Friday, January 02, 2009

பசுபதியைப் பற்றிய சிறுகுறிப்புகள்

பசுபதியைப் பற்றி உங்களிடம் நான் சொல்லவில்லை என நினைக்கிறேன்.

பசுபதி என் பழைய சிநேகிதன். சிங்கப்பூரில் அவனை இந்நிலையில் சந்திப்பேன் என்று நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை. அவனது கதையைப் பின்னொரு நாளில் ஆற அமர உங்களிடம் தொடர்கிறேன். இப்போது அவனைச் சந்தித்த கதை!

ஃபேரர் பார்க் ரோட்டிலிருந்து சந்தர் ரோடு பிரியும் இடத்தில் இருக்கும் ஒரு விடுதி வாசலை நான் கடக்கும்பொழுது ஒரு கணவனும் மனைவியும் அவ்விடுதியை விட்டு வெளியே வந்தார்கள். பரிச்சயமான முகங்களாய்த் தென்பட, மீண்டும் நோக்கியதில் பசுபதி கொஞ்சம் முன்வழுக்கையோடு எனக்குக் கிடைத்தான்.

கொஞ்சம் செழித்த நடையுடன் முன் நோக்கி விரைந்து நகர்ந்த பெண்ணைப்பற்றி கேட்டபோது, "பார்த்தும் உன் ஞாபகத்துக்கு வரவில்லையா? சரத்குமாருக்குக் கூட ஜோடியாய் நடித்திருக்கிறார் அப்பெண். நடிகை ..... என்றான். அவர் சென்ற திசையை நோக்கினேன்.

எம்.கே.குமார்

No comments:

Search This Blog