "பேசுவதற்கான இடத்தில்" (Speaker's Corner) இன்று மாலை ஏழு மணிக்கு நடைபெறுகிறது என தாமதமாகவே அறியவந்தேன்.
அரசிடம் அனுமதி வாங்கி அஞ்சலிக்கூட்டம் நடத்திய நண்பர்களுக்கு எனது நன்றிகள். தகவலறிந்த நண்பர்கள் தயவுசெய்து உடன் பகிர்ந்துகொள்ள வேண்டிக்கொள்கிறேன்.
எம்.கே.குமார்
04/03/09
என்னை எரிக்கிறது அக்கடிதம் - இதயத்தை ரணமாக்கி!
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சிங்கப்பூரில் அமைதி உண்ணாவிரதம் அல்லது மவுன அஞ்சலிக்கு ஏற்பாடு செய்வது குறித்தான சட்டப்பூர்வ அனுமதி நடவடிக்கைகள் பெறுவது குறித்து விவரங்களைச் சேகரித்துக்கொண்டிருந்தேன்.
இந்நிலையில், உயிராயிதம் ஏந்திய சகோதரன் முத்துக்குமாருக்கு நினைவஞ்சலிக்கூட்டம், சிங்கப்பூரின் "பேசுவதற்கான இடத்தில்" (Speaker's Corner) இன்று மாலை ஏழு மணிக்கு நடைபெறுகிறது என தாமதமாகவே அறியவந்தேன்.
அரசிடம் அனுமதி வாங்கி அஞ்சலிக்கூட்டம் நடத்திய நண்பர்களுக்கு எனது நன்றிகள். தகவலறிந்த நண்பர்கள் தயவுசெய்து உடன் பகிர்ந்துகொள்ள வேண்டிக்கொள்கிறேன்.
எம்.கே.குமார்
04/03/09
Thursday, January 29, 2009
கவிஞர் லதா (சிங்கப்பூர்)அவர்களுக்கு வாழ்த்துகள்!
"நான் கொலை செய்யும் பெண்கள்" நூலுக்காக, லதா எனப்படும் கவிஞர் கனகலதா அவர்களுக்கு சிங்கப்பூர் இலக்கிய விருது வழங்கப்பட்டமையில் பெரிதும் மகிழ்கிறேன்; வாழ்த்துகிறேன்.
எம்.கே.குமார்.
29/01/09
K. Kanagalatha
Kanagalatha (Latha) is a News Editor with the Tamil Murasu, the national Tamil daily of Singapore. She has been with the daily from 1990. She has been a prolific contributor of poems, short stories, and literary and arts reviews.
Her poems have been anthologized in Journeys: Words, Home and Nation, a multilingual anthology published by The Centre for the Arts, National University of Singapore (1995), Rhythms-A Singaporean Millennial Anthology of Poetry, published by the National Arts Council (2000), and Kanavum Vidiyum - Anthology of Contemporary Tamil Poetry by Women Poets by the Sahitya Academy of India (2003). Her bilingual poem Still Human was also featured in the MRT: Poems on the Move series on the MRT trains by the National Arts Council.
A short story, Identity, was published in English and Tamil in SINGA (Jan 1999), the Journal of the arts and literature in Singapore. Her poems and short stories have also appeared in prominent overseas Tamil literary journals like Kanayaazhi (India), Kaalachuvadu (India), Uyirnizhal (France) and Sarinigar (Sri Lanka).
நன்றி:http://www.bookcouncil.sg/swc/writersa-k.htm
எம்.கே.குமார்.
29/01/09
K. Kanagalatha
Kanagalatha (Latha) is a News Editor with the Tamil Murasu, the national Tamil daily of Singapore. She has been with the daily from 1990. She has been a prolific contributor of poems, short stories, and literary and arts reviews.
Her poems have been anthologized in Journeys: Words, Home and Nation, a multilingual anthology published by The Centre for the Arts, National University of Singapore (1995), Rhythms-A Singaporean Millennial Anthology of Poetry, published by the National Arts Council (2000), and Kanavum Vidiyum - Anthology of Contemporary Tamil Poetry by Women Poets by the Sahitya Academy of India (2003). Her bilingual poem Still Human was also featured in the MRT: Poems on the Move series on the MRT trains by the National Arts Council.
A short story, Identity, was published in English and Tamil in SINGA (Jan 1999), the Journal of the arts and literature in Singapore. Her poems and short stories have also appeared in prominent overseas Tamil literary journals like Kanayaazhi (India), Kaalachuvadu (India), Uyirnizhal (France) and Sarinigar (Sri Lanka).
நன்றி:http://www.bookcouncil.sg/swc/writersa-k.htm
Wednesday, January 28, 2009
பசுபதியைப் பற்றிய சிறுகுறிப்புகள் - 4
திடுமென சிங்கப்பூரை நேசிப்பதாய் பசுபதி சொன்னதன் அதிசயம் எனக்குப்புரியவில்லை.
காதைத்தீட்டிக்கொண்டேன். ஆண்டு இறுதி விடுமுறைக்காக சென்னை சென்று திரும்பி வந்திருந்த அவனுடைய தோழி மீனாட்சி அவர்களைப் பார்த்தானாம் பசுபதி. மீனாட்சி அவர்களின் ஆதங்கமாய் பசுபதி சொன்னதன் சுருக்கமான விவரணங்கள் இவை.
கூவம் ஆற்றில் ஒரு பதின்ம வயதுப்பெண் மழைவெள்ளத்தில் அடித்துச்செல்லப்படுகிறாள், ஆயிரம்பேர் கரையில் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கின்றனர். ஒருவர் கூட காப்பாற்ற முயற்சிக்கவில்லை.
வங்கிக்கிளைக்கு அக்கவுண்ட் அப்டேட் செய்யச்சென்றால் இரண்டு நாட்கள் கழித்து வரும்படி தலையை நிமிர்த்தி பார்க்காமலேயே சொல்கிறார் வங்கி அதிகாரி.
வீட்டிலிருந்த தமிழ்ப்புத்தகங்களை கோணியில் அடைத்து கிணற்றுக்கருகில் போட்டு விட்டார்கள் வீட்டிலுள்ளவர்கள். மனது கேட்காமல் ராமகிருஷ்ணா மிஷனுக்கு அள்ளிச்சென்று கொடுத்துவிட்டு வந்தாராம் தனது நண்பரொருவர். மணிமேகலையை கொடுக்கும்போது மட்டும் கண்களில் ஜலம். காரணம் அவருடைய இளங்கலை மற்றும் முதுகலையில் மணிமேகலை அவருக்கு மிகவும் பிடித்த பாடம். 94 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறாம்.
ஹார்ட் பாதிக்கப்பட்டிருந்த உறவினர் ஒருவருக்கு ஹார்ட் தேடி அலைந்து 24 மணி நேரத்துக்குள் ஒருவர் ஹார்ட் கொடுக்க முன்வந்துவிட்டார். ஹார்ட்டைக் கொடுக்க முன்வருபவர்கள் இந்தியாவில் இவ்வளவு எளிதாக கிடைக்கிறார்கள் என்றால் எங்கோ ஏதோ தவறு நேருகிறது என மீனாட்சி நினைப்பதாக அவன் சொன்னான்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உறவினர் ஒருவருக்கு உயிர் போய் இரண்டு நாட்களாகியும் வெண்டிலேஷன் செட்டப்போடு ஆஸ்பத்திரியிலே வைத்துக்கொண்டு போராடுவதாய் நாடகம் நடத்தியிருக்கிறார் ஒரு தனியார் மருத்துவமனை டாக்டர். ரமணா தோற்றது போங்கள்!!!
அண்மையில் இறந்துபோன புகழ்பெற்ற எழுத்தாளர் ஒருவரின் மனைவியைச் சந்தித்தாராம் மீனாட்சி. வீட்டில் அப்பா சேர்த்துவைத்திருக்கும் குப்பையையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு வா; உனக்கு நானிருக்கும் இடத்தில் வீடு வாங்கித்தருகிறேன் என்கிறாராம் அவரது பையன்.
மிகவும் புகழ்பெற்ற இருமனைவி கொண்ட எழுத்தாளர் ஒருவர் ஹாஸ்பிட்டல் செலவுக்கே கலைஞரிடம் கையேந்திக்கிடக்கிறாம். பெற்ற பையன்களும் மனைவிகளும் கண்டுக்காமல் விட்டுவிட்டார்களாம்.
சிறிது நேர அமைதிக்குப்பிறகு பசுபதி சொன்னான், பணம் மட்டும் சார்ந்து அமைவதா வாழ்க்கை?
காதைத்தீட்டிக்கொண்டேன். ஆண்டு இறுதி விடுமுறைக்காக சென்னை சென்று திரும்பி வந்திருந்த அவனுடைய தோழி மீனாட்சி அவர்களைப் பார்த்தானாம் பசுபதி. மீனாட்சி அவர்களின் ஆதங்கமாய் பசுபதி சொன்னதன் சுருக்கமான விவரணங்கள் இவை.
கூவம் ஆற்றில் ஒரு பதின்ம வயதுப்பெண் மழைவெள்ளத்தில் அடித்துச்செல்லப்படுகிறாள், ஆயிரம்பேர் கரையில் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கின்றனர். ஒருவர் கூட காப்பாற்ற முயற்சிக்கவில்லை.
