Thursday, November 15, 2018

சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 2018_ எழுத்தாளர் சு.வெங்கடேசன் அவர்களுடன்



"எழுத்தாளன் என்பவன் வேறு வரலாற்றாசிரியன் என்பவன் வேறு
வரலாறு ஆள்வோராலும் ஆளப்படுவோராலும் எழுதப்படுவதுண்டு
உண்மையான வரலாறு இதன் இரண்டுக்கும் இடையில் இருக்கலாம்.
சங்க இலக்கிய முழுவதுமே இயற்கையை பிரதானமாக பேசியது.
களவும் காவலும் ஒருநாணயத்தின் இருபக்கங்கள், களவாளியையே காவலாளியாக போடுவது என்பது இன்றும் பின்பற்றப்படும் ஒரு பயிற்சி.
இலக்கியம் வரலாறல்ல. வரலாற்றின் தடங்களில் ஒரு இலக்கியப்படைப்பு காலை ஊன்றி வேறொரு தளத்தைத் தேடுகிறது.
தமிழக வரலாற்றைப் பேசும் வரலாற்றுநாவல்கள் மிகக்குறைவு. பிரபஞ்சனின் நாவல்களுக்குப்பிறகு,  ஆழிசூழ் உலகு, சோளகர்தொட்டி போன்ற சமூகநாவல்கள் தற்போது புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்றன. காவல்கோட்டம் நாவலிலும் வேள்பாரியிலும் பல வரலாற்றுச்சன்றுகள் உள்ளன. தமிழரின் அறிவுச்செல்வத்தையும் இயற்கைபோற்றுதலையும் வேள்பாரியில் வைத்துள்ளேன். விகடனில் எழுதினாலும் வேள்பாரி காவல்கோட்டத்தைவிட ஒருபடி மேலான உழைப்பைக் கோரியுள்ளது, மனதுக்கு நெருக்கமாகவும் வந்திருக்கிறது.
இந்தியாவை முழுக்க பிரிட்டிஷ் ஆண்டாலும் மதுரையின் ஒட்டுமொத்தகாவலை ஒரு கிராமம் கட்டுக்குள் வைத்திருப்பதைக் கருவாக எடுத்தே காவல்கோட்டம் உருவானது. மூவேந்தர்களாலும் வெல்லமுடியாத ஒருவன் தன் தேரை ஒரு முல்லைக்கொடிக்குக் கொடுத்துச்சென்றான் என்றால் அவனுடைய இயற்கையின் மீதான நேசம் எத்தகையதாக இருக்கும் என்ற சிந்தனையே வீரநாயகன் வேள்பாரி உருவாகக் காரணம். தமிழில் கிராபிக் நாவல்கள் கடும் பொருள் முதலீட்டை முன்தேடுவதால் அது இப்போதைக்கு பரவலாகவில்லை." 

சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் மிகச்சிறப்பாக நடைபெற்ற இன்றைய கலந்துரையாடலில் சாகித்ய அகாடமி விருது பெற்ற திரு. சு வெங்கடேசன் அவர்கள் பகிர்ந்துகொண்டதிலிருந்து...

சிங்கப்பூர் இலக்கிய விருது (மெரிட்) 2018



இந்தக்கணத்தை எனக்களித்த இயற்கைக்கும் தமிழுக்கும் நன்றி. இந்த இலக்கியவிருதை வாசகர் வட்டத்திற்கும், சிங்கப்பூரின் முன்னோடி எழுத்தாளர்களுக்கும் குறிப்பாக பரணன், .நா மொய்தீன், முல்லைவாணன், நா.கோவிந்தசாமி போன்றோருக்கும் அர்ப்பணிக்கிறேன்.

வாழ்வியலுக்காகத் தினமும் ஓடவேண்டிய ஒரு பொழுதில் ஏதாவது எழுதவேண்டும் வாசிக்கவேண்டும் என்ற உந்துதலை எனக்கு அளித்தது வாசகர்வட்டமும் இதுபோன்ற மூத்த முன்னோடி எழுத்தாளர்களுமே. குறிப்பாக வாசகர் வட்டத்தின் முன்னோடிகள் ரெ.பாண்டியன், ரமேஷ் சுப்ரமணியன் போன்றோரும் தற்போதைய வாசகர் வட்ட நண்பர்கள் சித்ரா ரமேஷ், ஷா நவாஸ் உள்ளிட்டோருக்கும் என் அன்பு நன்றி.

