Wednesday, July 22, 2009

அப்படி என்ன சார் பிஸி?

அண்மைக்காலங்களில் நான் அதிகமாகவே எழுதாமல் இருந்துவிட்டேன் என்றாலும் அதனாலோ என்னவோ நிறையவற்றைப் பற்றி எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டேயிருந்தேன்.
உதாரணமாய் பல விஷயங்களைச் சொல்லலாம் எனினும் பின்வருவன இன்றுவரை விரட்டிக்கொண்டேயிருக்கின்றன.

சிங்கப்பூருக்கு வந்திருந்த ஞானியைப் பார்க்காதது, பேசாதது பெருங்குறையாய் மனதில் தொங்கிக்கொண்டேயிருக்கிறது. சிங்கப்பூரில் 'பஜாஜ் பல்சர்' பைக் வாங்கியவர்களில் 99% பேர் ஒருதடவையாவது சாலையில் சரிந்து விழுந்திருப்பது பற்றி, எனது 'மருதம்' சிறுகதைத்தொகுப்பில் அதிகமாய் நிரம்பியிருக்கும் குழந்தைக்காலங்களை அப்படியே அள்ளித்தந்த 'பசங்க' திரைப்படத்தை நிறைய நிறைய எழுதவேண்டும் என்பது பற்றி, மஹிந்த ராஜ பக்ஷேயின் கொலைவெ(ற்)றி பற்றி, அப்பாவித்தமிழர்களின் அவலம் பற்றி, குடிநீர்க்குழாயில் சாராயம் வந்தது பற்றி, அண்மையில் சந்தித்த சென்னை நண்பரின் இந்திய சுற்றுலாத்துறை குறித்தான ஆத்திரங்கள் பற்றி, சாரு நிவேதிதா எழுதியிருந்த இயற்கையை மனிதன் எதிர்கொள்ளும் மனப்பாங்கு குறித்தான ஒரு சிறந்த 'ஒப்புமை பற்றி, 'சொல்வனம்' வார இதழில் வெளிவரும் 'குளோபல் வார்மிங்' கட்டுரை பற்றி, ஏனென்று தெரியாமல் 'அயன்' படத்தை ஐந்து முறை மீண்டும் மீண்டும் பார்த்தது பற்றி, அதில் வரும் (கிளிஷேக்கலுடன் ஒப்பிடக்கூடாத) சூர்யாவின் மிகச்சிறந்த ஒரு காட்சி பற்றி, 'நாடோடிகள்' படத்தைப் பற்றி, அண்மையில் வெளிவந்த 'நாம்' இதழின் தரம் பற்றி, சிங்கப்பூரில் நடைபெற்ற எந்த இலக்கிய, புத்தக சம்பந்தப்பட்ட கடந்த நான்குமாத நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளாதது பற்றி, எதையும் சாராதிருந்தும் எல்லாமுமாய் இருக்கும் ஒரு இம்சை பற்றி, கவிஞரும் விமரிசகருமான ராஜமார்த்தாண்டன் மறைவு பற்றி, காலச்சுவடு இதழில் பணியாற்றி வரும் சிங்கப்பூரில் பணிபுரியும் ஓவியர் உமாபதி வீட்டிற்கு வந்தது பற்றி, அவர் தந்த ராஜ மார்த்தாண்டன் ஓவியம் பற்றி, எல்லாவற்றிற்கும் மேலாக ஆதித்யா பற்றி அவனுடனான நெகிழ்வான தருணங்கள் பற்றி......

பற்றுக பற்றினை பற்றற்று பற்றுக
பற்றி பற்றால் வரும். (இது திருக்குறள் அல்ல)

இதன் குத்துமதிப்பான விளக்கம்: பற்று இருந்தால் பற்றியவற்றைப் பற்றி பற்றிய நேரத்தில் பற்றில்லாமல் எழுதலாம் என்பதாகும்.

எம்.கே.குமார்.

காணாமல் போனவர்களைப் பற்றிய அறிவிப்பு

பெயர்: எம்.கே.குமார் என்று அழைப்படும் குமாரராஜா

வயது: எல்லாம் சின்ன வயசு

அடையாளம்: நல்ல கருத்த நிறம், சுருட்டை முடி, கண்கள் பெண்களைப் பார்த்தால் பளீரிடும்.

தேடுபவர்கள்: ஒருவர் ஊரை விட்டே போய்விட்டார்.(இவரை தேடி அலுத்து என்று நினைக்க வேண்டாம்)மற்றுமொருவர் தேடிக்.......கொண்டேயிருக்கிறார். ஒரு சிலரைத் தவிர மற்றவர்களின் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்தி கிடைத்துள்ளது.