வங்கிக்கிளைக்கு அக்கவுண்ட் அப்டேட் செய்யச்சென்றால் இரண்டு நாட்கள் கழித்து வரும்படி தலையை நிமிர்த்தி பார்க்காமலேயே சொல்கிறார் வங்கி அதிகாரி.
வீட்டிலிருந்த தமிழ்ப்புத்தகங்களை கோணியில் அடைத்து கிணற்றுக்கருகில் போட்டு விட்டார்கள் வீட்டிலுள்ளவர்கள். மனது கேட்காமல் ராமகிருஷ்ணா மிஷனுக்கு அள்ளிச்சென்று கொடுத்துவிட்டு வந்தாராம் தனது நண்பரொருவர். மணிமேகலையை கொடுக்கும்போது மட்டும் கண்களில் ஜலம். காரணம் அவருடைய இளங்கலை மற்றும் முதுகலையில் மணிமேகலை அவருக்கு மிகவும் பிடித்த பாடம். 94 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறாம்.
ஹார்ட் பாதிக்கப்பட்டிருந்த உறவினர் ஒருவருக்கு ஹார்ட் தேடி அலைந்து 24 மணி நேரத்துக்குள் ஒருவர் ஹார்ட் கொடுக்க முன்வந்துவிட்டார். ஹார்ட்டைக் கொடுக்க முன்வருபவர்கள் இந்தியாவில் இவ்வளவு எளிதாக கிடைக்கிறார்கள் என்றால் எங்கோ ஏதோ தவறு நேருகிறது என மீனாட்சி நினைப்பதாக அவன் சொன்னான்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உறவினர் ஒருவருக்கு உயிர் போய் இரண்டு நாட்களாகியும் வெண்டிலேஷன் செட்டப்போடு ஆஸ்பத்திரியிலே வைத்துக்கொண்டு போராடுவதாய் நாடகம் நடத்தியிருக்கிறார் ஒரு தனியார் மருத்துவமனை டாக்டர். ரமணா தோற்றது போங்கள்!!!
அண்மையில் இறந்துபோன புகழ்பெற்ற எழுத்தாளர் ஒருவரின் மனைவியைச் சந்தித்தாராம் மீனாட்சி. வீட்டில் அப்பா சேர்த்துவைத்திருக்கும் குப்பையையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு வா; உனக்கு நானிருக்கும் இடத்தில் வீடு வாங்கித்தருகிறேன் என்கிறாராம் அவரது பையன்.
மிகவும் புகழ்பெற்ற இருமனைவி கொண்ட எழுத்தாளர் ஒருவர் ஹாஸ்பிட்டல் செலவுக்கே கலைஞரிடம் கையேந்திக்கிடக்கிறாம். பெற்ற பையன்களும் மனைவிகளும் கண்டுக்காமல் விட்டுவிட்டார்களாம்.
சிறிது நேர அமைதிக்குப்பிறகு பசுபதி சொன்னான், பணம் மட்டும் சார்ந்து அமைவதா வாழ்க்கை?
Tuesday, January 06, 2009
பசுபதியைப் பற்றிய சிறுகுறிப்புகள் - 3
பசுபதியிடம் அபிராமியைப் பற்றிக் கேட்க வேண்டும் என்று எனக்குத்தோன்றியது.
அபிராமி சிங்கப்பூரின் பத்திரிகைத்துறையில் உயர்ந்த பதவியிலிருக்கும் ஒரு பெண். குருவிக்கூட்டைப் பிரித்தெடுத்தது போல நெளிநெளியான நீண்ட கூந்தலுடன் பார்த்ததும் மோகிக்க வைக்கும் இயல்பான அழகு. இன்னாருடன்தான் வாழ்கிறார் என்று உறுதிபடாத பலருடன் உறுதிபடாத தகவல்கள் நிறைய உலவி வந்தாலும் பசுபதி அவரிடம் நெருங்கியிருக்கிறான் என்பதை எப்போதோ ஒரு தருணத்தில் அவனே என்னிடம் சொல்லியதுண்டு. நெளிநெளியாய் அசைந்தன நினைவலைகள்.

அபிராமி நலமாய் இருக்கிறார்; பத்திரிகைத்துறையில் இருந்து இப்போது தொலை ஊடகத்துறைக்கு மாறிவிட்டார். நிகழ்ச்சிகளுக்கு தானே முதன்மை நிர்வாகியாகவும் தயாரிப்பாளராகவும் பணிபுரிவதாகவும் சொன்னான்.
ஏதோ நான் ஏமாற்றமடைந்ததைக் கண்டவனாய், "என்ன சொல்லச்சொல்கிறாய்?
அநாகரிகமான விஷயங்களை என்னிடம் கேட்காதே; மூக்குவரை போகலாம்; மூக்கைத்தொட உரிமையில்லை" என்றான் அமைதியான குரலில்.
எம்.கே.குமார்.
அபிராமி சிங்கப்பூரின் பத்திரிகைத்துறையில் உயர்ந்த பதவியிலிருக்கும் ஒரு பெண். குருவிக்கூட்டைப் பிரித்தெடுத்தது போல நெளிநெளியான நீண்ட கூந்தலுடன் பார்த்ததும் மோகிக்க வைக்கும் இயல்பான அழகு. இன்னாருடன்தான் வாழ்கிறார் என்று உறுதிபடாத பலருடன் உறுதிபடாத தகவல்கள் நிறைய உலவி வந்தாலும் பசுபதி அவரிடம் நெருங்கியிருக்கிறான் என்பதை எப்போதோ ஒரு தருணத்தில் அவனே என்னிடம் சொல்லியதுண்டு. நெளிநெளியாய் அசைந்தன நினைவலைகள்.

அபிராமி நலமாய் இருக்கிறார்; பத்திரிகைத்துறையில் இருந்து இப்போது தொலை ஊடகத்துறைக்கு மாறிவிட்டார். நிகழ்ச்சிகளுக்கு தானே முதன்மை நிர்வாகியாகவும் தயாரிப்பாளராகவும் பணிபுரிவதாகவும் சொன்னான்.
ஏதோ நான் ஏமாற்றமடைந்ததைக் கண்டவனாய், "என்ன சொல்லச்சொல்கிறாய்?
அநாகரிகமான விஷயங்களை என்னிடம் கேட்காதே; மூக்குவரை போகலாம்; மூக்கைத்தொட உரிமையில்லை" என்றான் அமைதியான குரலில்.
எம்.கே.குமார்.
Saturday, January 03, 2009
பசுபதியைப் பற்றிய சிறுகுறிப்புகள்-2
ஜோஹூரில் நடக்கும் ஒரு பீச் பார்ட்டிக்கு தான் பணம் கட்டியிருப்பதாகவும் நானும் அதில் கலந்துகொள்ளவேண்டுமாய் என்னிடம் கேட்டுக்கொண்டிருந்தான் பசுபதி.
என்ன பார்ட்டி என்று கேட்டேன்.
நீரும் நியூடும் என்றான் அவன்.
அப்படின்னா??
ஆண்கள் எவ்வாடையும் அணிய அனுமதியில்லை; பெண்கள் ஜி ஸ்டிரிங்க்ஸ் மட்டும் மட்டும் மட்டும்; அதுவும் 12 மணிக்குப்பிறகு களையப்படவேண்டும்.
எவ்வளவு கட்டணம் என்றேன்.
250 ரிங்கிட்; 100 சிங்கப்பூர் வெள்ளி!
போகலாம் என்றேன்.
போய் வந்தபிறகு அதுபற்றி எதுவும் எழுதக்கூடாது, சரியா?
எம்.கே.குமார்.
என்ன பார்ட்டி என்று கேட்டேன்.
நீரும் நியூடும் என்றான் அவன்.
அப்படின்னா??
ஆண்கள் எவ்வாடையும் அணிய அனுமதியில்லை; பெண்கள் ஜி ஸ்டிரிங்க்ஸ் மட்டும் மட்டும் மட்டும்; அதுவும் 12 மணிக்குப்பிறகு களையப்படவேண்டும்.
எவ்வளவு கட்டணம் என்றேன்.
250 ரிங்கிட்; 100 சிங்கப்பூர் வெள்ளி!
போகலாம் என்றேன்.
போய் வந்தபிறகு அதுபற்றி எதுவும் எழுதக்கூடாது, சரியா?
எம்.கே.குமார்.
Friday, January 02, 2009
பசுபதியைப் பற்றிய சிறுகுறிப்புகள்
பசுபதியைப் பற்றி உங்களிடம் நான் சொல்லவில்லை என நினைக்கிறேன்.
பசுபதி என் பழைய சிநேகிதன். சிங்கப்பூரில் அவனை இந்நிலையில் சந்திப்பேன் என்று நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை. அவனது கதையைப் பின்னொரு நாளில் ஆற அமர உங்களிடம் தொடர்கிறேன். இப்போது அவனைச் சந்தித்த கதை!
ஃபேரர் பார்க் ரோட்டிலிருந்து சந்தர் ரோடு பிரியும் இடத்தில் இருக்கும் ஒரு விடுதி வாசலை நான் கடக்கும்பொழுது ஒரு கணவனும் மனைவியும் அவ்விடுதியை விட்டு வெளியே வந்தார்கள். பரிச்சயமான முகங்களாய்த் தென்பட, மீண்டும் நோக்கியதில் பசுபதி கொஞ்சம் முன்வழுக்கையோடு எனக்குக் கிடைத்தான்.
