Tuesday, December 23, 2003

விருமாண்டி உருவான கதை.

அண்மையில் சன் டிவியில் இது பற்றி பேசினார் கமல்.

இப்படியெல்லாம் பரபரப்பாய்ப் பேசி படம் பார்ப்பதற்கு ஆர்வத்தை உண்டு பண்ணி, கடைசியில் அதிக எதிர்பார்ப்பிலும் படம் ஊத்திக்கொள்வதை நான் விரும்பவில்லை. ஒருவேளை வியாபாரத்திற்கு இது ஒரு காரணி என்றால் இட்ஸ் ஓகே.

ஆனால் ரோகிணி ( நிருபராய் வருகிறாராம்.) சம்பந்தப்பட்ட காட்சிகள், மரண தண்டனையையே கேள்வி கேட்கிறார் (என்று எங்காவது படிக்கும்போது) என்று இதையெல்லாம் பார்க்கும்போது அய்யோ! தமிழ் கூறும் நல்லுலகம் அந்த அளவிற்கா அவரை அரவணைத்துக்கொள்ளும் என்று புலம்பத்தொடங்கிவிட்டேன். எல்லோரும் சொன்னார்கள். "கடவுளை வணங்குகிறோம். இந்தப்படம் வெற்றி பெறவேண்டும் என்று". எல்லோருக்கும் வந்த பயம்தான் எனக்கும். கடவுள்தான் காப்பாற்றவேண்டும்!

இன்னொரு பயமும் வந்துவிட்டது. கமல் டைரக்ஷன் என்றாலே மொகஞ்சதாரோவில் எலும்பைத் தோண்டிப்பார்க்கும் காட்சியை பத்து நிமிடங்கள் (அதற்கும் கூடவா?) வைப்பாரே. அப்படி இப்படி எதையாவது வைத்து 100% பெர்·பெக்ஷனிஸ்டாய் சொதப்பி விடப்போகிறார் என்று..

'சத்யா' படம் அண்மையில் பார்த்தேன். கிரேட். அந்தப்படம் இப்போ வந்தால் இன்னும் கொஞ்சம் ஓடும் என நினைக்கிறேன். (குணா, மைக்கேல் மதன..., மஹாநதி என எல்லாவற்றிற்கும் இப்போது அப்படித்தான் தோணுகிறது என்பது வேறு விஷயம்.!)

படம் பார்த்து முடிக்கும்போது, 'கிரேட். சான்சே இல்லை. கண்டிப்பா அவார்டு கிடைக்கும்' என்று எப்போதும் சொல்வதை மட்டும் இந்த தடவையும் நான் சொல்லக்கூடாது என்றும் கடவுளை நான் வேண்டிக்கொள்கிறேன்.

எம்.கே.குமார்.

No comments:

Search This Blog