பின் குறிப்பு: ஒரு புத்தகங்க்கள் காத்திருக்கின்றன.

முக்கியக் குறிப்பு: பத்து வெள்ளி தராமல் டபாய்ப்பது என்றெல்லாம் யோசிக்காமல் விரைவில் தொடர்பு கொள்ளவும்

தொடர்புக்கு: தொலைபேசி எண்: 999
விலாசம்: 007, துப்பாக்கி நகர், கொலைகாரன் பேட்டை, திருட்டூர், சதக் சதக் மாவட்டம்,

(அட, தொலைஞ்சி போனவனே, இதையாவது சொந்தமானதா சொந்தவலைப்பூவுல எழுதக்கூடாதா? அப்படியே எடுத்துப்போடணுமா?)

Tuesday, February 24, 2009

தாய்பக்தி, தமிழ் பக்தி, தேசபக்தி, தெய்வபக்தி - ஏ ஆர் ரஹ்மான் வாழ்க!!

பசுபதியைப் பற்றிய சிறுகுறிப்புகள் - 5

ஆண்டாளுடன் பேசி இருவாரங்களாகிவிட்டதாய் பசுபதி புலம்பத்தொடங்கியதை நான் கேட்காதது போலிருந்தேன்.

புலம்பலின் முடிவாய் அவன் சொன்னதை மட்டும் இதைப் படித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு சொல்ல விழைகிறேன்.

நீண்டதொரு பெருமூச்சுடன் அவன் சொன்னதாவது: "ஆண்டாளை நான் நிஜமாய் நேசித்தேன்"


எம்.கே.குமார்.
24/02/09

Wednesday, February 04, 2009

சிங்கப்பூரில் சகோதரன் முத்துக்குமாருக்கு அஞ்சலி!

நின்னை எரித்து நீ எழுதிய கடிதம் கண்டேன் - என்ன சொல்வது என் சகோதரா,
என்னை எரிக்கிறது அக்கடிதம் - இதயத்தை ரணமாக்கி!

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சிங்கப்பூரில் அமைதி உண்ணாவிரதம் அல்லது மவுன அஞ்சலிக்கு ஏற்பாடு செய்வது குறித்தான சட்டப்பூர்வ அனுமதி நடவடிக்கைகள் பெறுவது குறித்து விவரங்களைச் சேகரித்துக்கொண்டிருந்தேன்.

இந்நிலையில், உயிராயிதம் ஏந்திய சகோதரன் முத்துக்குமாருக்கு நினைவஞ்சலிக்கூட்டம், சிங்கப்பூரின் "பேசுவதற்கான இடத்தில்" (Speaker's Corner) இன்று மாலை ஏழு மணிக்கு நடைபெறுகிறது என தாமதமாகவே அறியவந்தேன்.

அரசிடம் அனுமதி வாங்கி அஞ்சலிக்கூட்டம் நடத்திய நண்பர்களுக்கு எனது நன்றிகள். தகவலறிந்த நண்பர்கள் தயவுசெய்து உடன் பகிர்ந்துகொள்ள வேண்டிக்கொள்கிறேன்.

எம்.கே.குமார்
04/03/09

Thursday, January 29, 2009

கவிஞர் லதா (சிங்கப்பூர்)அவர்களுக்கு வாழ்த்துகள்!

"நான் கொலை செய்யும் பெண்கள்" நூலுக்காக, லதா எனப்படும் கவிஞர் கனகலதா அவர்களுக்கு சிங்கப்பூர் இலக்கிய விருது வழங்கப்பட்டமையில் பெரிதும் மகிழ்கிறேன்; வாழ்த்துகிறேன்.

எம்.கே.குமார்.
29/01/09

K. Kanagalatha

Kanagalatha (Latha) is a News Editor with the Tamil Murasu, the national Tamil daily of Singapore. She has been with the daily from 1990. She has been a prolific contributor of poems, short stories, and literary and arts reviews.

Her poems have been anthologized in Journeys: Words, Home and Nation, a multilingual anthology published by The Centre for the Arts, National University of Singapore (1995), Rhythms-A Singaporean Millennial Anthology of Poetry, published by the National Arts Council (2000), and Kanavum Vidiyum - Anthology of Contemporary Tamil Poetry by Women Poets by the Sahitya Academy of India (2003). Her bilingual poem Still Human was also featured in the MRT: Poems on the Move series on the MRT trains by the National Arts Council.