கொஞ்சம் செழித்த நடையுடன் முன் நோக்கி விரைந்து நகர்ந்த பெண்ணைப்பற்றி கேட்டபோது, "பார்த்தும் உன் ஞாபகத்துக்கு வரவில்லையா? சரத்குமாருக்குக் கூட ஜோடியாய் நடித்திருக்கிறார் அப்பெண். நடிகை ..... என்றான். அவர் சென்ற திசையை நோக்கினேன்.
எம்.கே.குமார்
பசுபதி என் பழைய சிநேகிதன். சிங்கப்பூரில் அவனை இந்நிலையில் சந்திப்பேன் என்று நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை. அவனது கதையைப் பின்னொரு நாளில் ஆற அமர உங்களிடம் தொடர்கிறேன். இப்போது அவனைச் சந்தித்த கதை!
ஃபேரர் பார்க் ரோட்டிலிருந்து சந்தர் ரோடு பிரியும் இடத்தில் இருக்கும் ஒரு விடுதி வாசலை நான் கடக்கும்பொழுது ஒரு கணவனும் மனைவியும் அவ்விடுதியை விட்டு வெளியே வந்தார்கள். பரிச்சயமான முகங்களாய்த் தென்பட, மீண்டும் நோக்கியதில் பசுபதி கொஞ்சம் முன்வழுக்கையோடு எனக்குக் கிடைத்தான்.
கொஞ்சம் செழித்த நடையுடன் முன் நோக்கி விரைந்து நகர்ந்த பெண்ணைப்பற்றி கேட்டபோது, "பார்த்தும் உன் ஞாபகத்துக்கு வரவில்லையா? சரத்குமாருக்குக் கூட ஜோடியாய் நடித்திருக்கிறார் அப்பெண். நடிகை ..... என்றான். அவர் சென்ற திசையை நோக்கினேன்.
எம்.கே.குமார்
Thursday, January 01, 2009
Monday, October 27, 2008
தினக்குரல் கருத்தோவியர் மூர்த்திக்கு தங்கப்பதக்கம்
ஸ்ரீலங்கா வெகுஜன ஊடக(Sri Lanka Massmedia Foundation) ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஊடகத்துறையினருக்கான தெரிவில் தினக்குரலின் கேலிச்சித்திரக்காரர் ஏ.யோகமூர்த்தி 2008 ஆம் ஆண்டின் சிறந்த ஆக்கபூர்வமான கருத்தோவிய கலைஞராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நாளை 28 ஆம் திகதி மாலை 6 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் மேற்படி ஊடக அமைப்பு நடத்தும் பரிசளிப்பு விழாவில் கலைஞர் மூர்த்திக்கு சான்றிதழ் மற்றும் தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.
எனக்குப்பிடித்த கேலிச்சித்திரக்காரர்களில் ஒருவர். வாழ்த்துகள்!!
அன்பன்,
எம்.கே.
நன்றி: தினக்குரல்
நாளை 28 ஆம் திகதி மாலை 6 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் மேற்படி ஊடக அமைப்பு நடத்தும் பரிசளிப்பு விழாவில் கலைஞர் மூர்த்திக்கு சான்றிதழ் மற்றும் தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.
எனக்குப்பிடித்த கேலிச்சித்திரக்காரர்களில் ஒருவர். வாழ்த்துகள்!!
அன்பன்,
எம்.கே.
நன்றி: தினக்குரல்
Sunday, June 01, 2008
"நாம்" - நற்புடை நாற்றங்கால்!


தமிழ் இலக்கிய உலகிற்கு இது புதுவரவுகளை ஆரத்தழுவும் காலம். தமிழ்நாட்டிலிருந்து தமிழினி வெளியிடும் "தமிழினி" மாத இதழ், எனி இந்தியன் வெளியிடும் "வார்த்தை" மாத இதழ், மலேசியாவிலிருந்து சிலமாதங்கள் வெளிவந்த 'காதல்' மாத இதழின் டீம் மறுபடியும் களம் இறங்கியிருக்கும் "வல்லினம்-காலாண்டிதழ்", மற்றுமொரு மலேசிய சிற்றிதழ் "அநங்கம்" ஆகியவை திறல் காட்ட தீரத்தோடு உலகத் தமிழ் இலக்கியக்களத்தில் குதித்திருக்க சிங்கப்பூரிலிருந்தும் அத்தகைய முனைப்போடு களம் கண்டிருக்கிறது "நாம்" - என்றொரு காலாண்டிதழ்.
தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வந்திருக்கும் இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து இந்த புதிய காலாண்டிதழை வெளிக்கொணர்ந்திருக்கிறார்கள். இதழ் ஒன்றைத் தொடங்குதல் என்பது இலக்கிய ஆர்வம் கொண்ட பல இளைஞர்கள் / அறிஞர்களின் தனிப்பட்ட / இணைந்த கனவாகவே இருந்து வந்திருக்கிறது. அதற்கேற்றவாறே சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதும் நாட்பொழுதில் அவை மறைந்துபோன தடத்தையும் தமிழிலக்கிய வரலாற்றில் நிறைய காணலாம். உருப்பெற ஏற்பட்ட காரணங்களில் நூற்றில் ஒரு பங்குகூட அதன் வீழ்ச்சிக்கு வழிவிடமுடியும் என்பதால் தோன்றுவதும் தொடர்வதும் சார்ந்தவர்களின் மன உறுதியில் அமைந்திருக்கிறது.
பன்னெடுங்காலமாய் பொருளாதாரத்திற்கென புலம்பெயர்ந்த தமிழர்கள், போகுமிடங்களிலெல்லாம் இரு விஷயங்களைச் செய்தார்கள். ஒன்று கோவில் கட்டுவது, இரண்டாவது வட்டிக்கடை வைப்பது. மூன்றாவதாய் ஒன்றைச் செய்வதற்கும் இளைஞர்குழாம் சார்ந்த மனமொத்த இயக்கம் சிலதும் எப்போதும் முன்னெடுத்தே நின்றிருக்கிறது. சிங்கப்பூரிலும் ஆதிகாலம் தொட்டு அதற்கான சான்றுகள் நிறைய இருக்கின்றன. 29 வயதிலேயே பத்திரிகை ஆசிரியரான தமிழவேள் கோ. சாரங்கபாணி முதல், பட்டுக்கோட்டையையடுத்த பிச்சினிக்காட்டிலிருந்து வந்த திரு. இளங்கோ வரை பலர் இவ்வனுபவத்தில் வாழ்ந்திருக்கின்றனர். (இதுதொடர்பான தமது அனுபவத்தை திரு. பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள் நிகழ்ச்சியிலும் பகிர்ந்துகொண்டார்.)
"நாம்" இதழை எதனடிப்படையில் வரையறுப்பது என்பதில் சில சிக்கல்கள் நீடிக்கின்றன. வடிவமைப்பில் உயிர்மையைக்கொண்டும் கூறுபொருளில் சிற்றிதழா அல்லது வெகுஜன இதழா என்பது சார்ந்தும், சிங்கப்பூர் வாழ் நண்பர்கள் வெளியீடு எனினும் வெளியீட்டு முகவரி இந்தியாவிலிருந்தும்/ தனிச்சுற்றுக்கு மட்டும் என முழுமையை அடைவதில் சில குறைபாடுகள் உள்ளன. இணைய நண்பர்களின் ஆக்கங்களையே பொதுவாகக் காணமுடிகிறது எனினும் இணைய எழுத்துகளின் மேம்பட்ட உள்ளீடுகளைக்கொண்டு அதுவே அதன் சிறப்பம்சமாக மாற நேரலாம்.
முதல் இதழின் அச்சகம், முதன்முதலில் புத்தகம் தயாரித்திருக்கிறது என நினைக்கிறேன். ஆங்காங்கு பக்கங்கள் "மை"யிட்டுக்கொண்டிருப்பதும், புகைப்படங்கள் தெளிவற்றிருப்பதும் முதல் இதழின் திருஷ்டிக்காக என்று எடுத்துக்கொள்வோம். அடுத்தடுத்த இதழ்கள் முக்கிய அச்சகங்கள் வழியாக முழுமைபெற்று வரும் என்று உறுதி தெரிவித்தார்கள் "நாம்" குழுவினர்.
இதழ் வெளியீட்டு நிகழ்வில் சிங்கப்பூரிலிருக்கும் அனைத்து தமிழ் அமைப்புகளும் அல்லது அதன் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர் என்பதிலும் வெளியிடப்பட்ட இடத்திற்காகவும் வெளியீட்டு நிகழ்வில் நான் கலந்துகொண்டமையில் களிப்படைகிறேன். முதல் இதழில் எனது ஒரு கதையும் வந்திருக்கிறது. கற்பனையாய் எழுதிய கதை, வெளியான தருணத்தில் உண்மையாய் ஆனதை செய்தியாய்க் கண்டு திரு. பாண்டித்துரை அழைத்து ஆச்சரியப்பட்டார்.
