Tuesday, February 24, 2009

தாய்பக்தி, தமிழ் பக்தி, தேசபக்தி, தெய்வபக்தி - ஏ ஆர் ரஹ்மான் வாழ்க!!

பசுபதியைப் பற்றிய சிறுகுறிப்புகள் - 5

ஆண்டாளுடன் பேசி இருவாரங்களாகிவிட்டதாய் பசுபதி புலம்பத்தொடங்கியதை நான் கேட்காதது போலிருந்தேன்.

புலம்பலின் முடிவாய் அவன் சொன்னதை மட்டும் இதைப் படித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு சொல்ல விழைகிறேன்.

நீண்டதொரு பெருமூச்சுடன் அவன் சொன்னதாவது: "ஆண்டாளை நான் நிஜமாய் நேசித்தேன்"


எம்.கே.குமார்.
24/02/09

Wednesday, February 04, 2009

சிங்கப்பூரில் சகோதரன் முத்துக்குமாருக்கு அஞ்சலி!

நின்னை எரித்து நீ எழுதிய கடிதம் கண்டேன் - என்ன சொல்வது என் சகோதரா,
என்னை எரிக்கிறது அக்கடிதம் - இதயத்தை ரணமாக்கி!

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சிங்கப்பூரில் அமைதி உண்ணாவிரதம் அல்லது மவுன அஞ்சலிக்கு ஏற்பாடு செய்வது குறித்தான சட்டப்பூர்வ அனுமதி நடவடிக்கைகள் பெறுவது குறித்து விவரங்களைச் சேகரித்துக்கொண்டிருந்தேன்.

இந்நிலையில், உயிராயிதம் ஏந்திய சகோதரன் முத்துக்குமாருக்கு நினைவஞ்சலிக்கூட்டம், சிங்கப்பூரின் "பேசுவதற்கான இடத்தில்" (Speaker's Corner) இன்று மாலை ஏழு மணிக்கு நடைபெறுகிறது என தாமதமாகவே அறியவந்தேன்.

அரசிடம் அனுமதி வாங்கி அஞ்சலிக்கூட்டம் நடத்திய நண்பர்களுக்கு எனது நன்றிகள். தகவலறிந்த நண்பர்கள் தயவுசெய்து உடன் பகிர்ந்துகொள்ள வேண்டிக்கொள்கிறேன்.

எம்.கே.குமார்
04/03/09

Search This Blog