எழுத்தாளர் ஜெயமோகன் மானசீக உள எழுச்சி தரும் என் ஆசான்களில் ஒருவர். அவருக்கும், சிங்கப்பூரில் வரும் படைப்புகளைப் படித்து அவ்வப்போது விமர்சனங்களைத்தரும் திரு மாலன் அவர்களுக்கும் நன்றி.

இப்புத்தகத்தைப் பதிப்பித்தயாவரும்பதிப்பக நண்பர்கள் ஜீவ கரிகாலன், கண்ணதாசன் உள்ளிட்டோர்க்கும் இப்புத்தகத்துக்கு முன்னுரை வழங்கிய மலேசியாவின் எழுத்தாளர் .நவீன், சிங்கப்பூரின் சிவானந்தம் நீலகண்டன் ஆகியோருக்கும் நன்றி.

என் சுகதுக்கங்களில் பங்குகொண்ட, என்னைச்செதுக்கிய குடும்பத்தினர், நண்பர்கள்  ஆகியோருக்கும் என் அன்பு.

சிங்கப்பூர் புத்தக வாரியம், கலைகள் மன்றம், தேசிய நூலகம்  தமிழ்முரசு, வசந்தம் அனைவருக்கும் நன்றி!!

எம்.கே.குமார்

At this beautiful moment of my life, I stand here with all gratitude to the Mighty Nature and my language Tamil.

I am dedicating this award to Vaasagar Vattam, the important reason and inspiration behind my writing especially my friends and fellow writers, R.Pandiyan, Ramesh Subramanian, Chitra Ramesh, Sha Navas and all.


My heartfelt thanks to Yavarum publishers for publishing my book, and to Mr Naveen and Sivanandam for acknowledging my book.


My sincere thanks to Author Jayamohan who taught me to love writing and reviewing and to Mr Maalan, who reads and reviews my writings regularly.

My gratitude and pranams to my family and the men and women who were with me through good and bad times to support and chisel me, my dear friends, I thank you all.


And finally The library board, The book house, Arts house, Vasantham, Tamil Murasu, and all those who are striving for the growth of Tamil in Singapore.


Thank you for this award. 


This will inspire me into wider reading, to look more into Singapore “s life and literature, and picture it in my future writing.


Thank you, love you all.


MK

Thursday, August 02, 2018

உங்களுக்குள் உள்ள விலையில்லா ஆற்றல் - ஆக் மாண்டினோ

இந்த வாரம் வாசித்த புத்தகம் “ஆக் மாண்டினோ Mandino Og” என்பவர் எழுதிய உலகப்புகழ்பெற்ற ”உங்களுக்குள் உள்ள விலையில்லா ஆற்றல்”  என்ற புத்தகம். ஆங்கிலத்தில் ”The greatest salesman in the world" என 1968ல் வெளிவந்திருக்கிறது. தமிழில் தேவவிரதன் என்பவர் மொழிபெயர்த்திருக்கிறார். பொம்மையை அல்லாமல் ஏறக்குறைய பெண்ணை முத்தமிட்ட மொழிபெயர்ப்புதான். ஆங்கிலத்திலும் எளிய வகையில் படிக்கமுடிகிறது. 

மிகவும் ஏழையாயிருந்து செல்வந்தரான வயதானவர் ஹபீத், தன் நெருங்கிய உதவியாளத்தோழன் எராஸ்மஸிடம் தன் சொத்துக்களை எல்லாம் விற்றுவிட்டு அவருக்குக்கொஞ்சம் வைத்துக்கொண்டு மற்றவற்றை இல்லாதவர்க்குக்கொடு என கட்டளையிடுவதில் ஆரம்பிக்கும் கதை. அவருடைய வீட்டின் ரகசிய உச்சி அறையில் விலையில்லா ரத்தினக்களும் பொன்னும் குவிந்துகிடப்பதாய் வதந்தி பரவிக்கிடக்கும் வேளையில் முதமுதலாய் அந்த அறையில் உள்ள பெட்டியைத்திறந்து தன் நண்பனுக்குக் காட்டுகிறார் ஹபீத். அதனுள்ளே பத்து ஓலைச்சுருள்கள் போன்ற துணியில் எழுதப்பட்ட சுருள்கள் உள்ளன. அவை என்ன அவற்றில் உள்ளது என்ன அவை எப்படி வந்தது அவரிடம் எனத்தொடரும் புத்தகம்..