சிங்கப்பூரை உருவாக்கிய சர். ஸ்டாம்ஃபோர்டு ராஃபிள்ஸ், 1822ல் உருவாக்கியதும் அவரது மறைவுக்குப்பின் 1859ல் மீண்டும் உருப்பெற்றதுமான 149 ஆண்டுகால வரலாற்றுச்சிறப்புடைய சிங்கப்பூர் பொட்டானிக் கார்டனில் வைத்து "நாம்" இதழ் வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சி முடிந்து, சிங்கப்பூரின் மூத்த தமிழார்வலர்கள் திரு. கண்ணபிரான் மற்றும் திரு. செ.ப.பன்னீர் செல்வம் ஆகியோருடன் பேசிக்கொண்டிருக்கையில், தமிழகத்திலிருந்து எடுத்துவரப்பட்ட ரப்பர் மரக்கன்றுகள் மலேயா முழுக்க நடுவதற்கு முன்பாக, இந்த பொட்டானிக் கார்டனில்தான் முதன்முதலாக சோதனையின் பொருட்டு நடப்பட்டது என்றார்கள். அத்தகு பெருமைமிக்க இத்தோட்டத்தில் இன்னொருமுறை ஒரு இலக்கியச்செடியை நட்டுவைத்திருக்கிறார்கள். நிகழ்ச்சியை குனிந்து உற்றுநோக்கிக்கொண்டிருந்த அந்த நீண்ட நெடிய மரத்தைப்போல இவ்விதழும் எல்லாவித சிறப்புகளும் பெற்று வளரவேண்டும்; வாழவேண்டும்.
எந்தவொரு இதழ் ஆரம்பிக்கப்பட்டாலும் அதனை மையமாக வைத்து குறைந்தது பத்து எழுத்தாளர்களாவது உருவாவார்கள் என்று தனது அனுபவத்தை வைத்துச்சொல்வாராம் திரு. மனுஷ்யபுத்திரன். அந்த வகையில் இந்த இதழ் பத்து எழுத்தாளர்களால் அல்லது எழுத்தார்வம் மிக்கவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது; இன்னும் பல பத்துப்பேர்களைக் கொண்டு சேர்க்கும் என நம்புவோம்.
(பத்து, பத்து என்றதும், சம்பந்தமில்லையெனினும் இது ஞாபகத்திற்கு வருகிறது. புரசைவாக்கம் குமுதம் அலுவலகத்திற்கு வெளியே "பத்து ரூபாய் நோட்டே, நீ போய் ஆயிரம் பேருக்கு உதவி செய்துவிட்டு பத்தாயிரம் ரூபாயாகத் திரும்பிவா" என்று எழுதப்பட்டிருக்கும். யாராவது இதை கவனித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.)
அன்பன்
எம்.கே.குமார்
Saturday, May 03, 2008
இருட்டை வெறும் இருட்டு என்றுதான் நினைத்திருந்தேன் - வண்ணதாசனுக்கு நன்றி!
திருச்சியின் மையப்பகுதியில் செருப்பு தைப்பவரைத்தேடி அலைந்து ஏழு எட்டு மணி அளவில் பிரதான சாலை ஒன்றில் ஒருவரைத் தரிசித்தேன். நீர்த்தேங்கியிருந்த பள்ளமான சாலைப்பகுதியைத் தாண்டி அவர் அமர்ந்திருந்தார். நான் சென்ற நேரம் அன்றைய அவரது பொழுதின் முடிவுக்காலமாதலால் எல்லா உபகரணங்களையும் மூட்டை கட்டிவிட்டி வெளியிலிருந்து பார்க்க நன்கு இறுக்கி நையப்பட்ட ஒரு குப்பைத்தொட்டியைப்போன்ற தோரணையுள்ள ஒரு இடமாக்கிவிட்டு எழுந்து நகரவிருந்தார். நான் வந்து அவரிடம் சேர்ந்தபொழுது அவர் என்னை வெகு எளிதாய் உதாசீனப்படுத்தியிருக்கக்கூடும். ஏனெனில் நான் வேண்டியது அத்தனை மூட்டையையும் பிரித்து எடுத்து செய்யத்தகுந்த வருமானம் தரக்கூடிய வேலையில்லை. ஆனாலும் சாலைத்தூசிகள் சூழ்ந்த உலகில் வண்டிச்சத்தங்களும் இரைச்சலும் முண்டியடிக்கும் வெளிச்சத்துக்கு ஏமாந்த அவ்வேளையில் ஒட்டுமொத்த மூட்டைகளையும் பிரித்து குத்தூசியையும் நூலையில் எடுத்து அவர் அவ்வேலையைச்செய்தார். இரண்டு விஷயங்கள் என்னை வசீகரித்தன. அவ்வேலையைச் செய்ய அவர் காட்டிய முனைப்பும் அக்கறையும் ஒன்று. மற்றொன்று எங்களிடையே சிறு மின்னலைப்போல தோன்றி மறைந்த நாங்கள் இருவரும் திருப்தியடைந்த ஒரு தருணம்! பெரும் மின்னல் ஒன்று வெட்டிச்சென்றபின் அதைச் சார்ந்து ஒரு வெளிச்சம் பரவிக்கிடந்து மறையுமே அதைப்போல அது இன்றுவரை மறைந்தும் மறையாததாய் இருக்கிறது. பல்வேறு பிரிவுத்துவம் வாய்ந்த இவ்வாழ்வில் எதையும் சாராது வரும் பூரணத்துவம் மிகுந்த அந்தத் திருப்தியானது எத்தகைய புனைவும் எளிதில் தராத ஒன்று. வண்ணதாசன் கதைகளில் அம்மின்னலும் அதன் தாக்கமும் எனக்கு நிறைந்திருக்கிறது.
வண்ணதாசனின் சிறுகதைத்தொகுப்புகளில் 'நடுகை' (பாதிமட்டுமே) மற்றும் 'கிருஷ்ணன் வைத்த வீடு' ஆகிய இரண்டை மட்டும் வாசிக்கும் பாக்கியம் இக்காலத்தில் எனக்கு கிட்டியிருந்தது.
தனது திருமணத்திற்கு மேளம் வாசித்தவரைப் பற்றிய ஒரு கதை, அமரர் ஊர்தியைப் பின்தொடருபவனைப் பற்றிய இன்னொரு கதை, தனது மாமரத்திலிருந்து சிறுகுச்சி ஒன்று ஒடிக்கப்படுவதை உணர்ந்து வீட்டிலிருந்து எழுந்து வரும் கிழவியின் கதை, வெறும் மின்மினிப்பூச்சிகளின் வெளிச்சத்தில் அலசப்படும் "தாழம்பூ" தாத்தாவின் கதை, நகர வாழ்க்கையில் நிலை தடுமாறி ஊர் திரும்ப ஏங்கும் 'நெல்லை சிவாஜி' குத்தாலிங்கம் அண்ணாச்சியின் கதை என கதை என்ற பெயரில் நிகழ்வுகள் பதியப்படுவதை நெகிழ்ச்சியுடன் ஆமோதிக்கிறேன்.
நினைவில் ஒரே மாதிரியாகத்தான் நகர்ந்து போகிறார்கள் - மேளம் வாசிப்பவர்கள் அனைவரும் எனக்கு; தரையில் சிந்தும் பூக்களைத் தவிர்த்துக்கொண்டே அமரர் ஊர்தியைப் பின் தொடர்ந்து சென்றவர்களில் நானும் ஒருவன்; கிழவியினுடைய மாமர குச்சியின் வாசனையை குழந்தையின் காதுக்கடியில் கிடைக்கும் பால்வாசனையாய் உணர நேர்ந்தமையில் ததும்பிய மகிழ்வு; நீளமான கூந்தலைக்கொண்ட தலையில் தவழும் தாழம்பூவின் நறுமணத்தில் தாத்தாவை விட நான் திளைத்திருந்தமையில் கிடைத்த மோகம்; சில பேருடைய குடிவாசனை மட்டும் எப்போதுமே எனக்கு பிடித்திருந்தாய் இருக்கும் நிலைமை என மனம் இளகும் உயிர் நெகிழும் ஐம்புலன்களும் ஏங்கும் இலக்கிய சுகத்தை சில கதைகள் ஏற்படுத்திச்சென்றிருக்கின்றன.
அடுக்கி வைக்கும் செங்கல்களைப்போல நிகழ்வுகளால் கதையைக் கட்டமைக்கும் கலையைக் காண நேருவதுண்டு. ஒரே ஒரு செங்கல்லைக்கொண்டு தாஜ்மஹாலையே கட்ட முயலும் சம்பவத்திற்கிணையான இலக்கியங்களுமுண்டு. செங்கல்லையே காட்டாது அதைப்பற்றிய உலகை அலசும் கதைகளுமுண்டு. ஒரே ஒரு செங்கல்லைத் திரும்ப திரும்பப் பார்த்து அதன் செம்மைத்தனத்தை பதிய முற்படுவதும் உண்டு. வண்ணதாசனின் கதைகள் இதை அடிப்படையாகக்கொண்டது என நினைக்கிறேன். பலமுறை பார்ப்பதால் உண்டாகும் இயற்கையான சலிப்பையும் மீறி ஏதோ ஒன்று தர முயலுவது இவரது படைப்புகளின் வெற்றிக்கதையாகும்.
'யாருக்கும் தெரியாது என்று நினைத்திருந்த', நடந்து பார்க்காத சசிப்பெண்ணின் பாதத்தை துணியால் வேலைக்காரன் மூடுவதை மறக்க நினைத்தும் முடியாத 'கிருஷ்ணன் வைத்த வீடு' மறக்க முடியாத ஒரு கதை மட்டுமல்ல; செவ்வியல் சிறுகதையின் கட்டுமான வடிவத்திற்கு மிகச்சிறந்த ஒரு உதாரணமும் என்பேன். சிறந்த வாசகனை இக்கதை தத்தெடுத்துக்கொள்ளும் என்பதை உணர நேருகையில் மகிழ்கிறேன்.
