Monday, August 26, 2019

வாசகர் வட்ட ஆண்டு விழா மற்றும் "ஓந்தி" சிறுகதைத்தொகுப்பு வெளியீட்டுவிழா


வெற்றிகரமாக நிறைவு பெற்றது வாசகர் வட்ட ஆண்டு விழா மற்றும் என்னுடைய சிறுகதைத் தொகுப்பு "ஓந்தி" வெளியீட்டுவிழா.

நிகழ்ச்சிக்கு வந்து நாங்கள் நினைத்தபடியே ஆத்மார்த்தமாய் சிறப்பித்தனர் திரு தேவதேவன் மற்றும் திரு பவா செல்லத்துரை அவர்கள்.

வாசகர் வட்ட ஆண்டுவிழா எப்போதும்  மார்ச் மாதத்தில் நடக்கும். இம்முறை சில தவிர்க்க முடியாத காரணங்களால், ஆகஸ்டுமாதத்திற்குத் தள்ளிவைக்க நேரிட்டது. இதற்கிடையில் ஏப்ரல் தமிழ்மொழிமாத விழாவில்கவிதையும் காட்சியும்என்ற ஒரு நிகழ்ச்சியையும் வாசகர் வட்டம் செய்தது. ரோகிணி சிறப்பு விருந்தினராய் வந்தார். ஏறக்குறைய 160 புகைப்படங்களை போட்டிக்கு அனுப்பி அந்நிகழ்வை வெற்றியாக்கினர் மாணவர்கள். அதற்குப்பிறகு இந்நிகழ்ச்சிக்குத் திட்டமிட்டோம்.

 

தேவதேவன் அவர்களை மார்ச் மாதத்தில் தொடர்புகொண்டு அழைத்தோம்கடவுச்சீட்டு இல்லையென்றவுடன்அதற்கு விண்ணப்பிக்க ஏற்பாடுகள் நடந்தனவிஷ்ணுபுர நண்பர்கள் சரவணன்கூடலிங்கம் உள்ளிட்டோர் உறுதுணையாய் இருந்தனர்அவர் வருவது உறுதியானவுடன் இன்னொருவரையும் அழைக்கலாமா என்று யோசனை எழுந்ததுஆண்டுவிழாவின் சிறப்பம்சங்களில் ஒன்று இலக்கியச் சிறப்புரை.  2013ல் ஜெயமோகன் ஆரம்பித்து வைத்த அப்பேருரை வருடாவரும் சிறப்பாக இருக்கும்தேவதேவன் ஒப்பனைகளற்ற அகவயமாய் உரையாடக்கூடியவர்அவர் நீண்ட நேரம் பேசுவது சிரமம் என்றவுடன்சிறப்புரைக்கு இன்னொருவர் என சில எழுத்தாளர்கள் நினைவுக்கு வந்தனர்பேச்சாளர் மட்டும் நோக்கமல்லஎழுத்தாளராகவும் இருக்கவேண்டும்பவாசெல்லத்துரையை அழைக்கலாம் என்ற யோசனை வந்ததுநிதிஆதரவு ஒரு சிறப்பு விருந்தினருக்கே என்ற வகையில்இன்னொருவரின் செலவுகளை நண்பர்கள் பகிர்ந்துகொள்ளலாம் என முடிவுசெய்தோம்இதற்கிடையில் ”U Studios” சார்பில் சிங்கப்பூர் நண்பர்கள் உமா கதிர்பாண்டித்துரைநசீர் மற்றும் என்னுடைய பங்களிப்புகளில்எழுத்தாளர் ’அஷ்வகோஷ்’ குறித்த ஆவணப்படத்தை எடுத்து சென்னையில் வெளியிட்டிருந்தார் பவாவின் புதல்வன் வம்சிஅதைச் சிங்கப்பூரில் வெளியிடலாம் என்றும் யோசனை வந்தது.
 

      

     

  

 



 

சரியாக ஒருமாதத்திற்கு முன்புதான் ஆண்டுவிழா வேலைகள் துவங்கினசித்ரா ரமேஷ் கவிதைப்புத்தகம் வெளியீடு செய்வது குறித்து ஆரம்பித்துவைத்தார்மற்ற புத்தகங்கள் உடனே விழித்து எழுந்தன.

