Friday, February 06, 2004

நல்ல ஆரம்பம்.

எந்தவித தயக்கமுமில்லாமல் என்னால் சொல்லமுடியும். இளைய எழுத்தாளர்களுக்கு இவர் ஒரு 'முதன்மைவழிகாட்டி' என்று.

இன்றைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு இவரைப்போன்றவர்கள் மிகவும் அவசியம். வளரும் இளைய தலைமுறையினரை எந்தவித மேதாவித்தனங்களும் மேற்பார்வைத்தனங்களும் இன்றி தன்னோடு சகதோழனாய் ஊக்கங்காட்டி அழைத்துச்செல்பவர்களில் இவரது ஈடுபாட்டைக் கண்டு நான் வியந்திருக்கிறேன். வாய்யா..என்று தோழமையோடு தோளில் கை போட்டுச்செல்லும் நேரத்திலும், 'எழுதுய்யா..ஒரு புதுப்புரட்சியை சக்தியை நாமெல்லாம் சேர்ந்து கொண்டுவரணும்'ங்கிற அவரது உணர்வு என்னை நிறைய யோசிக்க வைத்திருக்கிறது.
இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற வகையில் மாலனுக்கு அடுத்தபடியாக இவரது நடவடிக்கைகள் என்னைப்போன்றவர்களுக்கு
மிகவும் சந்தோசத்தையும் வழிக்காட்டுதல்களையும் அளித்துக்கொண்டிருக்கின்றன என்றால் அதில் துளியும் மிகையில்லை.

இளைய தலைமுறைக்கு இவரது தேர்ந்த எழுத்தும் சரளமான நடையும் எப்போதும் கவனிக்கக்கூடியன. பாகிஸ்தான் ஒரு புதிரின் சரிதம் படித்து வரலாற்றின் முனைகளில் இவரது விஷய ஞானத்தை அறிந்து கொண்ட நான், '154 கிலோபைட்' புத்தகத்தைப்படித்துவிட்டு இவரது நகைச்சுவை உணர்ச்சி குறித்து மிகவும் சிலாக்கியமடைந்தேன்.

இப்போது பாரதிய பாஷா பரிஷத் கிடைத்திருக்கிறது. ஜெ.கே, சிவசங்கரி, பிரபஞ்சன், ராஜம் கிருஷ்ணன் போன்றவர்களுக்கு அடுத்து தமிழில் இவருக்காம்.

தயங்காமல் சொல்வேன், இது ஒரு ஆரம்பம்தான்.

வாழ்க.. பாரா அவர்களின் எழுத்துப்பணி.

எம்.கே.குமார்.

No comments:

Search This Blog