அப்போது எனக்கு பத்து வயதிருக்கும். மாமா வீட்டிற்கு எதற்காகவோ சென்றிருந்தேன். அங்கு என்ன நடந்தது என்பதும் ஞாபகமில்லை. ஆனால் நான் திரும்ப வேண்டும். இரவு எட்டு-ஒன்பது மணிக்கு காட்டின் வழியே எனது வீட்டுக்கு நான் திரும்பவரவேண்டிய சூழ்நிலை. யாரும் துணைக்கு இல்லை. எதற்கு துணை என்று இப்போது நினைத்தாலும் அன்று அந்த இருளைக் கடந்து வீட்டுக்கு வந்துசேர்ந்த சம்பவத்தையே நான் அடைந்த மிகப்பெரிய வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாக இன்றுவரை நினைத்துக்கொண்டிருக்கிறேன். வெற்றி என்றால் யாரை எதிர்த்து? இருட்டையா? இருட்டு எனக்கு என்ன செய்தது? இருட்டு எப்படி எனக்கு எதிரியானது? இருட்டை ஜெயித்தேன் என்றால் இருட்டுக்கா நான் பயந்தேன்? இல்லை இருட்டின் அடையாளங்களுக்கா? இருட்டின் அடையாளங்கள்தான் என்ன? பூச்சி, பாம்பு, பேய், பூதம், திருடர்கள்? அதுசரி, இருட்டின் அடையாளங்கள் இவைகள் மட்டும் தானா?
இருட்டை தேர்ந்த புகைப்படக்கலைஞனைப்போல, ஓவியனைப்போல அடிக்கடி அலசுகிறார் வண்ணதாசன். சாலாச்சி அக்காவும், திலகா அக்காவும், சந்திமுனைப் பிள்ளையாரும் இருளும் வெளிச்சமும் போல எங்கும் நிறைந்திருக்கிறார்கள்.
இவ்விரு தொகுப்புகளிலும் கதைகளை எங்கும் நான் காணவில்லை. வெறும் புனைவு மட்டுமே கதை என்று கொண்டோமானால் அவைகள் எவற்றையும் இத்தொகுப்புகளில் நான் காணவில்லை. புனைவுகளின் தட்டையான தடங்களை எங்கும் நான் தரிசிக்கவில்லை. வாழ்க்கை, வாழ்க்கை, வாழ்க்கை மட்டுமே கதைக்களங்களில் விரவிக்கிடக்கின்றன.
நண்பர் மானசாஜென்னிடம் பேசிக்கொண்டிருந்தபொழுது 'நிலை' என்று வண்ணதாசனின் ஒரு கதை இருப்பதாய்ச் சொன்னார். நான் இப்போது அதைப்படிக்கவில்லை. ஆனால் 'நிலை' என்ற பெயரில் ஏறக்குறைய ஏழுவருடங்களுக்கு முன் ஒரு கதை படித்தேன். சிறந்த சிறுகதைகளாய் யாரோ ஒருவர் தொகுத்த அத்தொகுப்பில் அதுவும் ஒன்று. நள்ளிரவு வரை வேலை செய்துவிட்டு தீபாவளிக்கு முந்தைய இரவில் வீடு திரும்பும் ஒருவனின் கதை அது. அந்தக் கதையும் அதில் வரும் லாரியில் அடிபட்டுச் செத்துக்கிடக்கும் ஒரு எலியும் இன்றுவரை நினைவிலாடுகின்றன.
இரண்டு விஷயங்களுக்காய் திரு. வண்ணதாசனுக்கு நான் நன்றி சொல்ல விழைவது எதார்த்தமானது என நினைக்கிறேன்.
ஒன்று, நேற்றுவரை இருட்டு, வெறும் இருட்டாகவே எனக்கு இருந்திருக்கிறது - இப்போது அது, நெருங்கிய ஒரு உறவாகி விட்டிருக்கிறது -
இரண்டாவது, எப்போதும் பார்வையிலிருந்து எளிதாய் நகர்ந்துவிடும் எந்த ஒன்றையும், இப்போது மீண்டும் ஒருமுறையாவது பார்க்க ஆரம்பித்திருக்கிறேன் - வண்ணதாசனால்!
அன்பன்,
எம்.கே.குமார்.
நன்றி: வாசகர் வட்டம், சிங்கப்பூர்.http://vasagarvattam.blogspot.com/
வண்ணதாசனின் சிறுகதைத்தொகுப்புகளில் 'நடுகை' (பாதிமட்டுமே) மற்றும் 'கிருஷ்ணன் வைத்த வீடு' ஆகிய இரண்டை மட்டும் வாசிக்கும் பாக்கியம் இக்காலத்தில் எனக்கு கிட்டியிருந்தது.
தனது திருமணத்திற்கு மேளம் வாசித்தவரைப் பற்றிய ஒரு கதை, அமரர் ஊர்தியைப் பின்தொடருபவனைப் பற்றிய இன்னொரு கதை, தனது மாமரத்திலிருந்து சிறுகுச்சி ஒன்று ஒடிக்கப்படுவதை உணர்ந்து வீட்டிலிருந்து எழுந்து வரும் கிழவியின் கதை, வெறும் மின்மினிப்பூச்சிகளின் வெளிச்சத்தில் அலசப்படும் "தாழம்பூ" தாத்தாவின் கதை, நகர வாழ்க்கையில் நிலை தடுமாறி ஊர் திரும்ப ஏங்கும் 'நெல்லை சிவாஜி' குத்தாலிங்கம் அண்ணாச்சியின் கதை என கதை என்ற பெயரில் நிகழ்வுகள் பதியப்படுவதை நெகிழ்ச்சியுடன் ஆமோதிக்கிறேன்.
நினைவில் ஒரே மாதிரியாகத்தான் நகர்ந்து போகிறார்கள் - மேளம் வாசிப்பவர்கள் அனைவரும் எனக்கு; தரையில் சிந்தும் பூக்களைத் தவிர்த்துக்கொண்டே அமரர் ஊர்தியைப் பின் தொடர்ந்து சென்றவர்களில் நானும் ஒருவன்; கிழவியினுடைய மாமர குச்சியின் வாசனையை குழந்தையின் காதுக்கடியில் கிடைக்கும் பால்வாசனையாய் உணர நேர்ந்தமையில் ததும்பிய மகிழ்வு; நீளமான கூந்தலைக்கொண்ட தலையில் தவழும் தாழம்பூவின் நறுமணத்தில் தாத்தாவை விட நான் திளைத்திருந்தமையில் கிடைத்த மோகம்; சில பேருடைய குடிவாசனை மட்டும் எப்போதுமே எனக்கு பிடித்திருந்தாய் இருக்கும் நிலைமை என மனம் இளகும் உயிர் நெகிழும் ஐம்புலன்களும் ஏங்கும் இலக்கிய சுகத்தை சில கதைகள் ஏற்படுத்திச்சென்றிருக்கின்றன.
அடுக்கி வைக்கும் செங்கல்களைப்போல நிகழ்வுகளால் கதையைக் கட்டமைக்கும் கலையைக் காண நேருவதுண்டு. ஒரே ஒரு செங்கல்லைக்கொண்டு தாஜ்மஹாலையே கட்ட முயலும் சம்பவத்திற்கிணையான இலக்கியங்களுமுண்டு. செங்கல்லையே காட்டாது அதைப்பற்றிய உலகை அலசும் கதைகளுமுண்டு. ஒரே ஒரு செங்கல்லைத் திரும்ப திரும்பப் பார்த்து அதன் செம்மைத்தனத்தை பதிய முற்படுவதும் உண்டு. வண்ணதாசனின் கதைகள் இதை அடிப்படையாகக்கொண்டது என நினைக்கிறேன். பலமுறை பார்ப்பதால் உண்டாகும் இயற்கையான சலிப்பையும் மீறி ஏதோ ஒன்று தர முயலுவது இவரது படைப்புகளின் வெற்றிக்கதையாகும்.
'யாருக்கும் தெரியாது என்று நினைத்திருந்த', நடந்து பார்க்காத சசிப்பெண்ணின் பாதத்தை துணியால் வேலைக்காரன் மூடுவதை மறக்க நினைத்தும் முடியாத 'கிருஷ்ணன் வைத்த வீடு' மறக்க முடியாத ஒரு கதை மட்டுமல்ல; செவ்வியல் சிறுகதையின் கட்டுமான வடிவத்திற்கு மிகச்சிறந்த ஒரு உதாரணமும் என்பேன். சிறந்த வாசகனை இக்கதை தத்தெடுத்துக்கொள்ளும் என்பதை உணர நேருகையில் மகிழ்கிறேன்.
அப்போது எனக்கு பத்து வயதிருக்கும். மாமா வீட்டிற்கு எதற்காகவோ சென்றிருந்தேன். அங்கு என்ன நடந்தது என்பதும் ஞாபகமில்லை. ஆனால் நான் திரும்ப வேண்டும். இரவு எட்டு-ஒன்பது மணிக்கு காட்டின் வழியே எனது வீட்டுக்கு நான் திரும்பவரவேண்டிய சூழ்நிலை. யாரும் துணைக்கு இல்லை. எதற்கு துணை என்று இப்போது நினைத்தாலும் அன்று அந்த இருளைக் கடந்து வீட்டுக்கு வந்துசேர்ந்த சம்பவத்தையே நான் அடைந்த மிகப்பெரிய வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாக இன்றுவரை நினைத்துக்கொண்டிருக்கிறேன். வெற்றி என்றால் யாரை எதிர்த்து? இருட்டையா? இருட்டு எனக்கு என்ன செய்தது? இருட்டு எப்படி எனக்கு எதிரியானது? இருட்டை ஜெயித்தேன் என்றால் இருட்டுக்கா நான் பயந்தேன்? இல்லை இருட்டின் அடையாளங்களுக்கா? இருட்டின் அடையாளங்கள்தான் என்ன? பூச்சி, பாம்பு, பேய், பூதம், திருடர்கள்? அதுசரி, இருட்டின் அடையாளங்கள் இவைகள் மட்டும் தானா?