என்னுடைய கதைகளைத்தொகுத்தபின்முன்னுரை வாங்கலாமா வேண்டாமா என்ற யோசனைபத்துப்பதினைந்து நாட்களுக்குள் யாரைத் தொந்தரவுசெய்வது என்ற தவிப்புஒருமுறை இவரை கேட்கலாம்முடியாது என்றால் முன்னுரை இல்லாமலேயே வரட்டும் என்று திரு.சு வேணுகோபால் அவர்களைத் தொடர்புகொண்டேன்சிறந்த படைப்பாளிஇலக்கியத்தை மிக மிக நேர்மையாக அணுகும் மனிதர்களில் ஒருவர்ஒருபக்கம் தினசரி கல்லூரிவேலைகள்மறுபக்கம் நாகர்கோவில் இலக்கியச்சந்திப்பு வேலைகள்நேரிடையாக கைத்தொலைபேசியிலோ கணினியிலோ எழுத வராது அவருக்குஇந்நிலையில்கையால் எழுதி படம் எடுத்து எனக்கு அனுப்பிவைப்பார்அதை நான் தட்டச்சு செய்வேன்பிழைதிருத்தங்கள் செய்வோம்இப்படி இப்புத்தக ஆக்கத்தில் முன்னோடியாய் துணைநின்ற திரு சு.வேணுகோபால் அவர்களுக்கு என் முதல் நன்றி.
எல்லாம் ஒன்றையொன்று நெருங்கிசரியாக பத்துநாட்களுக்குமுன் அப்பாவைப் பார்க்க ஊருக்குச்செல்லவேண்டிய நிலைஎன் வீட்டில் இணைய இணைப்பு எடுக்காதுஎழுந்து எதிரிலிருக்கும் குளக்கரைக்கு வரவேண்டும்கோபியர்கள் குளித்துக்கரையேறாத அதே குளம்தான்இப்போது தண்ணியும் இல்லை, கோபியர்களும் இல்லை. நெட்டுக்காக அங்கு வரவேண்டியிருந்ததுஅங்கிருந்தே வேணுகோபால் சாருக்கு மெசேஜ் அனுப்புவேன்அங்கிருந்தே யாவரும் பதிப்பக ஜீவகரிகாலனுக்கும் பதில் அனுப்புவேன்.

அட்டைப்படத்தை அனுப்பிவைத்தார் ஜீவ கரிகாலன்இதை அப்பாவின் கையால் இவ்வுலகத்திற்கு வெளியிடவேண்டும் என்ற ஆசைஅப்பாவின் உடல்சோர்வுக்கிடையே அவரைக் கொஞ்சம் வெளியே அழைத்துச்செல்லவேண்டும் என்று முன்னமே யோசித்திருந்தேன்அப்பாஅம்மாவின் எழுபதாவது அகவைவிழாவுக்கு சென்றவருடமே திருக்கடையூர் செல்லவேண்டியதுஇம்முறை செல்லலாம் என்று கிளம்பினோம்முதல்நாள் திருக்கடையூர்இரண்டாம் நாள் வேளாங்கண்ணிதிருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்தில் வைத்து அந்த அட்டைப்படத்தை அவரை வெளியிடச்சொன்னேன்அபிராமி யும் மனதுக்கு நெருக்கமானவள்மிக மிக மகிழ்வான தருணமது.
 
 
 
 


 


இப்புத்தகத்தை வெளியிட்டயாவரும்பதிப்பக நண்பர்கள் ஜீவ கரிகாலன், கண்ணதாசன் உள்ளிட்டோருக்கு நன்றி. அட்டைப்படம் கோபு ராசுவேலின் அபாரமான உழைப்பு. அவருக்கும் என் நன்றி.

புத்தகத்தைப் பற்றிய நேர்மையான பார்வையாக ஓரிரு பின்னுரைகளை கடந்த என்னுடைய ’5.12pm’, புத்தகத்தில் வைத்திருந்தேன். ’ஓந்தி’க்கு அத்தகைய ஒரு மதிப்பீடாய், சிறந்த வாசகர், விமர்சகர், சிவானந்தம் நீலகண்டன் எழுதித்தந்தார். நிகழ்வில் அவரே புத்தக அறிமுகத்தையும் செய்தார். அவருக்கும் என் மரியாதையும் நன்றியும்.

