Friday, February 06, 2004

ஒரு அயோக்கியனும் சில நல்லவர்களும். (!?)

மூன்று சாமியார்கள் மௌனவிரதம் இருக்க நினைத்தார்கள். மூவரும் அப்படியே இருந்துகொண்டிருந்தபொழுது ஒரு அழகான பெண் வந்து முகவரியைக்காட்டி வழி கேட்டாள் அவர்களிடம். முதலாமவர் சற்று யோசித்து, தான் மௌனவிரதம் இருப்பதாகவும் அதனால் முகவரியைச்சொல்ல முடியாமைக்கு வருந்துவதாகவும் சொல்லி வருத்தப்பட்டார்.

இரண்டாமவர் லேசாகப் புன்னகைத்து, 'பார்த்தாயா நீ அப்படி சொல்லிவிட்டு வாய் திறந்து பேசி விட்டாயே இப்போது மௌனவிரதம் கலைந்து விட்டதே' என்று நக்கலாகச் சொல்லிச்சிரித்தார்.

மூன்றாமவர் மெதுவாகப்புன்னகைத்து, 'அடப்பாவிகளா எல்லோரும் பேசிவிட்டீர்களா? நல்லவேளை. நான் மட்டுமே கொஞ்சமாய்ப்பேசியிருக்கிறேன்' என்றார் அப்பாவியாக.

கமலஹாசனை வன்முறையின் உச்சம் என்கிறார் வரதன் என்பவர். கமல் மிகவும் வக்கிர புத்தி கொண்டவராம். வெட்டவெளியில் உடலுறவு கொள்ளும் காட்சி வக்கிரத்தின் உச்சமாம். சம்பந்தாசம்பந்தமேயில்லாமல் கிருஷ்ணசாமி எதிர்த்தது சரிதான் என்கிறார். இன்னும் திருமாவளவன் ஏன் இதையெல்லாம் எதிர்க்கவில்லை என்றும் அவர் கேட்கிறார். (படிக்க: திண்ணை- விருமாண்டி கட்டுரை.)

மதுரை உருப்படாமல் போனதற்கு கமலும் காரணம் என்பதாயும் குற்றஞ்சாட்டுகிறார். மொத்தத்தில் கேணத்தனத்தின் உச்சகட்டமாக இதை நான் கருதுகிறேன். விருமாண்டி படத்திற்குப்பதிலாக வேறு எதையவது பார்த்து விட்டு வந்து பினாத்துகிறாரா இவர்?

அய்யா, புண்ணியவான்களே.....ஒத்துக்கொள்கிறோம். திருமாவளவனும் கிருஷ்ணசாமியும் நல்லவர்கள். கமல் கெட்டவர்தான்.

கிருஷ்ணசாமி உண்மையிலே டாக்டருக்குப்படித்தவர்தான் என்றால் அவர் கமலிடம் போய் மன்னிப்புக்கேட்கவேண்டும். எதுவுமே தெரியாமல் படப்பிடிப்பை நிறுத்தி ஒரு கோடி ரூபாய் அவருக்கு இழப்பு ஏற்படுத்தியதற்காக. இப்போது போய் படத்தைப்பார்த்துவிட்டாவது.

செய்வாரா டாக்டருக்குப்படித்தவர்? இல்லை கோட்டாவில் படித்தவர்தான் என்பதை தனது முட்டாள்த்தனத்தால் இதிலும் நிரூபிப்பாரா?

எம்.கே.குமார்.

No comments:

Search This Blog