இருட்டை தேர்ந்த புகைப்படக்கலைஞனைப்போல, ஓவியனைப்போல அடிக்கடி அலசுகிறார் வண்ணதாசன். சாலாச்சி அக்காவும், திலகா அக்காவும், சந்திமுனைப் பிள்ளையாரும் இருளும் வெளிச்சமும் போல எங்கும் நிறைந்திருக்கிறார்கள்.
இவ்விரு தொகுப்புகளிலும் கதைகளை எங்கும் நான் காணவில்லை. வெறும் புனைவு மட்டுமே கதை என்று கொண்டோமானால் அவைகள் எவற்றையும் இத்தொகுப்புகளில் நான் காணவில்லை. புனைவுகளின் தட்டையான தடங்களை எங்கும் நான் தரிசிக்கவில்லை. வாழ்க்கை, வாழ்க்கை, வாழ்க்கை மட்டுமே கதைக்களங்களில் விரவிக்கிடக்கின்றன.
நண்பர் மானசாஜென்னிடம் பேசிக்கொண்டிருந்தபொழுது 'நிலை' என்று வண்ணதாசனின் ஒரு கதை இருப்பதாய்ச் சொன்னார். நான் இப்போது அதைப்படிக்கவில்லை. ஆனால் 'நிலை' என்ற பெயரில் ஏறக்குறைய ஏழுவருடங்களுக்கு முன் ஒரு கதை படித்தேன். சிறந்த சிறுகதைகளாய் யாரோ ஒருவர் தொகுத்த அத்தொகுப்பில் அதுவும் ஒன்று. நள்ளிரவு வரை வேலை செய்துவிட்டு தீபாவளிக்கு முந்தைய இரவில் வீடு திரும்பும் ஒருவனின் கதை அது. அந்தக் கதையும் அதில் வரும் லாரியில் அடிபட்டுச் செத்துக்கிடக்கும் ஒரு எலியும் இன்றுவரை நினைவிலாடுகின்றன.
இரண்டு விஷயங்களுக்காய் திரு. வண்ணதாசனுக்கு நான் நன்றி சொல்ல விழைவது எதார்த்தமானது என நினைக்கிறேன்.
ஒன்று, நேற்றுவரை இருட்டு, வெறும் இருட்டாகவே எனக்கு இருந்திருக்கிறது - இப்போது அது, நெருங்கிய ஒரு உறவாகி விட்டிருக்கிறது -
இரண்டாவது, எப்போதும் பார்வையிலிருந்து எளிதாய் நகர்ந்துவிடும் எந்த ஒன்றையும், இப்போது மீண்டும் ஒருமுறையாவது பார்க்க ஆரம்பித்திருக்கிறேன் - வண்ணதாசனால்!
அன்பன்,
எம்.கே.குமார்.
நன்றி: வாசகர் வட்டம், சிங்கப்பூர்.http://vasagarvattam.blogspot.com/
Thursday, April 24, 2008
நெடு நாட்களுக்குப்பிறகு எனக்குப்பிடித்த கலைஞர்!
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண
மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
கருணாநிதி கொண்டு வந்த தீர்மானம் சட்டசபையில் நிறைவேறியது
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டசபையில் முதல் - அமைச்சர் கருணாநிதி தீர்மானம் கொண்டு வந்தார். அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
சென்னை, ஏப்.24-
தமிழக சட்டசபையில் நேற்று இலங்கை பிரச்சினை பற்றி பேசுவதற்காக பா.ம.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன.
அப்போது நடந்த விவாதத்தில் ஜி.கே.மணி (பா.ம.க.) கண்ணப்பன் (ம.தி.மு.க.) சுதர்சனம் (காங்கிரஸ்) ஆகியோர் காரசாரமாக பேசினார்கள். அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் கருணாநிதி பதில் அளித்து பேசியதாவது:-
வருந்துகிறேன்
இலங்கைப் பிரச்சினைக்காக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை பரிவு உணர்வோடும், இரக்க சிந்தனையோடும், தமிழர்களுக்கு உதவிட வேண்டும் என்கின்ற பாச மனப்பான்மையோடும் கொண்டு வந்து, அதே அடிப்படையிலே விவாதம் நடைபெற்றிருந்தால் நான் மிகுந்த ஆறுதல் அடைவேன்.
ஆனால், எந்த நோக்கத்திற்காக ஜி.கே.மணி இந்தத் தீர்மானத்தை கொண்டு வருவதாகச் சொல்லி முன்மொழிந்தாரோ அந்த நோக்கம் சிதைகின்ற வகையில் சில வார்த்தைப் பிரயோகங்கள் அமைந்ததற்காக நான் வருத்தப்படுகிறேன்.
ஆணிவேரை அசைக்கக் கூடாது
இந்த அவையை இந்திய அரசின் ஆதிக்கத்திலே உள்ள ஒரு நிர்வாகத்தின் அடிப்படையில் நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இங்கு நாம் எழுப்புகின்ற கருத்துக்கள், நிறைவேற்றுகின்ற தீர்மானங்கள், அந்த ஆணிவேரை அசைத்துவிடக் கூடாது.
இங்கே கண்ணப்பன், சுதர்சனத்தின் கருத்துக்கு மாறுபட்ட கருத்து சொல்ல எழுந்து உணர்ச்சி வேகத்தில், இலங்கையிலே உள்ள தமிழர்களைக் கொல்வதற்கு இந்திய அரசு சாதகமாக இருக்கிறது அல்லது தூண்டுகோலாக இருக்கிறது என்பது போன்ற கருத்து அமைந்த வாசகத்தை அவர் சொன்னதை நான் அவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.
அவர் துடிப்பாகப் பேசக் கூடியவர். தீவிரமாகச் சிந்திக்கக் கூடியவர். நான் மறுக்கவில்லை. ஆனால், இப்படி கடுப்பாகப் பேசக் கூடியவர் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. அந்த வகையிலே அவர் சொன்ன அந்த வார்த்தைகளை அவைக் குறிப்பிலே இருந்து நீக்குவதற்கு நான் பரிந்துரை செய்கிறேன். (கண்ணப்பன் சொன்ன சில வாசகங்களை அவைக் குறிப்பிலிருந்து சபாநாயகர் ஆவுடையப்பன் நீக்கினார்).
ஒரே குழுவாக இருந்தால்
இதிலே ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதிலே எந்தவிதமான கருத்து மாறுபாடும் இந்த அரசுக்கு இல்லை. ஆளுங்கட்சிக்கும் எனக்கும் இல்லை. ஏனென்றால், இலங்கைப் பிரச்சினை ஆரம்பமான அந்தக் காலத்திலே இருந்து, தந்தை செல்வா அவர்களுடைய காலத்திலேயிருந்து நடைபெறுகின்ற போராட்டம், இந்த உரிமைப் போராட்டம். செல்வா மறைந்த பிறகு அவருடைய வழித் தோன்றல்களாக பல பேர் இந்தப் போராட்டத்திலே ஈடுபட்டு அறவழியிலே அவர்கள் நடத்திய கிளர்ச்சிகளெல்லாம் பயனற்றுப் போய்விட்டன.
பிறகு, விடுதலை பெற்றே தீரவேண்டும் என்று கிளம்பி அவர்கள் போராளிகளாக மாறினார்கள். போராளிகளாக மாறியவர்கள் ஒரு குழுவாக இருந்து அந்தப் போராட்டத்தை நடத்தியிருந்தால் இந்நேரம் அவர்கள் நேபாளத்தைப் போல வெற்றியினை ஈட்டியிருக்க முடியும். வேறு பல நாடுகளிலே நடந்த விடுதலைக் கிளர்ச்சிக்கு கிடைத்த வெற்றியைப் போல வெற்றி பெற்றிருக்க முடியும்.
குழுவுக்குள் ஏற்பட்ட மோதல்
போராளிகளுடைய முக்கிய குறிக்கோளே, போராளிகளுக்குள் போராடுவது என்ற இந்த போராளிகளுக்குள்ளே நடந்த போராட்டம் தான் இன்றைக்கு நாம் இந்த அவையிலே அவர்களுக்காக பரிந்துரை செய்து பேச வேண்டிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால்தான், இடைக்காலத்திலே நாம் விடுதலைப் போராளிகளுக்குச் சொன்ன அறிவுரை, `சகோதர யுத்தத்தை நிறுத்துங்கள்' என்பதுதான்.
