Sunday, May 10, 2020

World Famous Lover (2020) Telugu

World Famous Lover (2020)

விஜய் தேவரகொண்டா நடித்த படம். ராஷி கண்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்ரின் தெரசா, இஸபெல்லா (பிரேசில் அழகி) என நாலு ஹீரோயின்கள். கடுப்பாகுமா ஆகாதா சொல்லுங்கள். முட்டை மந்திரித்து வைக்கலாம் போல வெறியாகத்தான் இருக்கு. 'பெயரில்' கொஞ்சம் தெரிஞ்சாளு மாதிரி இருக்கவும் போனாப்போகுதுன்னு விடுறேன். (ஸ்மைலி போட்டவர்களெல்லாம் இதுக்கு மட்டும் போட்டவர்கள்)

சரி படத்துக்கு வருவோம். கத நம்ம கதெ தான். சீனு (விஜய் தேவரகொண்டா) பிரில்லியண்ட் ஸ்டூடெண்ட். காலேஜ் படிக்கும்போதே எகனாமிக்ஸ் பத்தி புத்தகம் எழுதுறவர். வழியில் பின் கல்லூரியில் சந்திக்கும் யாமினியை (ராஷிகண்ணா) காதலிக்கிறார். கல்யாணத்துக்கு பணக்கார மாமா ஒத்துக்கொள்ளாததால் லிவிங் டுகெதரில் தனியாக வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள். சிறிதுகாலம் சென்றபின், வேலை செய்யப்பிடிக்கவில்லை எழுத்தாளனாவதே என் லட்சியம் என வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருக்கிறார். யாமினி வேலைக்குச்சென்றுவருகிறார். டிவி பார்ப்பது, சாப்பிடுவது, யாமினியோடு பெட்ரூமில் இருப்பது, தூங்குவது பிறகு எழுவது என சொகுசாய் ஓட ஆரம்பிக்கிறது வாழ்க்கை. தான் இங்கு இவன் வாழ்க்கையில் இருப்பதே அறியாமல் அவனாக மட்டுமே வாழ்கிறானே என மனதுக்குள் குமுறுகிறார் யாமினி. எழுதுன்னு சொன்னா எழுத்து உடனே வந்துருமா என எகிறுகிறார் சீனு. உன்னை நம்பி வந்தேன் என்னை ஏமாற்றுகிறாய், உன்னை விட்டுப்போகிறேன் என சீனுவை விட்டு பிறந்தகம் செல்கிறார் யாமினி.

சீனு எழுதினாரா? யாமினியுடன் சேர்ந்தாரா? என்பதுதான் படத்தின் கதை.

ரௌடிக்காதலன் அல்லது காதல்பித்தன் கேரக்டர்க்கு என பிறந்தவர்போலும் இந்த வி.தேவரகொண்டா. அப்படியே மாறிவிடுகிறார். நான்கு ஹீரோயின்களுடனும் கொஞ்சு கொஞ்சு என கொஞ்சுகிறார்.

படத்தில் சீனு எழுதும் கதைக்குள் 3 ஹீரோயின் வருகிறார்கள். லாஜிக்கில்லாத இந்த நாட் படத்தைக் கீழிறக்குகிறது. கதையின் ஆழத்தை அது சினிமாவாக்குகிறது.

(இந்நிலையில் எதேச்சையாக, (ஆம் தொடர்புள்ள இரண்டு கூறுகள் நம்மையறியாமல் நம்அருகில் வந்துபோகும்) சரோஜாதேவி எழுத்தாளராய் நடிக்கும் "தாமரை நெஞ்சம்" என்ற பழைய படத்தையும் இன்று டிவியில் பார்த்தேன். ஜெமினி, வாணி ஜோடி. இதேபோல அவர் கதையை அவரே எழுதி இறுதியில் கதையையும் முடித்து அவரும் மறைந்துபோகிறார். அப்போதே இப்படியெல்லாம் எடுத்துவிட்டிருக்கிறார்கள்.

ஒரு எழுத்தாளனை/ கலைஞனை எழுது/படை என்று யாரும் கட்டாயப்படுத்தி படைக்க வைக்கமுடியாது. அவனை ஒரு ஒழுங்குவாழ்க்கை முறைக்குள்ளும் பலசமயங்களில் கொண்டு வருவதும் கடினம். ஏன் இப்படி என்றெல்லாம் கேட்கமுடியாது. காதை அறுத்துக்கொள்வான். மதுரை வீதிகளில் வணிகையரோடு அலைந்துகொண்டிருப்பான். இதை சொல்ல முனைந்திருக்கலாம்.
எழுத்தாளன் - அவன் மனைவி என நல்ல ஒரு வாழ்க்கையை சிறப்பாக படைத்திருக்கமுடியும். படம் அதைத்தாண்டி வெறும் சினிமாவாகக் குதித்துவிட்டது. விஜய்தேவரகொண்டாக்கு கொண்டாட்டம். நமக்கோ திண்டாட்டம்.

எம்.கே.குமார்
#MK_Movies

No comments:

Search This Blog