Monday, October 25, 2010

டயலாக் 25/10

நியாயம் மனுஷனுக்கு மனுஷன் மாறலாம்ன்னு நான் நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா, ஊருக்கு ஊரு அது மாறும்னு இப்போ நம்புறேன்டா பாபு.

எப்படிடா, இப்போ மட்டும் நம்பிக்கை வந்ததுட்டதா சொல்றெ கோபு?

அட, தர்மபுரி பேருந்தில் 3 உயிர்களை தீவைத்துக்கொளுத்திய மூவருக்கும் மணதண்டனையாம். மதுரை தினகரன் அலுவலகத்தில் 3 உயிர்களைத் தீவைத்துக் கொளுத்தியவர்களுக்கு பதவியும் பரிசுமாம்.

இப்போ புரியுதா ஊருக்கு ஊரு நியாயம்? அது தர்மபுரி; இது மதுரை!

1 comment:

ரோஸ்விக் said...

அது எதிர்க்கட்சி... இது ஆளும்கட்சி...

அவங்கெல்லாம் யாரு பெத்த பிள்ளைங்களோ... இது "அவரு" பெத்த பிள்ளை....

Search This Blog