Tuesday, May 24, 2005

உங்களுக்கு ஒரு வேண்டுகோள்- கமலஹாசனிடமிருந்து(ம்)!

சன் டிவியின் 'மே தின' சிறப்பு நிகழ்ச்சியில் கமல் அவர்கள் பேசியதைப் பார்த்திருப்பீர்கள்! இரண்டு வாரத்திற்கு முன் வந்த வந்த கல்கி பத்திரிகையில் அவரது பேட்டியையும் படித்திருப்பீர்கள்! இந்த இரண்டிலிருந்து மட்டுமல்ல; அண்மையில் அவர் கொடுத்த தெலுங்கு பத்திரிகைப் பேட்டியிலும் கூட, கமல் என்ற ஒரு கலைஞனின் மனதிற்குள்ளேயான தொழிலியல் நடைமுறை இயலாமைகளும் அவனது வாழ்வு மீதான அடக்குமுறைகளின் வீரியமும் வருத்தத்தின் விழிகளில் தொக்கி நின்றதை நம்மால் கண்டிருக்க முடியும். 'ஒரு சாதிக்கும் கலைஞனுக்கு சமுதாயத்தின் மரியாதைப் பங்களிப்பு இறப்புக்குப் பின் தானா இன்னும்' என்று இன்றும் வருத்தப்படவைக்கின்றன இவைகள்.

காந்தியைச் சுடச்சொல்லி ஆளனுப்பி காரியம் முடிந்தபின் அவருக்கு ஆங்காங்கு ஒரு சிலை வைத்துவிட்டோம். 'பாரதி' என்ற 'பா பைத்தியக்காரனுக்கு அன்று சாப்பாடு போடக்கூட விரும்பாமல் இறுதிக் காரியத்திலும் கூட இணைந்துகொள்ள அருவருத்து ஒதுங்கி நின்றுவிட்டு இன்று அவனைத் 'தேசியக்கவி' ஆக்கிவிட்டோம். அது யாரப்பா புதுமைப்பித்தனா? ரேஷன் கார்டு வைத்திருக்கிறாயா? இது யார் வலம்புரி ஜானா? உடம்புக்கு சரியில்லையின்னு ஆஸ்பத்திரிக்கி வரியேப்பா, கையில காசு வெச்சுருக்கியா? ஏய் தம்பி, குடும்பம் குட்டியெல்லாத்தையும் விட்டுபுட்டு வெள்ளக்காரனுக்கு குண்டு வெச்சி தூக்குல தொங்குறீயே? தேவையாவெ உனக்கு இது? பகத்சிங்காம் பகத்சிங்கு, பைத்தியசிங்கா நீ?

ஏம்பா முக்கோண வெண்தாடி நாதா, செவாலியேவெல்லாம் வாங்கியிருக்கியாமே, ஹிந்தி தெரியுமா உனக்கு? அது யாருப்பா அந்தப்பக்கம் மதிய உணவுத்திட்ட நாயகனா? வெட்டி வேலையப்பா உன்னது!

உங்களது கரங்கள் பெரியதாய் என்ன செய்துவிடப்போகின்றன? அடிக்கடி முதுகில் குத்தும் அல்லது ஒரே ஒருமுறை ஒருத்தருக்கு என, பல மலர் வளையங்கள் வைக்கும். உங்களது இதழ் எப்போது திறந்து மூடப்போகின்றன? மலர் வளையம் வைத்த கையோடு மைக் பிடிக்கும் உங்களுக்கு, இரண்டே இரண்டு வார்த்தைகள் புகழ்ந்து பேசுவதற்கு திறந்து மூடும்.

ஆயிரம் மலர் வளையங்களை விட ஒரே ஒரு மலர்மாலையும் மனம் நிறைந்த பாராட்டும் சாதிக்கக்கூடியவை எத்தனை எத்தனை நண்பர்களே!

