Monday, December 30, 2013

மலேசிய எழுத்தாளர் அன்புச்செல்வன் அவர்களுக்கு அஞ்சலி..

பேரதிர்ச்சியாக இருக்கிறது. கடந்த 14 டிசம்பர் அன்று தஞ்சையில் நடந்த முஸ்தபா அறக்கட்டளையின் கரிகாலன் விருது வழங்கு விழாவில் "மலேசியச்சிறுகதைகள் ஒரு பார்வை" என்ற தலைப்பில் மிக நுட்பமாக, தெளிவாக உரையாற்றினார்.

மலேசியாவில், கெடா மாநிலத்துக்கு ஒரு இலக்கியவரம் இருப்பதாகப் பேசிய அவர், புதிய எழுத்தாளர்களில் குறிப்பிடும் படியாய் கே.பாலமுருகனையும் தயாஜியையும் சொன்னார். 

மதிய உணவு இடைவேளையில் உங்களது ஆய்வு மிகவும் சிறப்பாக இருந்ததாககவும் ஒட்டுமொத்த சிறுகதையின் வரலாற்றை 10 நிமிடத்துக்குள் சிறப்பாகச் செய்ததாகவும் அவரிடம் நான் பகிர்ந்துகொன்டேன். 

பாலமுருகன் என் நண்பர் தான் எனச்சொல்லவும், அப்படியா என்று என் தோளில் கை போட்டுக்கொண்டு நடந்தார். அவருடைய ஆய்வுக் கட்டுரையின் ஒரு பகுதி என்னிடம்தான் இருந்தது. இறைவனடி சேர்ந்துவிட இவ்வளவு அவசரம் ஏன் ஐயா? 

அவருடைய ஆத்மா சந்தியடையை பிரார்த்தனைகள்.

Search This Blog