தன்முனைப்புப் புத்தகங்களை எங்கு கண்டாலும் நான் மேலும் கீழும் பார்த்துவிட்டு வந்துவிடுவதுண்டு. இந்த புத்தகம் திடீரென எடுக்கத்தோன்றியதுகூட ஏதோ ஒரு நிலையற்ற தன்மையால் இருக்கலாம். ஏறக்குறைய இந்த புத்தகத்தின் ஆசிரியனுக்கு நேர்ந்ததுபோல.

ஆக் மாண்டினோ ராணுவத்தில் பணியாற்றிவிட்டு, வேலை இல்லாததால் வீட்டில் முடங்குகிறான். இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை, அதுவும் சரி வரவிலை. குடிக்க ஆரம்பிக்கிறான். குடிகாரனாகி குப்பைத்தொட்டியில் விழுந்து சாகும் நிலைக்கு வருகிறான். மனைவியும் மகளும் பிரிகின்றனர். இறுதியாக தற்கொலைக்குத்தயாராகிறான். கைத்துப்பாக்கி ஒன்றை வாங்கலாம் என கடைக்குச்சென்றுவிட்டு அக்கடையிலிருந்து நேரே மனம்போன போக்கில் நடக்கிறான். அங்குதான் அந்த தேவதையை அவன்கண்டுகொள்கிறான். அத்தேவதை அவனை எடுத்துவளர்க்கிறது, உருவாக்குகிறது, அவனுடைய ஆற்றலை அவனுக்கு உணர்த்துகிறது. அந்ததேவதை ஒரு நூலகம்.

பிறகு அவன் வாழ்க்கை திரும்புகிறது. வாழ்க்கையில் வெற்றிபெறுகிறான். உலகின் மிக அதிகமான விற்பனையாகும் புத்தகங்களை எழுதிக்குவிக்கிறான்.

புத்தகத்தில் பத்து சுருள்கள் என தனக்குத்தானே கொள்ளவேண்டிய பத்து கட்டளைகள் இருக்கின்றன. நன்று. எனக்கும் தேவைதான். மாணவர்களுக்கும் இளையர்களுக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும்.

குறிப்பாக, சுருள் ஒன்பதில், (The Scroll Marked IX) ’செயல்வீரன்’ என்ற தலைப்பில்சொல்லப்பட்டது, 
”I will act now; 
  My dreams are worthless, my plans are dust, my goals are impossible.
  All are of no value unless they are followed by action.
  I will act now.” 
எனக்கும் அண்ணன் ஸ்டாலின் அவர்களுக்கும் மிக முக்கியமான ஒன்று இத்தருணத்தில். 


Saturday, April 07, 2018

Nancy Ajram - Enta Eih - With English Translation - Arabic Song

அண்மையில் சிங்கப்பூர் வந்திருந்த எழுத்தாளர் சாருநிவேதிதா அவர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது நான்ஸி அஜ்ரம் குறித்து பேச்சு வந்தது. சட்டென்று ஒரு பூஞ்சோலைக்குள் தாவி இறங்கிவிட்டதைப்போல இலகுவானார் சாரு. 'என்ன குரல் என்ன குரல், இந்த திராட்சை ரசத்தின் மென்மையை இந்தக்குரலின் பின்னணியில் அல்லவா உணரவேண்டும்' என்று அவர் சொல்லச்சொல்ல நானும், கடைக்காரரின் 'ஆளுமா டோலுமா' வைக் கெஞ்சி அப்புறப்படுத்திவிட்டு, இருமுறை கேட்டோம் இப்பாடலை. 

மனம் கிறங்கிப்போய் இதுவரைக்கும் இருபது முப்பது முறை கேட்டுவிட்டேன். இதோ ஒன்று ஆங்கிலபாடல்வரிகளுடன் இன்று கிடைத்தது முழு உணர்வைக்கொண்டுவர. சாருவிற்கு நன்றி.