இறந்த பின் மட்டும் வெளியில் காட்டுவதற்கென உங்கள் கைகளும் வாயும் இருந்தால் இனிமேல் அவை இரண்டும், அவற்றுக்கு(ம்) பயன்படாமல் போகட்டும்!

கல்கி பேட்டியிலிருந்து....

"தனிப்பட்ட முறையில் பிராமணர்கள் பால் எந்தவித காழ்ப்பும் பெரியாருக்கு இல்லை"

"பகுத்தறிவுப்பாதையை பெரியார் மட்டும் தான் கொண்டு வரவேண்டுமென்பதில்லை. சுபிட்சமே கொண்டு வரும்"

"மேஜை மீது கிடக்கிற தண்ணீரை தள்ளிவிட்டால் மற்றொரு பக்கம் போய்விடும். அப்படித்தான் மும்பை முழுவதுமே இப்போது தாராவியாகிவிட்டது"

"ஆபத்தின் விளிம்புவரை சென்று எட்டிப்பார்க்கும் ஒரு முனைப்பு எனக்கு எப்போதும் உண்டு."

"வர்த்தகக் கோட்பாடுகளிலிருந்து தமிழ் சினிமாவின் திரைக்கதையை மீட்டெடுக்கவில்லை. சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டெஸ்ட்! அதில் கொஞ்சம் தீவிரம் இருக்கத்தான் செய்யும்; கொஞ்சம் ரத்தம் கசியத்தான் செய்யும். நோ பெயின் நோ கெயின்! புத்தர் சொன்னதாக எடுத்துக்கொண்டாலும் சரி; ஆர்நால்டு சொன்னாலும் சரி. வலி இல்லாமல் வாழ்க்கை இல்லை! "

"இது ஒரு தொழிலாக வியாபாரமாக இருக்கும்போது, புரட்சிகளில் ஈடுபடும் தியாகம் என்னிடமில்லை."

"நேர்மை ஜெயிக்குமா என்று தெரியாது. ஆனால் நியாயம் கண்டிப்பாக உலகத்துக்குப் புரியும். நேர்மை புரிய கொஞ்சம் நேரம் ஆகும். நேர்மமயானவனா இல்லையா என்பதை அவன் வாழ்ந்துதான் காட்டவேண்டும். அது ஒரு பெரிய கொடுமை!"

"மாற்றம் வேண்டும், மாற்றம் வேண்டும் என்று கேட்காதே..அந்த மாற்றமாக நீயே மாறி விடு!
என்பார் காந்தி. நான் காந்தியின் மிகப்பெரிய ரசிகன். கொடுமை என்னவென்றால், காந்தியைப் பற்றி நான் தப்பாக படம் எடுத்தேன் என்கிறார்கள். காந்தியின் உருவத்தைச் சிதைக்கும் படமா ஹேராம்?"

"தமிழர்கள் எனக்கு கைதட்டாவிட்டாலும் பரவாயில்லை. இப்படி எதிர்பாராத நேரத்தில் அதுவும் பின்புரத்திலிருந்து பொறடியில் தட்டாமல் இருக்கலாம் இல்லையா? முதுகில் குத்துவதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?"

"அழும் கோழைத்தனம் எனக்கு இல்லை. ஆனால் சிரிக்கும் பக்குவத்தை மட்டும் நான் இழந்துவிட்டேன் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்'

"கலைஞன் என்பவன் சாந்தமான மனநிலையில் இருந்துகொண்டு செயல்படவேண்டும். வேலை செய்கிற உச்சகட்டத்தில் என்னைத் தொந்தரவு பண்ணிவிட்டு, ஓய்வு பெறும்போது நீங்கள் பாராட்டுவது எனக்கு வேண்டாம்."

கடைசி வரிகள் நமக்கு மிகவும் முக்கியம் நண்பர்களே! இனிமேலும் இறந்த காலத்திற்காய் ஏங்காதீர்! நிகழ்காலத்தின் சக சாதனையளர்களை போற்றுங்கள், மதியுங்கள்!

