Tuesday, September 27, 2005

புத்தக அறிமுகம்: பாலிதீன் பைகள்.

'படித்தவுடன் மனதில் நிற்பதைப்போன்ற ஒரு புத்தகத்தின் பெயரைச் சொல்லுங்கள், உடனே நான் படிக்கவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறு உங்களூக்கு இருந்தால் அதற்காக நான் பரிந்துரைக்கும் நூலின் பெயர் இதுதான்.

பீ அள்ளூம் சமூகத்திலிருந்து வந்த அவனும் புரோகிதம் சார்ந்த சமூகத்திலிருந்து வந்த அவளும் காதலித்து மணம் புரிகிறார்கள். மணம் புரிவதற்கு முன் அவர்கள் வாழ்ந்து வந்திருக்கும் சமூகத்தை ஒரு மீள்பார்வை செய்கிறார்கள். செய்வதின் விளைவு இந்நாவல்.

மணிரத்னத்தின் சில படங்களைப்போல கதை சொல்லல் முன்னும் பின்னும் நகர்ந்து நகர்ந்து செல்கிறது. அது ஒரு புதுமையாகவும் கதையின் எளிமையை அசாதரணமாகவும் சொல்ல முற்பட்டிருக்கிறது.

நாவலின் தலைப்பு சொல்ல வந்ததைச் சுருக்கெனச் சொல்லிச் செல்கையில் அதற்காக இவ்வளவு பிரயத்தனப்பட்டு அடிக்கடி அதை விளக்க முயன்றிருக்க ஆசிரியருக்கு அவசியம் இல்லை.

கழிவறையில் பிறந்த தன் நண்பனுக்கு இந்நூலை அர்ப்பணிக்கிறார் ஆசிரியர். கதையில் வரலாற்றுப்பின்னணிகளும் நிறைந்திருக்கின்றன. இன்னும் கொஞ்சம் விரிவாக ஒரு முழு வரலாற்றுச்சாதனமாக இந்நூலை அவர் எழுதியிருக்கலாமோ என்று எனக்குத்தோன்றியது.

படித்துப்பாருங்கள்.

நூலின் பெயர்: பாலிதீன் பைகள்
ஆசிரியர்: இரா.நடராசன்
வெளியீடு: காவ்யா
16, 17 இ கிராஸ்,
இந்திரா நகர்
பெங்களூர்.
நூலின் விலை: ரூபாய் 65.


அன்பன்.
எம்.கே.

No comments:

Search This Blog