அந்தப் போராளிக் குழு, ஒரே போராளிக் குழுவாக இருந்து ஒரே ஒற்றுமையோடு இலங்கையிலே நடைபெறுகின்ற அக்கிரமங்களைக் கண்டிக்க வேண்டும்; தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற வேண்டும் என்ற எண்ணத்திலே செயல்பட்டதா என்றால் எதுவும் இல்லை. ஒரு குழுவை இன்னொரு குழு வீழ்த்த வேண்டும்; ஒரு குழுவை இன்னொரு குழு மாய்க்க வேண்டும்; ஒரு குழுவுக்கு செல்வாக்கு இல்லாமல் செய்ய வேண்டும் என்ற முறையிலே தான் ஒவ்வொரு குழுவின் தலைவர்களும் அங்கே கொல்லப்பட்டார்கள், வெட்டப்பட்டார்கள், சுடப்பட்டார்கள் என்பதையெல்லாம் மறந்து விடக் கூடாது. அமிர்தலிங்கம் கொல்லப்பட வேண்டியவரா? ம.பொ.சிவஞானம் போல விளங்கியவர். அவர் ஏன் கொல்லப்பட்டார்?
பலவீனப்படுத்திய ஒற்றுமையின்மை
இப்படி பல போராளிகள் அவர்களுக்குள்ளே அடித்துக் கொண்டு, சுட்டுக் கொண்டு செத்திருக்கிறார்கள். இவைகளெல்லாம்தான் இந்தப் போராட்டத்தை பலகீனப்படுத்தியது. இத்தகைய விடுதலைப் போராட்டம் உலகத்திலே எல்லா இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கும்போது இந்த சின்னஞ்சிறு நாடு இலங்கையிலே வலுவிழந்ததற்குக் காரணம் நமக்குள்ளே ஒற்றுமை இல்லாதது தான். நாம் வலுவிழந்து போய் பகைவர்களுக்கு இடம் கொடுத்து விட்டோம்.
சிங்கள ராணுவம் இன்றைக்கு நம்மை ஏறி மேய்கிறது என்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இருந்தாலும் அதற்காக, நம்முடைய வீட்டுப் பிள்ளை கிணற்றோரத்திற்கு சென்று அதிலே விழுந்து விடுகின்ற நிலை வரும் போது அதைத் தாங்கிப் பிடிக்கின்ற அந்தத் தாய் உள்ளமாக, தமிழர்களுடைய உள்ளமாக, தமிழ்நாட்டிலே வாழ்கின்றவர்களின் உள்ளமாக இருக்கின்ற காரணத்தினால்தான், தொப்புள்கொடி உறவு உள்ளவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இங்கே ஒரு தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டுமென்று ஜி.கே.மணி எண்ணினார். நானும் அதை ஆதரிக்கிறேன். அதே நிலையிலே கண்ணப்பன் ஆதரித்தால் நானும் அவ்வாறே ஆதரிக்கிறேன்.
மத்திய அரசை குறை கூறாதீர்
ஆனால், இதிலே இந்திய அரசை குறை கூறிப் பயனில்லை. அவர்கள் ஏற்கனவே பெரும் இழப்புக்கு ஆளானவர்கள். அவர்களுடைய பெருந்தலைவர் ராஜீவ்காந்தியை இந்தக் காரணத்திற்காக இழந்தவர்கள். அவர்களை நாம் பழி சொல்லியோ குறை கூறியோ பயனில்லை. இருந்தாலும், அந்தக் குடும்பத்திலே இன்னமும் அந்த மனித நேயம் உண்டு என்பதை சமீப காலத்து செய்திகளெல்லாம் நமக்கு விளக்குகின்றன.
அது வேலூர் சிறைச்சாலை செய்தியாக இருந்தாலும் சரி. அல்லது அன்றைக்கு சோனியாகாந்தி மன்னிப்பு கொடுத்த செய்தியாக இருந்தாலும் சரி. அந்த அம்மையார் தூக்கிலிடப்பட்டால் அவரின் குழந்தை என்ன கதி ஆவது என்று சிந்தித்தார் என்ற செய்திகளை எல்லாம் பார்க்கும் போது அவர்களிடத்திலே மனித நேயம் குடி கொண்டிருப்பதைக் காண்கிறோம். அந்த மனித நேயத்தின் அடிப்படையில், நாம் நிறைவேற்றுகின்ற தீர்மானத்தை எண்ணிப் பார்ப்பார்கள். அங்கே வாழ்கின்ற தமிழர்களுடைய உயிர்களுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையோடு இந்தத் தீர்மானத்தை முன்மொழிகிறேன்.
தீர்மானம்
``இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அங்கே மோதலில் ஈடுபட்டு வரும் இரு பிரிவினர் இடையேயும் பேச்சுவார்த்தைகளுக்கு இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இலங்கையில் அமைதியை ஏற்படுத்த, முறையானதொரு அரசியல் தீர்வு எட்டப்படுவதற்காக பயனுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்'' என வலியுறுத்துகின்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன். நீங்கள் அதை ஆதரித்துத் தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏகமனதாக நிறைவேற்றம்
அதைத் தொடர்ந்து சுதர்சனம், ஜி.கே.மணி, கண்ணப்பன் ஆகியோர் இந்த தீர்மானத்தை முழுமனதோடு ஆதரிப்பதாக தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் கருணாநிதி கொண்டு வந்த அந்த தீர்மானம் ஏகமனதாக சட்டசபையில் நிறைவேறியது.
நன்றி: தினத்தந்தி.
மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
கருணாநிதி கொண்டு வந்த தீர்மானம் சட்டசபையில் நிறைவேறியது
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டசபையில் முதல் - அமைச்சர் கருணாநிதி தீர்மானம் கொண்டு வந்தார். அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
சென்னை, ஏப்.24-
தமிழக சட்டசபையில் நேற்று இலங்கை பிரச்சினை பற்றி பேசுவதற்காக பா.ம.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன.
அப்போது நடந்த விவாதத்தில் ஜி.கே.மணி (பா.ம.க.) கண்ணப்பன் (ம.தி.மு.க.) சுதர்சனம் (காங்கிரஸ்) ஆகியோர் காரசாரமாக பேசினார்கள். அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் கருணாநிதி பதில் அளித்து பேசியதாவது:-
வருந்துகிறேன்
இலங்கைப் பிரச்சினைக்காக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை பரிவு உணர்வோடும், இரக்க சிந்தனையோடும், தமிழர்களுக்கு உதவிட வேண்டும் என்கின்ற பாச மனப்பான்மையோடும் கொண்டு வந்து, அதே அடிப்படையிலே விவாதம் நடைபெற்றிருந்தால் நான் மிகுந்த ஆறுதல் அடைவேன்.
ஆனால், எந்த நோக்கத்திற்காக ஜி.கே.மணி இந்தத் தீர்மானத்தை கொண்டு வருவதாகச் சொல்லி முன்மொழிந்தாரோ அந்த நோக்கம் சிதைகின்ற வகையில் சில வார்த்தைப் பிரயோகங்கள் அமைந்ததற்காக நான் வருத்தப்படுகிறேன்.
ஆணிவேரை அசைக்கக் கூடாது
இந்த அவையை இந்திய அரசின் ஆதிக்கத்திலே உள்ள ஒரு நிர்வாகத்தின் அடிப்படையில் நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இங்கு நாம் எழுப்புகின்ற கருத்துக்கள், நிறைவேற்றுகின்ற தீர்மானங்கள், அந்த ஆணிவேரை அசைத்துவிடக் கூடாது.
இங்கே கண்ணப்பன், சுதர்சனத்தின் கருத்துக்கு மாறுபட்ட கருத்து சொல்ல எழுந்து உணர்ச்சி வேகத்தில், இலங்கையிலே உள்ள தமிழர்களைக் கொல்வதற்கு இந்திய அரசு சாதகமாக இருக்கிறது அல்லது தூண்டுகோலாக இருக்கிறது என்பது போன்ற கருத்து அமைந்த வாசகத்தை அவர் சொன்னதை நான் அவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.
அவர் துடிப்பாகப் பேசக் கூடியவர். தீவிரமாகச் சிந்திக்கக் கூடியவர். நான் மறுக்கவில்லை. ஆனால், இப்படி கடுப்பாகப் பேசக் கூடியவர் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. அந்த வகையிலே அவர் சொன்ன அந்த வார்த்தைகளை அவைக் குறிப்பிலே இருந்து நீக்குவதற்கு நான் பரிந்துரை செய்கிறேன். (கண்ணப்பன் சொன்ன சில வாசகங்களை அவைக் குறிப்பிலிருந்து சபாநாயகர் ஆவுடையப்பன் நீக்கினார்).
ஒரே குழுவாக இருந்தால்
இதிலே ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதிலே எந்தவிதமான கருத்து மாறுபாடும் இந்த அரசுக்கு இல்லை. ஆளுங்கட்சிக்கும் எனக்கும் இல்லை. ஏனென்றால், இலங்கைப் பிரச்சினை ஆரம்பமான அந்தக் காலத்திலே இருந்து, தந்தை செல்வா அவர்களுடைய காலத்திலேயிருந்து நடைபெறுகின்ற போராட்டம், இந்த உரிமைப் போராட்டம். செல்வா மறைந்த பிறகு அவருடைய வழித் தோன்றல்களாக பல பேர் இந்தப் போராட்டத்திலே ஈடுபட்டு அறவழியிலே அவர்கள் நடத்திய கிளர்ச்சிகளெல்லாம் பயனற்றுப் போய்விட்டன.