A short story, Identity, was published in English and Tamil in SINGA (Jan 1999), the Journal of the arts and literature in Singapore. Her poems and short stories have also appeared in prominent overseas Tamil literary journals like Kanayaazhi (India), Kaalachuvadu (India), Uyirnizhal (France) and Sarinigar (Sri Lanka).

நன்றி:http://www.bookcouncil.sg/swc/writersa-k.htm

Wednesday, January 28, 2009

பசுபதியைப் பற்றிய சிறுகுறிப்புகள் - 4

திடுமென சிங்கப்பூரை நேசிப்பதாய் பசுபதி சொன்னதன் அதிசயம் எனக்குப்புரியவில்லை.

காதைத்தீட்டிக்கொண்டேன். ஆண்டு இறுதி விடுமுறைக்காக சென்னை சென்று திரும்பி வந்திருந்த அவனுடைய தோழி மீனாட்சி அவர்களைப் பார்த்தானாம் பசுபதி. மீனாட்சி அவர்களின் ஆதங்கமாய் பசுபதி சொன்னதன் சுருக்கமான விவரணங்கள் இவை.

கூவம் ஆற்றில் ஒரு பதின்ம வயதுப்பெண் மழைவெள்ளத்தில் அடித்துச்செல்லப்படுகிறாள், ஆயிரம்பேர் கரையில் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கின்றனர். ஒருவர் கூட காப்பாற்ற முயற்சிக்கவில்லை.

வங்கிக்கிளைக்கு அக்கவுண்ட் அப்டேட் செய்யச்சென்றால் இரண்டு நாட்கள் கழித்து வரும்படி தலையை நிமிர்த்தி பார்க்காமலேயே சொல்கிறார் வங்கி அதிகாரி.

வீட்டிலிருந்த தமிழ்ப்புத்தகங்களை கோணியில் அடைத்து கிணற்றுக்கருகில் போட்டு விட்டார்கள் வீட்டிலுள்ளவர்கள். மனது கேட்காமல் ராமகிருஷ்ணா மிஷனுக்கு அள்ளிச்சென்று கொடுத்துவிட்டு வந்தாராம் தனது நண்பரொருவர். மணிமேகலையை கொடுக்கும்போது மட்டும் கண்களில் ஜலம். காரணம் அவருடைய இளங்கலை மற்றும் முதுகலையில் மணிமேகலை அவருக்கு மிகவும் பிடித்த பாடம். 94 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறாம்.

ஹார்ட் பாதிக்கப்பட்டிருந்த உறவினர் ஒருவருக்கு ஹார்ட் தேடி அலைந்து 24 மணி நேரத்துக்குள் ஒருவர் ஹார்ட் கொடுக்க முன்வந்துவிட்டார். ஹார்ட்டைக் கொடுக்க முன்வருபவர்கள் இந்தியாவில் இவ்வளவு எளிதாக கிடைக்கிறார்கள் என்றால் எங்கோ ஏதோ தவறு நேருகிறது என மீனாட்சி நினைப்பதாக அவன் சொன்னான்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உறவினர் ஒருவருக்கு உயிர் போய் இரண்டு நாட்களாகியும் வெண்டிலேஷன் செட்டப்போடு ஆஸ்பத்திரியிலே வைத்துக்கொண்டு போராடுவதாய் நாடகம் நடத்தியிருக்கிறார் ஒரு தனியார் மருத்துவமனை டாக்டர். ரமணா தோற்றது போங்கள்!!!

அண்மையில் இறந்துபோன புகழ்பெற்ற எழுத்தாளர் ஒருவரின் மனைவியைச் சந்தித்தாராம் மீனாட்சி. வீட்டில் அப்பா சேர்த்துவைத்திருக்கும் குப்பையையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு வா; உனக்கு நானிருக்கும் இடத்தில் வீடு வாங்கித்தருகிறேன் என்கிறாராம் அவரது பையன்.

மிகவும் புகழ்பெற்ற இருமனைவி கொண்ட எழுத்தாளர் ஒருவர் ஹாஸ்பிட்டல் செலவுக்கே கலைஞரிடம் கையேந்திக்கிடக்கிறாம். பெற்ற பையன்களும் மனைவிகளும் கண்டுக்காமல் விட்டுவிட்டார்களாம்.

சிறிது நேர அமைதிக்குப்பிறகு பசுபதி சொன்னான், பணம் மட்டும் சார்ந்து அமைவதா வாழ்க்கை?

Tuesday, January 06, 2009

பசுபதியைப் பற்றிய சிறுகுறிப்புகள் - 3

பசுபதியிடம் அபிராமியைப் பற்றிக் கேட்க வேண்டும் என்று எனக்குத்தோன்றியது.