மார்ச் 25, 2017 அன்று நடைபெற்ற கவிதை விமர்சன வாசகர் வட்ட நிகழ்வு

மார்ச் 25 அன்று நடைபெற்ற கவிதை விமர்சன வாசகர் வட்ட நிகழ்வு மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்களுக்கான மவுன அஞ்சலியுடன் தொடங்கியது. அசோகமித்திரன் சில ஆண்டுகளுக்குமுன் வாசித்த அவருடைய கதையான "சேவை"யை, அவர் மீண்டும் வாசிக்க நாங்கள் கேட்டுக்கொண்டிருந்தோம். பொருட்காட்சியில் தொலைந்துபோகும் குழந்தை ஒன்றை பெற்றோரிடம் ஒப்படைக்கப்போராடும் ஒருவனைப் பற்றியகதை. கதையில் வரும் சிலவரிகளுக்கு நாங்கள் வாய்விட்டுச்சிரிக்க, அவரே அடக்கமுடியாமல் வாசிக்கும்போதே சிரிப்பதைக் கேட்க, அவருக்கான அஞ்சலியிலும் மன எழுச்சியாய் இருந்தது. பிறகு அவருடைய பிரயாணம், இன்று, புலிக்கலைஞன் கதைகள் சார்ந்தும் ஒற்றன், 18வது அட்சக்கோடு நாவல்களையும் சிலாகித்து அடுத்த நிகழ்வுக்கு நகர்ந்தோம். (கணேஷ் பாபு மற்றும் சிவாவின் அஞ்சலி மிகுந்த உள எழுச்சியாய் இருந்தது, அதை அவர்கள் தனிப்பதிவாக பதியவேண்டுகிறேன்.)
Image may contain: 2 people, including Manor Param, people sitting, laptop, screen and indoor
இம்மாத படைப்பாளர் அறிமுகத்தில் கவிஞர் போகன் சங்கர் குறித்து அறிமுகப்படுத்தினார் பாரதி மூர்த்தியப்பன். குன்னிமுத்தாய் மிளிரும் கூந்தலையும் நீர்ச்சொட்டும் சத்தத்தையும் மதனியின் அன்பையும் ஒரு கவிதையில் கண்டு, இவரை வாசிக்க ஆர்வம் கொண்டதாய்ச் சொல்லி, தடித்த கண்ணாடிப்போட்ட பூனை தொகுப்பிலிருந்து சிலகவிதைகள் வாசித்துப்பேசப்பட்டன. கோடைகால வேப்பம்பழம் பற்றிச் சொல்லி, சில அழகியல்பார்வைகளோ படிமமோ போதும், ஒரு கவிஞனை நினைவில் வைத்துக்கொள்ள என்று சொன்னார் கணேஷ்பாபு.
சூடான கவிதை விமர்சனங்கள் அடுத்து வந்தன. (விரிவான விமர்சனங்களை வாசகர் வட்ட இணையப்பக்கத்தில் ஒளிக்காட்சியாகக் காணலாம்.)
லதாவின் "யாருக்கும் இல்லாத பாலையில் 'மாட்டிக்கொண்ட கர்ணன்" (ஈழக்கவிதை) பற்றிய ஒரு கவிதையைப் படித்து மனதைக்கனக்கச்செய்தார் ஷா நவாஸ்.
ஷானவாஸின் 'சுவை பொருட்டன்று' எப்படி வாழ்வின் அழகியலைச் சொல்கிறது என்பதை விளக்கி அது இன்னும் ஆழமாக எழுதப்பட்டிருக்கலாம் என்று சொன்னார் பாண்டித்துரை.
Image may contain: 2 people, people sitting, table and indoor
நவீன கவிதையின் மூன்று வடிவப்பிரிவுகளைச் சொல்லி எம்.கே.குமாரின் 'சூரியன் ஒளிந்தணையும் பெண்' எவ்வாறு ஆழமான வரிகளும் எளிமையான வரிகளும் கொண்டு கவிதைஅழகியல், பாடுபொருள் ஆகியவற்றில் சிறந்துவிளங்குகின்றன என்பதை 'பாடு, புன்னகை, மிருகவதை' போன்ற கவிதைகளின் மூலம் விமர்சித்த கணேஷ்பாபு, 'நிலவு தோற்ற என் காதலியின் முகம்' போன்ற காதல் கவிதைகளை எழுத குமார் தேவையில்லை, நிறையப்பேர் இருக்கிறார்கள் என்றும் சொன்னார்.
Image may contain: 1 person, sitting and indoor
தான் கவிதையின் புதுவாசகன் என்று மாதங்கியின் 'மலைகளின் பறத்தல்' கவிதைத்தொகுப்பு பற்றிப்பேசினார் சிவாநந்தம். பிலிப்பினோ காதலியின் முன்னால் முள்கரண்டியில் சாப்பிட எத்தனிக்கும் இந்தியக்காதலர் ஒருவரைப்பற்றிய மாதங்கியின் கவிதையை நினைவுகூர்ந்தார் ஷாநவாஸ்.
Image may contain: 5 people, including Kalimuthu Ayyappan K, Sivanantham Neelakandan, Manor Param and Mohamed Kassim Shanavas, people smiling, people standing, beard and indoor