புத்தக வெளியீட்டிற்கு இருநட்கள்வரை சிங்கப்பூருக்கு புத்தகம் வந்துசேர்வதில் தாமதம். நூலைக்கொண்டு வந்து சேர்க்க உதவினார்கள் என் மனைவியும் அவருடைய நண்பர்களும். அவர்களுக்கு என் நன்றி.

முதற்பிரதிக்குச் சிறப்புச்செய்த Avanta Global நிறுவனர் திரு. புவன் ஈஸ்வரன், அவர் சார்பாய் மேடையில் பெற்றுக்கொண்ட கவிமாலைக் காப்பாளர் அண்ணன் மா.அன்பழகன் ஆகியோருக்கு மிக்க நன்றி.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரு.ஜோதி மாணிக்கவாசகம், திரு அருண் மகிழ்நன் திருமதி ப்ரியா அருண்,  திரு. முகமது அலி, செல்வி கவிதா கரும், திரு இறை மதியழகன்,  தினமலர் ஐயா புருஷோத்தமன், ஆசிரியர் சோமு, சகோதரர் திரு ரவிச்சந்திரன் சோமு, திரு மதியழகன், கங்கைகொண்டான் கழக சகோதரர் புருஷோத்தமன், முனைவர் திருமதி & திரு வெங்கட்  சகோதரர் சிராஜுதீன், முனைவர் ராஜூ சீனிவாசன்,  சகோதரர் செட்டிநாடு கணேஷ், சகோதரர் அன்புச்செல்வன்இதழன், சகோதரர் தியாக ரமேஷ், கல்லூரி நண்பர் ஆனந்த் ஆகியோருக்கு என் அன்பு நன்றி.

சிங்கப்பூர் கவிஞர்கள், இலக்கியநண்பர்கள், தாம் சண்முகம், ராஜூ ரமேஷ், மெ.அழகப்பன், மதிக்குமார், கருணாகரசு, அருள்குமரன், செல்வராசு, கார்த்திக் அருண்குமார், பாலாஜி, தெய்வா, ஜோசப் சேவியர், செந்தில்குமார்- சுபா, கங்கா, ஹேமா, பிரியா கணேசன், அபிராமி சுரேஷ், மோகனப்பிரியா, வித்யா கிருஷ், சரஸ் வேல், சுபாஷினி கலைக்கண்ணன், தமிழ்ச்செல்வி ஆகியோரின் வருகைக்கும் ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
அன்பு சகோதரர்கள் சுந்தரம், ராவ், சதீஷ், அன்பு மாணவர்கள் மன்னார்குடி கவி, திருவரங்குளம்-மேற்கு தேவன் அன்பு, தனபால், தஞ்சாவூர் மோகன் ஆகியோருக்கும் என் அன்பு நன்றி.

நிகழ்ச்சிக்கு ஆதரவு அளித்த தேசிய கலைகள் மன்றம், திரு அழகியபாண்டியன், செல்வி நிர்மலா உள்ளிட்ட தேசிய நூலகவாரியம், செய்திகளை வெளியிட்ட தமிழ்முரசு நாளிதழ், உதவி நல்கிய புரவலர்கள், நிகழ்வை புகைப்படமாக்கி நிலைத்து நிற்கச்செய்த சகோதரர் வெங்கட் ஆகியோருக்கும் நன்றி.

வாசகர் வட்டத்தின் நிகழ்வு எப்போதும் சிறப்பானதாய் அமைய அதன் இயல்பான ஒருங்கிணைப்பும் இணைந்து நிற்பவர்களின் ஆத்மார்த்தமான பங்களிப்பும் முக்கிய காரணம். தேவதேவன் மற்றும் பவா இந்த நிகழ்வில் கதாநாயகர்களாக, மூத்தோர்களாக தோள்நின்றார்கள். என் புத்தக வெளியீட்டில் உறுதுணையாய் நின்ற வாசகர் வட்ட நண்பர்கள் சித்ரா, ஷா நவாஸ், பாரதி, அழகுநிலா, சிவானந்தம், பாண்டித்துரை போன்றோருக்கு என் அன்பு.

ஒரு புத்தகம் என்றும் நிலைத்து நிற்கப்போகும் ஒரு படைப்பு. அதன் உருவில், வெளியீட்டில், பயணத்தில் இணைந்துநின்ற அத்துணை நல்லோருக்கும் நன்றி. இன்னொரு வெளியீட்டில் சந்திப்போம்.

அன்புடன்
எம்.கே.

Search This Blog