அபிராமி சிங்கப்பூரின் பத்திரிகைத்துறையில் உயர்ந்த பதவியிலிருக்கும் ஒரு பெண். குருவிக்கூட்டைப் பிரித்தெடுத்தது போல நெளிநெளியான நீண்ட கூந்தலுடன் பார்த்ததும் மோகிக்க வைக்கும் இயல்பான அழகு. இன்னாருடன்தான் வாழ்கிறார் என்று உறுதிபடாத பலருடன் உறுதிபடாத தகவல்கள் நிறைய உலவி வந்தாலும் பசுபதி அவரிடம் நெருங்கியிருக்கிறான் என்பதை எப்போதோ ஒரு தருணத்தில் அவனே என்னிடம் சொல்லியதுண்டு. நெளிநெளியாய் அசைந்தன நினைவலைகள்.

Photobucket

அபிராமி நலமாய் இருக்கிறார்; பத்திரிகைத்துறையில் இருந்து இப்போது தொலை ஊடகத்துறைக்கு மாறிவிட்டார். நிகழ்ச்சிகளுக்கு தானே முதன்மை நிர்வாகியாகவும் தயாரிப்பாளராகவும் பணிபுரிவதாகவும் சொன்னான்.

ஏதோ நான் ஏமாற்றமடைந்ததைக் கண்டவனாய், "என்ன சொல்லச்சொல்கிறாய்?
அநாகரிகமான விஷயங்களை என்னிடம் கேட்காதே; மூக்குவரை போகலாம்; மூக்கைத்தொட உரிமையில்லை" என்றான் அமைதியான குரலில்.

எம்.கே.குமார்.

Saturday, January 03, 2009

பசுபதியைப் பற்றிய சிறுகுறிப்புகள்-2

ஜோஹூரில் நடக்கும் ஒரு பீச் பார்ட்டிக்கு தான் பணம் கட்டியிருப்பதாகவும் நானும் அதில் கலந்துகொள்ளவேண்டுமாய் என்னிடம் கேட்டுக்கொண்டிருந்தான் பசுபதி.

என்ன பார்ட்டி என்று கேட்டேன்.

நீரும் நியூடும் என்றான் அவன்.

அப்படின்னா??

ஆண்கள் எவ்வாடையும் அணிய அனுமதியில்லை; பெண்கள் ஜி ஸ்டிரிங்க்ஸ் மட்டும் மட்டும் மட்டும்; அதுவும் 12 மணிக்குப்பிறகு களையப்படவேண்டும்.

எவ்வளவு கட்டணம் என்றேன்.

250 ரிங்கிட்; 100 சிங்கப்பூர் வெள்ளி!

போகலாம் என்றேன்.

போய் வந்தபிறகு அதுபற்றி எதுவும் எழுதக்கூடாது, சரியா?


எம்.கே.குமார்.

Friday, January 02, 2009

பசுபதியைப் பற்றிய சிறுகுறிப்புகள்

பசுபதியைப் பற்றி உங்களிடம் நான் சொல்லவில்லை என நினைக்கிறேன்.

பசுபதி என் பழைய சிநேகிதன். சிங்கப்பூரில் அவனை இந்நிலையில் சந்திப்பேன் என்று நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை. அவனது கதையைப் பின்னொரு நாளில் ஆற அமர உங்களிடம் தொடர்கிறேன். இப்போது அவனைச் சந்தித்த கதை!

ஃபேரர் பார்க் ரோட்டிலிருந்து சந்தர் ரோடு பிரியும் இடத்தில் இருக்கும் ஒரு விடுதி வாசலை நான் கடக்கும்பொழுது ஒரு கணவனும் மனைவியும் அவ்விடுதியை விட்டு வெளியே வந்தார்கள். பரிச்சயமான முகங்களாய்த் தென்பட, மீண்டும் நோக்கியதில் பசுபதி கொஞ்சம் முன்வழுக்கையோடு எனக்குக் கிடைத்தான்.

கொஞ்சம் செழித்த நடையுடன் முன் நோக்கி விரைந்து நகர்ந்த பெண்ணைப்பற்றி கேட்டபோது, "பார்த்தும் உன் ஞாபகத்துக்கு வரவில்லையா? சரத்குமாருக்குக் கூட ஜோடியாய் நடித்திருக்கிறார் அப்பெண். நடிகை ..... என்றான். அவர் சென்ற திசையை நோக்கினேன்.

எம்.கே.குமார்

Thursday, January 01, 2009

HAPPY NEW YEAR 2009

அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துகள்!

Search This Blog