எம்.கே.குமார்

நன்றி: கல்கி!

12 comments:

Anonymous said...

I think!
அவரைப் போற்றுவதை விட அவரைத் தொந்தரவு செய்யாமல் இருப்பதயே அவர் விரும்புவார்.

ஈழநாதன்(Eelanathan) said...

ஒரு கலைஞராக கமல் நிறைய சாதிக்கத் துடிக்கிறார்.தனது வாழ்க்கைக்காகவும் எதிர்வரும் சாதனைகளுக்கு பணம் வேண்டியும் வர்த்தக நோக்கில் சில சில சமரச்ங்களைச் செய்துகொள்ள வேண்டியிருக்கிறதென்று இங்கு நடந்த உரையாடலில் குறிப்பிட்டார்.
படம் நடத்தி வந்த பணத்தில் அரிசிமூட்டையும் தையல் இயந்திரம் வழங்குபவர்கள்.ரசிகர்கள் சொந்தமாகக் காசு சேர்த்து செய்யும் நல்ல காரியங்களுக்கான பெயரை புன்முறுவலுடன் பெற்றுக்கொண்டு தன்காசைப் பத்திரமாக வைத்திருப்பவர்கள் மத்தியில்.தானே போய் இரத்ததானமும் உடல்தானமும் செய்து மற்றவர்களை ஊக்குவிக்கும் கமலகாசன் வாழும் காலத்திலியே பாராட்டப்படவேண்டியவர்.

ஜெ. ராம்கி said...

மும்பை எக்ஸ்பிரஸ் கேசட்டை தானே விற்று சாதனை படைத்தது பத்தி கல்கில சொல்லியிருந்தாரே.. அதையும் எடுத்துப் போட்டிருக்கலாம்?!

குழலி / Kuzhali said...

தமிழ் மனத்திலே தொடர்ந்து கமலைப்பற்றி வந்த பதிவுகளின் எதிர்வினையோ? இந்தப்பதிவு என எண்ணுகின்றேன்,

திரையில் மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் எல்லா நேரமும் நடித்துக்கொண்டிருக்கும் நடிகர்களை காணும் பொழுது கமல் எவ்வளவோ உயரத்திலுள்ளார்.
எனது பதிவில் கமலை விமர்சித்துள்ளேன், எனது விமர்சனம் அவரது படுக்கையறையை எட்டிப்பார்த்தோ அல்லது வேறு தனி மனித சுதந்த்திரத்தை பற்றியதோ அல்ல

//ஒரு கலைஞராக கமல் நிறைய சாதிக்கத் துடிக்கிறார்.தனது வாழ்க்கைக்காகவும் எதிர்வரும் சாதனைகளுக்கு பணம் வேண்டியும் வர்த்தக நோக்கில் சில சில சமரச்ங்களைச் செய்துகொள்ள வேண்டியிருக்கிறதென்று //

வர்த்தகத்திற்காக சமரசம் ஏற்றுக்கொள்ளக்கூடியதே, ஆனால் இந்த சமரம் எந்த விதமான பின் விளைவை சமுதாயத்தில் ஏற்படுத்துகின்றது, வெறும் பணத்திற்காக சமுதாயத்தை பலியிடலாமா என்பதே எனது விமர்சனமேயன்றி வேறு எதுவும் இல்லை, கமலைப்பற்றியதான எனது பதிவின் சுட்டி இதோ கமலின் சாதீயமும் சமூக பொறுப்பும்

எம்.கே.குமார் said...

அனானிமஸ், ஈழநாதன், ராம்கி, மற்றும் குழலி ஆகியோரின் பின்னூட்டங்களுக்கு எனது நன்றிகள்.

அனானிமஸ், நீங்கள் சொல்வதும் சரி போற்றுவது என்பது ஆதரவு தருவது என்றும் அமையலாம்.


