Tuesday, November 18, 2003

ஒரு விழியோரத்து நினைவுகள்.-3

சொமை!

சோத்தைக்காணாத வவுறு
சோவமாய் சுருங்கிப்போய்க்கெடக்க
வவுத்துப்பிரச்சனையைச்சொல்லி
வழிகாட்ட வேணுமாய்
சாமிகிட்டெ சொல்லி
சப்பரந்தூக்கினேன்.

பொணமாட்டம் கணக்குறான்
பொங்கச்சோத்து ஐயர்பய!

எம்.கே.குமார்.

ஒரு விழியோரத்து நினைவுகள்.-2

எச்சில்.

நிம்மதியாக
கனவு கூட இல்லாமல் தூங்கிய இரவுகள்
என்றதும்

காரணம் தெரியாமல்
நினைவுக்கு
வர மறுக்கிறது.
தற்கொலையில் முடிந்த
எனது
கடைசி இரவு.

எம்.கே.குமார்.

ஒரு விழியோரத்து நினைவுகள்.-1

அவள்.

குளிரில் பற்கள் நடுங்குகின்றன.
இரவின் திகில்
என்னையும் சிதிலமாக்க
அசாதாரண நிசப்தக்காட்டில்
மஞ்சள் பல்பின்
அப்பிய சோகத்தில்
துர்நாற்ற சதைகளின் உயிரோட்டமாய்
என் சுவாசமிருக்க
தேடிக்கொண்டிருக்கிறேன்.

என்
மனைவியின்
தொலைந்து போன மெட்டியை...
பிணவறையில்.

எம்.கே.குமார்.

Search This Blog