Tuesday, January 25, 2011

சென்னை டைம்ஸ் 2015 இதழில் இருந்து

சென்னை. மே 10. சென்னையின் முக்கியச் சாலையில் நடைபெற்ற போராட்டம் ஒன்றில் நேற்று, 'முதலமைச்சரும் மந்திரிகளும்' கலந்துகொண்டனர். பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையை மத்திய அரசு குறைக்கவேண்டும் என்று அவர்கள் இப்போராட்டம் நடத்தினர்.

இந்தியாவில் பெட்ரோலியப்பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் சமீப காலமாய் எகிறி வந்துகொண்டிருந்தது நாம் அறிந்ததே! உலக கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள், கச்சா எண்ணையின் விலையை ஏற்றியதை ஒட்டி இந்தியாவிலும் பெட்ரோலியப்பொருட்களின் விலையை மறுபரிசீலனை செய்வது குறித்து இரண்டு நாட்களுக்கு முந்தைய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதனால், அரசாங்கம் பெட்ரோலியப்பொருட்களுக்குத் தந்த மானியத்தை முழுமையாக நிறுத்தியபிறகும், தொடரும் கச்சா எண்ணெய் விலையேற்றம் அரசுக்கு பெரும் சவாலாக இருப்பதாகவும் அதனால் பெட்ரோல் விலையை உயர்த்துவதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை எனவும் முடிவு செய்யப்பட்டதாக அறிக்கையில் சொல்லப்பட்டது.

இதன்படி பெட்ரோல் விலையில், லிட்டர் ஒன்றுக்கு 5.80 (ஐந்து ரூபாய் எண்பது காசுகள்) ஏற்றப்படுவதாகவும் இனி பெட்ரோலின் விலை 'தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது ரூபாய் எண்பது காசுக்கு (ரூபாய் 999.80)' விற்கப்படும் என்றும், டீசல் விலை பத்து ரூபாய்(ரூபாய் 10.00) ஏற்றப்பட்டு, 'எழுநூற்று எண்பது ரூபாய் முப்பதுகாசுக்கு (ரூபாய் 780.30)' விற்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(2005ல் எழுதியது.)

1 comment:

மதுரை சரவணன் said...

தீர்க்க தரிசி. பகிர்வுக்குநன்றி. வாழ்த்துக்கள்

Search This Blog