சித்துராஜின் ' காற்றாய் கடந்தாய்' கவிதைகளின் விதவிதமான பாடுபொருள், செப்டம்பர் மத்தியானம், நத்தையின் காமம் போன்ற திரும்பத்திரும்ப வரும் வார்த்தைகள், சவத்துக்கும் சேர்த்து சாப்பிட்டாகிவிட்டது, சதை சாப்பிடும் சாலை போன்ற சிறந்த இறுதிவரிகள் என விமர்சித்த எம்.கே.குமார், சில கவிதைகள் வாசகனுக்காக எழுதப்பட்டவை போலில்லை, வாசித்துவிட்டு மெலேநகர முடியாமல் முட்டுச்சந்தில் நிற்பதைப்போலிருக்கிறது என்றும் சொன்னார்.
பாண்டித்துரையின் ' அவநிதாவின் சொல்' எவ்வாறு ஒரு புதிய பாடுபொருளாக அமைந்திருக்கிறது என்று சொன்ன பாரதி, அந்த பாடுபொருளே இங்கும் வந்திருக்கிறது என்றும் சொல்லி, கலகலப்பாக்கினார். பாண்டித்துரையின் மூன்று வயது மகள் அவநிதா தன் தாய் மற்றும் அத்தையோடு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். 'அவநிதாவின் சிரிப்பில் அப்பா இருப்பதாய்ச்சொல்லி' வரும் ஒரு கவிதையை வாசித்துக் கண்கலங்கினார் பாரதி.
Image may contain: 5 people, including Kalimuthu Ayyappan K, Manor Param and Mohamed Kassim Shanavas, people smiling, people standing and indoor
எம்.சேகரின் 'கைவிளக்குக் கடவுள்' பற்றிய விமர்சனத்தை சித்ரா எழுதி, ஷா நிகழ்ச்சியில் வாசித்தார்.
விமர்சனத்துக்குத் தேர்ந்தெடுத்த தொகுப்புகளிலிருந்து தனக்குப்பிடித்த கவிதைகளைப் பகிர்ந்துகொண்டார் அழகுநிலா.
தேர்ந்தெடுக்கப்பட்ட விமர்சனங்களுக்கு சிராங்கூன் டைம்ஸ் புத்தக பரிசுகளை வழங்கினார் மூத்த வாசகர் அம்மா மனோரம் அவர்கள்.
Image may contain: Kalimuthu Ayyappan K, Manor Param, Bharathi Moorthiappan and Mohamed Kassim Shanavas, people smiling, people standing and indoor
அசோகமித்திரனின் சிரிப்பு, கவிதையின் அகரசனை கொண்ட ஒத்திசைவான மனங்கள் என மனதுக்கு மிகநெருக்கமான மாலையாய்க் கழிந்தன அத்தருணங்கள். கலந்துகொண்ட சத்யா உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
எம்.கே.குமார்.
Image may contain: 10 people, including Pandiidurai Neethipaandi, Manor Param, Mohamed Kassim Shanavas and Bharathi Moorthiappan, people smiling, indoor

New trends in Singapore's Tamil writings.. மாறிவரும் சிங்கப்பூர் தமிழ் இலக்கியப்படைப்புகள் ஓர் பார்வை.

ஞாயிறு (11/3) மாலை 5.30-7
சிங்கப்பூர் கலைகள் மன்ற கட்டிடத்தில்.
Image may contain: 5 people, including Ooviya Chitra, Mahesh Kumar, Sivanantham Neelakandan and Mohamed Kassim Shanavas, people smiling, text

Image may contain: text

Image may contain: 5 people, including Mohamed Kassim Shanavas, people smiling, text


Image may contain: 5 people, including Mahesh Kumar, Ooviya Chitra, Mohamed Kassim Shanavas and Sivanantham Neelakandan, people smiling, people standing

Image may contain: 3 people, people sitting and indoor

Image may contain: திரு முருகன், smiling, sitting, shoes and indoor

Image may contain: 5 people, people smiling, people standing

Image may contain: 3 people, people smiling



Search This Blog