Sunday, December 26, 2004

ஒரு உயிரும் ஒரு பிளாக்கும்! (A Blog with A Soul!)

கடந்த வாரங்களில் ஒருநாள் சி·பி தளம், சமாச்சார் ஆகியவற்றின் ஆசிரியர் ஆர்.வெங்கடேஷ் சிங்கப்பூருக்கு வந்திருந்தார். இங்கு நடந்தஅவரது 'நேசமுடன்' புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துரையாடலும் இடம்பெற்றிருந்தது. (இதையெல்லாம் பற்றி எழுதியிருக்கிறேன் இதற்கு முந்தைய பதிவில்!) கலந்துரையாடலில் 'இணையம்' வந்து 'பிளாக்குகளில்' கலந்த போது, நான் எழுந்து அக்கேள்வியைக் கேட்டேன். 'ஆளாளுக்கு இப்படிப் பிளாக்குகளைப் பதிவுசெய்துகொண்டு எழுத ஆரம்பித்தால் இந்த பிளாக்குகளால் என்ன தான் பெரிதான நன்மை இருந்துவிடக்கூடும்? பிளாக்கு..பிளாக்குகள் பிளாக்குகளின் கூட்டம் இப்படியாய் இது தொடர்ந்தால் இதன் முடிவு என்னவாய் இருக்கும்? எழுதுகிற எல்லோரும் வருகிற எதிர்வினைகளைக் கண்டு (அடிப்படையான விவாதம்) கொள்ளாமல் இப்படியே எழுதிக்கொண்டு போவதின் முடிவுதான் என்ன?'

ஆர்.வெங்கடேஷ் என்ன பதில் சொன்னார் என்பது இருக்கட்டும். இக்கேள்விக்கு எனக்கு இவ்வளவு சீக்கிரத்தில் கடவுள், மனம் கசியும் படி பதிலைக்காட்டுவார் என்று நான் நினைக்கவேயில்லை. ஒருவரின் அந்தரங்கமான டயிரியை 'மேற்கோளாய்' காட்டி விடைளித்திருக்கிறார் அவர்.

சிங்கப்பூர் சீனப்பெண்மனி அவர். சிங்கப்பூரில் மாஸ்டர்ஸ் முடித்து டச்சுக்காரர் ஒருவரை மணந்து நெதர்லாண்ட்லில் வாசமாகிவிட்டார். இணையத்தில் அவ்வப்போது எழுதி வந்த 32 வயதான அவர், தன்னைப்பற்றி கொஞ்சம் ஏனோ எழுதவேண்டும் என்று தோன்ற, ஒரு 'பிளாக்' ஆரம்பித்து இதோ மொத்தம் 11 பதிவுகள். அதிலும் பத்து மட்டுமே அவருடையது. பதினோராவது பதிவை முடித்துவைக்க அவரால் முடியவில்லை.

மிகவும் அமைதியான முறையில் கடந்த வாரத்தில் மரணமடைந்து விட்டார். பத்தே பதிவுகள்! இன்று உலகம் முழுவதும் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்படுகிறது!
http://dyingis.blogspot.com/

டச்சு நாட்டுப்பிரஜையாகிவிட்ட அவர் தனது வேதனைகள் பற்றி 169 பக்கங்களில் புத்தகம் ஒன்றையும் எழுதி முடித்திருக்கிறார். அது இங்கே! http://www.gracechow.info/

அகால மரணமைடைந்த 'கிரேஸ் சோ' விற்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்!
சக வலைப்பதிவாளன்.

No comments:

Search This Blog