பிறகு, விடுதலை பெற்றே தீரவேண்டும் என்று கிளம்பி அவர்கள் போராளிகளாக மாறினார்கள். போராளிகளாக மாறியவர்கள் ஒரு குழுவாக இருந்து அந்தப் போராட்டத்தை நடத்தியிருந்தால் இந்நேரம் அவர்கள் நேபாளத்தைப் போல வெற்றியினை ஈட்டியிருக்க முடியும். வேறு பல நாடுகளிலே நடந்த விடுதலைக் கிளர்ச்சிக்கு கிடைத்த வெற்றியைப் போல வெற்றி பெற்றிருக்க முடியும்.
குழுவுக்குள் ஏற்பட்ட மோதல்
போராளிகளுடைய முக்கிய குறிக்கோளே, போராளிகளுக்குள் போராடுவது என்ற இந்த போராளிகளுக்குள்ளே நடந்த போராட்டம் தான் இன்றைக்கு நாம் இந்த அவையிலே அவர்களுக்காக பரிந்துரை செய்து பேச வேண்டிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால்தான், இடைக்காலத்திலே நாம் விடுதலைப் போராளிகளுக்குச் சொன்ன அறிவுரை, `சகோதர யுத்தத்தை நிறுத்துங்கள்' என்பதுதான்.
அந்தப் போராளிக் குழு, ஒரே போராளிக் குழுவாக இருந்து ஒரே ஒற்றுமையோடு இலங்கையிலே நடைபெறுகின்ற அக்கிரமங்களைக் கண்டிக்க வேண்டும்; தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற வேண்டும் என்ற எண்ணத்திலே செயல்பட்டதா என்றால் எதுவும் இல்லை. ஒரு குழுவை இன்னொரு குழு வீழ்த்த வேண்டும்; ஒரு குழுவை இன்னொரு குழு மாய்க்க வேண்டும்; ஒரு குழுவுக்கு செல்வாக்கு இல்லாமல் செய்ய வேண்டும் என்ற முறையிலே தான் ஒவ்வொரு குழுவின் தலைவர்களும் அங்கே கொல்லப்பட்டார்கள், வெட்டப்பட்டார்கள், சுடப்பட்டார்கள் என்பதையெல்லாம் மறந்து விடக் கூடாது. அமிர்தலிங்கம் கொல்லப்பட வேண்டியவரா? ம.பொ.சிவஞானம் போல விளங்கியவர். அவர் ஏன் கொல்லப்பட்டார்?
பலவீனப்படுத்திய ஒற்றுமையின்மை
இப்படி பல போராளிகள் அவர்களுக்குள்ளே அடித்துக் கொண்டு, சுட்டுக் கொண்டு செத்திருக்கிறார்கள். இவைகளெல்லாம்தான் இந்தப் போராட்டத்தை பலகீனப்படுத்தியது. இத்தகைய விடுதலைப் போராட்டம் உலகத்திலே எல்லா இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கும்போது இந்த சின்னஞ்சிறு நாடு இலங்கையிலே வலுவிழந்ததற்குக் காரணம் நமக்குள்ளே ஒற்றுமை இல்லாதது தான். நாம் வலுவிழந்து போய் பகைவர்களுக்கு இடம் கொடுத்து விட்டோம்.
சிங்கள ராணுவம் இன்றைக்கு நம்மை ஏறி மேய்கிறது என்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இருந்தாலும் அதற்காக, நம்முடைய வீட்டுப் பிள்ளை கிணற்றோரத்திற்கு சென்று அதிலே விழுந்து விடுகின்ற நிலை வரும் போது அதைத் தாங்கிப் பிடிக்கின்ற அந்தத் தாய் உள்ளமாக, தமிழர்களுடைய உள்ளமாக, தமிழ்நாட்டிலே வாழ்கின்றவர்களின் உள்ளமாக இருக்கின்ற காரணத்தினால்தான், தொப்புள்கொடி உறவு உள்ளவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இங்கே ஒரு தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டுமென்று ஜி.கே.மணி எண்ணினார். நானும் அதை ஆதரிக்கிறேன். அதே நிலையிலே கண்ணப்பன் ஆதரித்தால் நானும் அவ்வாறே ஆதரிக்கிறேன்.
மத்திய அரசை குறை கூறாதீர்
ஆனால், இதிலே இந்திய அரசை குறை கூறிப் பயனில்லை. அவர்கள் ஏற்கனவே பெரும் இழப்புக்கு ஆளானவர்கள். அவர்களுடைய பெருந்தலைவர் ராஜீவ்காந்தியை இந்தக் காரணத்திற்காக இழந்தவர்கள். அவர்களை நாம் பழி சொல்லியோ குறை கூறியோ பயனில்லை. இருந்தாலும், அந்தக் குடும்பத்திலே இன்னமும் அந்த மனித நேயம் உண்டு என்பதை சமீப காலத்து செய்திகளெல்லாம் நமக்கு விளக்குகின்றன.
அது வேலூர் சிறைச்சாலை செய்தியாக இருந்தாலும் சரி. அல்லது அன்றைக்கு சோனியாகாந்தி மன்னிப்பு கொடுத்த செய்தியாக இருந்தாலும் சரி. அந்த அம்மையார் தூக்கிலிடப்பட்டால் அவரின் குழந்தை என்ன கதி ஆவது என்று சிந்தித்தார் என்ற செய்திகளை எல்லாம் பார்க்கும் போது அவர்களிடத்திலே மனித நேயம் குடி கொண்டிருப்பதைக் காண்கிறோம். அந்த மனித நேயத்தின் அடிப்படையில், நாம் நிறைவேற்றுகின்ற தீர்மானத்தை எண்ணிப் பார்ப்பார்கள். அங்கே வாழ்கின்ற தமிழர்களுடைய உயிர்களுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையோடு இந்தத் தீர்மானத்தை முன்மொழிகிறேன்.
தீர்மானம்
``இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அங்கே மோதலில் ஈடுபட்டு வரும் இரு பிரிவினர் இடையேயும் பேச்சுவார்த்தைகளுக்கு இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இலங்கையில் அமைதியை ஏற்படுத்த, முறையானதொரு அரசியல் தீர்வு எட்டப்படுவதற்காக பயனுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்'' என வலியுறுத்துகின்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன். நீங்கள் அதை ஆதரித்துத் தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏகமனதாக நிறைவேற்றம்
அதைத் தொடர்ந்து சுதர்சனம், ஜி.கே.மணி, கண்ணப்பன் ஆகியோர் இந்த தீர்மானத்தை முழுமனதோடு ஆதரிப்பதாக தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் கருணாநிதி கொண்டு வந்த அந்த தீர்மானம் ஏகமனதாக சட்டசபையில் நிறைவேறியது.
நன்றி: தினத்தந்தி.
Friday, December 21, 2007
சிங்கப்பூரில் தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் விழா - பதில்!
பதில் வந்துவிட்டது! தன்னார்வத்தொண்டு நிறுவனம்(மாய் இருந்தால்) அதன் உள்நாட்டு பதிவு குறித்தும் சேகரிக்கப்படும் நிதி குறித்தும் அனுமதிச்சீட்டு பெறாமல், நிதி சேகரிப்பு எதிலும் ஈடுபட்டால் புகார் செய்யலாமாம். பார்க்க பதில்!

நன்றி "டுடே" (Today)
இதுவரை நடந்த எல்லா விழாவும் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் கலைவிழா என்ற பெயரிலேதான் நடந்தன. கட்டிடம் கட்டுவதற்கு என்று சரத்குமார் அவ்வப்போது சொன்னதைத் தவிர வேறு எங்கும் அவ்வாறு எழுத்துப்பூர்வமாய் குறிப்பிடப்படவில்லை. அதனால் இவ்விழா நடக்கலாம்.

நன்றி "டுடே" (Today)
இதுவரை நடந்த எல்லா விழாவும் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் கலைவிழா என்ற பெயரிலேதான் நடந்தன. கட்டிடம் கட்டுவதற்கு என்று சரத்குமார் அவ்வப்போது சொன்னதைத் தவிர வேறு எங்கும் அவ்வாறு எழுத்துப்பூர்வமாய் குறிப்பிடப்படவில்லை. அதனால் இவ்விழா நடக்கலாம்.
Tuesday, December 18, 2007
தென்னிந்திய நடிகர் சங்கம் சிங்கப்பூரில் நடத்தும் நிகழ்ச்சி - நடக்குமா?
"டுடே" நாளிதழில் வரும் வாசகக்கடிதங்கள்/சந்தேகங்கள் யாவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து / துறையிடமிருந்து உடனுக்குடன் பதில் பெறும். அவ்வகையில் இன்றைய "டுடே" யில் ஒரு வாசகர், வெளிநாட்டு கட்டிட நிதிக்காக சிங்கப்பூரில் நிகழ்ச்சிகள் நடத்தலாமா? என்பது பற்றி ஒரு மடலை எழுதியிருக்கிறார். பார்க்க மடல்:

நன்றி: "டுடே"
எனக்குத் தெரிந்தவரை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் திரட்டும் நிதியைத்தவிர மற்ற நிதிக்காக நிகழ்ச்சி ஏதும் நடத்தக்கூடாது. காவல்துறை என்ன சொல்கிறது, பார்ப்போம்.

நன்றி: "டுடே"
எனக்குத் தெரிந்தவரை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் திரட்டும் நிதியைத்தவிர மற்ற நிதிக்காக நிகழ்ச்சி ஏதும் நடத்தக்கூடாது. காவல்துறை என்ன சொல்கிறது, பார்ப்போம்.
Subscribe to:
Comments (Atom)