ஈழநாதன், உண்மை. வாழும் காலத்திலேயே அவர் பாராடப்படவேண்டியவர், அதைத்தான் நானும் வழிமொழிந்திருக்கிறேன்.

ராம்கி, இளையராஜாவின் இசையெல்லாம் செத்துப்போய்விட்டது என்று சொல்லி சில கேசட் வெளியிடும் வியாபாரிகள் குறைந்த பிரதிகள் வெளியிடக் கேட்டதாகவும் அந்தக்கூற்றை முறியடிக்கவே அவர், சொந்தமாக வெளியிட்டதாகவும் சொன்னார். கமல் என்றால் எதுவும் செய்யக்கூடியவர் என்பது இதிலும் அடக்கம்.

குழலி, கமலைப்பற்றி நானும் எழுதியிருக்கிறேன், அவரின் ஜாதி சார்ந்த படங்களின் விளளவுகளெல்லாம் நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்.

தேவர் மகன் படத்திற்கும் தாங்கள் சொல்ல வரும் 'விளைவிற்கும்' எனக்கு உடன்பாடு இல்லை. வெறும் பணத்திற்காக சமுதாயத்தைப் பலியிடுபவர்களில் கமலையும் நீங்கள் சேர்த்துக்கொள்வது அபத்தம்.

'தேவர் மகன்' படம் வரலாற்றில் சேர்த்துக்கொள்ளவேண்டிய ஒரு பாடம்.

இதெல்லாம் இப்போது உக்காந்து பேசுவற்கு இப்படித்தான் தோன்றும், எழுதிவைத்துக்கொள்ளுங்கள்..உங்களது மகன் வளர்ந்து அப்படத்தைப் பார்த்தானாகில் கமலைப் போற்றப்போவது உறுதி.

இறைவனுடைய சித்தம் நம்பால் இருக்குமானால் இது எல்லாவற்றையும் கண்டு 'நாமும் கமலின் காலத்திலேயே நாமும் வாழ்ந்தோம்' என்று பெருமைப்பட்டுக்கொள்வோம்.

எம்.கே.குமார்

ஜோ/Joe said...

குமார்,
கமல் பற்றிய உங்கள் பார்வையோடு முற்றிலும் நான் இணைகிறேன்

எம்.கே.குமார் said...

நன்றி ஜோ.

சிங்கப்பூரில் தானே இருக்கிறீர்கள், ஏன் இணைய குழு கூட்டத்துக்கெல்லாம் வருவதில்லை?

எம்.கே.

ஜெ. ராம்கி said...

//'நாமும் கமலின் காலத்திலேயே நாமும் வாழ்ந்தோம்' என்று பெருமைப்பட்டுக்கொள்வோம்.
//
குமார்,

இதெல்லாம் ரொம்ப ஓவரு! நாங்களெல்லாம் தேவலாங்கிற மாதிரி யாராவது கமெண்ட் அடிச்சுடப் போறாங்க...

எம்.கே.குமார் said...

மாமி, (ரஜினி ராம்கி, கமல் குமார்ன்னு) இந்த மாதிரி கமெண்ட் அடிச்சி கலாய்க்க உங்களால் மட்டும் தான் முடியும்.;-)

மிக்க நன்றி உங்களது முதல் பின்னூட்டத்திற்கு எனது பதிவில்!

அன்பன்,
எம்.கே

ஜெ. ராம்கி said...

இரும்பூதா? அதென்ன வஸ்தாது? பேரைக்கேட்டா கிளுகிளுப்பா வேற கீது!

Unknown said...

//பேரைக்கேட்டா கிளுகிளுப்பா வேற கீது!//

தலைவா, சீக்கிரம் ஒரு கண்ணாலம் கட்டுங்க :-)).

இரா.செந்தில் said...

Dear Kumar,

Very nice writing,

I just admire your wtiting.

Thanks

Search This Blog